திருவண்ணாமலை டூ வேலூர் நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நகரத்தின் தொடக்கத்தில் அண்ணா நுழைவாயில் உள்ளது. அது சிறிய வளைவாக இருப்பதால் அந்த சாலையில் பெரிய வாகனங்கள் செல்லச் சிரமமாயிருந்தது. எனவே அந்த நுழைவாயில் இடிக்கப்பட்டு பெரிதாகக் கட்டப்பட்டது. அந்த நுழைவாயில் அருகே கலைஞருக்கு சிலை வைக்க முடிவு செய்தார் திரு வண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான எ.வ.வேலு. சிலைவைப் பதற்கான பீடம் கட்டப்பட்டது, ஜூன் 3ஆம் தேதி திறப்பு விழா நடத்த ஆலோசிக்கப்பட்ட நிலையில், கார்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை வைக்க இடைக்காலத் தடையைப் பெற்றுள்ளார்.
வருவாய்த்துறை பொறம் போக்கு இடமான அதன்கீழே கழிவுநீர்க் கால்வாய் செல்கிற தென்றும், கிரிவலப்பாதையாக வும் உள்ளதென்றும் கூறி சிலை வைக்க எதிர்ப்புத் தெரிவிக்கப் பட்டிருந்தது. அந்த மனுவுக்கு பதில் அளிக்க மாவட்ட நிர்வா கத்துக்கு நோட்டீஸ் அனுப்பி யது உயர்நீதிமன்றம். விசாரணை நடத்தியபின் அறிக்கை தாக்கல் செய்கிறோம் என கலெக்டர் முருகேஷ் பதில் மனுதாக்கல் செய் தார். இதில் கடுப்பான நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்த தோடு, கலெக்டர், அமைச்சர், இடம்வாங்கிய குமரன் என அனைவரும் பதிலளிக்க வேண்டு மென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துவிட்டது.
பொது இடத்தில் சிலை வைக்கப் பல கட்டுப்பாடுகள் இருப்பதால், சொந்த இடத்தில் வைக்கலாமென்றே, ராஜேந்திரன் என்பவரின் பெயரில் இருந்த இடத்தை வாங்கினார்கள். இடத் தை விற்பனை செய்த ராஜேந்திர னிடம் நாம் கேட்ட போது, "98-ல் பொறம்போக்கு இடத்தில் நான் இருந்ததால் இந்த 98.4 ச.அடி இடத் துக்கு எனக்கு பட்டா வழங்கினார்கள். அந்த பகுதியில் இப்படி பலருக்கும் பட்டா வழங்கப் பட்டது. கலைஞருக்கு சிலை வைக்க வேண்டுமென அமைச்சர் கேட்டதால்தான் அந்த இடத்தை நான் விற்பனை செய்தேன். அமைச்சர் தன் மகன் குமரன் பெயரில் ரிஜிஸ்டர் செய்தார்" என்றார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பிரமுகர்கள் நம்மிடம், "இடத்தை விற்பனை செய்த ராஜேந்திரன் எங்கள் கட்சி. அவரின் மகன் வழக்கறிஞர் வெங்கடேசன் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. நவ நீதகிருஷ்ணனிடம் ஜூனியராக உள்ளார். இடம் விற்பனை செய் வதில் அப்பாவுக்கும் மகனுக்கும் தகராறு. அமைச்சர் எ.வ.வேலுவிடம் வெங்கடேசன் முறையிட்டார். அது உங்க குடும்பப் பிரச்சனை என ஒதுங்கிக்கொண்டார். அந்த கோபத்தில்தான் வெங்கடேசன் பின்னணியில் இருந்து வழக்கு போட்டார்'' என்றார்கள். வழக்கறிஞர் வெங்கடேசனைக் கேட்டபோது, "எனக் கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை'' எனப் பதட்டத்தோடு சொல்லி லைனை கட் செய்தார். இந்த விவகாரத்தில் சிலரின் விசுவாசம், நம்பிக்கை துரோகங்கள் உள்ளன. அதனால் தான் கலைஞர் சிலை திறப்புக் குத் தடை ஏற்பட்டது என்கிறார் கள் பாரம்பரிய தி.மு.க.வினர்.