சாமியாரும், ஈஷா யோகா மையத்தின் நிறுவனருமான ஜக்கி வாசுதேவ் குறித்து துவக்கத்திலிருந்தே "நக்கீரன்' செய்திகள் மூலம் அம்பலப்படுத்தி வருகிறது. அதில், பழங்குடி மக்களிடமிருந்து நிலத்தை அபகரித்தது, காட்டை அழித்தது, யானை வழித்தடங்களை அடைத்து மனித-மிருக மோதலை உருவாக்கியது, ஈஷா மையத்தில் நடந்த போதை விருந்து, ஜக்கியின் மனைவி விஜியின் கொலை உள்ளிட்டவைகள் முக்கியமானவை. இது இப்படியிருக்க, சமீபத்தில் ஈஷா சம்ஸ்கிருதப் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகள் பாலியல் வல்லுறவிற்கு ஆளானது, தீட்சை எனும் பெயரில் கட்டை விரலைக் கொண்டு பிறப்புறுப்பில் அழுத்துவது போன்ற கொடூர செயல்களையும் போலி சாமியார் ஜக்கி செய்கின்றான் என ஆதாரங்களுடன் "நக்கீரன்' அம்பலப்படுத்தியது.
"நக்கீரன் செய்தி ஜக்கியை தூங்கவிடவில்லை என்பதுதான் நிஜம். அதிலும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு, பிறப்புறுப்பில் தீட்சை குறித்த ஆதார தரவுகள் ஜக்கியை அசைத்துப் பார்த்தன. நக்கீரன் ஆசிரியர் மீதான தனிமனிதத் தாக்குதலை கையாண்டான் ஜக்கி. இதற்காக பல யூடியூபர்கள் களமிறங்கினர். அத்தனையும் ஆசிரியர் மீதான தனி மனிதத் தாக்குதல்களே! பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வல்லுறவு குறித்த மின்னஞ் சல்கள், வாட்ஸ்அப் சாட்கள், பிறப்புறுப்பில் கட்டை விரலை அழுத்தும் வீடியோ என நக்கீரன் ஆசிரியர் வெளியிட்ட ஆதாரங்கள் குறித்து இதுவரை ஈஷா மையத்திலிருந்தும், அவன் ஏவிவிட்ட யூடியூபர் களிடமிருந்தும் பதிலே இல்லை! இதில் ஒரு யூடியூபர், "பிறப்புறுப்பில் கட்டை விரலைக் கொண்டு அழுத்தி தீட்சை கொடுக்கவில்லை. இந்த பிராசஸிற்கு பெயர் சுவாதீஷ்டானா. தொப்புள் அருகில் தான் கால் கட்டை விரலை விட்டார் ஜக்கி' என்கின்றார். அந்த பகுதி எங்கே இருக்கின்றது? பெண் மீது காலை வைத்து அழுத்தும் உரிமை இந்த திருட்டு சாமியாருக்கு எப்படி வந்தது? இவ்வளவு நடந்தும் மகளிர் அமைப்புக்கள் என்ன செய்கின்றன? பாதிக்கப்பட்ட நாங்கள் இன்னும் பல நூறு நபர்கள் இருக்கின்றோம். எந்த நம்பிக்கையில் வெளியே வந்து புகாரளிப்பது? எங்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது?'' என்கின்றனர் ஈஷா மையத்தில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர்.
இது இப்படியிருக்க, போலி சாமியார் திருட்டு ஜக்கி வாசுதேவிற்கு நெருக்கமான, ஈஷா யோக மையத்தை கட்டமைத்த பாரதி வரதராஜின் ஆடியோ ஒன்று வெளி யாகி அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஈஷா சம்ஸ்கிருத பள்ளியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தையும், பாரதி வரத ராஜூம் பேசிக்கொள்வதாய் அமைந்துள்ளது அந்த ஆடியோ.
யார் இந்த பாரதி வரதராஜ்? ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி. ஒருவரின் மகளான பாரதி, கோவை எல்.ஜி. க்ரூப் சுதர்சன் வரதராஜனை திருமணம் செய்து பாரதி வரதராஜாக மாறுகின்றார். 1997 காலகட்டத்தில் யோகா மீது ஈர்ப்பு உண்டாகி ஜக்கியிடம் யோகா கற்றுக் கொள்ள சென்றிருக்கிறார். 1998-ல் ஜக்கியின் மனைவி விஜி கொலையுண்டார். "என் மகள் சாவில் மர்மம் இருக்கின்றது. ஜக்கி வாசுதேவ் என்ற பெண் பித்தனுக்கு இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக தொடர்பு உண்டாகியுள்ளது. அதனால்தான் விஜி கொலையாகியுள் ளார்'' எனத் தனது புகார் மனுவிலேயே கூறி அழுதார் விஜியின் தந்தை கங்கண்ணா. ஆனால் நட வடிக்கை இல்லை. விஜியின் தந்தை கூறிய பெண் தான் பாரதி வரதராஜ். அதற்கடுத்த நாட்களில் தன்னுடைய ஆளுமையால் புதிய கட்டமைப்பை உருவாக்கி, ஜக்கியை உச்சத்தில் உட்கார வைத்தார். இதற்காக இவர் இழந்தது தனது குடும்பத்தையே என்றால் அது மிகையல்ல!
"ஜக்கி ஒரு களி மண்! அவனை உருவாக்கி இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக் கியது பாரதி வரதராஜே. ஈஷா யோகா மையத்தைப் பொறுத்தவரை பாரதி வரத ராஜ் அனைவருக்கும் "அக்கா'. பெரிய வணி கக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ஈஷாவை அவர் வியாபாரப் பொருளாகத் தான் பார்த்தார். ஜக்கி கால் கட்டை விரலால் தீட்சை கொடுக்க, அதனைப் பெறும் அந்த பெண் தான் பாரதி வரதராஜ். ஜக்கிக்கோ வேறு சபலம்! அமெரிக்காவில் இருக்கும் அந்த பெண்மணி (14 வயதிலிருந்தே ஜக்கியுடன் நெருக்கம். தற்பொழுது 30 வயது) ஜக்கியின் புதிய துணைவியாக வர, பாரதி வரதராஜூக்கு பெரும் கோபம். ஜக்கியின் ஈஷா சாம்ராஜ்யம் உருவாக முக் கிய காரணமாக விளங்கியவர்தான் பாரதி வரதராஜ். ஒரு கட்டத்தில் ஈஷா மையத்தை விட்டு வெளியேறினார். அதற்குப் பிறகு ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியில் தங்கள் குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது குறித்து ஹைதரா பாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் யாமினி என்பவர். அப்பொழுது பாரதி வரதராஜின் மின் னஞ்சலை அதற்கு ஆதாரமாகக் காண்பிக்க, அதன்பின் பெண் குழந்தைகள் பாலியல் வல்லுறவு நிகழ்வில் பேசுபொருளாகியுள்ளார். இது ஜக்கிக்கு பீதியை உண்டாக்கிய நிலையில் தன்னு டைய யூ ட்யூபர் மூலம் மிரட்டும் தொனியில் அவரை அடையாளப்படுத்தியிருக்கின்றார்'' என்கின்றார் அவருக்கு நெருக்கமான சிலர்.
27 நிமிடங்கள் கொண்ட அந்த ஆடியோவிலிருந்து..,
பாரதி வரதராஜ்: இன்று மாலைவரை எனக்கு இது தெரியாது. ஏன் இந்த லேடி...… இந்த யாமினி என் பெயரைப் பயன்படுத்துது.
ஆண்: எந்தப் பெயரை?
பாரதி வரதராஜ்: பாரதி வரதராஜ்.
ஆண்: ஓ. நீங்க அந்த வீடியோவைப் பார்த்தீங்களா?
பாரதி வரதராஜ்: நான் பார்க்கலை, ஒருத்தங்க போன் பண்ணி எனக்குச் சொன்னாங்க. அதைப் பார்க்க எனக்கு நேரமில்லை. அவங்க இந்த மின்னஞ்சல் அபாயம் பற்றிச் சொன்னாங்க. நீங்க ஏன் அவளுக்கு அந்த மின்னஞ்சலை அனுப்புனீங்க யார் அனுப்புனது?
ஆண்: இல்லை, வழக்குக்கு இந்த விஷயத் தைப் பயன்படுத்திக்கலாம்னு நாங்க நினைச் சோம். ஆனா, விவகாரம் இப்படி ஆயிடுச்சு.
பாரதி வரதராஜ்: அபர்ணா மட்டு மில்லை, இப்ப நிறைய பேரு எனக்கு போன் செய்து, அபர்ணா மின்னஞ்சல்ல பயன்படுத் துன அதே மொழியைப் பயன்படுத்த முயற்சி செய்றாங்க. தனிப்பட்ட பழிவாங்கும் போக்குல அவள் செயல்படுறதா சிலர் சொல்றாங்க. நீங்கள் என்ன செய்ய முயல்கிறீர்கள். அவள் நாளை எனக்கு எதிராக செல்ல முயற்சிப்பது எனக்கு பிடிக்காமல் இருக்கலாம்
ஆண்: இல்லை, அவள் உங்களுக்கு எதிராகச் செல்லவில்லை. அவள் உங்க எண் ணைக் கேட்டாள். ஈஷாவில் ஒரு பையன் கொலையுண்டது தொடர்பாக விபரம் கேட்க வேண்டுமென உங்களுடைய எண்ணை கேட் டார். அதுபோக இந்த ஈஷா அறக்கட்டளைக்கு நிதியளித்தவர் பாரதி வரத ராஜன் என அவர் குறிப் பிட்ட வீடியோவை உங்க ளுக்கு அனுப்பியுள்ளேன்.
எனக்குத் தெரி யலை... ஏன்னா நான் விரும்பலை, ஆனா அவ அதைப் பற்றி நிறைய பேசினா. அவ உங்க குடும்ப உறுப்பினர்களை, சமூகத்தை, எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருந்தா. அவ உங்களைப் பற்றி, உங்க பின்னணி பற்றி பேசினா. அத்தோட அறக் கட்டளைல, திரிசூலம், கம்பெனி பெயர்கள் அனைத்திலும் இருக்கிறதா குறிப்பிட்டா.
பாரதி வரதராஜ்: பள்ளி நிர்வாகத்தில தன்னார்வலரா ஆயிரக்கணக்கான நபர்களை நியமிச்சிருக்கேன். ஆனா அதுக்காக, என்னைப் பற்றியும் என் குடும்பப் பின்னணி பற்றியும் அறியுற உரிமை அவளுக்கில்லை.
ஆண்: ஆமாம், இந்த விவகாரத்துல, காமராஜ் வழக்குல உங்களை தொடர்புபடுத்த விரும்புறா. அதத்தான் அவ செய்ய முயற்சி பண்றா. அதான் என் கருத்து.
பாரதி வரதராஜ்: சரி, தயவுசெஞ்சு அவளோடவும், அதுதொடர்பான விஷயங் கள்லயும் என்ன ஒண்ணா நிறுத்த முயற்சி பண்ணாதிங்க. நான் அவ நேர்மையான ஒரு மனுதாரர்னு நினைச்சேன்.
ஆண்: அவ என்னை மௌனமா இருக்கும் படி சொன்னா. நான் உடனே அவகிட்ட, நாங்க மௌனமா இருக்க விரும்பலை. நான் சொன்னதுபோல, நீங்க ஒரு சக்திவாய்ந்த ஆயுதம். நான் இவையனைத்தையும் பரி சோதிக்க விரும்பலை. உன்னோட செய்தி எதுவானாலும், அதை என்கிட்ட தயவுசெஞ்சு சொல்லு. நான் அதை அவங்ககிட்ட சொல்வேன். சில நாட்களுக்குப் பின் நேதா என்கிட்ட அவ பாரதி நம்பரைக் கேட்கிறதா சொன்னா. எப்ப கேட்டான்னு கேட்டதுக்கு, இரண்டு நாட்களுக்கு முன்னாலன்னு சொன்னா. மூணு நாள் முன்னால என் நம்பரையும் பாரதி நம்பரையும் அவ கேட்டதா சொன்னேன். அந்த நேரம் நீதா ஒரு கூட்டத்துல இருந்தா, அதனால நான் அழைப்பை எடுத்தேன். நாங்க பேசிக்கிட்டிருக்கையில அவ கேட்டா. நான் அதேதான் சொன்னேன். நீதாவும் அதேதான் சொன்னா. நாங்க அவளுக்குச் சொல்ல விரும்பலை, அதனால நம்பரையும் அவளுக்குத் தரலை. எப்படியோ உங்க நம்பரை பெற முயற்சி செய்திருக்கிறாள். இந்த விவகாரத்துல யோ அல்லது வேற விவகாரத்துலயோ உங்களைச் சிக்க வைக்கிறதுக்காக அவள் உங்க நம்பரைப் பெற முயற்சிசெய்திருக்கான்னு நான் நினைக்கிறேன் பாரதி.
பாரதி வரதராஜ்: அவ மிகப்பயங்கர மானவ. இது நாம மிகக்கவனமாக கையாளத் தேவையுள்ள விஷயம்.
ஆண்: ம்ம்... இது யார்கிட்டயாவது போகுமா... அது சத்குருகிட்ட போகுமா இல்லை...
பாரதி வரதராஜ்: அவர்கள், என் பெயரை இப்படிக் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால்... மின்னஞ்சல் எனக்கு இருக்கிறது. பாரதி வரத ராஜ், மாப்ரயுத்தா என்ற மின்னஞ்சல் இருக்கிறது. எதாவது அநீதியில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு என் அனுதாபங்கள். அது, பாலியல் அல்லது பொருளாதாரரீதியாக அல்லது எந்தவிதத்திலானதாக இருந்தாலும் அனுதாபங் கள். அது ரொம்ப மோசம். நான் அதைக் குறைவாக மதிப்பிடவில்லை. ஆனால் அவள் அதைத்தானே கையாண்டிருக்கவேண்டும். இந்த விஷயத்தை நீங்கள் வெளிப்படையாகச் சொல்லாமல் நான் சண்டையிட வேண்டு மென்றால், ஆம் என்று சொல்லுங்கள்.
ஆண்: நீங்கள் குறிப்பிடும் பெண்கள் சரியாக இரண்டு பேர்.
பாரதி வரதராஜ்: நான் எந்தப் பெண்களையும் குறிப்பிடவில்லை. இது நடப்பதற்கு முன்பு நான் சொன்னேன். ஆனால் இப்போது நீங்கள் எல்லாவற்றையும் எனக்கு எதிராக மாற்றிவிட்டீர்கள்.
ஆண்: இல்லை என் எண்ணம் அப்படியில்லை பாரதி. அது வேறுமாதிரியாகி விட்டது. அப்படித்தான் செயல்படுகிறோம் என்று நினைத்தோம்.
பாரதி வரதராஜ்: see, பரபரப்பு... (excitement) பரவாயில்லை, ஆனால் மிகைப்படுத்தல் எதையும் செய்ய வேண்டாம். அவர்கள் முற்றிலும் தயாராக இல்லாவிட்டால் அதனால் என்னையும் ஷரிலையும் வேறு யாரையும் ஏதோ ஒரு விஷயத்தில் நுழைக்க முயற்சிக்காதீர்கள்.
ஆண்: நான் சொன்னேன். ஆனால் அதுதான் அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வர ஒரே வழி. இல்லையேல் எங்களால் அதைச் செய்ய முடியாது. நாங்கள் எஃப்.ஐ.ஆர். வேண்டும் என்கின்றோம். 2 மணி நேரத்திற்குள் அவர்கள் மாஜிஸ்திரேட்டிடம் செல்கிறார்கள்.
பாரதி வரதராஜ்: நீங்கள் படிப்படியாக செல்லவேண்டும்.
ஆண்: என் பொண்ணு விஷயத்தை வைக்கலாம்னு சொன் னேன். அப்புறம் உங்க பொண்ணு மட்டும் எல்லாத்துக்கும் மேல வரமுடியாதுன்னு கேட்கறாங்க. அப்போது எங்களால் தொடர்பு கொள்ள முடியாது, ஏனென்றால் போக்ஸோ வழக்குக்கு நீதிபதி முன் வரவேண்டும், இல்லையெனில் வேறு வழியில்லை'' என நீள்கின்றது அந்த ஆடியோ.
ஆடியோவில் குறிப்பிட்ட அந்த இரண்டு பெண்கள் (ஈஷா பள்ளியில் படித்தபொழுது அங்கு உள்ளவர்களால் பாலியல் வன் புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.) யாமினி நரேந்திரா பேட்டிக்கு பிறகு, தற்பொழுது நியாயம் வேண்டி புகார் அளிக்க பாரதி வரதராஜை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. அண்டை மாநிலத்தில் உள்ள அவர்கள் எப்பொழுது வேண்டு மானாலும் ஜக்கி மீது புகார் அளிக்கலாம் என்பதுதான் ஹைலைட்.
______________
ஜக்கியிடம் ஆட்டையைப் போடும் களவாணிகள்!
பேராசிரியர் காமராஜ் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், அவரது வழக்கினை முடித்துவைத்த உச்ச நீதிமன்றம், "தமிழக காவல்துறையின் விசாரணைக்கு எதிராக எவ்விதத் தடையுமில்லை'' என ஈஷா மையத்திற்கெதிராக உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக காவல்துறை ரகசிய விசாரணையை முடுக்கிவிட்டது. இதேவேளையில், காவல்துறைக்கு உதவும் விதமாக ஈஷா மைய ஜக்கிக்கு எதிரான ஆவணங்களை மக்களின்முன் வைத்தது, ஜக்கிக்கு பயங்கர கலக்கத்தை உண்டாக்கிய நிலையில், பிரதமரின் அலுவலக உதவியை நாடியுள்ளார். தமிழக பா.ஜ.க.விலிருந்த சில ஆளுமைகள் பிரதமரிடம் உண்மையை உடைத்துக் கூற, பிரதமர் அலுவலகம் ஜக்கியை கைகழுவியது.
இந்த நிலையில், "எங்களுக்கு தனிப்பட்ட முறையில் முதல்வரைத் தெரியும். நாங்கள் இதனை முடித்து தருகின்றோம். தமிழக அரசின் பிடி உங்களை இறுக்காது' என ஜக்கியிடமிருந்து பெரிய தொகையைக் கறந்திருக்கின்றனர் பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர் கொண்ட இருவர் டீம். இதைத் தெரிந்துகொண்ட உளவுத்துறை நோட் எழுத, அந்த இருவர் டீம் இந்த பக்கமே வரக்கூடாது என சி.எம். அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது! நமக்கு வேலை நடக்கும் எனக் காத்திருக்கும் ஜக்கிக்கு அந்த தொகை பட்டை நாமமே! இது இப்படியிருக்க, "தீபாவளி வாழ்த்தும், இனிப்பும் பெற்றுக்கொள்ளுங்கள்!'' என கோவையிலுள்ள பத்திரிகையாளர்களை அழைத்திருந்தனர் ஈஷா யோகா மையத்திலிருந்து. "எங்களுக்கு அந்த பாவப்பட்ட இனிப்பும் வேண்டாம்! வாழ்த்தும் வேண்டாம்!'' என மறுத்திருக்கின்றனர் பெரும்பான்மையான பத்திரிகையாளர்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்!