"ஹலோ தலைவரே, காங்கிரஸ் தலைவர்கள் மீது ஒன்றிய பா.ஜ.க. போட்ட வழக்குகள் தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கி இருக்குது.''”
"ஆமாம்பா, "நேஷனல் ஹெரால்ட்' பத்திரிகை விவகாரத்தில் பண மோசடி நடந்ததாக சுப்பிர மணியசாமி கிளப்புன புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் ராகுலுக்கும் சம்மன் அனுப்பிய விவகாரம். ரொம்பவே சூடு பிடிச்சிருக்கே?''
"ஆமாங்க தலைவரே, எதிர்க்கட்சிகளை மிரட்ட புலனாய்வு அமைப்புகளை பகிரங்கமாகவே ஏவுவதை வழக்கமாக வைத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அந்த வரிசையில் இப்ப ஹெரால்ட் பத்திரிகை விவகாரத்தைக் கையில் எடுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, அமலாக்கத்துறை மூலம் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் சம்மன் அனுப்பியது. கொரோனா தொற்றால் சோனியா காந்தி மருத்துவ மனையில் அட்மிட் ஆகி இருப்பதால், ராகுல் மட்டும் 2 நாள் விசாரணை யில் ஆஜரானார். அப்போது, என்னென்ன கேள்விகள் கேட்டுக் குடைவார்கள்னு முன்னதாகவே சட்ட வல்லுநர்களிடம் ஆலோ சித்துவிட்டு, பக்கா பிரிப்ப ரேசனோடுதான் ஆஜ ரானார் ராகுல். அதனால் அங்கே கேட்கப்பட்ட கேள்விகளை எல்லாம் அவர் "ப்...பூ' என ஊதித் தள்ளிவிட்டாராம். ஒரு எதிர்மறை பதிலைக் கூட ராகுலிடமிருந்து அமலாக்கத்துறையால் வாங்க முடியலையாம். அது மட்டுமில்ல, இந்த விசாரணை பற்றி ட்வீட்டரில் பதிவுசெய்த ராகுல், ‘"நான் வந்துட்டுப் போனேன்னு அதானி யோட வேலைக்காரர் கிட்டே சொல்லுங்க'னு மோடி அரசை நக்கலடிச் சிருக்காரு.''”
"இந்த நிலையில் ஒன்றிய அரசின் போலீஸ் அட்டாக் காங்கிரஸை அதிரவச்சிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, அமலாக்கத்துறை ராகுலை விசாரணைக்கு அழைத்ததைக் கண்டித்து, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆர்ப்பாட் டத்தை நடத்தியது. டெல்லியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கலந்துக்கிட்டாங்க. அப்போது காவல்துறையினரோடு ஏற்பட்ட மோதலில் தமிழக எம்.பி.க்கள் ப.சிதம்பரம், விஷ்ணுபிரசாத், கரூர் எம்.பி. ஜோதிமணி மற்றும் கட்சி நிர்வாகி கே.சி.வேணு கோபால் உள்ளிட்டோர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், கீழே இழுத்துத் தள்ளப்பட்ட ப.சி.க்கு கால் எலும்பில் பிராக்சர் ஏற்பட்டிருக்கு. ப.சி. மீது வேண்டுமென்றே திட்டமிட்டு இப் படியொரு தாக்குதல் நடத்தப்பட்டி ருக்குன்னு அவரது ஆதரவாளர் கள் குற்றம் சாட்டறாங்க.''”
"காங்கிரஸ் கவனத்தைத் திசை திருப்பவே, காங் கிரஸுக்கு இப்படி எல்லாம் மோடி அரசு ஷாக் டிரீட்மெண்ட் கொடுத்திருக் குன்னு சொல்லப்படுதே?''”
"ஆமாங்க தலை வரே, ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசின் செயல்பாடுகளை முடக்கவே மோடி- அமித்ஷா கூட்டணி, திட்டமிட்டு ஹெரால்ட் பத்திரிகை விவகாரத்தில் அமலாக்கத்துறையை தூண்டியதுன்னு டெல்லிப் பக்கம் பலமா பேச்சு அடிபடுது. காங்கிரஸுக்கு இப்படி ஒரு நெருக்கடியைக் கொடுத்தால், அதன் கவனம் சிதறும். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சி களை ஒருங்கிணைக்கும் காங்கிரசின் முயற்சிகள் தோல்வியடையும்னு கணக்கிட்டுத்தான், ஹெரால்ட் விவகாரத்தை பா.ஜ.க. பெரிசாக்கி யிருக்குதாம். பா.ஜ.க.வின் இந்த தந்திர அரசியலைப் புரிந்து கொள்ளாமல், ஏதோ ராகுலையும் சோனியாவையும் கைது செய்யப் போகிறார்கள்னு நினைத்து, காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டத் தில் இறங்கி, தங்களின் பலத்தை விரயம் பண்ணியதா ஏனைய தேசியக் கட்சிகள் விமர்சிக்கின்றன.''”
"பா.ஜ.க. எதிர்பார்த்த மாதிரியே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான காங்கிரஸின் மூவ்கள் முடங்கி இருக்குதே?''”
’"அதுவும் உண்மைதாங்க தலைவரே, காங்கிரஸுக்கு முன்பாகவே ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் நடத்தினார் மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி. இது குறித்து அவர், சோனியா உட்பட 22 கட்சிகளின் தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதமும் அனுப்பினார். ஆனால், சோனியாவோ, இது குறித்த முடிவை காங்கிரஸ் எடுக்கும்னு அறிவித்தார். இதனால், நடுநிலையாக உள்ள எதிர்க்கட்சிகள் எந்தப் பக்கம் சாயும் என்கிற எதிர்பார்ப்பு வலுத்தது. இந்த நிலையில், சோனியா கொரோனாவில் படுத்துவிட, இதற்கிடையே அமலாக்கத்துறைக்கு எதிரான போராட்டத்தை வேறு காங்கிரஸ் நடத்தியது. இதனால், ஜனாதிபதி தேர்தலுக்கான காங்கிரசின் அடுத்தகட்ட நகர்வுகள் சுணங்கி நிற்குது. அதேபோல், ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு எதிராக வரிந்துகட்டும் மம்தாவுக்கு ஆதரவு கிடைக்காதுன்னு கணக்குப் போட்ட பா.ஜ.க., அதுகுறித்து அலட்டிக்கலை.''”
"சரிப்பா, தமிழக விவகாரத்துக்கு வா. சுகாதாரத்துறை மீது பா.ஜ.க. அண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்திருக்காரே?''”
"கருவுற்ற தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து மாவு கொள்முதல் திட்டத்தில் ஊழல் நடக்கப் போகுதுன்னும், இதற்காக 100 கோடி ரூபாய் கைமாறி இருக்குன்னும் பா.ஜ.க. அண்ணாமலை குற்றம்சாட்டியதோடு, சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். சுகாதாரத்துறை அமைச்ச ரான மா.சு.வோ, டெண்டரே முடிவாகாத நிலையில் ஊழல் எப்படி நடக்கும்னு அதற்கு பதிலடி கொடுத்தார். அனிதா டெக்ஸ் என்ற நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்போவதாக அண்ணாமலை சொல்லியிருந்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படவில்லை. இருந்தும் விடாத அண்ணாமலை, பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு, இது வலுவில்லாத குற்றச்சாட்டு என்று தடுத்தும் கூட, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இது குறித்துப் புகார் கொடுத்திருக்கிறார்.''”
"அறநிலையத் துறையில் புதிய பரபரப்பு தெரியுதே?''”
"சென்னை அனகாபுத் தூரைச் சேர்ந்த ஏர்போர்ட் பாலு என்பவர், தமிழக முதல்வரிடம், கோவில் களுக்கு வரும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சாமி தரிசனம் செய்ய சிறப்பு வரிசை ஏற்படுத்தணும்னு கோரிக்கை வைத்திருந்தார். இதைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு அது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் முக்கிய நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி களுக்கு தனி வரிசை ஏற்படுத்துமாறும், அவற்றைக் கவனிக்க போதிய எண்ணிக்கையில் பணியாளர் களை அமர்த்துமாறும் கோவிலின் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் சேகர்பாபு.''”
"சென்னை வருமான வரித்துறைக்கு ஒரு சர்ச்சைக்குரிய அதிகாரியை டெல்லி அனுப்பி இருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, மும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் இருந்த ஐ.ஆர். எஸ். அதிகாரியான சமீர் வாண்க டேவை, சென்னை வரி சேவை இயக்குநரக அதிகாரியாக நியமித் திருக்கிறது ஒன்றிய அரசு. இந்த வாண்கடே பெரும் புள்ளிகளைக் குறிவைத்து, ஏதாவது வழக்கைப் போட்டு, பின் காம்ப்ரமைஸ் ஆகி, அதன்மூலம் லாபம் பார்ப்பவர் என்கிற குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். இது வரை இவர் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரும்புள்ளிகள் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார் என்கிறார்கள். இரண்டு வருடங் களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங், போதை விவகாரத்தில் தொடர்புடை யவர் என்று வழக்கைத் தொடுத்த வாண்கடே, இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி சுசாந்த் தின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியையும் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல் சில மாதங்களுக்கு முன் மும்பைக்கும் கோவாவுக்கும் இடையில் சென்று கொண்டிருந்த எம்பிராஸ் என்னும் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள்கள் வைத்திருந்ததாக, நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானையும் வாண்கடே கைது செய்தார். பின்னர், ஆர்யன்கான் மீது பொய்யாக வழக்கு புனையப்பட்டது என்பது நிரூபணமாக, அவர் விடுவிக்கப்பட்டார். இதுபோன்ற சர்சைகளில் சிக்கிய வாண்கடேதான் இப்போது சென்னைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.''”
"நானும் இது தொடர்பான தகவலைச் சொல்றேன். இந்த சமீர் வாண்கடே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அன்புக்குரிய அதிகாரியாம். இவரை வைத்து, இங்கே இருக்கும் தி.மு.க. பிரமுகர்களுக்கு டார்ச்சர் கொடுக்கும் திட்டத்தோடுதான் அவர் சென்னைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்கிறது டெல்லி தகவல். இதனால் இங்கிருக்கும் ஆளும்கட்சி வி.ஐ.பி.கள் மனக்குழப்பத்தில் இருக்கிறார்களாம்.''”