சென்னை -அண்ணாநகர் விஸ்வேஸ்வ ரய்யா டவர் பூங்கா ஓப்பன் ஏர் தியேட்டரில் பள்ளி மாணவிகள் நடன நாடகங்கள் நடந்தன. இதற்கு நடுவர்களாக நக்கீரன் மகளிர் அணியினர் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி தாமத மானதால், அங்கேயே தங்கள் கக்சேரியைத் தொடங்கினர்.

பரணி: என்னலே மெரீனா! தலைல கிரீடம் ஏறின மாதிரி சந்தோஷம் தாண்டவமாடுது?

thinnai-katchery

மெரீனா: சாதாரண கிரீடம் இல்லை... சில்வர் கிரீடம். என் தலையில இல்ல... நம்ம லயோலா காலேஜ்ல பி.ஏ. படிச் சிட்டிருக்கிறாள் தமிழ்நாட்டுப் பொண்ணு அனுகிரீத்தி. அது தலைல சூட்டியிருக்காங்க.

Advertisment

நாச்சியார்: புரியுற மாதிரி பேசுங்கடி.

மெரீனா: இந்த வருஷத்துக் கான "ஃபெமினா மிஸ் இந்தியா' அழகிப் போட்டி மும்பைல நடந்துச்சு. 30 மாநிலப் பொண்ணு ளும் கலந்துக்கிட்டாங்க. தமிழ் நாட்டுப் பொண்ணு அனு கிரீத்தியை செலக்ட் பண்ணி யிருக்கிறாங்க. உலக அழகிப் போட்டிக்கு இந்தப் பெண்ணைத்தாம்மே இந்தியா சார்புல அனுப்பப் போறாங்க.

மல்லிகை: கரீமா மரிச்சானு ஒரு தமிழ்ப் பெண்மணி. இலங்கை கண்டியில பிறந்து, அங்கே படிச்சவங்க. இங்கிலாந்திற்குப் போய் லண்டன் பெருநகரத்துல லேபர் கட்சியில் சேர்ந்து தொண்டாற்றியவர். அவரை இப்ப ஹாரோ நகர மேயரா தேர்ந்தெடுத்திருக்காங்க.

Advertisment

காமாட்சி: உடலழகால் "மிஸ் இந்தியா' பட்டம் வென்ற அனுகிரீத்திக்கும், தொண்டால் ஹாரே மேயரான கரீமா மரிச்சாவுக்கும் வாழ்த்துகளை அனுப்புவோம்.

நாச்சியார்: வேலை செய்றவங்கள ஊக்கப்படுத் தணும். ஊக்கம் மட்டும் பத்தாது கரன்ஸியையும் காட்டணும்.

மல்லிகை: இதுக்கு உதாரணத்தை நான் சொல் றேன். என் கண்ணால கண்டு காதால கேட்ட விஷயம். கலைஞர் பிறந்தநாள் விழாவை, போனவாரம் (13-6-18) தி.மு.க. மகளிரணி திருப்பரங்குன்றம் கோபால் சாமி மஹால்ல கிராண்டா கொண்டாடினாங்க.

மெரீனா: ஆமா ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பழ.கருப்பையா, பர்வீன் சுல்தானா எல்லாரும் பேசினாங்களே...

மல்லிகை: அதேதான். விழா முடிஞ்சதும் மகளிரணியோடு கனிமொழி எம்.பி. உட்கார்ந்து பேசிட்டிருந்தாங்க. அப்ப ஒரு பொண்ணு ""தி.மு.க.வுல மற்ற அணிகளைக் காட்டிலும் நம்ம மகளிரணிதான் தலைவர் பிறந்தநாளை அதிகம் கொண்டாடுது''னு சொன்னுச்சு. இன்னொரு பொண்ணு, ""அதுக்கு காரணம் பணவசதிதான்... மகளிரணி விழாக்களுக்கும், கூட்டங்களுக்கும் நீங்க உதவி செய்ற மாதிரி, மத்த அணிகளுக்கு உதவி கிடைக்கிறது இல்லை. பண உதவியை விடுங்க. நாங்க ஏதாச்சும் போராட் டம் நடத்தினால், எங்களுக்கு மாவட்ட கழகச் செயலாளர் சப்போர்ட்கூட பண்ணமாட்டேன் கிறாங்க. செயல்தலைவர்ட்ட இதையெல்லாம் சொல்லுங்கனு சொன்னுச்சு. கனி மொழியும் தளபதி கிட்ட சொல்றேன்னு சொன்னாக.

thinnai-katchery

நாச்சியார்: ஒதவி, ஒத்தாசை செய்தால்தான் எதுவும் நடக்கும்.

பரணி: செஞ்ச உதவியை சொல்லிக் காட்டுனாக் கூட பரவாயில்லை... திருப்பிக் கேட்டு மிரட்டலாமா?

மெரீனா: ஓட்டுக்கு குடுத்த சேலையைத் திருப்பிக் கேக்கிறாங்களாம்மே?

பரணி: இது கொஞ்சம் காஸ்ட்லி. முதல்ல தினகரன் ஆதரவு நிலை எடுத்த திருவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபாவுக்கு அம்பது எல்லும் புத்தம்புது காரும் கூவத்தூர் பம்பர்ல கெடைச்சதாம். பொறகு அவிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கிருபையில எடப்பாடி அணிக்கு வந்தாவ. அதுனால இப்ப அந்தூரு டி.டி.வி. தரப்பு, "டி.டி.வி.க்கு துரோகம் பண்ணிட்டீங்க. ஒழுங்கா மருவாதியா காரையும், கரன்ஸியையும் திருப்பிக் குடு'ன்னு எம்.எல்.ஏ.வை மிரட்டுராவளாம்.

நாச்சியார்: நாணயம்... நாணயம் முக்கியம்த்தா...

பரணி: ஆனா எம்.எல்.ஏ. கணவர் முத்தையா, கிளீனா சொல்லிட்டாரு. "அது எங்க பணத்துல நாங்க வாங்கின காரு' அப்படீன்னு, ஆட்சியில இருக்கிறவுக மிரட்டினா அர்த்தம் இருக்கும். இவிய மெரட்டி ஒண்ணும் ஆகாது.

காமாட்சி: தி.மு.க. மகளிரணி பத்தி ஒரு சேதியை மல்லிகை சொன்னாள்... கேட்டீங்க. இப்ப நான் அ.தி.மு.க. மகளிரணி சேதி ஒண்ணு சொல்றன். காதைக் குடுங்க...

மெரீனா: வாய்வரைக்கும் வந்திருச்சில்ல... முழுங்காம வெளியில கொட்டும்மே...

காமாட்சி: திருவண்ணாமலை மாவட்டத்துல அமைச்சர் சேவூராருக்கும், போளூர் ஒ.செ. ராஜனுக்கும் முட்டல் மோதல். ரொம்ப நாளா ஒதுங்கி நிக்கிறாரு ராஜன். கட்சித் தலைமை புது ஒ.செ.யைப் போட்டாக. நிர்வாகிகளைக் கூப்பிட்டு, "போளூர் ஒ.செ. வேலைகளை இனிமேல் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா கவனிப்பார்'னு சொன்னாரு.

நாச்சியார்: இது ஒரு சேதியா?

காமாட்சி: இதுனால போளூர் இலைகள்லாம் பொங்கு பொங்குனு பொங்குறாங்க. ஜெய சுதாவோட கைகள் எக்கச்சக்கம் நீண்ட தாலதான் எம்.எல்.ஏ. எலெக்ஷன்ல தோத்தாங்க. இப்ப போளூர் ஒன்றிய பசுமை வீடு திட்டத்துல 52 வீடுகள ஒதுக்கினாகளாம். அதுல அ.தி.மு.க.வுக்கு 32, தி.மு.க.வுக்கு 20. அ.தி.மு.க. 32-க்கும் ஜெயசுதாதான் கலெக்ஷன் வேட்டை நடத்துனாங் களாம். அதோட தொடக்க வேளாண்மை சங்கத் தலைவர் பதவிகளை ஏலம் விடாத குறையா வசூல் நடக்குதாம். இவங்களை ஒ.செ. ஆக்கினால் வர்ற எலெக்ஷன்ல ரெட்டை இலை ஜெயிக்காதுன்னு புலம்புறாங்க.

பரணி: கிரீடத்துல தொடங்கி புலம்பல்ல முடிஞ்சிருக்கு இன்னக்கி கக்சேரி. டான்ஸ் ட்ராமா ஸ்டார்ட் ஆகப்போகுது யாருக்கு நம்ம கிரீடமோ...?

-இளையசெல்வன், சி.என்.ராமகிருஷ்ணன், து.ராஜா