திண்ணைக் கச்சேரி! மா.செ. முன் சாமியாடிய மகளிரணி!

thinaikatchery

வீரமங்கை வேலுநாச்சியார் அரசாண்ட சிவகங்கை அரண்மனை வளாகத்திற்குள் ராஜேஸ்வரி அம்மன் கோயிலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள் நக்கீரன் மகளிரணியினர்.

thinaikatchery

நாச்சியார்: வேலுநாச்சியாருக்கு இந்தச் சாமி மேல ரொம்ப பக்தி. அவுக பொறந்த ராமநாதபுரத்திலயும் இதே சாமியைத்தான் அதிகம் கும்புட்டுருக்காக. ஹைதர்அலி உதவியை நாடி, திண்டுக்கல்ல ஏழெட்டு வருஷம் இருந்தாக, அங்கேயும் ராஜேஸ்வரி அம்மனைத்தான் கும்புட்டாகளாம் . ராஜேஸ்வரி பக்தை அவுக... அதனாலதான் அவுக அரண்மனையில அவுகளே கட்டிக் கும்புட்ட கோயிலைக் காட்டுறதுக்காக ஒங்களையெல்லாம் கூட்டியாந்தேன்.

வாணி: இதெல்லாம் கேக்கிறதுக்கு நல்லாத்தானுங்க இருக்கு. இது ஒரு மாவட்டத்துக்கு தலைநகரு தானுங்களே... தமிழ்நாட்ல வேற எந்த மாவட்டத் தலைநகராவது இவ்வளவு சுகாதாரக்கேடா இருக்கிறதைப் பார்த்திருக்கீங்களா? பால் பொங்குறதைப் பார்த்திருக்கோம். இந்த சிவகங்கைத் தெருக்களில்தான் நுங்கும் நுரையுமா சாக்கடை பொங்குறதைப் பார்த்தேன்.

மெரினா: இந்த விஷயத்துல எங்க மெட்ராஸை பாராட்டியே தீரணும். தூய்மை

வீரமங்கை வேலுநாச்சியார் அரசாண்ட சிவகங்கை அரண்மனை வளாகத்திற்குள் ராஜேஸ்வரி அம்மன் கோயிலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்கள் நக்கீரன் மகளிரணியினர்.

thinaikatchery

நாச்சியார்: வேலுநாச்சியாருக்கு இந்தச் சாமி மேல ரொம்ப பக்தி. அவுக பொறந்த ராமநாதபுரத்திலயும் இதே சாமியைத்தான் அதிகம் கும்புட்டுருக்காக. ஹைதர்அலி உதவியை நாடி, திண்டுக்கல்ல ஏழெட்டு வருஷம் இருந்தாக, அங்கேயும் ராஜேஸ்வரி அம்மனைத்தான் கும்புட்டாகளாம் . ராஜேஸ்வரி பக்தை அவுக... அதனாலதான் அவுக அரண்மனையில அவுகளே கட்டிக் கும்புட்ட கோயிலைக் காட்டுறதுக்காக ஒங்களையெல்லாம் கூட்டியாந்தேன்.

வாணி: இதெல்லாம் கேக்கிறதுக்கு நல்லாத்தானுங்க இருக்கு. இது ஒரு மாவட்டத்துக்கு தலைநகரு தானுங்களே... தமிழ்நாட்ல வேற எந்த மாவட்டத் தலைநகராவது இவ்வளவு சுகாதாரக்கேடா இருக்கிறதைப் பார்த்திருக்கீங்களா? பால் பொங்குறதைப் பார்த்திருக்கோம். இந்த சிவகங்கைத் தெருக்களில்தான் நுங்கும் நுரையுமா சாக்கடை பொங்குறதைப் பார்த்தேன்.

மெரினா: இந்த விஷயத்துல எங்க மெட்ராஸை பாராட்டியே தீரணும். தூய்மை பாரத திட்டத்தில் 235-ஆவது இடத்துல இருந்த மெட்ராஸ் இப்ப 100-வது இடத்துக்கு வந்திருக்கு. அதுக்கெல்லாம் முக்கிய காரணம் வடசென்னை வட்டார துணை ஆணையரா வந்திருக்கிற திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ். மாதிரி பொண்ணுங்கதான்.

காவேரி: ஏய் அந்தப் பொண்ணுதான் ஐ.ஏ.எஸ்.ல தேசிய அளவுல முதல்ல வந்தது சரியா! இன்னொண்ணு கூடச் சொல்லட்டுமா? கொஞ்சநாளைக்கு மின்னாடி ஒரு ஜெர்மன் நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு சிறந்த விருதும் ஒண்ணரை கோடி ரூபாயும் கொடுத்துச்சு. அதை வாங்குறதுக்காக இந்த திவ்யதர்ஷினியையும் செயற்பொறியாளர் ராஜேஷ்வரியையும்தான் அனுப்பினாங்க.

thinaikatchery

மெரினா: அதேதாம்மே... வடசென்னையில துப்புரவுப் பணியில நிறைய மாற்றங்கள் நடக்குது.

மல்லிகை: அப்படி அதிகாரிகள் சிவங்கைக்கு கிடைப்பாகளா? சரி இதை விடு... செவ்வாய்க்கிழமை இங்கே நடந்த தினகரன் கட்சி கூட்டத்தில் ஆர்.எம்.ஆர்.ஹால்ல 10 லட்ச ரூபாய்க்காக பெரிய பஞ்சாயத்து நடந்ததா சொன்னியே... அதைச் சொல்லு?

நாச்சியார்: தொகுதிப் பொறுப்பாளர்களையும் ஒ.செ.க்களையும் அறிமுகப்படுத்துற செயல்வீரர்கள் கூட்டம்னு முதல்ல சொன்னாங்க. ஆனா அப்படி யாரையும் மேடையில் ஏறவிடலை. அந்தச் சமயத்துல நம்மளைப் பேசச் சொல்லுவாகனு நெனைச்சுக்கினு படக்குனு மேடையில ஏறி மாவட்டச் செயலாளர் உமாதேவன் பக்கத்துல பசக்குனு உட்கார்ந்திருச்சு சோபியா பிளாரன்ஸ். டென்ஷன் ஆயிட்டாரு உமாதேவன். ஏய்... ஏய்... நீயெல்லாம் இங்கே உக்காரக்கூடாது... எறங்கு எறங்குனு எறக்கிவிட்டுட்டுத்தான் மறுமூச்சு விட்டாரு.

thinaikatcheryகாவேரி: அது யாரு சோபியா பிளாரான்ஸ்?

நாச்சியார்: இப்பவும் தினகரன் கட்சியில மகளிரணி மாவட்ட துணைத்தலைவியாதான் இருக்குறாங்க. எறக்கிவிட்டவுடனே முகமெல்லாம் கொல்லங்குடிச் சாமி மாதிரி ஆயிருச்சு. கொஞ்ச நேரத்துல கூட்டமும் முடிஞ்சிருச்சு. முடிஞ்சதும் தென்மண்டல பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மேடையை விட்டு எறங்குனாரா... அவரை மறிச்சிட்டாங்க அந்த லேடி. இந்த உமாதேவன் என்னை மகளிரணி மா.செ. ஆக்கிறேன்னு பத்து "எல்'லு வாங்கினார். எனக்கு எந்தப் பதவியும் வேணாம், நான் குடுத்ததை இப்பவே வாங்கித் தாங்கனு பஞ்சாயத்தை கூட்டிருச்சு.

மெரினா: மா.செ. உமாதேவன் இன்னா சொன்னாரும்மே?

நாச்சியார்: ஆளு மாயமா மறைஞ்சிட்டாரு. சோபியாவை சமாதானப்படுத்தி அனுப்பினாரு தங்க தமிழ்ச்செல்வன்.

காவேரி: தப்புனு தெரிஞ்சதும் கடுமையா நடவடிக்கை எடுக்கணும். சும்மா கூப்பிட்டு பேசியெல்லாம் அனுப்பக்கூடாது. நாகை மாவட்ட ஆட்சியர், சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன் மேல ஆக்ஷன் எடுப்பார்னுதான் எல்லாரும் எதிர்பார்த்தாங்க. அவர் கூப்பிட்டு சும்மா வார்ன்பண்ணி விட்டுட்டாரு.

வாணி: சீர்காழி நகராட்சி ஆணையரம்மா என்னங்க தப்பு பண்ணாங்க?

காவேரி: சீர்காழியில் 24 வார்டுகள் இருக்கு. முன்ன நிரந்தரப்பணியில் 72 துப்புரவுப் பணியாளர்கள் இருந்தாங்க. இப்ப 20 பேர்தான் இருக்காங்க. பத்தலை. புதுசா 31 பேரை வேலைக்கு வைக்கவு,. அவங்களுக்கு தலா 337 ரூபாய் தினக்கூலி கொடுக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுச்சு. ஆனால் இந்தம்மா 15 பேரை மட்டும் நியமிச்சட்டு 220 ரூபாய்தான் கொடுத்திருக்காங்க. கணக்கெழுதி காசு பார்த்தது 31 பேருக்கு தலா 337 ரூபாய்... அதான் கலெக்டர் சுரேஷ்குமார் வரைக்கும் கம்ப்ளைண்ட் போயி, அவர் கூப்பிட்டு இனிமேல அப்படிப் பண்ணாதேன்னு வார்ன்பண்ணி அனுப்பிச்சாராம்.

நாச்சியார்: உனக்குத் தெரியாத மணப்பாறை சேதி ஒண்ணு எனக்குத் தெரியும்... சொல்லவா காவேரி?

காவேரி: சொல்லு... சொல்லு...

நாச்சியார்: மணப்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. சின்னசாமி ஆடியோவுல பேசி வாட்ஸ்அப்புல பாயவிட்ட ஒரு சேதி மணப்பாறை மாட்டுச்சந்தை வரைக்கும் மேய்ஞ்சிருக்கு... ஒனக்குத் தெரியாதுல்ல

காவேரி: தெரியாது. என்ன வாட்ஸ்அப் சேதி?

நாச்சியார்: மணப்பாறையில நடக்கிற மணல் கொள்ளையை கண்டுக்கிறாம இருக்கிறதுக்காக தாசில்தார் தனலட்சுமிக்கு வெள்ளிக்குத்து வௌக்கும் ஒரு லட்சமும் எம்.எல்.ஏ. அன்பரசனும் ஒ.செ. வெங்கடாசலமும் கொடுத்தாங்கனு பேசி ஏத்தியிருக்கிறாக எக்ஸ்.

காவேரி: நெஜந்தானா?

நாச்சியார்: நெஜமில்லாமயா கலெக்டர் ராசாமணி ஆர்.டி.ஓ.வை விசாரிக்கச் சொல்லீருக்காரு... சிட்டிங் எம்.எல்.ஏ. திணறிப்போயிருக்கிறாராம். ஆனால் தாசில்தார் தனலட்சுமி ரொம்ப தைரியமா இருக்காகளாம்.

வாணி: சரிங்க எந்திரிங்க... அம்மனைக் கும்பிட்டு கிளம்பலாமுங்க.

-ஜெ.டி.ஆர்., க.செல்வகுமார், நாகேந்திரன்

nkn13.07.2018 thinai katchery
இதையும் படியுங்கள்
Subscribe