அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லிக்குச் சென்று நேரடியாக சந்தித்தது அனைவரும் அறிந்ததே.
அந்த சந்திப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிச் சாமியிடம் “"தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி மேசையின் மீது, அ.தி.மு.க.வின் 7 முக்கிய புள்ளிகள் மீதான லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறைகள் சேகரித்த வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ப்பு ஆதாரங்களின் மீது நடவடிக்கை எடுப்ப தற்கான அனுமதி கேட்டு, தி.மு.க. அரசு அனுப்பிய கோப்புகள் தயார்நிலையில் உள்ளது. எனவே, நான் கூறுவதை நீங்கள் கேட்டால் அந்த சட்ட நடவடிக்கைக்கான கோப்புகளில் கையெழுத்திடமாட்டேன்... இல்லையென்றால்...''” என்று அமித்ஷா கூறியுள்ளார்.
மேலும், "வருகின்ற பாராளுமன்ற தேர் தலில் டி.டி.வி. தினகரனுக்கு ஒரு சீட்டும், ஓ.பி.எஸ்.க்கு இரண்டு சீட்டும் கொடுக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அதற்கு உங்களுடைய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் கட்சியும், ஆட்சியும் உங்கள் கையில் இருக்கும். அதேபோல், “அவர்கள் இருவரையும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்''’என்ற இரண்டு நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.
பின்னர் எடப்பாடி பழனிச்சாமி, வருகின்ற 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் இணைந்து வந்தால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு நமக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அமித்ஷாவிடம் ‘"ஒரே நாடு ஒரே தேர்தல்'’ குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், “வருகின்ற 2029ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில்தான் ‘"ஒரே நாடு ஒரே தேர்தல்'’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான சட்ட வரைவுகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாகக்’கூறியுள்ளார். இந்த செய்தி எடப்பாடிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
2029ஆம் ஆண்டு ‘"ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம்’ செயல்படுத்தப்பட்டால் நாம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் மட்டுமே ஆட்சிசெய்ய முடியும். எனவே கோடிக்கணக்கில் செலவு செய்து நாம் வெற்றி பெற்றாலும் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆட்சி நிலைக்கும் என்பதால் நாம் ஏன் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருக்க வேண்டும்? எதிர்த்துச் செயல்படலாம் என்று திட்ட மிட்டுள்ளார்.
எனவே, “பா.ஜ.க.வுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது’என்று எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் உள்ள மூத்த நிர்வாகி களிடம் கூறியதை அடுத்து, பா.ஜ.க. உடனான கூட்டணி முறிந்ததாக சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பேச ஆரம்பித்தனர்.
இதைத் தொண்டர்கள் மிகுந்த ஆரவாரத் துடனும் உற்சாகத்துடனும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். கடந்த சில நாட்களாக பல இடங்களில் பா.ஜ.க.விற்கான எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் பல மாவட்டங்களில் தொண்டர்களால் ஒட்டப்பட்டது.
ஆனால் அன்றிரவே எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் "பா.ஜ.க. குறித்து எந்தவித விமர்சனங்களும் செய்யக்கூடாது'’என உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நாம் விசாரித்தபோது...
"கொடநாடு கொலை வழக்கு வந்தாலும் நாம் அதை சமாளித்துக் கொள்ளலாம், ஆனால் நம் மீது அமலாக்கத்துறையும் வருமானவரித் துறையும் நடவடிக்கை எடுத்தால் தி.மு.க.வின் செந்தில் பாலாஜியின் நிலைமை நமக்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் எடப்பாடிக்கு எழுந் துள்ளது. அதோடு இப்படிப்பட்ட விமர்சனங் களால் பா.ஜ.க. கோபமடைந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மேசையின் மீது உள்ள கோப்புகளில் கையெழுத்திட்டு பா.ஜ.க. பழி வாங்கிவிடும். "நாம் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். பின்னர் ஏன், பா.ஜ.க.வை குறித்து விமர்சிக்க வேண்டும். எனவே யாரும் எந்த காரணத்திற்காகவும் பா.ஜ.க.வை விமர்சிக்கத் தேவையில்லை'’என்று கூறியதை அ.தி.மு.க. தொண்டர்களும் இரண்டாம்கட்டத் தலைவர் களும் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர்.
மேலும், கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் முன்பு கூட்டணி குறித்து பேசிய வீடியோக்களையும், ஆடியோக்களையும் வைத்துதான் பா.ஜ.க. தற்போது ‘பிளாக்மெயில்’ அரசியல் செய்துவருகிறது. அவர்கள் வெளியிடும் பெரும்பாலான வீடியோக்களும், ஆடியோக்களும் பழையவை. எனவே பா.ஜ.க.வை எதிர்க்காமல் அமைதியாக ஒதுங்கிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த எடப்பாடி, “"பாராளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் கூட்டணியை புதுப்பித்துக் கொள்ளலாம். அதுவரை கட்சி வளர்ச்சிப் பணிகளை மட்டும் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செலுத்துங்கள், தேர்தல் சூடு பிடிக்கும் வரை சற்று அமைதி காக்கவும்'’என்று அ.தி. மு.க.வின் முக்கியத் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளார்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.
நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறி யிருப்பதால் அதில் பிஸியாக இருக்கும் பா.ஜ.க. தலைவர்கள், எடப்பாடியிடம் “"தமிழ்நாட்டில் கூட்டணி முடிவைப் பற்றி பிறகு முடிவு செய்து கொள்ளலாம்'’என்று சொல்லியிருக்கிறார்கள். அண்ணாமலை மாற்றம் அல்லது தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு அமைத்து அதற்கு ஜி.கே.வாசனை தலைவர் ஆக்கும் வியூகங்கள் பா.ஜ.க. வசம் இருக்கின்றன. இதற்கு எடப்பாடி ஒத்துக்கொள்ளவில்லை எனில் இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ். தரப்புக்கும், பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவுக்கும் வழங்குவது தொடர்பான வழக்குகளில் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புக்களைப் பெற்றுத் தரவும் பா.ஜ.க. வியூகம் அமைத்துள்ளது.