நாலு மாசத்துக்கு முன்னால சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் ‘இரண்டாம் குத்துங்கிற படத்தின் ஏடாகூட டீசர் ரிலீசாகி, அதுக்கடுத்து படமும் ரிலீசாகி, "என்னய்யா இப்டி பண்றீங்களேய்யா' என சினிமா இண்டஸ்ட்ரியவே டென்ஷனாக்கியது.
இப்ப அதே மாதிரியான லேட்டஸ்ட் ஏடா கூடம் என்னன்னா ‘"நாயே பேயே'’(எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பாய்ங்களோ?) என்ற படத்தின் டீசர் கடந்த வாரம் ரிலீசாகியிருக்கு.
அதில் ஒரு டயலாக், “""ஏம்ப்பா பேயக் கல்யாணம் பண்ணணும் சொல்றே?’இப்ப 90 சதவிகித பொண்டாட்டிங்களே பேயாத்தான இருக்காங்க''’’அப்படினு டயலாக். இதவிட அந்த டீசரில் இரண்டாம் குத்தெல்லாம் வேஸ்ட். நாங்க விடுறோம் பாரு மூணாவது குத்து டேஸ்ட் டுங்குற ரேஞ்சுக்கு புதுமுக ஹீரோயின் ஐஸ்வர்யா, கிளுகிளு சீன்களில் பின்னிப் பெடலெடுக்கிறார்.
இந்தப் படத்தைத் தயாரிச்சது யாருன்னா, ‘“"தனி ஒருவன்', “"வழக்கு எண்/18', ‘“"தில்லுக்கு துட்டு'’ போன்ற ஹிட் படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கோபி கிருஷ்ணா. ஹீரோயாருன்னா ‘"ஒரு குப்பைக் கதை'’என்ற ஹிட் படத்தில் நடித்த டான்ஸ் மாஸ்டர் தினேஷ் தான். பெண்களை மட்டமாக விமர்சிக்கும் அந்த டயலாக்கிற்கும் ஏடாகூட சீன்களுக்கும் எதிராக இன்னும் யாரும் குரல் கொடுக்காம இருக்குறது ஆச்சர்யமா இருக்கு. ஒருவேளை, படத்தின் கதை வேறாகவும், டீசர் அட்ராக்ஷன் வேறாகவும் இருக்குமோ!
லியோனி & சன்
பட்டிமன்ற மேடைகளிலும் ஞாயிறுதோறும் கலைஞர் டி.வி.யிலும் தனது கலகலப்பு பேச்சாலும் ரசனைமிக்க பாட்டாலும் தனக்கென ரசிகர்கள் படையை வைத்திருப்பவர் திண்டுக்கல் லியோனி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த லியோனி, இப்போது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பொதுக்கூட்ட மேடைகளில் பொளந்து கட்டி வருகிறார்.
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார், சீனுராமசாமி டைரக்ஷனில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள "மாமனிதன்', மாறன் டைரக்ஷனில் உதயநிதி நடித்து முடித்து ரிலீசுக்குத் தயாராகவுள்ள ‘"கண்ணை நம்பாதே'’போன்ற படங்களில் கவனிக்கத்தக்க கேரக்டர் களில் நடித்துவந்தார். இப்போது சோலோ ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ளார் லியோ சிவக்குமார். ‘"மாஸ்டர்'’ படத்தை தயாரித்த விஜய்யின் நெருங்கிய உறவினரான சேவியர் பிரிட்டோ, எஸ்தல் எண்டெர்டெய்ன்மெண்ட் என்ற புதுக்கம்பெனியை ஆரம்பித்துள்ளார். அந்தக் கம்பெனியின் முதல் தயாரிப்பாக சீனு ராமசாமியிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்த ஆர்.விஜயகுமார் டைரக்ட் பண்ணும் ‘"அழகிய கண்ணே'’ படத்தில்தான் லியோ சிவக்குமார் ஹீரோவாக எண்ட்ரியாகிறார்.
கூத்துப்பட்டறையில் ஆறுமாத காலம் நடிப்புப் பயிற்சியும் ராதிகாவிடம் நடனத்தையும் ஸ்டண்ட் சில்வாவிடம் சண்டைப் பயிற்சியையும் கற்றுள்ளார் லியோ சிவக்குமார்.
2020 ஏப்ரலிலிருந்து இந்த 2021 ஜனவரி வரை ஒன்பது மாதங்களில் கிட்டத்தட்ட பதினஞ்சுக்கும் மேற்பட்ட கிளாமர் ஃபோட்டோ ஷூட்டுகளை ரிலீஸ்பண்ணி வந்த சஞ்சிதா ஷெட்டிதான் லியோ சிவக்குமாரின் ஹீரோயின். கடந்த பிப். 15-ஆம் தேதி சென்னையில் ஷூட்டிங் ஆரம்பமாகி மதுரையில் முடிவடையவுள்ள "அழகிய பெண்ணே'வை ஏப்ரல் கடைசியில் ரிலீஸ் பண்ணும் ஐடியாவில் உள்ளாராம் சேவியர் பிரிட்டோ.
அதேபோல் திண்டுக்கல் லியோனியும் இருபது வருடங்கள் கழித்து "ஆலம்பனா'’ என்ற காமெடி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வைபவ் -பார்வதி நாயர், முனீஸ்காந்த் நடித்திருக்கும் இப்படத்தைத் தயாரித்திருக்கும் கே.ஜே.ஆர்.ராஜேஷ், எலெக்ஷனுக்குப் பிறகு ரிலீஸ் பண்ணப் போகிறாராம்.