"எதுவேணா நடக்கலாம் சார். என் லைஃப் முடிஞ்சுச்சு அவ்ளோதான்' என ஏட்டையாவிடம் கூறும்போதே... 6 நபர்கள் கொண்ட கும்பலால் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளார் பல்லடம் பகுதியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசபிரபு. இதனையொட்டி "சம்பவத்தில் ஈடுபட்ட குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லை. பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும்' என கண்டனக் குரல்கள் தமிழ்நாடு முழுமைக்கும் வலுப்பெற்றது.

reporter

உண்மையில் நடந்தது என்ன..?

சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானக் கடையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பல்லடம் உணவகம் ஒன்றில் சிறப்பு பிரிவு காவலர் ஒருவர் லஞ்சம் வாங்குவது போன்ற செய்திகளை துணிச்ச லாக வெளியிட்டதால் வெட்டிச் சாய்க்கப்பட் டார் நிருபர் நேசபிரபு என் கின்ற செய்தி யிருக்க... நேச பிரபுவின் தம்பி மோகன்குமாரிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தாமத மாக தாக்கல் செய்யப் பட்ட முதல் தகவல் அறிக்கையோ, "எனது உடன்பிறந்த அண்ணன் நேசபிரபு. பத்திரிகை நிருபராக 10 வருடங் களாக வேலை செய்து வருகிறார். செய்தி யாளராக இருப்பதால், சட்டவிரோதச் செயல்களை தொலைக்காட்சி சேனலில் செய்தியாக கொடுக்கும் போது. சிலரிடமிருந்து கொலை மிரட்டல் வருவ தாக அடிக்கடி கூறியுள்ளார். கடந்த 24ஆம் தேதி ராத்திரி 8.30 மணியளவில், நான் வீட்டிற்கு சென்றபோது எனது அப்பா, "இன்று மதியம் ஒரு சிலர் அண்ணனைப் பற்றி விசாரித்ததாகவும், ஏன் என்று கேட்டதற்கு, எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார்கள் என்றும் சொன்னார். அன்று மதியம் கிருஷ்ணாபுரம் பிரிவு அருகே செல்போன் கடை வைத்திருக்கும் சதீஸ் என்பவரும் அண்ண னைப் பற்றி விசாரித்ததாக போனில் சொன்னார். அதுபற்றி என்து அண்ணனிடம் கேட்டபோது, "தன்னை மதியம் முதலே மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வருவதாக'ச் சொன்னார். நாங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டின் அருகே இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. அதில் வந்தவர்கள் எங்களை பார்த்ததும் வேகமாக திரும்பி பொள்ளாச்சி ரோட்டிற்கு சென்றுவிட்டார்கள். பிறகு, எனது அண்ணன் பச 59 ப 9916 என்ற எண்ணுள்ள ஸ்கார்பியோ காரை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர்களை பின் தொடர்ந்து பொள்ளாச்சி வரை சென்றுவிட்டான். அன்று இரவு சுமார் 10:00 மணியளவில் என் பெரி யம்மா வளர்மதி செல்போனுக்கு தொடர்பு கொண்டு, எனது அண்ணன் நேசபிரபுவை கே.கிருஷ்ணாபுரம் பிரிவு அருகில் உள்ள ஐ.ட. பெட்ரோல் பங்கில் வைத்து, சுமார் ஆறு நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டதாக தகவல் சொன்னார்கள்.

Advertisment

reporter

உடனே நானும் அப்பாவும் கே. கிருஷ்ணாபுரம் பிரிவு அருகில் உள்ள ஐ.ட. பெட்ரோல் பங்கிற்கு சென்று பார்த்தபோது, இடதுகை முட்டி, இடது உள்ளங்கை, வலது கை, இரண்டு தொடை, இரண்டு காலிலும் முட்டிக்கு கீழ், இடது காது, வலது தோள்பட்டை என பல இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள் ளத்தில் கிடந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். போகும் போதே அண்ணன் எங்களிடம்.. "எங்கள பத்தி எதுக்குடா செய்தி போடுற. எத்தன தடவை சொல் றது. நீ உயிரோட இருந்தாதான எங்களப் பத்தி செய்தி போடுவ. செத்து தொலைடா நாயே...''ன்னு அரிவாளால மாறி மாறி வெட்டினாங்க. அப்போ பெட்ரோல் பங்கில் வேலை செய்றவங்க சத்தம்போட அனைவரும் தப்பிச் சென்று விட்டார்கள். அவர்களை பார்த்தால் அடையாளம் தெரியும்னு அண்ணன் சொன்னான்'' என்றிருந்தது.

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பில்லை. நேசப்பிரபு விஷயத்தில் துரித நடவடிக்கை வேண்டும் என திருப்பூர் மாவட்ட எஸ்.பி.சாமி நாதனை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனு வினை கொடுத்தனர் திருப்பூர் மாவட்ட பத்திரிகை யாளர்கள். கோவை, நீலகிரி, கரூர், சிவகங்கை ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.

Advertisment

மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட நேசபிரபு விவகாரத்தில் அசட்டையாக இருந்த காமக்காம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், நேசபிரபுவின் மருத்துவச் செலவிற்கு ரூ3 லட்சத்தையும் அளித்தது தமிழ்நாடு அரசு.

rr

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கும் நேசபிரபுவின் உடல் நிலை பற்றி கேட்டறிந்து, பின் செய்தியாளர்களை சந் தித்த பா.ஜ.க.வின் எல்.முரு கன், "காவல்துறையிடம் உதவி கேட்டும் உதவி மறுக்கப் பட்டிருக்கிறது. உரிய நேரத் தில் உதவி செய்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். அந்த மெத்தனப்போக்கு அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இதன் தொடர்ச்சியாக தனியார் மருத்துவ மனைக்கு வந்த செய்தித்துறை அமைச்சர் சாமி நாதன், "நேசபிரபு நேற்று இரவு ஒரு சில நபர் களால் கடுமையாக தாக்கப்பட்டு கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலன் நல்ல முன்னேற்றம் அடைந்து வரும் ஆறுதலான செய்தியை மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் காவல்துறை யினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஜனநாயகத்தின் நான்காவது தூண்களான பத்திரிகை யாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் மனவருத்தம் அடைந்துள்ளார். முதல்வரின் உத்தரவின்படி பத்திரிகையாளர் நல வாரியத்தின் மூலம் 3 லட்ச ரூபாய்க்கான காசோலை நேரடியாக வழங்கப்பட்டது. தாக்கப் பட்ட பத்திரிகையாளருக்கான முழு மருத்துவச் செலவையும் அரசு ஏற்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் அவர்.

இது இப்படியிருக்க, போலீஸாரால் சூரம் பட்டியை சேர்ந்த பிரவீன், கே.வி.ஆர். நகர் சரவணன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, "திருப்பூர் வீரபாண்டி பாளையம் பிரிவில் ஸ்பா எனப்படும் மசாஜ் சென் டர் இயங்கி வருகின்றது. அங்கு வந்து செல்லும் நிருபர் நேசபிரபுவிற்கும் ஸ்பாவின் உரிமையாள ருக்குமான பிரச்சனையின் அடிப்படையிலேயே வெட்டப்பட்டார்' என்பதாக கோவையை சேர்ந்த ஆங்கில நாளிதழ் நிருபர் மூலம் செய்தி பரவத் தொடங்கியது. "ஒரு வழக்கை பதிவு செய்யும் பொழுது புனையப்படும் கதைகள் வழக்கம்போல் இங்கே சொருகப்பட்டுள்ளது. க்ரைம் செய்தியாளர்களுக்கு இது நன்றாக தெரியும். இதன் மூலமாக காவல்துறை சொல்ல வருவது என்னவென்றால், தாக்கப்பட்ட நபர் செய்தி சேகரிப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் அல்ல என்பதுதான். நேசபிரபு தன்னை கொல்ல வருவ தாக அழைத்தும் காவல்துறை அலட்சியம் காட்டியதன் பின்னணி என்ன? காவல்துறை பார் ஓனர் அல்லது கல்குவாரி ஓனருடன் கூட்டு சேர்ந்து திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டார்களா? உயிருடன் இருக்க வேண்டும், நடைபிணமாய் வாழவேண்டும் என நினைத்து 62 வெட்டுக்கள் வெட்டியுள்ளனர். இடது கையில் உள்ள பெரிய காயத்தைத் தவிர மீதமுள்ள வெட்டுக்கள் நரம்புகளைக் குறிவைத்தே வெட்டப்பட்டிருக்கின்றது. பிரச்சனையை திசை திருப்ப, பாலியல் தொழிலாளியிடம் பணம் பெற்றதாக ஒரு ஆங்கில பத்திரிகைக்கு மட்டும் அனுப்பி அனைவருக்கும் பகிரச் செய்ததன் நோக்கம் என்ன? நேசபிரபு மீது ஏற்கனவே 6 எப்.ஐ.ஆர். இருக்குதுன்னு சொன்ன காவல்துறை, ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நேசபிரபு, பார் ஓனர் முருகனிடம் பேசும் ஆடியோவில் 4000 ரூபாய் வாங்கிட்டு ஏன் இப்படி செய்கிறாய் எனக்கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள் ளார். ஸ்பாவில் விபச்சாரம் நடப்பதாகவும், அங்கு பணம் கேட்டு நேசபிரபு மிரட்டியதாகவும் கூறப்படும் நிலையில்... ஏன் காவல்துறை ஸ்பா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் துறையும், நேசபிரபுவும், ஸ்பா ஓனரிடம் கூட்டணி அமைத்து பணம் வாங்கி னார்களா என்ற கேள்வி எழுகிறது. அப்படி ஒரு ஸ்பாவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ff

வெட்டுப்பட்ட நேசபிரபுவிற்கு எதற்கு 3 லட்ச ரூபாய் நிவாரணத்தொகை அறிவித் தார் முதலமைச்சர். காவல்துறை விசா ரணையில் அவர் பாலியல் தொழிலாளியை காசு கேட்டி மிரட்டினார் எனத் தெரிய வந்தபோதும், செய்தித்துறை அமைச்சர் ஏன் நேரில் அவரது குடும்பத்தினரிடம் 3 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்க வேண்டும். இருவரை காவல் துறை பிடித்துவிட்டதாக நேற்று கூறிய நிலையில், 24 மணி நேரத்திற்கு பிறகும் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தாமல், காவல்துறை ஏன் விசாரணை நடத்த வேண்டும் என்கின்ற கேள்விகள் அனை வரிடமும் உள்ளது'' என்கிறார் மூத்த உளவு அதிகாரி ஒருவர். இதற்கிடையே சனிக் கிழமை எஸ்.பி. சாமிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார்.

விடையளிக்குமா காவல் துறை..?

படங்கள்: விவேக்

ss