மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மயூரநாதர் கோயிலை பராமரிக்க முன்னோர்கள் ஏராளமான நிலபுலன்களை தானமாகக் கொடுத்தார்கள், அப்படி கொடுக்கப்பட்ட நிலங்களில் உச்சிக்கால கட்டளை, அடைக்காமகட்டளைக்கு சொந்தமான பல கோடி ரூபாய் இடங்கள் இன்று நீதிமன்றம் வரை சென்று விவகாரமாகிக் கிடக்கிறது.
19-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மயூரநாதர் கோயில் திருவாவடுதுறை ஆதீனத் திற்கு சொந்தமானது. கோயிலுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. அந்த சொத்துக்களை அனுபவித்துவருபவர்களில் பெரும்பாலானோர் குத்தகை செலுத்தாமல் போனதால் விவகாரம் நீதிமன்றம்வரை வந்துநிற்கிறது.
என்ன பிரச்சனை? இரண்டு அறக்கட்டளை களையும் தற்போது நிர்வகித்துவரும் பாண்டியனிடம் கேட்டோம், "தேவக்கோட்டை யைச் சேர்ந்த ஒன்பது செட்டியார் குடும்பங்கள் மயூரநாதர் கோயில் கட்டியதோடு இரண்டு அறக்கட்டளைகளை உருவாக்கி 90 ஆண்டுகளாக அதற்குத் தேவையானதை செய்துவந்தாங்க. இடையில் பல வருடங்கள் அவங்களால எதுவுமே பெரிதாக செய்ய முடியல. காரணம், கோயிலுக்கு வருமானம் வரக்கூடிய அவங்க சொத்துக்கள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் இரண்டு ட்ரஸ்ட்களுக்குமான வருமானம் நின்றுபோனது. பிறகு எனக்கு முழு பவர் கொடுத்து நியமித்தாங்க. நான் வந்தபிறகு ஆக்கி ரமிப்புகளை நீக்கி வீட்டு மனைகளை உருவாக்கி அடிமனைகளை பகுதிக்கு கொடுத்தேன்.
மயிலாடுதுறை நகராட்சியில் இருக்கும் உச்சகால கட்டளைக்கு 160 மனைகளும், மாப்படுகை ஊராட்சியில் இருக்கும் அடைக்காம கட்டளைக்கு 325 மனைகள் மூலமும் வருவாயைப் பெருக்கிக்கொடுத்துள்ளேன். ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராஜகோபாலும், வழக்கறிஞர் சங்க தலைவரான வீதிவிடங்கனும் சேர்ந்துகொண்டு குடியிருப்பவர்களைத் தூண்டிவிட்டு குடியிருப் போர் நல சங்கம் என்று ஒரு சங்கத்தை அமைத்து அடிமனைக்கான பகுதியைக் கொடுக்கமறுத்து மிரட்டுறாங்க.
எச்.ஆர்.என்.சி. உத்தரவுபடி உச்சிக்கால கட்டளை இடங்களுக்கு 7500 ரூபாய் வாடகை வாங்கணும். ஆனால் நாங்கள் ஆண்டுக்கு வெறும் 1150 ரூபாய்தான் கேட்கிறோம். அதேபோல மாப்படுகை நாராயணபுரத்தில் உள்ள அடைக்காம கட்டளைக்கு சொந்தமான இடத் திற்கு 3,750 ரூபாய் வாங்கணும், நாங்க ரூ.750தான் வாங்குறோம். சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு அவரவர் இருக்கும் இடத்திற்கு பட்டா வாங்கித் தருகிறோம், குடியிருக்கும் இடத்தை சொந்தமாக்கிக்கொள்ள லாம் என ஆசை வார்த்தைகளைச் சொல்லி செட்டியார்களுக்கு எதிராகவும், நிர்வகித்துவரும் எனக்கு எதிராகவும், என்னிடம் இருக்கும் பவரை நீக்க வேண்டும் என்றும் பல போராட்டங்களையும், இன்னல்களையும் கொடுத்துவர்றாங்க.
ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. இராஜகோபால் ஐந்து கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அதுல மாதம் இருபதாயிரம் வாடகை வாங்குறார். ஆனால் ஆண்டுக்கு 1150 ரூபாய் வாடகை கொடுக்க மறுத்து விவகாரம் செய்கிறார். விவகாரம் செய்யும் ஒவ்வொருவரும் ஐந்தில் இருந்து 18 மனைகள் வரை பினாமி பெயரில் வாங்கி பதினைந்து லட்சம்வரை விற்றுள்ளனர். அதே நேரம் மனைகளுக்கு யாரிடமும் நாங்கள் பணம் வாங்கல, பகுதிக்குதான் கொடுத்துள்ளோம். ஆனால் பலர் மனைகளை பினாமிகளின் பெயரில் வாங்கி கோடிக்கணக்கில் விற்றுள்ளனர்" என்கிறார்.
அவரிடமே, "ஒன்பது செட்டியார் குடும்பமும் உங்களுக்கு பவர் கொடுத்திருக்காங் களா'' என கேட்டோம், "ஒன்பது குடும்பத்தில் வெங்கடாசலம் செட்டியார் என்பவர் உடல்நிலை முடியாமல் மற்றவர்கள் செய்வதற்கு ஒத்துழைப்பு தருவதாக எழுதிக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இன்னொருவர் தனிப்பட்ட முறையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வழக்கு தொடுத்துவருகிறார். மற்ற ஏழு பேரும் எனக்கு பவர் கொடுத்துள்ளனர். நாங்க மின்சாரத் துறையில் தடை வாங்கினோம். மின்சாரத் துறையோ அடிமனைக்கான வாடகையை கட்டிட்டு என்.ஓ.சி. வாங்கிவந்தால் கரண்ட் தருகிறோம்னு சொல்லிட்டாங்க. நகராட்சி நிர்வாகமோ பவர் வைத்துள்ள பாண்டியன் சாலையை நகராட்சியில் ஒப்படைத்தால்தான் எல்லா வசதிகளையும் செய்து தரமுடியும்னு சொல்லிட்டாங்க, தாலுகா அலுவலகத்திலும் அதே பதிலைக் கொடுத்திருப்பதால் இறுதியாக கொலை மிரட்டல் விட ஆரம்பிச்சிருக்காங்க.
காரியம் பார்க்க வந்த கடுவங்குடியார் குடும்பம் 18 மனைகளை தன்னோட கட்டுப் பாட்டுல வச்சிக்கிட்டு ட்ரஸ்டுக்கு ஒரு பைசாகூட கொடுக்காம ஏமாத்துறாங்க. அந்த 18 மனை களோட மதிப்பீடு மூன்றரைக் கோடி. செட்டியார்களும் எவ்வளவோ பேசிப்பார்த்துட் டாங்க எதுவுமே நடக்கல. இந்த விவகாரத்தில் பாண்டியனை மிரட்டி விலக்கிவைத்துவிட்டால் ஒருத்தனும் துணிச்சலாக வரமாட்டான்னு முடிவெடுத்து அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு இப்படி செய்யுறாங்க.
வழக்கறிஞர் வீதிவிடங்கன் வழக்கறிஞர் சங்கத்தலைவர் பதவியை இதற்கு சாதகமாக்கிக் கொள்கிறார். அதேபோல மணல்கொள்ளையில் ஈடுபடும் ஒருத்தர் விவசாய சங்கத்தலைவர் என் கிற போர்வையில் அறக்கட்டளை விவகாரத்தில் தலையிட்டு அடாவடியில் ஈடுபடுகிறார். தமிழக முதல்வரும், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு நியாயம் கிடைக்கச் செய்யணும்'' என்கிறார்.
இதுகுறித்து வழக்கறிஞர் சங்கத் தலைவரும், குடியிருப்போர் நல சங்க பொறுப்பாளரும், அவர்களின் சட்ட ஆலோசகருமான வீதிவிடங்க னிடம் கேட்டோம், நிதானமாக அறக்கட்டளை விவகாரங்களை கேட்டவர், "தலைவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்'' என நழுவிக்கொண்டார்.
நாராயணபுரம் குடியிருப்போர் நலச்சங்க பொறுப்பாளர்களில் ஒருவரான சண்முகசுந்தரத் திடம் கேட்டோம், "அறக்கட்டளை இடத்திற்கு வாடகை பத்திரம் போட்டுக்கொடுப்பதே தவறு. எச்.ஆர்.என்.சி. இடத்துக்குத்தான் அடிமனை வாடகை போடமுடியும். அதுவே முதல் தவறு. இடங்களைப் பிரித்துக் கொடுக்கும்போது ஒவ் வொரு மனைக்கும் பத்தாயிரம் வீதம் பல கோடி ரூபாயை சாலை, மின்சாரம், குடிநீர் வசதி செய்து கொடுக்க பாண்டியன் வாங்கினார். இன்றுவரை, எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக் கல. பிறகு எப்படி வாடகை கொடுக்கமுடியும்?
இந்த இடம் ஒன்பது செட்டியார் குடும்பங் களுக்குச் சொந்தமானது. சாதாரண ஆளாக சம்ப ளத்துக்கு கூலிவேலை செய்துவந்த பாண்டியன், வீரப்பசெட்டியார் என்பவரை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து வட்டிக்கு கொடுத்து அனைவரையும் விலைக்கு வாங்குகிறார். அவரது உண்மையான நோக்கம் கோயிலுக்கு செய்வதோ, அறக்கட்டளை களை சிறப்பாக நிர்வகிப்பதோ இல்லை. செட்டியார் குடும்பங்களின் சொத்துக்களை வைத்து கோடி கோடியாக சம்பாதிப்பதுதான்" என்கிறார்.
இதுகுறித்து மயூரநாதர் நகர் குடியிருப்போர் சங்க தலைவரும் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.யுமான ராஜகோபாலனிடம் கேட்டோம். "நாங்க கோயிலுக்கான நிலத்தில் குடியிருக்கிறோம். நாங்கள் பகுதி கட்டமுடியாது எனச் சொல்லவில்லை, ஆனால் இடைத்தரகராக பாண்டியனிடம் கட்டமுடியாது என்றுதான் கூறுகிறோம். நாங்கள் குடியிருக்கும் மயூரநாதர் நகர் இருக்கும் இடம் கல்யாணம் அய்யர் என்பவரின் குடும்பத்திற்குச் சொந்தமானது. கல்யாணம் அய்யருக்கு வாரிசு இல்லை என்பதால் பெத்தபெருமாள் செட்டியாரின் ஆன்மிக ஈடுபாட்டைப் பார்த்து அவரது குடும்பத்திற்கு 1930-ம் ஆண்டு இனாம் செட்டில்மெண்ட் ரிஜிஸ்டர் செய்துகொடுத்தார். பெத்தபெருமாள் குடும்பத்தில் பிற்காலத்தில் பிரச்சனை வந்து 1995-ல் 11 ஏக்கரையும் பிளாட் போட்டு ஒரு மனையை உத்தேசமாக ஒரு லட்சத்திற்கு கொடுத்தனர். அதில் கிடைத்த ஒன்றரைக் கோடியை வங்கியில் செலுத்தி பூஜை செய்யப்போவதாக கூறியவர்கள் வங்கியில் செலுத்தாமல் எடுத்துச்சென்றுவிட்டனர்.
அதேபோல் நாராயணபுரம் நகராக இருக்கும் இடம் 1916 வரை சேஷாத்திரி ஐயங்கார் என்பவ ருக்கு சொந்தமான 32 ஏக்கர் நிலம். அதில் வந்த வருமானத்தில் அர்த்தஜாம பூஜைகளை செய்து வந்தது ஐயங்கார் குடும்பம். பிறகு பெத்தபெரு மாள் செட்டியாரிடமே தானமாக எழுதிக்கொடுத் தனர். பெத்த பெருமாள் செட்டியாரும் அவரது தம்பியும் இருக்கும் வரை நல்லபடியா நிர்வகிச் சாங்க. பிறகு அவங்க இதை பெருசா கண்டுக்கல. இதை சாதகமாக்கிக் கொண்ட பாண்டியன், செட்டியார் குடும்பத்தில் ஒருவரான வீரப்ப செட்டியாரை கையில் போட்டுக்கொண்டு பவர் ஏஜெண்டுன்னு சொல்லி இப்படி பல கோடி சொத்துக்களை ஆட்டையைப் போடத் துடிக்கிறார்.
செட்டியார் குடும்பத்தினரைச் சந்தித்து ‘பகுதிப் பணத்தை நாங்க கோவிலுக்கு கட்ட தயாரா இருக்கோம், "உங்ககிட்ட கட்டுறோம், இடைத்தரகர் பாண்டியனிடம் கட்டமுடியாது'ன்னு சொல்லிட்டோம். வழக்கு மயிலாடுதுறை நீதிமன் றத்திற்கு வந்துச்சி. நீதிபதி அழைத்துப் பேசினார். அவரிடமும் இதையேதான் சொன்னோம். உடன்பாடு இல்லாமல் போனதால் நாகப்பட்டினம் நீதிமன்றத்திற்கு போயிருக்கோம். நீதிமன்றத்தின் மூலமாகக்கூட நாங்க பணம் கட்ட தயார். ஆதீனம் கேட்டாக்கூட நாங்க கட்ட தயார். ஆனால் இடைத் தரகர் பாண்டியனிடம் கட்ட தயாரில்லை'' என்கிறார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரியிடம் கேட்டோம்,
"அது ட்ரஸ்ட் சொத்து. நீதிமன்றமோ, மேலிடமோ உத்தரவிட்டால்தான் அதுல நாங்க தலையிட முடியும். பல ஆயிரம் கோடிக்கான சொத்து. அதை யார் அடைவது என்பதில்தான் போட்டா போட்டியே''’என்கிறார் பட்டும் படாமல்.
-க.செல்வகுமார்