திண்ணைக் கச்சேரி! : உயிரைப் பறித்த காதல்!

thinaikatchery

ஞ்சாவூர் ரயில் நிலையம் பழமையானது. பெரியகோயிலைப் போலவே பரபரப்பில்லாதது. தோழிவீட்டுக் கல்யாணத்தில் கலந்துகொண்ட நக்கீரன் மகளிரணி, தஞ்சை ரயில் நிலையத்தில் கச்சேரியை நடத்தியது.

நாச்சியார்: வழியில பார்த்து விஷ் பண்ணுனியே ஒரு இன்ஸ்பெக்டர், அவுங்களை உங்களுக்கு நல்லா தெரியுமோ?

thinaikatchery

காவேரி: யாரு, வேலுதேவியை கேக்கிறீங்களா? அவுங்க இப்ப தஞ்சாவூர்ல வேலை செய்றாங்க. இதுக்கு முன்னே திருவெண்காட்ல ட்யூட்டில இருந்தப்ப தெரியும். அவங்களைப் பற்றி ஒருசில செய்திகள் வந்திருக்கு. நிறைய புகார்கள் போயிருக்கு. இப்பக்கூட மனித உரிமை ஆணையத்தில் ஆஜராவதற்காக சென்னை போயிட்டு வந்தாங்க.

காமாட்சி: அப்படி என்ன புகார்?

காவேரி: திருவெண்காட்டை சேர்ந்த கோபி என்ற இளைஞர் சிங்கப்பூர்ல வேலை செய்றாரு. அவர் லீவுல ஊருக்கு வந்திருந்தப்ப மணல் கொள்ளைக்கு எதிரா போராடியிருக்கிறார். அந்தச் சமயத்தில் ஆய்வாளர் வேலுதேவி மீது ஏகப்பட்ட புகார்கள்.

ஞ்சாவூர் ரயில் நிலையம் பழமையானது. பெரியகோயிலைப் போலவே பரபரப்பில்லாதது. தோழிவீட்டுக் கல்யாணத்தில் கலந்துகொண்ட நக்கீரன் மகளிரணி, தஞ்சை ரயில் நிலையத்தில் கச்சேரியை நடத்தியது.

நாச்சியார்: வழியில பார்த்து விஷ் பண்ணுனியே ஒரு இன்ஸ்பெக்டர், அவுங்களை உங்களுக்கு நல்லா தெரியுமோ?

thinaikatchery

காவேரி: யாரு, வேலுதேவியை கேக்கிறீங்களா? அவுங்க இப்ப தஞ்சாவூர்ல வேலை செய்றாங்க. இதுக்கு முன்னே திருவெண்காட்ல ட்யூட்டில இருந்தப்ப தெரியும். அவங்களைப் பற்றி ஒருசில செய்திகள் வந்திருக்கு. நிறைய புகார்கள் போயிருக்கு. இப்பக்கூட மனித உரிமை ஆணையத்தில் ஆஜராவதற்காக சென்னை போயிட்டு வந்தாங்க.

காமாட்சி: அப்படி என்ன புகார்?

காவேரி: திருவெண்காட்டை சேர்ந்த கோபி என்ற இளைஞர் சிங்கப்பூர்ல வேலை செய்றாரு. அவர் லீவுல ஊருக்கு வந்திருந்தப்ப மணல் கொள்ளைக்கு எதிரா போராடியிருக்கிறார். அந்தச் சமயத்தில் ஆய்வாளர் வேலுதேவி மீது ஏகப்பட்ட புகார்கள். அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தி யாரோ போஸ்டர் அடிச்சு ஒட்டியிருந்தாங்க. இந்த கோபிதான் ஒட்டியிருப்பார்னு நினைச்சிட்டாரு ஆய்வாளர் வேலுதேவி.

மெரீனா: கேஸ் போட்டு துவைச்சிட்டாரோ?thinaikatchery

காவேரி: ரமேஷ் என்பவரை வழிமறித்து கொலைமிரட்டல் விட்டதாகவும், தாக்கியதாகவும் கோபி மீது வழக்கு பதிவு செய்துவிட்டார். ஆனால் விஷயம் என்னன்னா, இன்ஸ் குறிப்பிட்டு பதிவுசெய்த நாளுக்கு இரண்டுநாள் முன்பே கோபி சிங்கப்பூர் போய்விட்டாராம். தங்கள் மகனை பழிவாங்குவதற்காக வேலுதேவி பொய் கேஸ் போட்டார்னு மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தார்கள். அந்த விசாரணைக்காகத்தான் வேலுதேவி மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகியிருக்காங்க.

பவானி: திருச்சி மகளிர் சிறை வார்டன் செந்தமிழ்ச்செல்வி தற்கொலை விவகாரம் காவல்துறை வட்டாரத்தில் ரொம்ப பரபரப்பா பேசப்படுதுங்களாமே?

நாச்சியார்: ரொம்ப பாவம்த்தா அந்தப் பொண்ணு. 23 வயசுதானாம். சிறைத்துறை விளையாட்டுப் போட்டிகளில் அகில இந்திய அளவுல பரிசுகள்லாம் வாங்கின பொண்ணாம். அநியாயத்துக்கு கயத்தில தொங்கியிருக்கு.

மெரீனா: எந்த ஊரு?

கோமுகி: எங்க கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம்தான் சொந்த ஊரு. திருச்சியில காந்தி சந்தைகிட்ட இருக்கில்ல மகளிர் சிறைச்சாலை... அதிலதான் வார்டனா வேலை பார்த்துச்சு.

பவானி: காதல் தோல்விதானுங்களா?

காவேரி: சிறைத்துறைக்கு 2017-இல் செந்தமிழ்ச்செல்வி தேர்வானபோதுதான் அரியலூர் மாவட்டம் திருமாத்தூர் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேலும் தேர்வாகி இருக்கிறார். அவரும் சிறைத்துறைக்காக விளையாடியிருக்கிறார். ரெண்டுபேரும் பழகியிருக்காங்க.

மெரீனா: ஆழமா காதலிச்சிருக்காங்கனு சொல்லுங்க.

thinaikatchery.jpg

காவேரி: ஆமாமா... உடம்பைக் கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு, எல்லைமீறிக் காதலிச்சிருக்காங்க. கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வெற்றிவேலை கட்டாயப்படுத்தியிருக்கிறார் செந்தமிழ்ச்செல்வி. ஜாலியா லவ் பண்ணினோம். அதுக்காக கல்யாணம் செய்துக்க முடியுமா? எங்க வீட்ல எனக்கு பொண்ணு பார்த்து பேசி முடிச்சாச்சு. பிப்ரவரி 6-ஆம் தேதி கல்யாணம். நம்ம காதலை இன்னையோட பிரேக் பண்ணிக்கலாம்னு ரொம்ப கூலா சொல்லிட்டு கிளம்பிட்டான். நொந்துபோன செந்தமிழ்ச்செல்வி, வாழ்வை முடித்துக்கொண்டு விட்டாள்.

மெரீனா: பையனுக்கு கல்யாணம்?

காவேரி: ஆயிடுச்சாம்.

நாச்சியார்: சிறைத்துறை வார்டன் அதுவும் விளையாட்டு வீராங்கனை இப்படி கோழையாகலாமா? துணிச்சல் வேணும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வனஜா மாதிரி துணிச்சல்காரியா இருக்கணும்.

பவானி: அவங்களுக்கும் இதே பிரச்சினையா?

நாச்சியார்: பொறுப்புக்கு வந்து ஒரு வருஷம்தான்... அதுக்குள்ள இந்தம்மா மேல ஏராளமான குற்றச்சாட்டுகள். அம்மணி அசரலை. எல்லாத்துக்கும் உச்சமாக ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதாக 585 ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்தவர். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலைனு கந்தர்வக்கோட்டை மற்றும் அரிமளம் ஒன்றிய கல்வி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தவர் இவர்.

காமாட்சி: வனஜாவின் இந்தத் துணிச்சலுக்கு பின்னணியில் யாராவது இருப்பாங்க?

நாச்சியார்: அமைச்சர் ஆதரவாம். மெயின் மேட்டரைக் கேளுங்க. ஆலங்குடி தொகுதியில் 20 அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு விலையிலா சைக்கிள் கொடுப்பதற்காக, ஆலங்குடி எம்.எல்.ஏ. தி.மு.க. மெய்யநாதனுக்கு அழைப்பு வந்ததாம். முதலாவதாக கொத்தமங்கலத்தில் சைக்கிள்களை கொடுத்துவிட்டு ஆலங்குடி ஸ்கூலுக்கு போனார் எம்.எல்.ஏ. அங்கே விழா ரத்து செய்யப்பட்டிருந்தது. அங்கே மட்டுமில்லை, 19 அரசுப்பள்ளிகளிலும் விழா ரத்து.

மெரீனா: யாரோட வேலை?

நாச்சியார்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜாவோட வேலைதான்.

காவேரி: எம்.எல்.ஏ. மெய்யநாதன் என்ன சொல்றாரு?

நாச்சியார்: கொந்தளிச்சுப் போய் இருக்கிறார். சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சினை எழுப்புவேன்னு சொன்னார்.

-இரா.பகத்சிங், ஜெ.டி.ஆர்., செல்வகுமார்

nkn130219
இதையும் படியுங்கள்
Subscribe