12. காடுகளில் மேய.... கவர்ன்மெண்ட் தடை போடுவது நியாயமா?
பட்டி பெருகிப் பால் பானை பொங்கவே”
-சொல்வார்கள் கிராமத் தில். இது ஏதோ... பொங்கல் நேரத்தில்... பொங்கி வரும் நேரத்தில் சொல்லப்படுகிற வெறும் சொற்றொடரல்ல. வாழ்க்கை!
அதுவும் மக்களும், மாடுகளும் பின்னிப் பிணைந்த வாழ்க்கை!
ஆதிகாலங்களில் முதலில் மாடுகளுக்கான வசிப்பிடங் களாக தொழுவத்தை, பட்டி கட்டி உருவாக்கி, அதைச் சுற்றி குடியேற்றங்களை அமைப் பார்கள்.... இன்று தமிழகத்தில் பட்டி என்ற பெயருடன் இருக்கும் ஊர்களெல்லாம் அப்படி உருவானவையே அந்த அளவிற்கு மாடு களைச் சுற்றியே தமிழர்களின் வாழ்க்கை முறை இருந்தது. முக்கியமாக மாடுகளை குல தெய்வமாக, குடும்ப உறுப் பினராக, வாழ்வாதாரத்திற்கான உறுதுணையாகப் பார்த் திருக்கிறோம்.
சுதந்தரத்திற்குப் பின் தமிழ்நாட்டில் இரண்டு முறை மாபெரும் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடை பெற்றிருக்கிறது.
முதலில் நடந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டம் - இந்தியாவிலேயே இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு! இரண் டாவதாக நடந்தது ஜல்லிக்கட்டுப் போராட்டம் -ஏன் தமிழ் நாட்டின் மற்ற பிரச்சினை களுக்கு இந்த அளவிற்கு மக்கள் எழுச்சி இல்லை...? ஏனெனில் மொழியை, ஏறு தழுவுதலை தமிழன் அடையாளமாகப் பார்க்கிறான்! நதியை சுரண்டும் போது, மணலை சுரண்டும் போது, மலையை சுரண்டும் போதெல்லாம் வராத புரட்சி, தமிழனின் அடையாளத்தை சுரண்ட நினைக்கும்போது வருகிறது. இது தமிழர்களுக்கே உண்டான தனித்துவ மான குணமாகப் பார்க்கிறேன். இந்தத் தனித்துவமே, எத்தனையோ அழிவு களைத் தாண்டியும் இந்த இனத்தின் தொன்மையைக் காத்து வருகிறது.
ஆனால் என்னதான் அடை யாளங்களைக் காத்துவந்தாலும், தமிழர்கள் கடந்த காலங்களில் தங்கள் நாட்டு மாட்டினங்களை காக்கத் தவறிவிட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. ’"பேட்டைக் காளி'’வலைத்தொடருக்காக பல மாட்டுக் கிடைகளில் படப்பதிவு நடத்தும் போது, மாடு மேய்ப்பவர்கள் பகிர்ந்த தகவல் -ஜல்லிக்கட்டுப் புரட்சிக்குப் பிறகு மக்க ளிடையே நாட்டு மாடுகளை யும், கன்றுகளையும் வாங்கும் ஆர்வம் அதிகரித்திருப்ப தாகவும், ஆகையால் நாட்டு மாடுகளின் விலை ஏற்றமடைந் திருப்பதாகவும் கூறினார்கள். இது மாடு மேய்ப்பவர்களின் வாழ்வாதாரத்தைப் பாது காக்கிறது. நாட்டு மாடுகளை யும் பாதுகாக்கிறது. தமிழர்களி டையே ஏற்பட்டிருக்கக்கூடிய மிக முக்கிய மாறுதல் இது. அதேபோல், மலைமாடுகளை மலையில் மேயவிடாமல் விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசு முன்வர வேண்டும். இது உணவின்றித் தவிக்கும் மலை மாடுகளை மேய்ப்பவர்களின் கோரிக்கை! பசியில் வாடும் மாடுகளின் உயிரைக் காப் பாற்றத் தகுந்த நடவடிக்கை எடுக்க இந்தத் தொடரின் வழியாக விண் ணப்பிக்கிறோம்...
தமிழ்நாட்டு மாடுகள் இந்தியாவின் மற்ற மாடுகளை விட தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பதை ஏற்கனவே பார்த் தோம். வேறு எந்த நிலத்தின் மாடுகளுக்கும் இல்லாத அளவுக்கு வலிமையும், மூர்க் கத்தன்மையும், நுண்ணறிவும் தமிழ்நாட்டு மாட்டினங் களுக்கு உண்டு. அது இயற்கை யின் கொடை!
கிட்டத்தட்ட 99 வகை நாட்டு மாட்டு இனங்கள் நம்மிடையே இருந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் இப்போது நம்மூரில் எஞ்சி யிருக்கும் நாட்டு மாடுகளை, காங்கேயம், உம்பலாச்சேரி, புலிக்குளம், வத்திராயிருப்பு மலைமாடுகள், தேனி மலை மாடுகள், பர்கூர் மலைமாடு கள், ஆலம்பாடி மாடுகள் என விரல்விட்டு எண்ணும் அளவிற்கு சுருங்கிவிட்டது வேதனை! நம்மூர் நாட்டு மாட்டினங்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அங்கே இனப்பெருக்கம் செய்வதாக செய்தி படித்தேன். ஆனால் நாம் ஏன் அதன் மதிப்பை அறியாமல் இழந்து விட்டோம் என்பது ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
1970-களில் வெண்மைப் புரட்சி உருவானது. அதன் மூலம் பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய முயற்சி செய்தது அரசு. பால் தேவைகளை பூர்த்தி செய்வ தற்கு குறுக்கு இனப்பெருக்கம் மூலம் பால் கறக்கும் மாடு களின் மரபணுவை மாற்றுதல் வெண்மைப் புரட்சியின் முக்கிய அம்சம்.
பாலில் தன்னிறைவு அடைந்தாலும், அந்தப் பால் நமக்குத் தேவையான சக்தியை அளிக்கக்கூடியதா? இல்லை யென்றால் நோய்களைத் தந்துவிட்டுப் போகிறதா? என்பதைப் பற்றி பலவாறான கருத்துக்கள் நிலவுகிறது. முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, தற்போது நாம் காணும் மாடுகள் எல்லாம் நாட்டு மாடுகள் அல்ல. மரபணு மாற்றி உருவாக்கப்பட்ட கலப்பு மாடுகள்.
நாட்டு மாடுகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1.5 லிட்டர்வரை பால் கொடுக்கும், ஆனால் கலப்பின மாடுகள் ஒரு நாளைக்கு 15 லிட்டர் வரை பால் கொடுப்பதாகக் கூறு கிறார்கள். இது மாட்டுப்பாலை சந்தைப் பொருளாக்கும் வியாபாரிகளுக்கு கவர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐய மில்லை. நாட்டு மாடுகளுக்கும், கலப்பின மாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை ஒப்பீடுகளின் மூலம் பார்க்கலாம்.
1. கலப்பின மாடுகளுக்கு நோய்கள் அடிக்கடி வரும். அதற்கு சிகிச்சை செலவு அதிகம். ஆனால் நாட்டு மாடுகளுக்கு நோய்கள் வருவதே கிடையாது... அப்படியே வந்தாலும் அரிய நிகழ்வாக இருக்கும்.
2. கலப்பின மாடுகள் ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை உயிர் வாழும். நாட்டு மாட்டினங்கள் இருபது வருடங்களுக்கு மேல் வாழ்கிறது. கலப்பின மாடுகள் வெயில் தாங்காது. நாட்டு மாட்டு இனங்கள் ஒரு நாளெல்லாம் வெயிலில் மேய்ந்தாலும் சளைப்பதில்லை.
3. கலப்பின மாடுகளுக்கு உணவுத் தேவை அதிகம். அதற்கான செலவுகளும் அதிகம்... நாட்டு மாடுகள் மேய்ச்சலிலேயே தன்னிறைவு அடைந்துகொள்ளும். பராமரிப்புச் செலவு குறைவு
4. திமில் மாடுகளின் முக்கியமான உடற்பகுதி. திமிலில் சூரிய கேது நாடி ஓடுவதாக ஒரு ஆன்மிகவாதி கூறியது புதிய தகவலாக இருந்தது.. நாட்டு மாடுகளுக்கு திமில் உண்டு. ஆனால் கலப்பின மாடுகளுக்கு திமில் வளராது.
5. மிகமிக முக்கியமாக நாட்டு மாடுகள் வாடியில் பாய்ந்து விளையாடும். கலப்பின மாடுகளுக்கு பாய்ச்சல் குணமில்லை.
6. கலப்பின மாடுகளின் பால் சர்க்கரை வியாதி உட்பட நோய்களை உருவாக்குவதாக கருத்துக்கள் உண்டு. மாட்டின் பால் மிகப் பெரிய சந்தை வியாபாரப்பொரு ளாக உருவாகியுள்ள இந்த காலகட்டத்தில், தூய்மைவாத அரசியல் பேசும் ஆ2 பால் வியாபரமும் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், நாட்டு மாட்டின் பாலில் உள்ள புரதச்சத்து கலப்பின மாடுகளின் பாலில் இருப்பதை விட மேம்பட்டு இருக்கிறது என்பது மட்டும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. பொதுவாகவே நாட்டு மாட்டினங்கள் மலைகளை பூர்வீகமாகக் கொண்டவை. மலைகளிலிருந்து பல்வேறு நபர்கள் வழியாகப் பிரிந்து, வழிவழியாக இனப்பெருக்கம் செய்யப்பட்டு, நிலத்திற்கேற்றவாறு தங்களுடைய தன்மையையும், இனத்தையும் மாற்றிக் கொண்டன.
தமிழர்கள் எல்லோரும் அறிந்த வரலாறு... ‘நல்ல தங்காள்’கதை. இதற்கும், ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு இருப்பது பற்றி வரும் அத்தியாயத்தில் பார்ப்போம்.
(ஆட்டம் தொடரும்)