றிஞர் அண்ணா தலைமையில் 1967-ல் ஆட்சி அமைந்தபோது, தி.மு.க கூட்டணியிலிருந்த மூக்கையாத் தேவர், தங்கள் சமுதாய மாணவர்கள் படித்து முன்னேறவேண்டும் என்பதற்காக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் கல்லூரிகள் அமைப்பதற்காகக் கோரிக்கை வைக்கிறார். அண்ணா ஒப்புதல் அளிக்க, அதனைத் தொடர்ந்து முதல்வரான கலைஞர், 3 கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி, ஆவணங்களை மூக்கையா தேவரிடம் ஒப்படைத்தார். நெல்லை மாவட்டப் பொறுப்பை முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியனிடம் தருகிறார் மூக்கையாத் தேவர்.

devarcollege

செல்லப்பாண்டியனும் "தேவர் கல்விச் சங்கம்- நெல்லை மாவட்டம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி, சங்கரன்கோவில் சட்டமன்றத்தில் வருகிற மேலநீலிதநல்லூரில் மக்களின் பங்களிப்பாக 57 ஏக்கர் நிலம் சேர, அத்துடன் அந்தப் பகுதியின் அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலமான 45 ஏக்கரையும் அரசிட மிருந்து பெற்று 1969-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை அமைத்து, முதல் பட்டதாரியான பொன்னையா வைப் பிரின்சிபல் மற்றும் கல்லூரியின் செயலாளராக்கியதுடன் நிர்வகிக்கும் பொறுப்பையும் ஒப்படைக்கிறார்.

இந்தச் சூழலில் 1972-ன்போது கல்லூரியில் வேலைக்குவந்த ரமாதேவிமீது, பொன்னையாவுக்கு ஈர்ப்பு ஏற்பட அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அத்துடன் தேவர் கல்விச் சங்கம் நெல்லை மாவட்டம் என்றிருப்பதில் நெல்லை மாவட்டத்தை மட்டும் எடுத்துவிட்டு அதில் மேலநீலிதநல்லூர் என்று ஊரை மாற்றிவிடுகிறார்.

Advertisment

சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் உட்பட அனைத்து எட்டு நிர்வாகிகளையும் யாருக்கும் தெரியாமல் தானே ஒரு தீர்மானத்தை உருவாக்கி நீக்கியவர், அதில் தனது இரண் டாவது மனைவி ரமாதேவி, திருமணமான அவர்களின் பிள்ளைகளின் குடும்பத்தார்கள், தம்பி சேகரபிள்ளை என்று 10 பேர்களையும் பிந்தைய வருடங்களில் உறுப்பினர்களாக இணைக்கிறார். பொன்னையாவுக்கு வயது மூப்பு ஏற்பட, நிர்வாகம் ரமாதேவி கைக்கு வந்தது. 1991-ல் கல்லூரி முதல்வராகவும், பின்பு செக ரட்டரியாகவும் மாறிவிடுகிறார் ரமாதேவி. 2002-ல் பொன் னையா காலமாகிறார். 2017-ன் போது கல்லூரிக்கான 23 போஸ்ட் டிங்கிற்கு ஆணைவர, தேவர் சமுதாயத்திற்கு ஒரு போஸ்டிங் கூடத் தரவில்லை. 16 போஸ்டிங்குகளில் விளையாடியிருக்கிறார்.

கல்லூரிக்கான சொத்துப்பட்டா சிட்டா, அடங்கல் அனைத்தும் செல்லப்பாண்டியனின் ஆரம்பகால சங்கத்தின் பெயரிலிருப்பதை மாற்றமுடியாததால், பொன்னையா அமைத்த ரெண்டாம் நம்பர் சங்கம் மூலம் ரமாதேவி பொறுப்பை மட்டும் கைப்பற்றியதை ஆவணங்களுடன் தோண்டியெடுத்த கல்லூரிப் பேராசிரியர்கள் சமரசம் பெரியதுரை மற்றும் உறுப்பினர்களோடு, தேவர் கல்லூரி மீட்புப் போராட்டத்தைத் தொடங்க, அரசின் கவனத்திற்கு சென்று, 14 போஸ்டிங்குகள் ரத்துசெய்யப்பட்டன..

devar college

Advertisment

தொடர்ந்து போராட்டம் வீரியமடைந்ததால் தாக்குப் பிடிக்கமுடியாத ரமாதேவி கொச்சிக்குப் போய்விட்டார். தற்போது, மீட்புக்குழு உறுப்பினரும் தி.மு.க.வின் மாநில வர்த்தக அணி துணைச்செயலாளருமான அய்யாத்துரைப் பாண்டியன் பசும்பொன்தேவர் கல்லூரி மீட்பு விவகாரத்தை கட்சித் தலைமை வரை கொண்டுபோயிருக்கிறார். தேவர் கல்லூரியை கேரள நாயர் கபளீகரம் செய்த விவகாரம் விஸ்வரூபமெடுத்திருப்பதையும், அதில் தி.மு.க. ஆர்வம்காட்டுகிறது என்கிற தகவலையும் அறிந்த அ.தி.மு.க தலைமை, அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அனுப்பியது. டிச. 9-அன்று தொகுதி அமைச்சர் ராஜலட்சுமியுடன் நகரில் கல்லூரி மீட்புக்குழுவினரைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி, மீட்புக்குழுவின் பிரதிநிதிகளை அழைத்துச்சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசி, இதுகுறித்து முடிவெடுத்து, சட்டப்படி கல்லூரியை மீட்டுத்தருவோம் என்றிருக்கிறார்.

ரமாதேவியின் கேரள நாயர் சமூகமும், ஆர்.எஸ்.எஸ்.சும் இணைந்து இந்த விவகாரத்தில் கல்லூரியை விட்டு விடக்கூடாதென்று ரமாதேவியின் பக்கம் ஃபுல் சப்போர்ட்டிலிருக்கின்றன.

""கல்லூரியை மீட்கவேண்டும். ரமாதேவி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்லூரியை மீட்டுத்தராவிட்டால் தேவர் சமூக மக்களின் வாக்குகளை தேர்தலில் அ.தி.மு.க. இழக்கநேரிடும்'' என்கிறார் போராட்டக் குழுவின் ஏ.எம்.மூர்த்தி.

கொச்சியிலிருந்த ரமாதேவியைத் தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டதில், ""ஐயா அரும்பாடுபட்டு வளர்த்த கல்லூரி. அது தொடர்பான முறையான ஆவணங்கள் எங்களுக்குச் சாதகமாக உள்ளன. கோர்ட்டில் வழக்கு முடிந்தபிறகு நான் விரிவாகப் பேசுகிறேன்'' என்று முடித்துக்கொண்டார்.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்