திண்ணைக் கச்சேரி! மலைவாசிப் பெண்களுக்கு அதிகாரி டார்ச்சர்!

hinaikatchery

கோமுகி: பாண்டிச்சேரி கவர்மெண்ட்ல முக்கிய பொறுப்புல இருக்கிற ஒரு பெண் அதிகாரி எனக்கு கால்பண்ணாங்க.

மெரீனா: இன்னாத்துக்கு? புட்பால்ல பிரான்ஸ் ஜெயிச்சதுக்கு பார்ட்டி தரப்போறாங்களோ?

thinaikatchery

கோமுகி: கிரண்பேடி வந்தநாள்ல இருந்து சனி, ஞாயிறு லீவே இல்லாமப் போச்சாம். காலை 7 மணிக்கே சைக்கிளை எடுத்துட்டு "விசிட்'டுனு மிதிக்க ஆரம்பிக்கிறாங்க. பத்துமணிக்கு ராஜ் நிவாஸ்ல ஆய்வுக் கூட்டம். அரைநாளுக்குப் பிறகு வீட்ல என்ன வேலை செய்ய முடியுது? ஆண்களுக்கு பிரச்சினை இல்லை. பெண் அதிகாரிகளின் சிரமத்தை துணைநிலைக்கு புரியவைங்கனு என்கிட்ட அந்த அதிகாரி கெஞ்சினாங்க.

வாணி: கிரண்பேடி ஒண்டிக்கட்டை. நல்லநாளு, பெரியநாளு, குழந்தைகுட்டி, ஒட்டுஉறவு உள்ள குடும்பத்தலைவிகளுக்கு சிரமம்தானுங்க.

பவானி: எனக்கு சத்தியமங்கலம் கெத்தேசால் மலைக்காட்டுல இருந்து ஒரு தாக்கல் வந்ததுங்க. காலங்காத்தால மலைவாசிப் பெண்கள் ஆறுபேரு கொஞ்ச

கோமுகி: பாண்டிச்சேரி கவர்மெண்ட்ல முக்கிய பொறுப்புல இருக்கிற ஒரு பெண் அதிகாரி எனக்கு கால்பண்ணாங்க.

மெரீனா: இன்னாத்துக்கு? புட்பால்ல பிரான்ஸ் ஜெயிச்சதுக்கு பார்ட்டி தரப்போறாங்களோ?

thinaikatchery

கோமுகி: கிரண்பேடி வந்தநாள்ல இருந்து சனி, ஞாயிறு லீவே இல்லாமப் போச்சாம். காலை 7 மணிக்கே சைக்கிளை எடுத்துட்டு "விசிட்'டுனு மிதிக்க ஆரம்பிக்கிறாங்க. பத்துமணிக்கு ராஜ் நிவாஸ்ல ஆய்வுக் கூட்டம். அரைநாளுக்குப் பிறகு வீட்ல என்ன வேலை செய்ய முடியுது? ஆண்களுக்கு பிரச்சினை இல்லை. பெண் அதிகாரிகளின் சிரமத்தை துணைநிலைக்கு புரியவைங்கனு என்கிட்ட அந்த அதிகாரி கெஞ்சினாங்க.

வாணி: கிரண்பேடி ஒண்டிக்கட்டை. நல்லநாளு, பெரியநாளு, குழந்தைகுட்டி, ஒட்டுஉறவு உள்ள குடும்பத்தலைவிகளுக்கு சிரமம்தானுங்க.

பவானி: எனக்கு சத்தியமங்கலம் கெத்தேசால் மலைக்காட்டுல இருந்து ஒரு தாக்கல் வந்ததுங்க. காலங்காத்தால மலைவாசிப் பெண்கள் ஆறுபேரு கொஞ்சம் தொலைவுல காட்டுப்பகுதியில போயி காலைக்கடன்களை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்திருக்காங்க. அப்ப ரேஞ்சர் முரளி ஜீப்ல வந்திருக்கார். வந்தவர் ஜீப்பை நிறுத்திட்டு "நில்லுங்கடி, புலிகள் காப்பகத்துக்குள்ள போயி என்ன திருடிட்டு வர்றீங்க?'னு அதட்டினாராம்.

நாச்சியார்: புலிகள் காப்பகப் பகுதியில திருடுவதற்கு என்ன இருக்கும்?

பவானி: தேன் எடுக்கலாம். சுள்ளி பொறுக்கலாம் அல்லது துடைப்பத்துக்கு சீகு அறுக்கலாம். வேறென்ன திருட முடியும்? அந்தப் பெண்கள் பயந்துபோய் ""ஆபீசர் சாமீ... சத்தியமா நாங்க மலங்கழிக்கத்தான் போனோம்''னு சொல்லீருக்காங்க. அவர் நம்பலை. வாங்கடி காட்டுங்கடின்னு கூட்டிட்டுப்போயி, அவுங்க கழிச்சதை பார்த்த பிறகுதான் நம்பினாருங்களாம்.

hinaikatchery

கோமுகி: மலைவாசிப் பெண்கள் என்றாலே நம்ம வனத்துறை அதிகாரிகளுக்கு எளக்காரம்தான். நாம மக்களின் சேவகர்ங்கிற உணர்வு அதிகாரிகளுக்கு வரணும்.

வாணி: எங்க நீலகிரிக்கு எஸ்.பி.யாக வந்திருக்கிற சண்முகப்பிரியா வந்ததும் ஒரு நல்ல விஷயத்தை செஞ்சிருக்காங்க.

நாச்சியார்: புதுசா வந்ததும் பொறுப்பை காட்டீட்டாங்களோ?

வாணி: நான் கிண்டலடிக்கலீங்க. குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, கூடலூர்னு... நீலகிரியில 20-க்கும் அதிகமா போலீஸ் ஸ்டேஷன் இருக்குங்க. ஆனால் இங்கே இதுவரை நடந்த கொலை, கொள்ளை, வழிப்பறி குற்றவாளிகளை பிடிக்கவுமில்லை... கட்டுப்படுத்தவுமில்லீங்கோ...ஜெயலலிதாவோட கொடநாடு எஸ்டேட்ல நடந்த கொலைக்கே இன்னும் ரிசல்ட் இல்லீங்க.

கோமுகி: எஸ்.பி. சண்முகப்பிரியா என்ன செஞ்சாங்க?

வாணி: ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் மூணு, நாலு போலீஸ்தான் இருந்தாங்க. அதனாலதாங்க எந்த கேஸ்லயும் அக்கறை காட்ட முடியலை. புது எஸ்.பி. அம்மா வந்ததும் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் 25 போலீசாரை கூடுதலா போட்டுருக்காங்க. எந்தக் கேஸும் பெண்டிங் இருக்கக்கூடாதுன்னு உத்தரவும் போட்டிருக்காங்க.

நாச்சியார்: நீலகிரி போலீஸ் இனிமேல் கூடம் கோணல்னு காரணம் சொல்ல முடியாது.

hinaikatchery

பரணி: தூத்துக்குடி தி.மு.க. என்று சொன்னால் அது கலைஞரோட முரட்டுப் பக்தர் என்றுதான் அர்த்தம். 30 வருஷம் அப்படித்தான் அசைக்க முடியாத, யாரும் நெருங்க முடியாத உயரத்தில் இருந்தார் பெரியசாமி. இப்ப அவரோட மகள் கீதாஜீவன்தான் வடக்கு மா.செ. தூத்துக்குடி எம்.எல்.ஏ.வும் கீதாஜீவன்தான். ஆனால், தி.மு.க. தொண்டர்கள் யாரும் இவியளுக்கு பழைய மரியாதை குடுக்குறதில்லை.

மெரீனா: இக்கரைக்கு அக்கரைப் பச்சை. முடிவைச் சொல்லும்மே.

பரணி: கீதாஜீவன் கலை அறிவியல் காலேஜ், சந்தோஷ் நீச்சல் குளம், ஜி.ஜெ. மினரல் வாட்டர்னு பிஸினஸ்ல தீவிரம் காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அரசியலிலும் பல கணக்குகள் போடுறாங்க.

நாச்சியார்: தூத்துக்குடி தெற்கு மா.செ. அனிதா ராதாகிருஷ்ணன் செல்வாக்குக்கும் வடக்கு மா.செ. போடுற கணக்குக்கும் சம்பந்தமே இல்லைனு நம்புவோம்.

கோமுகி: கரையில ஒருகால், தண்ணியில ஒரு கால்னு சொல்லுவாங்களே... அந்த மாதிரி ஆக்ஷன் எங்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியின் ஆக்ஷன்.

வாணி: உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லுங்க?

கோமுகி: ஒண்ணென்ன... ரெண்டு சொல்றேன். அரியலூர் எம்.எல்.ஏ. அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் உட்பட ஆளும் கட்சிக்காரங்க தேவையில்லாம பிரஷர் கொடுத்தா... "போங்க... போங்க சி.எம்.கிட்ட போங்க'னு அனுப்பி வச்சிடுறாரு.

வாணி: ரெண்டாவது...?

கோமுகி: ஜெயங்கொண்டம் பெரியகிருஷ்ணாபுரம் கிராம மக்கள் வீட்டுமனைப் பட்டா கேட்டு 18 வருஷமா போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தம்மா உத்தரவுல 77 பேருக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்கப் போகுது. அரசியல்வாதிகள்னா ரொம்ப அலர்ட்டா இருக்காங்க. ஏழை மக்கள்னா கொஞ்சம் தாராளமா இருக்காங்க.

நாச்சியார்: இன்னக்கி கச்சேரி... ஆளுநர்ல ஆரம்பிச்சி ஆட்சியர்ல முடிஞ்சிருக்கு.

-ஜீவாதங்கவேல்

-எஸ்.பி.சேகர்

-அருள்குமார்

-சுந்தரபாண்டியன்

-நாகேந்திரன்

nkn27-07-2018
இதையும் படியுங்கள்
Subscribe