குடும்பத்தினர் பெயரில் கோவில் சொத்து! -ஆட்டையப் போட்ட அறநிலையத்துறை அதிகாரி!

kovilproperty

கோயில் நகைகள் எடை குறைந்திருப்பதாக ராமேஸ்வரத்தில் சர்ச்சை ஓய்வதற்குள், இந்து அறநிலை யத்துறை இணை ஆணையரே 150 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலத்தை ஆட்டய போட்டதாக திடீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் திருக்கோயில் இணை ஆணையரும் அப்போதைய நிர்வாக அதிகாரியுமான பாரதி, 85 கடைகளை வாடகை விட்டதில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்ததாக அப்போதைய இந்து அறநிலையத்துறை ஆணையர் பனீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ். விசாரணை செய்து 2019 மே மாதம் பாரதியை சஸ்பெண்ட் செய்துவிட்டார்.

kovilproperty

இந்நிலையில்தான், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குதிரைமொழி கிராமத்தில் உள்ள சுந்தரநாச்சியம்மாள் திருக்கோயிலுக்கு சொந்தமான சர்வே எண்-143ல் உள்ள 473 ஏக்கர் இடத்தில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 75 ஏக்கரை இணை ஆணையர் பாரதியின் அப்பா, அம்மா, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது’’ என்று குற்றஞ்சாட்டுகிறவர்கள், கோயில் நிலத்தை பாரதியின்

கோயில் நகைகள் எடை குறைந்திருப்பதாக ராமேஸ்வரத்தில் சர்ச்சை ஓய்வதற்குள், இந்து அறநிலை யத்துறை இணை ஆணையரே 150 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலத்தை ஆட்டய போட்டதாக திடீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியர் திருக்கோயில் இணை ஆணையரும் அப்போதைய நிர்வாக அதிகாரியுமான பாரதி, 85 கடைகளை வாடகை விட்டதில் பல லட்ச ரூபாய் முறைகேடு செய்ததாக அப்போதைய இந்து அறநிலையத்துறை ஆணையர் பனீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ். விசாரணை செய்து 2019 மே மாதம் பாரதியை சஸ்பெண்ட் செய்துவிட்டார்.

kovilproperty

இந்நிலையில்தான், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குதிரைமொழி கிராமத்தில் உள்ள சுந்தரநாச்சியம்மாள் திருக்கோயிலுக்கு சொந்தமான சர்வே எண்-143ல் உள்ள 473 ஏக்கர் இடத்தில் சுமார் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள 75 ஏக்கரை இணை ஆணையர் பாரதியின் அப்பா, அம்மா, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது’’ என்று குற்றஞ்சாட்டுகிறவர்கள், கோயில் நிலத்தை பாரதியின் குடும்பம் எப்படி தங்களுக்கு சொந்தமாக்கிக்கொண்டது என்றும் விவரிக்க ஆரம்பித்தார்கள்.

""திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைரவேல் காணாமல் போன சர்ச்சையில் சிக்கிய அப்போதைய அறங்காவலர் ஜி.ஆர். பாலகிருஷ்ணன்தான் இணை ஆணையர் பாரதி யின் அப்பா. தமிழக அர சின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களின் இடங்களை யாரும் தங்க ளது பெயருக்கு தனிநபர் பட்டாவாக சட்டப்படி பதிவு செய்யவே முடியாது. அரசுப்பொறுப்பில் இருப் பவர்களின் குடும்பத்தினர் குத்தகைகூட எடுக்கக் கூடாது. ஆனால் பாரதி, இந்து அறநிலையத்துறை யின் அதிகாரியாக இருக்கும்போதே தனது அப்பா பாலகிருஷ்ணன் அறங்காவலராக இருந்த, திருச் செந்தூர் வட்டம் குதிரைமொழி கிராமத்திலுள்ள அருள்மிகு சுந்தரநாச்சியம்மாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 473 ஏக்கர் கோயில் நிலத்திலிருந்து 75 ஏக்கர் நிலத்தை தனது உறவினர் தங்க வடிவம்மாளுக்கு விதிகளுக்கு புறம்பாக 1993-ஆம் ஆண்டு குத்தகைக்கு கொடுத்துவிட்டார்.

பிறகு, 1994 பிப்ரவரி 24-ந் தேதி தங்கவடிம்மாளிடமிருந்து தன்னுடைய அப்பா பாலகிருஷ்ணன் பெயருக்கு (ஆவண எண்: 866867/94) போலியாக தனிநபர் பட்டா பெயர் மாற்றம் நடந்துள்ளது. பின்னர், 2014 நவம்பர் 26-ந் தேதி இணை ஆணையர் பாரதியின் சகோதரர்கள் ராஜன், மாணிக்கம் ஆகியோரின் பெயர்களுக்கு தனிநபர் பட்டா மாற்றம் (ஆவண எண் 2547/2014) செய்யப்பட்டுள்ளது.

dddd

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் பாரதிக்கு இணை ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கிய பிறகு, மீண்டும் இந்நிலத்தின் பட்டாவை தனது குடும்பத்தினருக்கு 2019 மே மாதம் மோசடியாக மாற்றியிருக்கிறார். இந்த மோசடிக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் உள்ளிட்டவர்கள் துணையாக இருந்திருக்கிறார்கள். இது குறித்து, அப்போதைய நிர்வாக அதிகாரி எசக்கி யப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் தூத்துக் குடி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப் பன் விசாரணை செய்து மோசடி நடந்திருப்பது உண்மைதான் என உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளார்''’என்றவர்கள், பாரதி மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறுகிறார்கள்.

""2004-ல் திருச்சி சமயபுரத்தில் தங்க விமான கோபுரம் செய்யப்பட்டபோது, தங்கத்தில் முறைகேடு செய்ததாக இணை ஆணையர் பாரதி மீது குற்றச்சாட்டு எழுந்து, விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. , கோவை மாவட்டம் பன்னாரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை செயலாளர், ஆணையர் அனுமதி இல்லாமலேயே தன்னிச்சையாக தனியாருக்கு குத்தகை கொடுத்த புகாரிலும் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுபோல், 8 குற்றச்சாட்டுகளுக்கான 17 பி சார்ஜ் நோட்டீஸ் இணை ஆணையருக்கு அனுப்பப் பட்டுள்ளது.

தற்போது, பணி இடை நீக்கம் செய்யப்பட்டி ருக்கும் இணை ஆணையர் பாரதி, இந்து அறநிலை யத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் மகனும் நிழல் அமைச்சருமான விஜயக்குமார் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு மூலமாக திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் பதவிக்கு முயற்சித்து வருகிறார். இதன்மூலம், தனது குடும்பத்தினர் பெயரில் போலியாக பட்டா மாற்றம் செய்த சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பிலான சுந்தரநாச்சியம்மாள் கோயில் இடத்தையும் காப்பாற்றிக்கொள்ளமுடியும். இன்னமும் பல்லாயிரக்கணக்கான கோயில் இடங்களை பட்டா மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான் திட்டம். இப்பதவிக்கு வந்தபிறகு, தனக்கு உதவியாக இருந்த அமைச்சருக்கு கோயில் நிலங்களை தாரை வார்ப்பதும் டீலிங்''’என்கிறார்கள்.

இதுகுறித்து, இணை ஆணையர் பாரதியை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “""இது, கோயில் சொத்து கிடையாது. ஆனால், எனக்கு எதிரானவர்களால் இப்படி கிளப்பிவிடப்படுகிறது. எனக்கு திருநெல்வேலியில் போஸ்டிங் வர இருப்ப தாக ஒரு பேச்சு இருக்கு. என்னை, அங்கு பணி யமர்த்தக்கூடாது என்பதற்காகவும் அவர்களுடைய ஊழல்கள் வெளிவந்துவிடும் என்பதற்காகவும் என்னை அங்கு பணியமர்த்த விடக்கூடாது என்ப தற்காகவும்தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன. என் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை''’என்றார்.

"கோயில் நிலங்களை பாதுகாக்கவேண்டிய அதிகாரிகளே தங்களது குடும்பச் சொத்தாக்கிக் கொண்டால்...? சிவன் சொத்து குலநாசம்' என்கிறார்கள் பக்தர்கள்.

-மனோசௌந்தர்

nkn141120
இதையும் படியுங்கள்
Subscribe