திருவண்ணாமலை மாவட் டம், தண்டராம்பட்டு அடுத்துள்ளது தென்முடியனூர் கிராமம். இங்கே முதலியார், ரெட்டியார், நாயுடு, வன்னியர், பட்டியலின மக்கள் என பத்துக் கும் மேற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். இந்த ஊரில் மிகப்பழமையானது முத்துமாரி யம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டாண்டுகால மாக பட்டியலின மக்களைத் தவிர பிற சாதி மக்கள் கோவி லுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துவந்துள்ளனர். பட்டிய லின மக்களை கோவிலுக்கு வெளியில் நின்றே சாமி கும்பிடச் செய்துள்ளனர். இக்கோவிலில் ஒவ்வொரு பொங்கல் திரு விழாவின்போதும் 13 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த நாட்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சாதியினர் திருவிழா வை நடத்துவார்களாம். அதி லும் பட்டியலின மக்களை ஒதுக்கியேவைத்துள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது, எங்களுக்கும் ஒருநாள் திருவிழா நடத்த ஒதுக்கவேண்டு மெனக் கேட்டதாகவும், ஊர் மக்கள் மறுத்ததாகவும் கூறப் படுகிறது.
பட்டியலின சமூக மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சித்தலை வரிடம் சி
திருவண்ணாமலை மாவட் டம், தண்டராம்பட்டு அடுத்துள்ளது தென்முடியனூர் கிராமம். இங்கே முதலியார், ரெட்டியார், நாயுடு, வன்னியர், பட்டியலின மக்கள் என பத்துக் கும் மேற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். இந்த ஊரில் மிகப்பழமையானது முத்துமாரி யம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டாண்டுகால மாக பட்டியலின மக்களைத் தவிர பிற சாதி மக்கள் கோவி லுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துவந்துள்ளனர். பட்டிய லின மக்களை கோவிலுக்கு வெளியில் நின்றே சாமி கும்பிடச் செய்துள்ளனர். இக்கோவிலில் ஒவ்வொரு பொங்கல் திரு விழாவின்போதும் 13 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த நாட்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சாதியினர் திருவிழா வை நடத்துவார்களாம். அதி லும் பட்டியலின மக்களை ஒதுக்கியேவைத்துள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது, எங்களுக்கும் ஒருநாள் திருவிழா நடத்த ஒதுக்கவேண்டு மெனக் கேட்டதாகவும், ஊர் மக்கள் மறுத்ததாகவும் கூறப் படுகிறது.
பட்டியலின சமூக மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சித்தலை வரிடம் சி.பி.எம்., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு தந்தனர். வருவாய்த்துறை, காவல் துறை சார்பில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின்போது, "எப் போதும் இல்லாமல் இப்போது எதற்காக கோவிலுக்குள் வரவேண்டுமென பட்டியலின மக்கள் விரும்புகிறார்கள்?'' என மற்ற ஜாதியினர் தரப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர். "இதுவரை விரும்பவில்லை, இப்போது வருகிறோம் என்கிறார்கள், சட்டப்படி உரிமையுண்டு, யாரும் தடுக்கமுடியாது'' என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனை ஒப்புக்கொள்ளமாட்டோமெனக் கூறியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து, டிசம்பர் 30ஆம் தேதி, 14வது நாள் திருவிழாவை பட்டியலின மக்கள் நடத்திக்கொள்ளலாம் என அனுமதி வழங்கினர். திருவிழாவுக்கு எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
"எங்க பகுதியில் இருக்கற கோவிலுக்கு அவுங்க எப்படி வரலாம்? நாங்க விடமாட்டோம்'' என ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள், ஆண்கள் கூடி எதிர்ப்பைக்காட்டினர். "பிரச்சனை செய்து தடுத்திங் கன்னா ஜெயிலுக்கு போகவேண்டி வரும்'' என போலீஸ் எச்சரித்தது. எதிர்ப்பாளர்களைக் கோவில் அருகே வரவிடாமல் தடுத்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் தலைமையில் பட்டியலின மக்களை ஊர்வலமாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யவைத்தார். பட்டியலின மக்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சாமியை வணங்கினர். "கோவிலுக்குள் எங்களை வரக்கூடாது எனச்சொல்லி வெளியில் இருந்தே சாமி கும்பிடவைத்தார்கள். இப்போது கோவிலுக்குள் எங்களை அழைத்துச் சென்றது சந்தோஷமாக இருக்கு. அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி!'' என பட்டியலின சமூகப் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஊர் மக்கள் சிலரிடம் பேசிய போது, "40 வருடத்துக்கு முன்பு இந்த ஊரில் பெரும் சாதிக்கலவரம் நடந்தது. அதன்பின் சாதிப் பிரச்சனைகள் ஓய்ந்து ஓரளவு சகோதரத்துவத்துடன் இருந்து வந்தோம். ஊரில் பேசித் தீர்க்கவேண்டிய பிரச்சனையை பெருசாக்கிட்டாங்க. மீண்டும் முறுக்கிக்கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை. இனிமே சின்ன சின்னப் பிரச்சனைகளையும் பெருசாக்கு வாங்க. சில அரசியல்வாதிகளால் இந்த கிராமத்தின் நிம்மதி போயிடுச்சி'' என்றார்கள்.
"சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பதவியை பிடிக்க பட்டிய லினத்தைச் சேர்ந்த வருக்கும், வேறு சாதியைச் சேர்ந்த வருக்குமிடையே போட்டி ஏற்பட் டது. இருவரும் தங்கள் பலத்தைக் காட்டி மோதிக் கொண்டதால் அந்த பதவி இதுவரை நிரப்பப்படவில்லை. அதன்தொடர்ச்சிதான் கோவில் உரிமைப் பிரச்சனை. "இந்த பிரச்சினை பெரிதாகாமல் தடுங்கள்' என அமைச்சர் எ.வ.வேலுவிடம் பிற சாதிப் பிரமுகர்கள் முறையிட்டதற்கு, "அவுங்களும் மனிதர்கள்தான். அவுங்களுக்கும் கோவிலில் உரிமையுள்ளது. சட்டப்படி எடுக்கும் நடவடிக்கைக்குக் கட்டுப்படுங்கள், சட்டத்தை மீறினீங்கன்னு காவல்துறை நடவடிக்கை எடுத்தால், நான் காப்பாற்றமாட்டேன்'னு சொன்னாராம். அதுக்காக அவர் மேலயும் சிலர் கோபப்பட்டிருக்காங்க. பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைச்சிக்கிட்டு போனதால், மறுநாளிலிருந்து விவசாய வேலைக்கு பட்டியலின மக்களை பிற சாதிக்காரர்கள் அழைப்பதில்லை. பால் சொசைட்டியில் பால் வாங்கறதில்லை. பட்டியலின மக்கள் நுழைந்த கோவில் எங்களுக்கு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இதன் முடிவு என்னாகும்னு தெரியல'' என்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த சிலர்.
தண்டராம்பட்டு தாலுகா சி.பி.எம். செயலாளர் அண்ணாமலையிடம் பேசியபோது, "1960களில் பிற சாதி மக்க ளுக்கும், பட்டியலின மக்களுக்கும் இடையே திருவிழாவில் கோவிலில் பொங்கல் வைத்தபோது ஏதோ பிரச்சனையாகி, அப்போது, பட்டியலின மக்கள் இனி கோவிலில் வந்து பொங்கல் வைக்கக்கூடாது எனச் சொல்லிவிட்டார்களாம். அந்தத் தடுப்பைத்தான் உடைத்து கோவிலுக்குள் செல்ல வைத்தோம். பட்டியலின மக்கள் இன்று மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய அரசு நடவடிக்கை எடுப்பதோடு, அம்மக்களுக்கு பாது காப்பும் வழங்கவேண்டும்'' என்றார். ஒருபுறம் உலகம் நவீனத் துவமாகிக் கொண்டிருக்கும்போது, இன்னமும் நூறாண்டு களுக்கு முந்தைய ஜாதிய மனநிலை மாறாத கிராமங் களிருப்பது சோகம்!