அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகனை தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு வந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கிறார்கள்.
இந்த நிலையில்தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஆளுங்கட்சி கட்டுப் பாட்டிலுள்ள கோவில் தேவஸ்தானத்திற்கும், நகராட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தலைமைச் செயலகம் வரை இரு தரப்பும் படையெடுத்ததின் பெயரில், அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பினார். அப்படி இருந்தும் மீண்டும் தேவஸ்தானத்திற்கும், நகராட்சிக்கும் இடையே மோதல் முற்றிவருகிறது.
பழனியிலிருந்து கொடைக்கானல் செல் லும் சாலையில் புளியமரத்து செட் அருகே பழனி நகராட்சிக்கு சொந்தமான கோடைகால நீர்த்தேக்கமானது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத் தில் அமைக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தி லிருந்து 12 கிலோமீட்டர் வரை புவியீர்ப்பு விசை அடிப்படையில் தண்ணீர் கொண்டுவரப் பட்டு பழனி மலையின் பின்பகுதியிலுள்ள நீரேற்று நிலையத்திற்கு ஏற்றப்படுகிறது. எவ்வித மின்மோட்டார் இல்லாமல் இயற்கையாகவே நீரேற்றம் செய்யப்படும் சிறப்புள்ள இந்த நீரேற்று நிலையம் பழனி நகராட்சி கட்டுப் பாட்டில் உள்ளது. இங்கிருந்து நகராட்சி உட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு தினமும் 12 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில்தான் அடிவார கிரிவீதி பகுதியான மலையைச் சுற்றி தடுப்புச்சுவர் எழுப்புவதற்காக தேவஸ்தான நிர்வாகம் சார்பில் குழி தோண்டப்பட்டு வருகிறது. அதுபோல் நகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள நீரேற்று நிலைய சுற்றுச்சுவர் பகுதியையும் இடித்துள்ளனர். நக ராட்சியின் அனுமதியின்றி நீரேற்று நிலையப் பகுதியில் கோயில் நிர்வாகத்தினர் அத்துமீறி குழி தோண்டிவரும் விஷயம் ஆளுங்கட்சி நகர் மன்றத் தலைவரான உமாமகேஸ்வரி காதுக்கு எட்டியவுடனே கவுன்சிலருடன் சம்பவ இடத்திற்கு சென்று கோயில் நிர்வாகம் மூலம் செய்துவரும் பணிகளைத் தடுத்திருக்கிறார்.
தேவஸ்தான நிர்வாகம் நகராட்சி நிர்வாகத் தை மதிப்பதே இல்லை. பக்தர்கள் நலன் என்று பேசிப் பேசியே பழனி பொதுமக்களின் நலனுக்கு எதிராக பல்வேறு வேலைகளைச் செய்துவருகிறார்கள். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அடிவாரம் மற்றும் கிரி வீதி பகுதிகளி லுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் ஆக்கிரமிப்பு களை எடுக்கக் கோரி கோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகமும் அதிரடியாக இறங்கி சிறு வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்திவிட்டு, ஆக்கிரமிப் பையும் எடுத்துவிட்டனர். நூறு ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் குடியிருந்த பொதுமக்களுக்கு, இருக்க இடமில்லாமல் இருந்தவர்களுக்கு வேறு இடத்தை எம்.எல்.ஏ. ஐ.பி.செந்தில்குமார் ஏற்பாடு செய்துகொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் அடிவாரப் பகுதியி லேயே ஒரு ஏக்கர் இடம் வாங்கி அந்த பாதிக் கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டவும் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார். அடிவாரத்தைச் சுற்றி பட்டா இடங்களில் கடை வைத்திருப் பவர்கள் வெளியே வரக்கூடாது என்பதற்காக கடையை ஒட்டியே தடுப்புகளைப் போட்டு அவர்களின் வியாபாரம் பாதிக்கும் அளவிற்கு செய்துவிட்டனர். அதுபோல் சிறு வியாபாரி களும் பிழைக்கவழியில்லாமல் இருந்துவரு கிறார்கள். இந்த நிலையில் அடிவாரத்தைச் சுற்றியுள்ள தேவர் சிலை வரையுள்ள நான்கு வார்டு கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை தேவஸ்தானத்திற்குள் கொண்டுவரவேண்டும் என்று நிர்வாகிகள் முயற்சி செய்துவந்தனர். அதை முறியடிக்கும் வகையில் நாங்களும் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்ததுடன் மட்டுமல்லாமல் சென்னை வரை முக்கிய பிரமுகர்களுடன் சென்று அமைச்சர் சேகர்பாபுடன் பேசிவிட்டுத்தான் வந்தோம்.
இனிமேல் நகராட்சி நிர்வா கத்தில் தேவஸ்தான தலையீடு இருக்காது என்று கூறியிருந்தனர். அப்படியிருக்கும்போது திடீரென நகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள மலையின் பின்புறம் இருக்கும் நீரேற்று நிலையத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எடுப்பதாக எங்களிடம் அனுமதி வாங்காம லேயே அந்த பகுதிகளில் சுற்றுச்சுவர் எழுப்பு வதற்காக குழி தோண்டிவருகிறார்கள். இதனால் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த குடிநீர் குழாய் உடைந்தால் அதைச் சரிசெய்ய முடியாது. பழனிவாழ் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்திசெய்வது கடினம்.
அதனால் இந்த பணிகளை எங்கள் அனுமதி இல்லாமல் செய்யக்கூடாது என்று தற்போது கோயில் நிர்வாகத்திடம் சொல்லி நிறுத்தி வைத்திருக்கிறேன். அதையும்மீறி கோயில் நிர்வாகம் இந்தப் பணிகளை தொடர்ந்தால் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மூலமாக துறை அமைச்ச ரான சேகர்பாபுவிடம் புகார் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்''’என்றார் பழனி நகர்மன்றத் தலைவியான உமாமகேஸ்வரி.
இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி இணை ஆணையர் முருகானந்தத்திடம் விளக்கம் கேட்க செல் மூலம் (94லலலலலல81) பலமுறை தொடர்புகொண்டும் லைனில் பிடிக்கமுடிய வில்லை. ஆளுங்கட்சி கட்டுப்பாட்டில் திருக் கோயில் நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இருந்தும்கூட அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாததால் இரு தரப்புக்குமிடையே தொடர்ந்து மோதல் முற்றிவருகிறது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும்தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும்!
-சக்தி