டிசம்பர் 27ஆம் தேதி, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவின்போது, வந்தவாசி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பொறுப்பிலுள்ள காந்திமதி, உண்ணாமலையம்மன் சன்னதியில் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்துள்ளார். அப்போது கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் தம்பியும், தி.மு.க. முன்னாள் நகர்மன்றத் தலைவருமான ஸ்ரீதர் துணைவி சிவசங்கரி, அம்மனுக்கு நேராக நின்று நீண்ட நேரம் சுவாமி கும்பிட்டபோது, பின்னாலிருந்த பக்தர்கள், சுவாமி தெரியவில்லை எனக் கத்தியுள்ளனர்.

ff

அதைக்கண்ட இன்ஸ்பெக்டர் காந்திமதி, "ஏம்மா கொஞ்சம் தள்ளி நின்னு பாரும்மா, பின்னாடி இருக்கறவங் களுக்கு மறைக்குதுல்ல'' என்று சிவசங்கரி மீது கை வைத்து நகரச் சொல்லியிருக்கிறார். சட்டெனக் கோபமான சிவசங்கரி, "நான் யார் தெரியுமா?, என் மேலயா கைவச்சி தள்ளுற?'' என்று கேட்டதோடு, "நான் இந்த கோவில் அறங்காவலர் குழு தலைவரோட தம்பி மனைவியாக்கும்!" எனக் கெத்து காட்ட, பதிலுக்குப் பதில் வாக்குவாதமாக, அங்கு வந்த ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் காந்திமதியை ஒருமையில் பேச, அவரும் பதிலுக்கு ஒருமையில் பேச, ஸ்ரீதரின் துணைவி சிவசங்கரியோ, சட்டென காந்திமதியின் கன்னத்தில் பளாரென அறைந்து மிரட்டியிருக்கிறார். ஸ்ரீதருக்கு பாது காப்பாக வந்த கோவில் ஊழியரான ராஜேஷ் என்பவரும் ஆய்வாளரைத் தள்ளிவிட்டிருக்கிறார். மேலும், ஸ்ரீதரும் தன் பங்குக்கு ஆய்வாளரை அடித்துவிட்டு மனைவியை அழைத் துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பி விட்டார்.

பொதுமக்கள் மத்தியில் ஆய் வாளரையே அடித்த விவகாரத்தால் ஷாக்கான போலீசார், இனி டூட்டி பார்க்கமாட்டோமென கோபப்பட, இவ்விவகாரம் எஸ்.பி. கார்த்திகேயன் கவனத்துக்கு சென்றுள்ளது. விவகாரம் பெரிதாவதைப் பார்த்த ஸ்ரீதர் தரப் போ, "அந்த இன்ஸ்பெக்டரிடம் நாங்க மன்னிப்பு கேட்டுக்கறோம், விஷயம் பெருசாகாம பார்த்துக்கோங்க!'' என்று சமாதானப்படுத்த முயன்றிருக்கிறது. விவகாரம் குறித்து புகார் எழுதி, ஒரு மாதம் விடுமுறைக் கடிதத்தையும் சேர்த்து எழுதி அனுப்பிவிட்டு வீட்டுக் குச் சென்றுவிட்டார் காந்திமதி.

பின்னர், வந்தவாசியிலிருந்த ஆய்வாளர் காந்திமதியை கெஞ்சிக் கூத்தாடி திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகத்துக்கு இரவோடு இரவாக அழைத்துவந்தார். டிசம்பர் 28ஆம் தேதி விடியற்காலை 3 மணிக்கு, "அடிச்சதுக்கு உங்ககிட்ட மன்னிப்பு கேட்கறேன்னு சொல்றாங்க'' எனச் சமாதானம் பேசியுள்ளார் எஸ்.பி. கார்த்திகேயன். "எப்.ஐ.ஆர். போடுங்க... இல்லன்னா ஐகோர்ட் போவோம்''னு இன்ஸ்பெக்டரின் கணவர் கறாராகச் சொல்ல, வேறுவழியின்றி, ஸ்ரீதர், அவரது துணைவி சிவசங்கரி மற்றும் கோவில் ஊழியர் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமீன் பெறும் முயற்சியோடு புகாரளிக்கப்பட்ட மூவரும் தலைமறை வாகியுள்ளனர்.

இன்ஸ்பெக்டருக்கே இந்த நிலையா?

Advertisment