புதுச்சேரி கடற்கரையில் அமர்ந்து அங்கே பாரதியார் வாழ்ந்தது பற்றியும் அந்தக் கடலில் தன் குழந்தைகளோடு அவர் குளித்தது பற்றியும் புதுச்சேரியின் கவிழ்க்கும் அரசியல் கலை பற்றியும் அலசிக்கொண்டிருந்த நக்கீரன் மகளிர் அணியின் பேச்சு காவல்துறையின் திசையில் திரும்பியது.

மெரீனா: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அவுங்களுக்குக் கீழ டி.ஜி.பி. சுந்தரி நந்தா, அவுங்களுக்குக் கீழ எஸ்.எஸ்.பி. அபூர்வா குப்தா, அவுங்களுக்குக் கீழ தெற்கு எஸ்.பி. ரட்சனா சிங்னு நாலு லேடீஸ் ஈகோ இல்லாம இருக்குமா... இந்த மூணு லேடீஸ் ஆபீஸருங்களும் தனித்தனியே ஆளுநரோட நெருங்கிப் பழகி, செல்வாக்காயிட்டாங்க. எஸ்.எஸ்.பி.க்கும் எஸ்.பி.க்கும் எப்ப பார்த்தாலும் நீயா? நானாதான்.

கோமதி: எஸ்.எஸ்.பி. அபூர்வா குப்தா கொஞ்ச வயசு. பெரிய ஆபீஸர். எஸ்.பி. ரட்சனா சிங் வயசுல மூத்தவங்க. ஆனால் எஸ்.எஸ்.பி.க்கு கீழே... அதான் பிரச்சினை.

thinaikatchery

Advertisment

காவேரி: எஸ்.எஸ்.பி. சொல்றதை எஸ்.பி. அனுசரிச்சுப் போய்விட்டால் பிரச்சினை ஏன் வருது?

மெரீனா: கொஞ்சநாள் மின்னாடி நடந்த சமாச்சாரம்மே... ஆயுதங்களோட திரிஞ்ச ஒரு ரவுடிக் கும்பலை தன்வந்திரி காவல்நிலையத்துக்கு இழுத்துக்கினு வந்திருக்காங்க. அதுல ஒருத்தன் காலேஜ் ஸ்டூடண்ட். அவனை மட்டும் வார்ன்பண்ணி எஸ்.பி. ரட்சனா சிங் விட்டுட்டாங்க. விஷயம் எப்படியோ எஸ்.எஸ்.பி. அபூர்வா மேடம் காதுக்குப் போயிருச்சு. "எனக்குத் தெரியாம என்கிட்ட கேக்காம எப்படி அவனை விடலாம்... அந்த மாணவனையும் கேஸ்ல சேருங்க'னு ஆர்டர் போட்டுட்டாங்க.

கோமுகி: இதுல வேடிக்கை என்னான்னா இவங்க ரெண்டுபேர் ஈகோவை டி.ஜி.பி. சுந்தரி நந்தா மேடமும் கிரண்பேடியும் வேடிக்கை பார்க்கிறதுதான்.

Advertisment

காமாட்சி: வேடிக்கை பார்க்கக்கூடாது. உடனே டிரான்ஸ்பர் பண்ணிடணும். திருவண்ணாமலைல நான் வச்சதுதான் சட்டம். வடக்கு மண்டல ஐ.ஜி. சொன்னாலும் கேக்கமாட்டேன். வேலூர் சரக டி.ஐ.ஜி. சொன்னாலும் கேக்கமாட்டேன்னு நடந்துக்கிட்டாங்க. இப்ப என்னாச்சு? திருவள்ளூருக்கு டிரான்ஸ்பர். எஸ்.பி. பொன்னிய மாற்றிட்டாங்கனு சொன்னதும்... திருவண்ணாமலை மாவட்ட இன்ஸ்பெக்டர்களும், எஸ்.ஐ.களும் கொண்டாடுறாங்க.

மல்லிகை: அந்த அளவுக்கு டார்ச்சரா?

காமாட்சி: எந்தப் புகார் வந்தாலும் அந்தப் புகார் எவ்வளவு வெயிட்டுனுதான் எஸ்.பி. பொன்னி எதிர்பார்ப்பாங்களாம். எஸ்.பி.யோட அம்மா இருந்தாங்களே அவங்களுக்குப் புடிச்ச வார்த்தை "வாங்கித்தா வாங்கித்தா'ங்கிற வார்த்தைதானாம்.

மெரீனா: எஸ்.பி.க்கு நிழல் யாருமில்லையோ?

காமாட்சி: அவருதான் எஸ்.பி. ஏட்டு. இவருதான் எஸ்.பி.க்கு எல்லாமுமா இருந்தாரு. இவர்மேல ஒரு புகாரை சி.எம்.லெவலுக்குக் கொண்டுபோனார், ஆளும்கட்சி தெற்கு மா.செ. ராஜன். அதனால் ஏட்டய்யாவை ரெகார்டு செக்ஷனுக்கு மாத்திப்பிட்டாங்க. அந்த ஏட்டய்யாவை மறுபடியும் தனக்கிட்ட கொண்டுவர நெனைச்சதோட, இந்த ரஷ்யப் பொண்ணு கற்பழிப்புக் கொடுமையில் சிலரைக் காப்பாற்ற முயற்சி செஞ்சாங்களாம்... அதான் டென்ஷனில் மிதக்கிற திருவள்ளூருக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க.

மெரீனா: எழுபத்தஞ்சு இளைஞர்கள்ட்ட நாலு கோடி ரூபாயை ஆட்டையப் போட்ட சோபியாவோட கதையை நான் சொல்றேன் கேளுங்க.

கோமுகி: இந்த சோபியா எந்தூரு போலீஸ்?

மெரீனா: போலீஸ் இல்லை. சிதம்பரம் பக்கத்துல சிலுவைபுரம்னு ஒரு ஊரு. இந்திய உணவுக் கழகத்தில் கண்காணிப்பாளர்னு போலி ஐ.டி. கார்டு ரெடி பண்ணிட்டு ரேஷன் கடைகளுக்கெல்லாம் போய் ரெய்டு ஆக்ட் குடுத்து, கைக்கு எட்டினதை வாங்கியிருக்கிறாள். அப்புறம் கடலூர்ல ஒரு ஸ்கூல்ல இருக்கிற ஃபாதர் கென்னடி மாதிரி ஆட்களோட பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இந்திய உணவுக் கழகத்துல வேலை வாங்கித் தர்றேன்னு சொல்லி தலா மூணு லட்சம் நாலு லட்சம், அஞ்சு லட்சம்னு வாங்கியிருக்கிறார். அந்த ஃபாதரோட ஏற்பாட்டுல 99 லட்சம் வசூல் பண்ணியிருக்கார்னா பாத்துக்கம்மே.

thinaikatchery

காமாட்சி : 75 பேர்ல ஒருத்தர்கூடவா சந்தேகப்படலை.

மெரீனா: பணம் வாங்கின ரெண்டு மாசத்துல, தமயந்தி ஐ.ஏ.எஸ். கையெழுத்தைப் போட்டு அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை கொடுத்திருவாராம்... அப்புறம் அந்த டிரைனிங் இந்த டிரைனிங்னு வருஷத்தை கடத்தியிருக்கிறார்.

காவேரி: ஊரு, பேரு தெரியும்ல அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?

மெரீனா: கம்மியன்பேட்டையில 50 லட்சத்துக்கு சொகுசு பங்களா கட்டி அதுலதான், ரெண்டு பொண்டாட்டிக்காரன் ஒருத்தனோட சேர்ந்து வாழ்ந்தாராம். போலீஸ் நெருங்கினதும் தலைமறைவாயிட்டாரு. அந்த சோபியாவோட அம்மா ஆரோக்கிய செல்வியையும் போலி பணி ஆணைகள் தயாரிச்சுக் கொடுத்த வரக்கால்பட்டு ரவியையும் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க.

காமாட்சி: கழுவின மீன்லயும் நழுவின மீனா இருந்திருக்காரே...

கோமுகி: பாண்டிச்சேரி டூர் முடிஞ்சாச்சு... எந்திரிங்க.

-து.ராஜா, காளிதாஸ், சுந்தரபாண்டியன்