"ஹலோ தலைவரே, மதுரையில் அறிவுக்கோயில் என்று சொல்லும்படியான, கலைஞர் நூற்றாண்டு நூலகம் கோலாகலமாகத் திறந்துவைக்கப்பட்டிருக்கு.''”
"ஆமாம்பா, காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ல், அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாகமாகத் திறந்து வைத்திருக்கிறாரே?''”
’"ஆமாங்க தலைவரே, 218 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூலகத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் அமைந்திருக் கிறது. 2.13 லட்சம் சதுர அடிப் பரப்பளவில், 6 தளங்களுடன் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டிருக்கும் இந்த நூலகம், சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்பட்டிருக்கு. இலக்கிய நூல்கள், அறிவியல் நூல்கள், வரலாற்று நூல்கள், மருத்துவ நூல்கள், தொழில்நுட்ப நூல்கள்னு அனைத்துத் துறைகளையும் சார்ந்த 3.3 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்துக்காகக் கொள்முதல் செய்யப்பட்டிருக்கு. அதோடு, தற்போது எங்கும் கிடைக்காத, ஆரம்பகால திராவிட இயக்க நூல்களை எல்லாம் கூட, அங்கே திரட்டி வைத்திருக்கிறார்கள். இத னால் மதுரையின் பெருமை, மேலும் உயரமாகுது.''”
"இவ்வளவு கோலாகலமாக நடந்த இந்தத் திறப்பு விழாவுக்கு கனிமொழியும், தயாநிதி மாறனும் முறைப்படி அழைக்கப்படலைங்கிற ஆதங்கக் குரல்களும் கேட்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த விழா குறித்து பல்வேறு சிறப்புகளும் பெருமைகளும் சொல்லப்பட்டாலும், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் இந்த விழாவுக்கு அழைக்கப்படாதது பலரையும் யோசிக்க வச்சிருக்கு. குறிப்பாக கலைஞர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு அரசு விழாவாக இருந்தாலும், குடும்ப விழாவாக இருந்தாலும் கனிமொழிக்கு முறைப்படி அழைப்பு செல்வது வாடிக்கையாக இருந்துவந்த நிலையில், இந்த முறை இந்த விழாவுக்கு, அவர் ’வந்தால் வரட்டும்; வராவிட்டால் போகட்டும்’ என்கிற ரீதியில், விழா அழைப்பிதழை அவர் வீட்டு வாசலில் இருந்த, கடிதப் பெட்டியில் செருகி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இதைப் பார்த்த கனிமொழி ஏகத்துக்கும் அப்செட்டாகிவிட்டாராம்.''”
"சமீப காலமாகவே கனிமொழி புறக்கணிப் படுவதாகச் சொல்லப்படுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, சமீப காலமாக முதல்வர் தரப்பு கனிமொழியை எந்த ஒரு விழாவுக்கும் அழைப்பதில்லையாம். குறிப்பாக, அண்மையில் தயாளு அம்மாள் பிறந்தநாள் சந்திப்பு, கோபாலா புர வீட்டில் நடந்தபோதுகூட, கனிமொழிக்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து அழைப்பு இல்லை யாம். கடைசி நேரத்தில் மு.க.அழகிரிதான் போன் போட்டு கனிமொழியை அழைத்தாராம். கட்சி எம்.பி., மகளிர் அணி பொறுப்பாளர், இலக்கிய வாதி என்கிற அடையாளங்களைத் தாண்டி, கலைஞரின் மகள் என்ற அடிப்படையிலாவது கனிமொழியை மதுரை நூலகத் திறப்பு விழாவுக்கு அழைத்திருக்க வேண்டும் என்ற பேச்சு, தி.மு.க. தரப்பிலேயே பலமாக அடிபடுகிறது. திருவாரூரில் நடந்த கலைஞர் கோட்டத் திறப்பு விழாவில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்தும், இலக்கியவாதி யாகக்கூட கனிமொழியைப் பேசச் சொல்ல வில்லையாம். கட்சித் தலைமையின் இப்படிப்பட்ட புறக்கணிப்பால் அப்செட்டான கனிமொழி, அன்று காமராஜர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடக் கூட வெளியே வராமல், வீட்டிலேயே முடங்கி இருந்தாராம்.''”
"சரிப்பா, ஒன்றிய அமைச்சரவையில் அண்ணாமலை இடம் கேட்கிறாராமே?''”
"அதுபற்றிய தகவல்களை நான் சொல்றேங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைவர் பொறுப்பில் இருந்து மாற்ற நினைக்கிறதாம் அக்கட்சியின் தேசியத் தலைமை. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவர் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார் என்ற தகவல் சிறகடித்தது. இது உண்மையா என்று அக்கட்சியின் சீனியர் தலைவர் ஒருவரிடம் நாம் கேட்டபோது, ’"ராஜஸ்தானில் இருக்கும் பூபேந்திர யாதவ் உள் ளிட்ட மூன்று எம்.பி.க்களுமே தங்கள் பதவிகளை விட்டுத்தர முன்வர மாட்டார்கள். எனினும் வேறு ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்கி, தமிழகத்தில் இருந்து அண்ணாமலையை நகர்த்தும் திட்டத்தில் கட்சித் தலைமை இருக்கிறது'’என்றார் அழுத்தமாக. இதையறிந்த அண்ணாமலையோ, ’"என்னை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பினால், ஒன்றிய அமைச்சரவையிலாவது எனக்கு இடம் கொடுங் கள்'’என்று டெல்லியிடம் கெஞ்சுகிறா ராம்.''”
"பிரதமர் மோடி யின் அதிதீவிர விசுவாசி யாகத் தன்னைக் காட் டிக்கொள்ளும் ஓ.பி.எஸ்., இப்போது தடாலடியாக பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறாரே?''”
"பா.ஜ.க.வும் மோடியும் தங்களை முழுமையாகக் கை விட்டதால் ஓ.பி.எஸ். அணியினர் விரக்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் எக்ஸ் எம்.எல்.ஏ. வான ஜே.சி.டி.பிரபாகரன்,’"இத்தனை நாளாக, மதவாத பா.ஜ.க.வை ஆதரித்து, சிறுபான்மையின ரின் ஆதரவை இழந்துவிட்டோம். இனியாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும்'’என்று ஓ.பி.எஸ்.ஸிடம் எடுத்துச் சொல்ல... அவரும், "உண் மைதான்... நம்பியவர்களை நட்டாற்றில் விடு வதையே அவர்கள் வாடிக்கையாக வைத்திருக் கிறார்கள்'’என்று மனம் நொந்து பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்துதான் எடப்பாடியைப் போலவே, ஒன்றிய அரசின் பொது சிவில் சட் டத்தை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பும் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறது. அடுத்த கட்டமாக தினகரன், சசிகலா, சீமான் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து தனி அணி அமைக்கும் முயற்சிகளும் அங்கே தொடங்கின. இதையறிந்த பா.ஜ.க. அண்ணாமலை, சசிகலாவைத் தொடர்புகொண்டு,’"அவர்களின் வெத்துவேட்டு முயற்சிகளுக்கு நீங்களும் பலிகடா ஆகிவிடாதீர்கள்... கொஞ்சம் பொறுங்கள். தமிழக அரசியலில் உங்களுக்கான தளம் ஒன்றை நாங்கள் உருவாக்கித் தருகிறோம்'’என்று, ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி, சசிகலாவை அவர்களிடமிருந்து பிரித்துவிட்டாராம்.''”
"கட்சி சொத்தை அபகரித்த புகாரின் பேரில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை, அந்தக் கட்சி நீக்கி இருக்கிறதே?''”
"தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் வலதுகரமாகத் திகழ்ந்த, திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலை வரான செங்கம் குமாரைத் தான், அகில இந்திய காங் கிரஸ் தலைமை அதிரடி யாக கட்சியிலிருந்து நீக்கி யிருக்கிறது. காரணம், திரு வண்ணாமலை மாவட்ட காங்கிரசுக்கு சொந்தமான சொத்துக்களை குமார் அபகரித்துவிட்டாராம். இதை கே.எஸ்.அழகிரியின் கவனத்துக்கு கட்சியினர் கொண்டுசென்றும், அவர் கண்டுகொள்ளவில்லை யாம். மேலும் கட்சிப் பதவிகளை விலைபேசி விற்ற குற்றச்சாட்டும் இவர் மீது இருக்கிற தாம். இவர் மீதான புகார்களை விசாரிக்க, காங்கிரசின் சொத்து பாதுகாப்புக் குழு செயலாளர் நிதின் கும்ப்ளேகரை தமிழகத்துக்கு ராகுல்காந்தியே அனுப்பி விசாரித்த பின்னர்தான், அவரைக் கட்டம் கட்டியிருக்கிறார்களாம். அடுத்து அழகிரி பேரைச் சொல்லி வசூல் வேட்டை நடத்திவரும் ரஞ்சன்குமார் என்பவரையும் காங்கிரஸ் மேலிடம் குறிவைத்திருக்கிறதாம்.''”
"காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் பேரிலும் கலெக்ஷன் நடத்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, காங்கிரசின் முன்னாள் மாநிலத் தலைவரும் எம்.பி.யுமான திரு நாவுக்கரசரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர் கள் 13ஆம் தேதி கொண்டாடினார்கள். எப்போதும் பிறந்தநாளை தமிழகத்தில் கொண்டாடும் திருநாவுக்கரசர், இந்தமுறை வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார். அதனால் அவரது ஆதரவாளரும் சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் தலைவரு மான வீரபாண்டியன் தலைமையில், அவர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொள்ள காங்கிரசின் முன்னணி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள் பலரையும் அழைத்திருந்தனர். ஆனால் செல்வப் பெருந்தகையைத் தவிர, வேறு முக்கிய நபர்கள் எவரும் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை யாம். இந்த விழாவுக்காக பல லட்சங்களை வசூலித் துள்ளனர். அதில் ஒரு பகுதியை மட்டும் செல வழித்துவிட்டு, மீதியை சுருட்டிவிட்டார்களாம். இந்தப் புகாரும் இப் போது டெல்லிக்குப் போயிருக்கிறது.''”
"டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பொதுத் தேர் வாணையத்தின் புதிய தலைவருக்கான அறி விப்பு, விரைவில் வரும் என்கிறார்களே?''”
"அண்மையில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை, தமிழ்நாடு பொதுத் தேர்வாணை யத் தலைவராக நியமிப்பதற்கான உத்தரவு தயாராகிவிட்டது. இதை அவர் டி.ஜி.பி..யாக இருக் கும்போதே தயார் செய்துவிட் டார்கள். இதற்கான கோப்பு, கவர் னரின் கையெழுத்துக்காக ராஜ்பவனுக்கு அனுப் பப்பட, அதை வழக்கம்போல் கிடப்பில் வைத் திருக்கிறார் கவர்னர். எனவே, இந்த ஃபைலில் விரைவாகக் கையெழுத்திடும்படி, சைலேந்திரபாபு வின் நண்பரான சர்ச்சைக்குரிய முன்னாள் காவல் துறை அதிகாரி தேவாரம், கவர்னரிடம் பேசியிருக் கிறாராம். அதற்குள்ளாகவே, தேர்வாணையத்துக்கு சைலேந்திரபாபுவைக் கொண்டுவரும் செலவுக்காக என்ற பெயரில், ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமிகள் சில வசூலில் இறங்கிவிட்டனவாம்.''”
"புதிய டி.ஜி.பி. சங்கர்ஜிவால், உளவுப் பிரிவினரின் ஜாதகத்தை எல்லாம் கிளறுகிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, டேவிட்சன் தேவாசிர் வாதம், உளவுப் பிரிவின் ஏ.டி.ஜி.பி.யாக இருந்த போது, தமிழகத்தின் பல இடங்களிலும் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களை உளவுப் பிரிவு பணிகளில் நியமித்திருக்கிறாராம். உளவுப் பிரிவில் நடந்த இந்த விவகாரத்தை, உளவுப் பிரிவு அதிகாரிகளே கண்காணித்து, மேலே ரிப்போர்ட் கொடுக்க, டேவிட்சனால் நியமிக்கப்பட்டவர்களின் பட்டியலை தற்போதைய டி.ஜி.பி.யான சங்கர்ஜி வால் எடுக்கச் சொல்லியிருக்கிறாராம். போலி பாஸ்போர்ட் தொடர் பான புகாரில் சிக்கியிருக் கும் டேவிட்சன், தற் போது என்.ஐ.ஏ.வின் கண்காணிப்பில் இருப்ப தால்தான், இந்த நட வடிக்கையாம். இந்த சூழலில், சென்னை சிந்தா திரிப்பேட்டை உளவுப் பிரிவில் இருந்த முருகன் என்பவர் 16 இலங்கைத் தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்த விவாகாரத்தில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.''”
"நானும் காவல்துறை தொடர்பான ஒரு தக வலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக காவல்துறையில் சில அதிரடி மாற்றங்களும் சில டிரான்ஸ்பர்களும் நடக்கவிருக்கின்றன. குறிப்பாக, உளவுப்பிரிவுத் தலைவராக இருக்கும் செந்தில்வேலனை மாற்றி விட்டு, அந்த இடத்திற்கு வடக்கு மண்டல ஐ.ஜி. யாக இருக்கும் கண்ணனை கொண்டுவரவிருக் கிறார்களாம். அதேபோல், கோவை ஐ.ஜி. சுதா கரை வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும், மதுரை மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் அஸ்ராகார்க்கை சென்னையில் ஒரு பவர்ஃபுல் பதவியில் உட்கார வைக்கவும் கோப்புகள் தயாராகிறதாம்.''
__________
இறுதிச் சுற்று! தி.மு.க.வை தூங்கவிடாத ரெய்டுகள்!
தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி மற்றும் அவர்கள் தொடர்புடைய நபர்களின் சென்னை, விழுப்புரம் வீடுகள், அலுவலகங்களில் துணை ராணுவப்படை பாதுகாப்புடன் 17#ந் தேதி திங்கள் கிழமை அதிரடி சோதனையை நடத்தியது அமலாக்கத் துறை.
2006#2011 தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அந்த காலகட்டத்தில் செம்மண் குவாரி யில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்பட்டதாகவும், அதில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் பொன்முடிக்கு எதிராக, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அமலாக்கத் துறை திடீரென நுழைந்திருப்பதுதான் தி.மு.க.வை அதிர வைத்திருக்கிறது.
இதுகுறித்து விசாரித்தபோது, ""குவாரி முறைகேடுகளில் குவிந்த பணத்தை வைத்து வெளிநாடுகளில் பொன்முடியின் மகன் முதலீடு செய்திருப்பதாகவும், இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்துள்ளதாகத் தெரிகிறது. அந்நியச் செலவாணி மோசடி சட்டமும் பொன்முடிக்கு எதிராக பிரயோகப்படுத்தப் பட்டிருக்கலாம்'' என்கிறார்கள் கனிமவளத் துறையினர்.
இந்த ரெய்டு குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ""ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் இந்த ரெய்டு நடக்கிறது. அமலாக்கத்துறை யின் ரெய்டுகளை வைத்து மிரட்டிப் பார்க்கிறார் கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். சோதனை குறித்து கிஞ்சித்தும் கவலை யில்லை. எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை திசை திருப்ப பா.ஜ.க. செய்யும் தந்திரம்தான் இந்த சோதனை. இதனை சட்டரீதியாக சந்திப்பார் அமைச்சர் பொன்முடி'' என்றார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் வலையில் சிக்கும் இரண் டாவது அமைச்சர் பொன்முடி. அமலாக்கத்துறையின் ரெய்டுகள் தி.மு.க.வை தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது.
செந்தில்பாலாஜியைப் போல பொன்முடியும் கைது செய்யப்படுவாரா? என்ற பதட்டம் உ.பி.க்களிடம் தெரிகிறது.
-இரா.இளையசெல்வன்
படங்கள் : குமரேஷ்