பா.ஜ.க.வின் "என் மண் என் மக்கள்' நடை பயணத்தின் நிறைவுநாள் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வரும் மோடியை, "கோ பேக் மோடி' என சொல்வதற்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் திட்ட மிட்டுள்ளன. ஆனால் இதற்கு அனுமதி கிடைக் குமா என்கிற எதிர்பார்ப்பில் இருக்கின்றன அக்கட்சிகள். இதனால் மோடியின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியிருக் கும் நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சில அதிரடிகளை கிளப்புவார் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக 27-ந்தேதி திருப்பூர் வரு கிறார் பிரதமர் மோடி. அங்கு பா.ஜ.க. ஏற்பாடு செய் திருக்கும் பொதுக்கூட் டத்தில் கலந்துகொள்கிறார். மோடி கலந்து கொள்ளும் தேர்தல் பொதுக்கூட்டம் என்பதால் அவரை கவர்வதற்காக, பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது தமிழக பா.ஜ.க. ஆனால் கூட்டத்தைத் திரட்டுவதில்தான் எப் போதுமே சோடை போய்க்கொண்டிருக் கிறார்கள் பா.ஜ.க.வினர்.

sta

திருப்பூர் பொதுக்கூட்டம் முடிந்ததும் கேரளா செல்லும் மோடி, மறுநாள் (28.02.24) அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்து, தூத்துக்குடியில் குலசேகரப்பட்டணம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ மேற்கொள்ளும் அனைத்துத் திட்டங்களும் ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டோவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீஹரிகோட்டோவைக் கடந்து எந்த சிந்தனையும் மோடியின் ஒன்றிய அரசுக்கு இருக்கவில்லை.

Advertisment

இந்த நிலையில்தான், இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்குரிய அவசியத்தையும் அதற்கான திட்டத்தையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது இஸ்ரோ. அதனை ஏற்றுக்கொண்ட மோடி அரசு, அதனை செயல்படுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கையைத் தொடங்கியது. இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டபோது, இந்தியாவின் பல மாநிலங்கள் இந்தத் திட்டத்தை தங்கள் மாநிலத்திற்கு கொண்டுவர பகீரத முயற்சிகளில் ஈடுபட்டன.

இந்தத் திட்டம் வருவதன் மூலம் தமிழகத்தின் தொழில்வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் பெருகும் என ஆலோசித்து, இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடியிலுள்ள குலசேகரன்பட்டிணத்தில் அமைக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டார் தி.மு.க.வின் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. இதற்காக, பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் என சம்மந்தப்பட்ட அனைவரையும் சந்தித்து வலியுறுத்தினார்.

sst

Advertisment

குலசேகரபட்டிணத்தில் அமைப்பதன் மூலம், எரிபொருள் செலவினங்கள் மற்றும் விண்வெளியில் இலக்கை ராக்கெட் அடைவதற்கான நேரம் குறைவு உள்பட என்னென்ன நன்மைகள் இருக்கும் என்பதை தொழில்நுட்ப ரீதியிலான அனைத்துக் காரணிகளையும் சுட்டிக்காட்டி மோடியிடம் விவரித்தார் கனிமொழி. அவர்களின் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்தினார்.

கனிமொழியின் முயற்சியைப் புறக்கணித்து விடாமல் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற் கொண்ட ஒன்றிய அரசு, ராக்கெட் ஏவுதளம் அமைக்க அனைத்து வழிகளிலும் குலசேகரபட்டி ணம் சிறந்த இடம் என தேர்வு செய்து, ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தை தமிழகத்தில் அமைக்கத் தீர்மானித்தனர். இந்தத் திட்டத்தை கொண்டுவர கனிமொழி எடுத்த பலகட்ட முயற்சிகளை பாராட்டினார் பிரதமர் மோடி.

குலசேகரபட்டிணத்தில் 2,233 ஏக்கர் பரப்பளவில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவதற்காகத்தான் தூத்துக்குடிக்கு வருகிறார் பிரதமர் மோடி. அது மட்டுமல்லாமல் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திலிருந்து கடலில் கட்டப்பட்ட புதிய ரயில்வே தூக்கு மேம்பாலத்தையும் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி.

மிக முக்கியமான இந்தத் திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு வருவதையொட்டி, அந்த மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிடப் பட்டுள்ளது. தண்ணீரில் செல்லும் சிறப்பு விமானம் மூலம் பாம்பன் பாலம் முதல் கன்னியாகுமரி வரையில் கடலிலும் ரோந்து பணியில் ஈடுபடு கின்றன. கடலில் ஈடுபடும் இந்த ரோந்துப்பணிகள் தினமும் 3 முறை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த 2 திட்டங்களும் துவக்கி வைப்பதற் கான விழா ஏற்பாடுகள் தூத்துக்குடி துறைமுக நிர்வாக அலுவலக வளாகத்தில் செய்யப்பட்டிருக் கிறது. தூத்துக்குடி ஹெலிபேட் தளத்திலிருந்து விழா நடக்கும் இடத்துக்கு குண்டுத் துளைக்காத புல்லட் புரூப் காரில் செல்கிறார் மோடி. இந்தத் திட்டங்கள் இரண்டும் தமிழகத்திற்கு வரப்பிரசாத மாக அமையவிருக்கிறது. இந்த நிலையில், தூத்துக் குடிக்கு மோடி செல்வது குறித்து பிரதமர் அலு வலகத்துக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் சில தகவல்களை மத்திய உளவுத்துறை யினர் தெரிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து விசாரித்தபோது, "தென்மாவட் டங்களில் கடந்த மாதம் பொழிந்த கடும் மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக் கப்பட்டன. இதற்கான நிவாரண உதவி கோரி பிர தமருக்கு கடிதம் எழுதினார் முதல்வர் ஸ்டாலின். நேரிலும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார்.

இதனையடுத்து நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், ஒன்றிய அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வை யிட்டு தமிழக அரசு கேட்கும் நிவாரண நிதி உதவியை வழங்கலாம் எனத் தெரிவித்திருக்கிறார் கள். ஆனால், ஒன்றிய அரசால் நிவாரண உதவி வழங் கப்படவில்லை. அதனால், தூத்துக்குடி மாவட்டத் துக்கு பிரதமர் வருகிறபோது, ஒன்றிய அரசுக்கு எதிராகவும் பிரதமரை கண்டித்தும் தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் திட்டமிடுவதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில், தூத்துக்குடிக்கு பிரதமர் செல்வதை பரிசீலிக்கலாம். அங்கு செல்வதற்குக் பதிலாக, திருப்பூர் வருகிறபோது அங்கிருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் இந்த திட்டங்களை திறந்து வைக்கலாம்.

தமிழக அரசு கேட்ட நிவாரண நிதி உதவி கோரிக்கையை ஏற்காமல் ஒன்றிய அரசு புறக்கணித்து வருவதால் தென் மாவட்ட மக்களிடம் அதிருப்திகள் உருவாகியிருக்கின்றன. இதனை வைத்து தி.மு.க. அரசு, ஒன்றிய அரசுக்கு எதிராக பேசத் திட்டமிடுகிறது என பிரதமர் அலுவல கத்துக்கு தெரியப்படுத்தியிருக்கிறது உளவுத் துறை. ஆனால், தூத்துக்குடிக்கு வருவதை பரிசீலிக்கலாம் என்கிற யோசனையை ஒன்றிய அரசு நிராகரித்திருக்கிறது. திட்டமிட்டபடி தூத்துக்குடிக்கு பிரதமர் வருவதால், தென் மாவட்ட மக்களின் அதிருப்தியை போக்கும் வகையிலும் தி.மு.க. அரசுக்கு செக் வைக்கும் வகையிலும் நிவாரண நிதி உதவி குறித்து பிர தமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்''’ என்கின்றனர் உளவுத்துறை வட்டாரங்கள்.

இதற்கிடையே, மோடியின் வருகையை அரசியல்ரீதியாக முதல்வர் ஸ்டாலின் அணுகத் திட்டமிட்டிருப்பதாக தி.மு.க. தரப்பில் தகவல்கள் பரவிவருகின்றன.

இதுகுறித்து தி.மு.க. வட்டாரத்தில் விசா ரித்தபோது, "நிவாரண உதவி கேட்டு ஒன்றிய அரசிடம் பல வழிகளிலும் முதல்வர் ஸ்டா லின் வலியுறுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்ட தமிழகத்தின் சூழல்களையும் விவரித்திருக் கிறார். அப்படியிருந்தும் ஒரு பைசா கூட ஒன்றிய மோடி அரசு இதுவரை அறிவிக்கவில்லை. அதனால், மோடி கலந்துகொள்ளும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்காமல் புறக் கணித்து, மோடி அரசை கண்டிக் கும் வகையில் ஒரு அறிக்கை வெளியிடலாம் என ஆலோசிக்கப் பட்டது. அரசு அதிகாரிகள் வேறு சில யோசனைகளை சொல்லியிருக்கிறார்கள் அதனால் முதல்வரின் முடிவு இன்னும் தெரியவில்லை''” என்கிறார்கள் தி.மு.க.வினர்.

கோட்டையில் விசாரித்தபோது, "ஒன்றிய அரசின் திட்டமாக இருந்தாலும் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் திட்டங்கள். அதனால், விழாவில் கலந்துகொண்டு மோடியின் முன்னிலையில், நிவாரண நிதி உதவி செய்வதில் தமிழகத்தை மோடி எப்படி வஞ்சிக்கிறார் என்றும், தமிழக அரசு பல முறை வலியுறுத்தியும் நீங்கள் (மோடி) பாராமுகமாக இருப்பது தமிழக மக்களை அவமதிப்பதாக இருக்கிறது என்றும் தமிழக அரசின் கோபத்தையும் அதிருப்தியையும் முதல்வர் வெளிப்படுத்தலாம்.

அப்போதாவது பிரதமர் உணர்கிறாரா என பார்க்கலாம். உணர்ந்தாலும் உணராவிட்டாலும் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியலை மக்களிடம் கொண்டு செல்ல நமக்கு உதவும் என்கிற ரீதியில் முதல்வரிடம் அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். அதனால், மோடி வருகையின் போது அவருக்கு எதிரான ரியாக்ஷன் முதல்வரிடமிருந்து வெளிப்பட லாம்''’என்று கோட்டை வட்டாரங் களில் எதிரொலிக்கிறது.

__________

இறுதிச் சுற்று!

ff

பிப்ரவரி 22, வியாழனன்று தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தில், மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடகா கூறிவருவது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் அணை கட்ட முடியாது. மேகதாதுவில் அணை கட்டுவோமென்று கர்நாடக அரசு பேசலாம், ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. மேகதாதுவில் ஒரு செங்கல்லைக்கூட கர்நாடக அரசு வைக்க தி.மு.க. அரசு அனுமதிக்காது'' என்றார். ஆனால் துரைமுருகனின் பதிலில் திருப்தியில்லை எனக்கூறிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மேகதாதுவில் அணை கட்டப்பட்டுவிட்டால், மேட்டூருக்கு தண்ணீர் வராமல் வறண்டு போய்விடும். இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துக்கொண்டு இவ்விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.

-கீரன்