ஆற்றலைத் தரும் அனுபவம்!
இந்திய வன விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1966-ன்படி வன விலங்குகளை பொது இடங்களில் வைத்து விளையாட்டு, வேடிக்கை காட்டக்கூடாது; துன்புறுத்துவது குற்றம். ஆனாலும் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் மலைப்பாம்பையும், கரடியையும், தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு கொண்டுவந்து காட்டி பிழைப்பு நடத்தினார்கள். சிங்கம், புலி சர்க்கஸ்களில் சேட்டைகள் செய்ததை ரசித்திருக்கிறோம்.
ஆனால் சட்டங்கள் கடுமை யாகப் பின்பற்றப்பட ஆரம்பித்த தால் அந்த விலங்குகளை வீதி களிலும், சர்க்கஸிலும் காண முடியவில்லை.
2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அன்றைய மத்திய காங் கிரஸ் அரசில் வனம் மற்றும் சுற் றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் பிறப் பித்த உத்தரவில் "சிங்கம், புலி, கரடி போன்ற வன விலங்குகளை கூண்டில் அடைத்து, பொது இடங்களில் வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே இருந்த பட்டியலில் காளை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது' என அறிவித்தார்.
பிராணிகள் வதைச் சட்டம் பிரிவு 22-ன்
ஆற்றலைத் தரும் அனுபவம்!
இந்திய வன விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1966-ன்படி வன விலங்குகளை பொது இடங்களில் வைத்து விளையாட்டு, வேடிக்கை காட்டக்கூடாது; துன்புறுத்துவது குற்றம். ஆனாலும் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் மலைப்பாம்பையும், கரடியையும், தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு கொண்டுவந்து காட்டி பிழைப்பு நடத்தினார்கள். சிங்கம், புலி சர்க்கஸ்களில் சேட்டைகள் செய்ததை ரசித்திருக்கிறோம்.
ஆனால் சட்டங்கள் கடுமை யாகப் பின்பற்றப்பட ஆரம்பித்த தால் அந்த விலங்குகளை வீதி களிலும், சர்க்கஸிலும் காண முடியவில்லை.
2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அன்றைய மத்திய காங் கிரஸ் அரசில் வனம் மற்றும் சுற் றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் பிறப் பித்த உத்தரவில் "சிங்கம், புலி, கரடி போன்ற வன விலங்குகளை கூண்டில் அடைத்து, பொது இடங்களில் வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே இருந்த பட்டியலில் காளை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது' என அறிவித்தார்.
பிராணிகள் வதைச் சட்டம் பிரிவு 22-ன் கீழ் ஆணையும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து "தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறைச் சட்டம் 2009-ஐ நீக்கும்படியும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் படியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அன்றிலிருந்து எத்தனை வழக்குகள்? எத்தனை, எத்தனை எதிர் வழக்குகள்?
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தற்காலிக தீர்வுகள்தான் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
பீட்டா, இந்திய வன விலங்குகள் நல வாரியம், இந் திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு, ஹியூமன் அனிமல் சொஸைட்டி, பீப்பிள் ஃபார் அனிமல்ஸ், ப்ளூகிராஸ் இந்தியா, உலக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு... இப்படி உள்நாடு, வெளிநாடு என வரிந்து கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் போராடுகிறார்கள்; வழக்காடுகிறார்கள்.
அரியவகை விலங்குகள் பட்டியலிலிருந்து காளை மாட்டை நீக்க மத்திய அரசு முன்வந்திருப்பதாக உச்சநீதிமன் றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு எப்படி இருக்கும்?
பொறுத்திருந்து பார்ப்போம்.
இறுதியாக, தமிழர் களின் ஏறு தழுவுதலைப் புனிதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதப்பட்ட தொடரல்ல இது. ஆனால் அதில் பலமான ஒரு உணர்வு இழையோடுவதைக் காண முடிந்தது. ஏறுதழுவுதல் என்ற விளையாட்டிற்கு பின்னால் ஆன்மிகம், வரலாறு, வீரம், வலிமை, அறிவியல், வழிபாடு என பல கூறுகள் நிறைந் திருப்பதை அறிய முடிந்தது. நொடிக்கு நொடி பிரபஞ்சம் நமக்கு எதையோ கற்றுக் கொடுத் துக்கொண்டேயிருக்கிறது என்பதை முழுவதுமாக நம்புபவன் நான். நாம் கற்றுக் கொள்ளும் பாடங் கள் அனுபவமாக மாறுகிறது. அனுபவம் வாழ்வதற்கான ஆற்றலைத் தருகிறது.
அப்படியாக "பேட்டைக்காளி' என்ற வலைத் தொடருக்காகவும், "ஒரு தாய் மக்கள்' என்ற ஆவணப்படத்திற் காகவும் தொடங்கிய பயணம், மாடுகள் என்றால் என்ன என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது, மாடுகள் பற்றி வியக்க வைக்கும் தகவல்களும், மாடு கள் சார்ந்த வாழ்வியலும் கண்முன்னே விரிந்தது. மாடுகளுக்கும் நமக்குமான உறவு புரிந்தது. மாடுகளிடம் ஒரு தெய்வீகத் தன்மை இருப்பதை உணர முடிந்தது.
படப்பிடிப்பிற்காக சிங்கம்புணரி நாட்டு மாட்டு வகையைச் சேர்ந்த காளை யை வளர்த்தேன். அதன் பெயர் காளி. காளி எனக்குத் தேவையான காட்சிகளில் எந்த எதிர்ப்பும் காட்டாமல் நடித்துக் கொடுத்தது. ஆனால், வாடி, விரட்டுகளில் எல்லோரையும் பாய்ந்து விளையாடியது. இறுதிக்காட்சி எடுத்து முடித்த பிறகு, சிங்கம்புணரி சேவகமூர்த்தி ஐயனார் கோவிலுக்கு காளி மாட்டை கோவில் மாடாக நேர்ந்து விட்டோம். சேவக மூர்த்தி ஐயனார், கோவில் மாடுகளின் மேல் இறங்கி வழிநடத்துகிறார் என்பது ஐதீகம். காளி மாட்டின் மூக்கணாங்கயிறை அவிழ்த்ததும், சொல்லி வைத்தாற்போல் கோவில் கோபுரத்தை சிறிது நேரம் பார்த்து விட்டு காட்டுக்குள் சென்று மறைந்தது, ஒரு ஆன்மிக அனுபவம்தான்.
இந்தத் தொடரின் இலக்கு, ஏறு தழுவுதலின் பல்வேறு கோணங்களை ஆராய்வது. ஆவணப்படுத்துவது. எழுத் தின் வழியாகப் பகிர்வது. அதை என்னால் இயன்றவரை எந்த சார்புமில்லாமல் செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கையோடு இந்தத் தொடரின் பயணத்தை நிறைவு செய்து கொள்கிறேன்.. இனி வரும் காலங் களில் ஏறு தழுவுதல் சார்ந்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் வரலாம்.
நான் அறிந்தவற்றைப் பதிவு செய்ய தளமமைத்துக் கொடுத்த அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! வாரந்தோறும் இந்தத் தொட ரை விடாமல் படித்து ஊக்கமளித்த வாசகர் களுக்கு அன்பும், வணக்கங்களும்... களத் தில் துணை நின்ற மாடு பிடிவீரர்கள், மாடு சார்ந்த உணர்வாளர்கள், ஏறு தழுவுதலை ஆவணப்படுத்த என்னுடன் பயணித்த தோழர்கள், நக்கீரன் குழுவினர் அனை வரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
இந்தத் தொடருக்கான மாற்றுக் கருத்துக் களையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதிலிருந்து இன்னும் பல புதிய கேள்விகளும் -விடைகளும் கிடைக்கலாம். நமக்கு கற்பிக்கப் பட்ட வரலாறு வேறு -உண்மையான வரலாறு வேறு என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். தன் கடந்த கால வரலாற்றைத் தெரிந்துகொண் டவன் மட்டுமே நிகழ்காலத்தை எதிர்கொள் கிறான். நிகழ்காலத்தை எதிர் கொள்பவனுக்கு எதிர்காலம் எப்போதும் ரத்தினக் கம்பளமே விரிக்கும்!
மீண்டும் ஒரு வாய்ப்பில், வாசர்களுடன் இணைய காத்திருக்கிறேன்... நன்றி!