"ஹலோ தலைவரே, தி.மு.க. நிர்வாகிகள் சிலரின் ஏடா கூட நடவடிக்கையால் முதல்வர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.''”
"ஆமாம்பா, அந்தக் கோபத்தை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பகிரங்கமாகவே காட்டி இருக்கிறாரே ஸ்டாலின்?''”
"உண்மைதாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிப்பதற்காக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை 1ஆம் தேதி காணொ- வாயிலாக நடத்தினார் ஸ்டாலின். அப்போது கட்சி நிர்வாகிகள் சிலர் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல், ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு நடப்பது பற்றிய அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நமது வேட்பாளர் களில் யார் தோற்றுப் போனாலும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மா.செ.வும் தொகுதிப் பொறுப்பாளரும் உடனடியாக மாற்றப்படுவார்கள். அவர்கள் பதவி பறிபோகும். தேர்தலுக்கு முன்பாக, மா.செ.க்களும் தொகுதிப் பொறுப்பாளர்களும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைக்க மறுத்தால், அதை நான் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டேன் என்று கடுமையான குரலில் சொன்னதோடு, இதில் மூத்தவர்கள், முக்கியமானவர்கள் என்றெல்லாம் கூட நான் பார்க்க மாட்டேன் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்.''”
"அப்படி எந்தெந்த நிர்வாகிகள் மீது ஸ்டாலினுக்கு அதிருப்தியாம்?''”
"வட மாவட்டங்களைச் சேர்ந்த 5 மா.செ.க்கள், தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2 மா.செ.க்கள்னு 7 பேர் மீது ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருக்கார்னு தி.மு.க. சீனியர்களே சொல்றாங்க. அந்த 7 பேரில் 3 பேர் அமைச்சர்களாகவும் இருக்கிறார்களாம். இவர்கள் அனைவரும் ஸ்டாலினின் கோபத்துக்கு ஆளாகி இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே இவர்களின் மா.செ. பதவி பறிக்கப்படலாம் என்கிற பேச்சும் இப்போதே தி.மு.க.வில் அடிபடத் தொடங்கிடுச்சி. அதே சமயம், ஸ்டாலினின் எச்சரிக்கையால் சம்பந்தப்பட்ட மா.செ.க்கள் அதிர்ச்சியடைந்தாலும், தங்களை மாற்றிக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை. ஏனென்றால், நீங்கள் சரியாக நடந்துகொள்ளாவிட்டால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று, அவர் பல முறை எச்சரித்திருக்கிறார். அதையே பலரும் சீரியசாக எடுத்துக்கொள்ளாத நிலையில், அவரது இப்போதைய கோபத்துக்கு அவர்கள் மதிப்பளிப்பார்களா என்ற கேள்வி கட்சியினர் மத்தியிலேயே இருக்கிறது.''”
"சரிப்பா, அமைச்சர் உதயநிதியின் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், விளையாட்டுச் சங்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்தி
"ஹலோ தலைவரே, தி.மு.க. நிர்வாகிகள் சிலரின் ஏடா கூட நடவடிக்கையால் முதல்வர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.''”
"ஆமாம்பா, அந்தக் கோபத்தை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பகிரங்கமாகவே காட்டி இருக்கிறாரே ஸ்டாலின்?''”
"உண்மைதாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிப்பதற்காக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை 1ஆம் தேதி காணொ- வாயிலாக நடத்தினார் ஸ்டாலின். அப்போது கட்சி நிர்வாகிகள் சிலர் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல், ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு நடப்பது பற்றிய அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நமது வேட்பாளர் களில் யார் தோற்றுப் போனாலும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மா.செ.வும் தொகுதிப் பொறுப்பாளரும் உடனடியாக மாற்றப்படுவார்கள். அவர்கள் பதவி பறிபோகும். தேர்தலுக்கு முன்பாக, மா.செ.க்களும் தொகுதிப் பொறுப்பாளர்களும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைக்க மறுத்தால், அதை நான் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டேன் என்று கடுமையான குரலில் சொன்னதோடு, இதில் மூத்தவர்கள், முக்கியமானவர்கள் என்றெல்லாம் கூட நான் பார்க்க மாட்டேன் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறார்.''”
"அப்படி எந்தெந்த நிர்வாகிகள் மீது ஸ்டாலினுக்கு அதிருப்தியாம்?''”
"வட மாவட்டங்களைச் சேர்ந்த 5 மா.செ.க்கள், தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2 மா.செ.க்கள்னு 7 பேர் மீது ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருக்கார்னு தி.மு.க. சீனியர்களே சொல்றாங்க. அந்த 7 பேரில் 3 பேர் அமைச்சர்களாகவும் இருக்கிறார்களாம். இவர்கள் அனைவரும் ஸ்டாலினின் கோபத்துக்கு ஆளாகி இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே இவர்களின் மா.செ. பதவி பறிக்கப்படலாம் என்கிற பேச்சும் இப்போதே தி.மு.க.வில் அடிபடத் தொடங்கிடுச்சி. அதே சமயம், ஸ்டாலினின் எச்சரிக்கையால் சம்பந்தப்பட்ட மா.செ.க்கள் அதிர்ச்சியடைந்தாலும், தங்களை மாற்றிக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை. ஏனென்றால், நீங்கள் சரியாக நடந்துகொள்ளாவிட்டால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று, அவர் பல முறை எச்சரித்திருக்கிறார். அதையே பலரும் சீரியசாக எடுத்துக்கொள்ளாத நிலையில், அவரது இப்போதைய கோபத்துக்கு அவர்கள் மதிப்பளிப்பார்களா என்ற கேள்வி கட்சியினர் மத்தியிலேயே இருக்கிறது.''”
"சரிப்பா, அமைச்சர் உதயநிதியின் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும், விளையாட்டுச் சங்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழ்நாடு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இந்தத் துறையின் கீழ் இருக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளரான மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ்., தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட் டிருக்கிறார். அதாவது, தமிழகத்தில் இருக்கும் விளையாட்டு சங்கங்கள், தங்கள் அனுமதி பெறாமல் இனி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதோ? அதற்குச் சான்றிதழ்களை வழங்குவதோ கூடாதுன்னு அதில் சொல்லி இருக்கிறார். இதை மீறி போட்டிகளை நடத்தி சான்றிதழ் வழங்கினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். காரணம், சமீபகாலமாக போலிச் சங்கங்கள் நிறைய உருவாகி, நிறைய வசூலித்து, போட்டிகளை நடத்தி சான்றிதழ்களை வழங்குகின்றனவாம். அதனை வைத்து ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சலுகை கிடைக்கும் என்று மாணவ மாணவிகள் நம்பி ஏமாறுகிறார் களாம். அதனால்தான், அமைச்சர் உதயநிதியின் உத்தரவின் பேரில் இப்படி ஒரு அறிவிப்பு கறார் தொனியில் வெளியிடப்பட்டிருக்கிறது.''”
"ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் செனையிலேயே கராத்தே போட்டியை அறிவித்திருக்கிறார்களே?''”
"நீங்க எங்க வர்றீங்கன்னு தெரியுதுங்க தலைவரே, இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையிலேயே, "தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ அசோசியேசன்' என்ற கராத்தே அமைப்பு, தமிழ்நாடு கராத்தே சேம்பியன்ஷிப் போட்டி களை வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றது. இந்த சங்கம், மாநில அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரத் தைப் பெறவே இல்லை. ஆனால், இந்த சங்கம் தி.மு.க. பிரமுகர்களை விருந்தினர் களாக அழைத்து, போட்டியை நடத்தும் முயற்சியில் இருக்கிறது. இதற்கான விளம்பரங்களில் முதல்வர் மற்றும் உதயநிதி ஆகியோரின் படங்களையும் பயன்படுத்து கிறார்களாம்.''
"இதன் மூலம் அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கம் என்கிற தோற்றத்தை அவர்கள் உருவாக்கி வருகிறார்களாம். மேலும் போட்டியில் கலந்து கொள்ள நுழைவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் வீதம் வசூலிக்கிறார்களாம். இது சலசலப்பை உருவாக்கி வருகிறது.''”
"மீண்டும் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசனை மையமாக வைத்து சர்ச்சை கிளம்பியிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, ஏற்கெனவே ஆடியோ சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன், மீண்டும் இப்போது அதே வில்லங்கத்தில் சிக்கி இருக்கிறார்.''
"கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் சில குளறுபடிகள் நடந்துவருவதாக, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன், முதல்வர் ஸ்டாலினிடமே தெரிவித்தாராம். அதற்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் அரசின் ஈ சேவை மையங்கள், அதை உரிய வகையில் அணுகுவதில்லை என்றும், அவை முறையாக விண்ணப்பங்களை வழங்கவில்லை என்றும் அவர் முதல்வர் ஸ்டாலினிடம் அப்போது விவரித்தாராம். பிரச்சினை இதுவல்ல. இதே குறைபாடுகளை அவர் வெளியே மற்றவர்களிடம் பகிரங்கமாகப் பகிர்ந்துகொண்ட செய்திகள் இப்போது சமூக வலைத்தளங்களில் வெளிவரத் தொடங்கி இருக்கிறதாம். தன்னிடம் சொன்னதையே அமைச் சர் அச்சுப் பிசகாமல் சொல்வது போல் அந்தத் தகவல்கள் இருப் பதால், ஸ்டாலினுக்கு வருத்தமாம்.''
"கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டை முதல்வர் நடத்து கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, வருகிற 3 மற்றும் 4ஆம் தேதிகளில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளின் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் நடத்துகிறார். இதில், அமைச்சர்கள், அனைத்துத் துறைகளின் செயலாளர்கள், துறை தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். அரசு திட்டங்களை எந்தளவுக்கு மக்களிடம் கலெக்டர்கள் கொண்டு சென்றனர்? மாவட்ட அளவில் என்னென்ன தேவைகள் இருக்கிறது? எந்தெந்த மாவட்டங்கள் அரசுத் திட்டங்களில் சுணங்கியிருக்கின்றன? என்று ஆய்வு நடத்த இருக்கிறார் ஸ்டாலின். மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடனும் அவர் விவாதிக்க இருக்கிறார். மேலும், கடந்த ஒரு வருடத்தில் நடந்துள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், என்.ஐ.ஏ.வின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக அவர்களோடு முதல்வர் ஸ்டாலின் விவாதிக்க இருக்கிறாராம். இந்த மாநாடு முடிந்ததும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளில் சிலரை அதிரடியாக மாற்றவும் ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அந்தப் பட்டியலில் சில முக்கிய அதிகாரிகளும் இருக் கிறார்கள் என்கிறது கோட்டை வட்டாரம்.''”
"கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தன பாலின் வாக்கு மூலங்களின் அடிப் படையில் விசா ரணை தீவிரமாகி இருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, கொடநாடு க்ரைம் விவகாரத்தில் மற்றொரு பகீர் விவகாரம் வெளியே வந்திருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.’ படுத்திருந்தபோதே, அவர் உயிரோடு திரும்பிவரமாட்டார் என்று தெரிந்தே, கொடநாடு க்ரைமிற்கான சதித் திட்டங்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டது என்று சொல்லி, ஜெ.வின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணன் தனபால், விசாரணை டீமை அதிரவைத்தாராம். அதுகுறித்த ஆலோசனை எடப்பாடி வீட்டில் நடந்ததாகவும் அதில் தங்கமணி, வேலுமணி, சேலம் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றதாகவும் அப்போது அவர் உறுதிப்படுத்தினாராம். அந்த சமயத்தில் க்ரைமில் இறங்க தனது தம்பி கனகராஜ் தயங்கியதாகவும், இதைக் கச்சிதமாகச் செய்தால் வாழ்க்கையில் நீ செட்டில் ஆகும் அளவுக்கு உனக்கு அதற்கான பலன்கள் கிடைக்கும் என்று எடப்பாடி சொன்னதாகவும் தனபால் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த சாட்சியம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப் பட்டவர்கள் விரைவில் விசாரிக்கப்பட இருக்கிறார்கள் என்கிறது விசாரணை டீம்.''”
"தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் கே.எஸ். அழகிரியை மாற்றணும்னு, அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கொடி பிடிக்கிறார்களே?''”
"நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தைகள் தொடங்கு வதற்கு முன்பாகவே, கட்சியின் மாநில தலைவரான அழகிரியை மாற்றியாகணும்னு, அந்தக் கட்சியின் சீனியர்கள் வரிஞ்சி கட்றாங்க. இது தொடர் பாக ப.சிதம்பரத்தை, முன்னாள் மாநிலத் தலைவரான தங்கபாலு அண்மையில் சந்தித்து விவாதித்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க, அகில இந்திய காங்கிரஸ் தலைவ ரான மல்லிகார்ஜுன கார்கேயை கடந்த வாரம் டெல்லியில் சந்தித்திருக்கிறார் திருநாவுக்கரசு. அப்போது அவர், "ஒட்டுமொத்த கட்சியும் அழகிரிக்கு எதிராக இருக்கும்போது, அவரை மாற்றுவதில் தலைமைக்கு என்ன சிக்கல்?' என்று கோபமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு கார்கே, "என்னிடம் எந்த சிக்கலும் இல்லை; தமிழக தலைவர் மாற்றத்தை நிறுத்தி வையுங்கள்' என்று ராகுல்தான் சொல்லியிருக்கிறார். அதனால் அவரிடம் முறையிடுங்கள்' என்று கூறினாராம். அதனால், கட்சியின் தமிழக சீனியர்கள் பலரும், ராகுலை சந்திக்கத் திட்டமிட்டிருக்கி றார்களாம்.''”
"சமீப நாட்களாக சென்னையின் தட்பவெப்பம் சரியில்லைங்கிற மனக்குறை நிலவுகிறதே?''”
"அண்மைக்காலமாக தமிழகத் தலைநகரான சென்னையில் க்ரைம் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும் அங்கே சட்ட விரோத சீட்டாட்ட கிளப்புகள் தொடங்கி, கிளுகிளு மசாஜ் பார்லர்கள்வரை களைகட்டி, நகரை டேஞ்சரஸ் நிறத்துக்கு மாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல் வட மாநிலக் கும்பல் ஒன்றும் சிட்டி கமிஷனரின் பெயரைச் சொல்லிக் கொண்டு சகல சட்டவிரோத நடவடிக்கை களையும் நடத்தி வருகிறதாம். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கே புகார்கள் போக, அவற்றைப் பார்த்துத் திகைத்துப் போன அவர், இது குறித்து சிட்டி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடமே சொல்லி, உரிய நடவடிக்கைகளை முடுக்கிவிடும்படி அறிவுறுத்தினாராம்.''”
"எல்காட்டிலும் சலசலப்பு தெரியுதே?''”
"தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பத்துறையின் கீழ் இயங்குகிறது எல்காட் நிறுவனம். இதன் தலைமை அலுவலகம் சென்னை நந்தனத்தில் இருக்கிறது. இது, எல்காட்டின் சொந்த கட்டடம். சொந்த கட்டடத்தில் இருக்கும் இந்த நிறுவனத்தை வாஸ்து சரியில்லை என்று சொல்லி, அங்கிருந்து எம்.ஆர்.சி. நகரில் உள்ள ஒரு வாடகைக் கட்டிடத்திற்கு இடம் மாற்ற, துறையின் செயலாளர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்.ஸும், எல்காட் நிறுவன நிர்வாக இயக்குநர் அனீஸ் சேகரும் காய்களை நகர்த்தி இருக்கிறார்கள். ஏறத்தாழ 6000 சதுரஅடி கொண்ட இந்தக் கட்டடத்துக்கு, வாடகையாக மாதம்தோறும் மூன்றரை லட்ச ரூபாய்க்கு மேல் கொடுக்க வேண்டி வருமாம். அரசாங்கமும் சரி, எல்காட்டும் சரி… ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், சொந்தக் கட்டடத்தைக் கைவிட்டு, யாரேனும் வாடகைக் கட்டடத்துக்கு இடம் பெயர்வார்களா? அரசுப்பணத்தை விரயம் செய்வார்களா? என்கிறார்கள் பலரும். அது மட்டுமல்ல, வாடகைக்கு செல்லும் கட்டடத்தை தங்கள் விருப்பப்படி மாற்றியமைக்க, சில கோடிகளை அதிகாரிகள் செலவிட இருப்பதாகவும் எல்காட் தரப்பிலிருந்தே புகைச்சல் கிளம்புகிறது.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஜி. தினகரனுக்கு பதவி உயர்வு கொடுக்கக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாகவும், அந்த அளவுக்கு ஐ.ஜி.க்கு தண்டனை தேவையில்லை என்று முதல்வருக் கும், உள்துறைக்கும் டி.ஜி.பி. தனி ஃபைலை அனுப்பி வைத்திருப்பதாகவும் அண்மையில் நாம் பேசியிருந்தோம். அது செப். 27-29 தேதியிட்ட நம் நக்கீரன் இதழின் ராங்கால் பகுதியில் பதிவாகி இருந்தது. ஆனால் இதை மறுக்கும் காவல்துறை உயரதிகாரிகள் தரப்பு, ’ஐ.ஜி. தினகரன், பதவி உயர்வுக்கு 3 நாள் முன்பாக தனக்கு மட்டும் கொடுக்கப்பட்ட சார்ஜ் மெமோவுக்கு எதிராக டி.ஜி.பி.
யிடம் முறையிட்டார் என்றும், ஆனால் டி.ஜி.பி.யோ அதை ஏற்காமல் இவருடன் சேர்த்து மற்ற 4 அதிகாரிகளுக்கும் ஒரே மாதிரியான துறை நடவடிக் கைக்கு பரிந்துரைத் துள்ளார் என்றும் தெரிவிக்கிறார்கள்.''