ந்தியா வின் எச்சரிக்கைக்குப் பணிந்து சீனாவின் உளவுக்கப்பலுக்குத் தடை விதித்திருக்கிறார் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே.

சீனாவுக்கு சொந்தமான யுவான் வாங்-5 என்ற வான்வெளி உளவுக் கப்பல், கடந்த 13-ந்தேதி சீனாவின் ஜியாங்-யின் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இந்தியப் பெருங்கடலில் பயணிக்கத் தொடங்கியது. இம்மாதம் 11-ந்தேதி இலங்கையின் ஹம்மாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்து அங்கு 17-ந்தேதி வரை 7 நாட்கள் யுவான் வாங்-5 கப்பலை நிலைநிறுத்தத் திட்டமிட்டு அந்த கப்பலை அனுப்பி வைத்தது சீனா. இந்த நிலையில்தான் சீனாவின் உளவுக் கப்பலை ஹம்மாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைய தற்போது தடை விதித்திருக்கிறது இலங்கை அரசு. இதனால், இலங்கை அதிபர் ரணில் விக்கிர மசிங்கே மீது கடும் கோபத்தில் சீனா இருப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

ss

Advertisment

இந்த சீனக் கப்பல் பற்றி, இந்தியாவின் வெளியுலக உளவு அமைப்பான ரா, பிரதமர் மோடிக்கு தகவல் அனுப்பி, இந்தக் கப்பல் எந்த வகைகளிலெல்லாம் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை விவரித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் அத்துறைகளின் உயரதிகாரிகளுடன் கடந்த 12-ந்தேதி விவாதித்திருக்கிறார் பிரதமர் மோடி. அதில் சீனாவின் யுவான் வாங் கப்பல் குறித்து பல்வேறு கோணங்களில் விவாதிக்கப் பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இலங்கைக்குள் இந்த கப்பலை அனுமதிக்கக்கூடாது என்பதை இலங்கை அரசிடம் தெரிவித்திருக்கிறது இந்தியா.

இது குறித்து கொழும்பு பத்திரிகையாளர் களிடம் விசா ரித்தபோது, "கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து பணியாற்ற இந் திய ராணுவத் தில் ஒரு பிரிவு உண்டு. அந்த பிரிவின் லெப்டினெண்ட் கர்னல் புனித் ஷகீலும் அந்த பிரிவின் அதிகாரிகள் சிலரும் கடந்த 5-ந்தேதி இலங்கைக்கு வந்திருந்தனர். இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதர் திபினிடம் ஆலோசித்தனர்.

பிறகு, திபின் தலைமையிலான இந்திய அதிகாரிகள், இலங்கை கடற்படையின் தென்பிராந்திய அதிகாரிகளையும், ஹம்மாந் தோட்டை துறைமுக அதிகாரிகளையும் சந்தித்து விவாதித்தனர். இந்த விவாதத்தில் இருக்குமாறு இலங்கை ராணுவ உயரதிகாரிகளையும் அனுப்பி வைத்திருந்தார் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே.

ss

Advertisment

அந்த விவாதத்தின்போது, சீன உளவுக் கப்பலின் நோக்கம் மற்றும் இந்திய பாதுக்காப்புக்கான அச்சுறுத்தல் குறித்து விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இலங்கை அதிகாரிகளோ, ’எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே இந்த கப்பல் வருகிறது. கடந்த காலங்களில் இதே போன்று சீனா, அமெரிக்கா, ரஷ்யா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் இப்படி வந்து போனதுண்டு. இது இந்தியாவுக்கும் தெரியும். அதனால் அச்சப்படவோ சந்தேகப்படவோ தேவையில்லை’ என விளக்கமளித்திருக்கிறார்கள்.

இதனை ஏற்க மறுத்த இந்திய அதிகாரிகள், ’கடந்த காலங்களில் வந்ததெல்லாம் வணிகக் கப்பல்கள்தான். ஆனால், யுவான் வாங்-5 என்பது வணிகக் கப்பல் கிடையாதே...? வான்வெளி ஆராய்ச்சியின் உளவுக் கப்பல். அதன் சக்தி எப்படிப்பட்டது என்பது இலங்கை அரசுக்கு நன்றாகத் தெரிந்தும் அனுமதிக்கிறீர்கள்.

உங்களுக்கு (இலங்கை அரசுக்கு) ஆலோசனை வழங்கும் ஒரு நிறுவனம், இந்தியப் பெருங்கடலின் வடக்கு மேல்பகுதியில் செயற்கைக் கோள் கட்டுப்பாடு, விண்வெளி கண் காணிப்பு உள்ளிட்ட ஆராய்ச்சிப் பணிகளை யுவான் வாங்-5 கப்பல் முன்னெடுக்கும் எனச் சொல்லியிருப்பதை இலங்கை அதிகாரி களுக்கு இந்திய அதி காரிகள் நினைவு படுத்தியதுடன், உளவுக் கப்பலை அனுமதித்தால் இந்தியாவின் நடவடிக்கை இலங்கைக்கு அதிர்ச்சியை தரக்கூடும். அதனை எதிர்கொள்ள நீங்கள் தயாராகிக்கொள்ளுங்கள் ‘ என எச்சரிக்கை செய்யும் விதத்தில் இந்திய அதிகாரிகளின் குரல்கள் தடித்து ஒலித்திருக்கின்றன.

ss

இதன்பிறகே, இந்தியாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இலங்கை முடிவு செய்ததோடு, ஹம்மாந்தோட்டை துறைமுகத்துக்குள் நுழைய யுவான் வாங்-5 கப்பலுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைப்பதாக சீனா அரசுக்கு தெரிவித்தது. இதனால் தற்போது சீனாவின் உளவுக் கப்பல் இலங்கைக்குள் நுழைய தடை போட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே.

இந்தியாவின் எச்சரிக்கைக்கு பணிந்து இந்த முடிவை இலங்கை அரசு எடுத்திருந்தாலும், இந்த தடை தற்காலிகமானது என்றே தோன்றுகிறது. காரணம், ஹம்மாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு தாரை வார்த்துள்ளது இலங்கை. தவிர, பொருளாதார ரீதியாக சீன அரசிடம் ஜீரணிக்க முடியாத அளவுக்கு கடன்களை பெற்றுள்ள இலங்கை அரசு, ஒரு கட்டத்தில் சீனாவின் மிரட்டலுக்கு பயந்து இந்தியாவை பகைத்துக்கொள்ள முடிவெடுத் தாலும் ஆச்சரியமில்லை'' என்று விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள்.

உளவுக் கப்பலை ஹம்மாந்தோட்டைத் துறைமுகத்தில் நிறுத்துவது குறித்து சீனத் தூதரக அதிகாரிகளும் இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவின் எச்சரிக்கையால், சற்றுப் பொறுங்கள் என சீனாவிடம் சொல்லியிருக்கிறது இலங்கை.

இந்தியாவை அச்சுறுத்துகிற அளவுக்கு சீனாவின் உளவுக் கப்பல் ஆபத்தானதா? என்பதை அறிய அந்த கப்பலின் சக்தி குறித்து சென்னை துறைமுக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தோம்.

யுவான் வாங்-5 கப்பல் 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது. சுமார் 11,000 மெட்ரிக் டன் எடைகொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது. விண்வெளி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே யுவான் வாங்-5 கப்பலை உருவாக்கியது சீனா. உலக அளவிலான விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தன்னை உறுப்பு நாடாக இணைத்துக்கொள்ள கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சீனா பெரும் முயற்சியை எடுத்து வருகிறது.

ஆனால், அமெரிக்காவின் எதிர்ப்பினால் இது இப்போதுவரை சாத்தியப்படவில்லை. இந்த சூழலில் தான் கடந்த 2007-ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கான உளவுக் கப்பலை நிர்மாணிக்க முடிவு செய்து, யுவான் வாங் - 5 கப்பலை தனது கப்பல் கட்டும் நிறுவனமான ஜியாங்கனன் மூலம் உருவாக்கியது. கடல்சார் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை முன்னெடுக்கும் சீனாவின் லாங் மார்ச்-5 பி வகையான பிரமாண்ட ராக்கெட்டை ஏவுவதற்கான வசதிகள் இந்த உளவுக் கப்பலில் உண்டு. இந்த ராக்கெட்டை விண்வெளியில் இந்த கப்பல் மூலமாக செலுத்தியும் வருகிறது சீனா.

ss

விண்வெளி மற்றும் செயற்கைக் கோள்களை கண்காணிப்பதற்கான தொழில் நுட்பத்தை அதிகளவில் கொண்டிருக்கும் இந்த உளவுக் கப்பலால், இலங்கையின் ஹம்மாந்தோட்டை துறைமுகத்திலிருந்து 750 கி.மீ. தொலைவிலான அனைத்து பகுதிகளையும் கண்காணிக்க முடியும். அந்த வகையில், இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களான ஒடிசா ஆகிய கடலோர பகுதியுள்ள துறைமுகங்களையும், தமிழ்நாட்டிலுள்ள கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட அணுசக்தி ஆராய்ச்சி மையங்களையும் மிக எளிதாக உளவு பார்க்க முடியும்.

அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பானவை. அந்த பாதுகாப்பின் ரகசியங்களை சீனாவால் திருட முடியும் என்பதால் இந்த கப்பலின் வருகை இந்தியாவுக்கு எத்தகைய ஆபத்தினை ஏற்படுத்தும் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்தியாவை உளவு பார்ப்பதிலும் அதன் பாதுகாப்பை உடைப்பதிலும் பல ஆண்டுகளாகவே பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டு தானிருக்கிறது சீனா. இதற்காக இலங்கையை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகிறது. கடந்த 2014-ல், 2 நீர்மூழ்கிக் கப்பல்களையும், 1 போர்க் கப்பலையும் கொழும்புக்கு அனுப்பி வைத்து சீனா உளவு பார்த்தது. அப்போது இதனை இந்தியா மிகக்கடுமையாக கண்டித்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உளவுக் கப்பலை அனுப்பிவைக்க முயற்சித்துள்ளது சீனா.

யுவான் வாங்-5 உளவுக் கப்பலின் பயணம் குறித்து இந்திய ரா அதிகாரிகள் சுட்டிக் காட்டியிருந்த சூழலில், சீன ராணுவ புலனாய்வுத் துறையோடு இணைந்துள்ள இந்த உளவுக் கப்பல், இலங்கைக்குள் நிலை நிறுத்தப்படுவது இந்தியாவுக்கு ஆபத்து என்பதை அமெரிக்காவின் பாதுக்காப்புத்துறையான பெண்டகனும் எச்சரிக்கை செய்திருந்தது.

இலங்கைக்கு அனைத்து வகைகளிலும் உதவி வருகிறது இந்தியா. ஆனால், இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சதிகளுக்கு ஆதரவாகவே எப்போதும் இருந்து வருகிறது இலங்கை சிங்கள அரசு. இதனை இந்தியா திடமாக உணரும்போதுதான் இந்தியாவுக்கான ஆபத்து நீங்கும் என்கிறார்கள் பாதுகாப்புத் துறையினர்.