தியேட்டர் பட்டாசு! ஓ.டி.டி. மத்தாப்பு! - களைகட்டும் சினிமா தீபாவளி!

nn

தீபாவளியன்று ரிலீசாகும் தங்களின் மனம் கவர்ந்த ஹீரோக்களின் படங்களை அதிகாலை 4 மணிக்கே தியேட்டரில் பார்த்து, விசிலடித்து, கைதட்டி ஆரவாரம் செய்வதற்கென்றே ரசிகர்கள் கூட்டம் முண்டியடிக்கும். முதல் ஷோ பார்த்துவிட்டு முகத்தில் பெருமிதம் பொங்கும். இதெல்லாம் போனவருசம், நாம சொல்ல வர்றது இந்த வருசம்!

சூர்யாவின் பூரிப்பு!

surya

அக்.30-ஆம் தேதி "அமேசான் ப்ரைம் ஓ.டி.டி.'யில் சூர்யாவின் "சூரரைப் போற்று'’ ரிலீசாக வேண்டி யது. ஆனால் இந்திய விமானப் படையின் என்.ஓ.சி. கிடைப்பதில் தாமதம் ஆனதால் நவ.14 தீபா வளிக்கு ரிலீஸ் செய்கிறார் சூர்யா. டைரக்டர் சுதா கொங்கராவின் அசாத்திய உழைப்பை வெகுவாகப் புகழ்ந்த சூர்யா, இதுவரை கற்பனைக் கதாபாத்திரங்களிலேயே நடித்த தமக்கு ஏர்டெக்கான் அதிபர் கேப்டன் கோபிநாத் என்கிற நிஜ கதாபாத்திரத்தில் நடித்தது ரொம்பவே சவாலாகவும் மனசுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்ததாக பூரிப்புடன் சொல்கிறார் சூர்யா.

ஆர்.ஜே.பாலாஜியின் அட்ராசிட்டி!

ஐசரிகணேஷ் தயாரிப்பில் என்.ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி டைரக்ட் பண்ணி, "லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்'’ படம் டிஸ்னிஹாட் ஸ்டார் பிளாட்பார் மில் ரிலீசாகிறது.

படம் தயாராகி பல மாதங்களாகி விட்டதாலும் தியேட்டர்கள் திறப்பதற்கு காலதாமதம் ஆனதாலும் மூக்குத்தி அம்மனை ஓ.டி.டி.யில் ரிலீஸ்பண்ணத் தயாராக இருந்தார் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ். ஆனால் ஆர்.ஜே.பாலாஜியும் நயன்தாராவும் படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் பண்ண வே

தீபாவளியன்று ரிலீசாகும் தங்களின் மனம் கவர்ந்த ஹீரோக்களின் படங்களை அதிகாலை 4 மணிக்கே தியேட்டரில் பார்த்து, விசிலடித்து, கைதட்டி ஆரவாரம் செய்வதற்கென்றே ரசிகர்கள் கூட்டம் முண்டியடிக்கும். முதல் ஷோ பார்த்துவிட்டு முகத்தில் பெருமிதம் பொங்கும். இதெல்லாம் போனவருசம், நாம சொல்ல வர்றது இந்த வருசம்!

சூர்யாவின் பூரிப்பு!

surya

அக்.30-ஆம் தேதி "அமேசான் ப்ரைம் ஓ.டி.டி.'யில் சூர்யாவின் "சூரரைப் போற்று'’ ரிலீசாக வேண்டி யது. ஆனால் இந்திய விமானப் படையின் என்.ஓ.சி. கிடைப்பதில் தாமதம் ஆனதால் நவ.14 தீபா வளிக்கு ரிலீஸ் செய்கிறார் சூர்யா. டைரக்டர் சுதா கொங்கராவின் அசாத்திய உழைப்பை வெகுவாகப் புகழ்ந்த சூர்யா, இதுவரை கற்பனைக் கதாபாத்திரங்களிலேயே நடித்த தமக்கு ஏர்டெக்கான் அதிபர் கேப்டன் கோபிநாத் என்கிற நிஜ கதாபாத்திரத்தில் நடித்தது ரொம்பவே சவாலாகவும் மனசுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்ததாக பூரிப்புடன் சொல்கிறார் சூர்யா.

ஆர்.ஜே.பாலாஜியின் அட்ராசிட்டி!

ஐசரிகணேஷ் தயாரிப்பில் என்.ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி டைரக்ட் பண்ணி, "லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடித்துள்ள "மூக்குத்தி அம்மன்'’ படம் டிஸ்னிஹாட் ஸ்டார் பிளாட்பார் மில் ரிலீசாகிறது.

படம் தயாராகி பல மாதங்களாகி விட்டதாலும் தியேட்டர்கள் திறப்பதற்கு காலதாமதம் ஆனதாலும் மூக்குத்தி அம்மனை ஓ.டி.டி.யில் ரிலீஸ்பண்ணத் தயாராக இருந்தார் தயாரிப்பாளர் ஐசரிகணேஷ். ஆனால் ஆர்.ஜே.பாலாஜியும் நயன்தாராவும் படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் பண்ண வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். தான் தயாரிக்கும் நான்கு படங்களின் பட்ஜெட் டையும் மூக்குத்தி அம்மனில் போட்ட முதலுக்கான வட்டியையும் யோசித்துப் பார்த்த ஐசரிகணேஷ் ஓ.டி.டி.யில் சரணாகதி அடைந்துவிட்டதால் பாலாஜிக்கும் நயனுக்கும் வேறு வழியே இல்லை.

nayathara

டிஸ்னிக்கு படம் உறுதி செய்யப்பட்டு... சில நாட்களிலேயே தியேட்டர்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்த அறிவிப்பு வெளியானதால், இப்போது அப்செட்டில் இருக்கிறார்கள் நயனும் பாலாஜியும். அரசு வழிமுறைப்படி தியேட்டருக்கு 50% பார்வையாளர்கள் வந்தாலே ‘மூக்குத்தி அம்மன்’ கலெக்ஷனில் சக்ஸஸ் ஆகிடுமாம். ஆனால் ஐசரி கணேஷோ, தியேட்டர் காரர்களுக்கும் தயாரிப்பாளர்களுக் கும் இடையே நடக்கும் பஞ்சாயத் தால், ஓ.டி.டி. முலம் தப்பித்ததாக நினைக்கிறார். நயன்தாரா நடித்த படத்தை தங்களது பிளாட்பார்மில் வெளியிடு வதில் வெரி ஹேப்பி யாக இருக்கிறது டிஸ்னி ஹாட் ஸ்டார்.

ஹேப்பி யாகிவிட்ட ஆர்.ஜே. பாலாஜியும், ‘"மூக்குத்தி அம்மன்’ பட க்ளைமாக்ஸில் 7,500 ஜூனியர் ஆர் டிஸ்டுகளை வைத்து எடுத்த சீன் ரொம்பவே சவாலாக இருந்தது'’ என கடந்த வாரம் ரிலீசான பிரஸ் ரிலீசில் அட்ராசிட்டி பண்ணி யிருந்தார். இதைப் பார்த்த, கேள்விப்பட்ட தயாரிப்பு நிர்வாகிகள் பலரும், ‘"டைமிங் காமெடியில ஆர்.ஜே.பாலாஜி கிங்குதான். அதுக்காக, 7,500 ஜூனியர் ஆர்டிஸ்ட்டா? "பாகுபலி'’ படத்துக்கே இவ்வளவு ஜூனியர் ஆர்டிஸ்டை பயன்படுத்தியிருக்கமாட்டேங்களே?' என்கிறார்கள் ஜாலியாக.

ஜெயம் ரவி மாமியாரின் பாலிஸி!

nitjy

"சூரரைப் போற்று',’ ‘"மூக்குத்தி அம்மன்'’ படங்கள் போக, ஜெயம் ரவி-நிதிஅகர்வால் நடித்த ’"பூமி'’ படமும் ஓ.டி.டி.யில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடந்தது. படத்தின் தயாரிப்பாளரும் ஜெயம் ரவியின் மாமியாருமான சுஜாதா, படத்திற்கான விலையை தாறுமாறாக ஏற்றியதால், இழுபறியில் உள்ளது பேச்சும் வார்த்தையும்.

ஓ.டி.டி.யின் திருகுஜாலங்கள்!

உப்பு, புளி, மிளகாயிலிருந்து செல்போன்வரை ஆன்லைன் வர்த்தகத்தில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறது அமேசான். சில வருடங்களுக்கு முன்பே சினிமாவுக்குள் நுழைந்துவிட்ட அமேசானின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸி நகரில் உள்ளது. இதன் சி.இ.ஓ.வாக இருக்கும் ஜெஃப்ரி, இந்திய சினிமாவின் முக்கிய மொழிகளான இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிப் படங்களை தன்வசப்படுத்த ஆண்டுதோறும் 500 கோடி ரூபாயை இறக்குகிறாராம்.

அமேசானின் இந்திய தலைமையகம் மும்பையில் உள்ளது. அதன் சி.இ.ஓ.வாக சஞ்சய் வத்வா இருக்கிறார். அந்தந்த மாநில மொழி தெரிந்த, சினிமா பிஸ்னசின் சூட்சுமம் தெரிந்த புரோக்கர்களை தன்வசம் வைத்துள்ளார் சஞ்சய் வத்வா. மூன்றுவிதமான பாலிஸிகளை வைத்துள் ளது அமேசான். முதலாவது World wide Exclusive பாலிஸி. இந்த பாலிஸியின்படி படத்திற்கான மொத்த பட்ஜெட்டுடன் லாபத்தொகையையும் சேர்த்து முதலிலேயே கொடுத்து வாங்கி விடும். அமேசானிடமே சேட்டிலைட்ஸ் ரைட்சும் இருக்கும்.

இரண்டாவது India Exclusive பாலிஸி. இதன்படி சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர் சேட்டிலைட் ரைட்சை வைத்துக்கொள்ளலாம், ஆனால் விற்பனைத் தொகை குறையும்.

மூன்றாவது Revenue Sharing பாலிஸி. ஒரு ஹீரோவின் பழைய படங்கள் சிலவற்றை அமேசானிடம் கொடுப்பார் தயாரிப்பாளர். அதை ஆன்லைனில் ரிலீஸ் பண்ணி, ஒரு மணி நேரத்திற்கு எத்தனை டாலர் வருமானம் வருகிறது என பல்ஸ் பார்த்த பின்தான், அந்த ஹீரோவின் புதுப்படங்களை வாங்கும் அமேசான்.

ஜி-5 ஓ.டி.டி.யிலோ படத்தைப் பார்த்த பின்தான் விலை பேசுவார்கள். அதன் பின் அவர்கள் சொல்லும் விலைக்கு கொடுக்கும்படி தயாரிப்பாளருக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்துவார்கள். நெட்ஃப்ளிக்ஸ் டீலிங் வேறு ரகம்.. படத்தை வாங்கி ஆன்லைனில் போட்டுவிட்டு, பணத்தைக் கொடுப்பதற்கு இரண்டு, மூன்று வருடங்கள் இழுத்தடித்துவிடுவார்கள். "யோவ் டெம்போல்லாம் வச்சு கடத்திருக்கோம்யா... பாத்துப் போட்டுக் கொடுங்கய்யா'’என்ற ரேஞ்சுக்கு தயாரிப்பாளர்களை நொம்பலப்படுத்தி விடுவார்கள்.

மீண்டும் தியேட்டர்களில்

ddddமேற்கண்ட விவரங்களையெல்லாம் தெளிவாக நம்மிடம் சொன்னார் தமிழ் சினிமா பிஸ்னஸில் 10 வருடங்களுக்கும் மேலாக அனுபவமுள்ள அந்த மீடியேட்டர். இந்த விவரங்களுடன் மேலும் சில விவரங்களை நம்மிடம் மனம்திறந்து பேசினார் ‘"ஜித்தன்-2'’ ‘‘"கருத்துக்களைப் பதிவு செய்'’ படங்களைத் தயாரித்து டைரக்ட் பண்ணிய ராகுல் பரமஹம்சா.

""மண்டி என்ற ஆன்லைன் வர்த்தகம் வந்தபோது சிறுகுறு நடுத்தர வியாபாரிகள் கடுமையாக எதிர்த் தனர். அதைப்போலத்தான் ஓ.டி.டி.க்கு எதிராக ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஓரணியில் திரளவேண்டும். அகரம் பவுண்டேஷன் மூலம் அறம் சார்ந்த செயல்களைச் செய்து நடிகர்களிலே முன்னுதாரணமாகத் திகழும் அண்ணன் சூர்யா அவர்கள், "சூரரைப் போற்று' விஷயத்தில் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டார் என நினைக்கிறேன்.

இவரைப் போன்ற பெரிய ஹீரோக்கள் வேண்டுமானால் ஓ.டி.டி.யிடமிருந்து தப்பிக்கலாம். ஆனால் ’"வி-1',’ ’"லாக்-அப்', ‘"தாராள பிரபு', ‘"நிசப்தம்'’போன்ற படங்களை ஓ.டி.டி.க்கு கொடுத்துவிட்டு, அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் ரொம்பவே அவஸ்தைப்படுகிறார்கள். சென்சார் உட்பட எந்தக் கட்டுப்பாடும் ஓ.டி.டி.க்கு இல்லாததால், சில நடிகைகளுக்கு பணத்தாசை காட்டி வாழ்க்கையே சீரழியும் நிலைக்குப் போகும் ஆபத்தும் உள்ளது.

எனது பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்கும் உரிமை எனக்கு இருக்கலாம். ஆனால் அந்தப் பொருள் போய்ச்சேரும் இடம் சரியான நியாயமான இடமாக இருக்கவேண்டும். ஓ.டி.டி.யின் ஆட்டம் குறைந்து, தியேட்டர்களுக்கு சினிமாக்கள் மீண்டும் வந்தே தீரும்''’’என்கிறார் உறுதியுடனும் நம்பிக்கையுடனும்

சன் டி.வி.யின் அதிரடி!

பார்த்தார் சுந்தர்.சி., இந்த ஓ.டி.டி. மண்டையடியெல்லாம் நமக்கெதுக்குன்னு தன்னுடைய தயாரிப்பான "நாங்க ரொம்ப பிஸி'’ படத்தை நேரடியாக சன் டி.வி.யிலேயே ஒளிபரப்ப அக்ரிமெண்ட் போட்டுவிட்டார். அதேபோல் சன் டி.வி.யும் முத்தையா டைரக்ஷனில் விக்ரம்பிரபு நடிக்கும் படத்தைத் தயாரித்து முடித்து, தீபாவளியன்று தங்களது டி.வி.யிலேயே ரிலீஸ் பண்ணும் அதிரடி முடிவுக்கு வந்துள்ளது. இதே அதிரடி பாலிஸியை தொடரும் முடிவில் உள்ளதாம் சன் டி.வி.

-ஈ.பா.பரமேஷ்வரன்

nkn111120
இதையும் படியுங்கள்
Subscribe