"எழுத்தறிவித்தவன் இறைவன்' என ஆசிரி யரை தெய்வத்துக்குச் சமமாக வைக்கிறோம். ஆனால் அவர்களோ, பல சமயங்களில் மாண வர்களிடமே பாலியல் அத்துமீறல்களில் சம் பந்தப்பட்டு தரம்தாழ்ந்து போவதைக் காண்கிறோம். தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி வகுப் பறைக்குள்ளேயே பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடந்துவருகிறது.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே குண்ணாகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மருதை (59). திருமணம் ஆகாதவர். இவர் தோகைமலை அருகேயுள்ள பொம்மநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் 6 முதல் 8-ஆம் வகுப்பு படிக்கும் 11 மாணவ, மாணவிகளை ஆபாசமாகத் திட்டி, அடித்துத் துன்புறுத்தியதோடு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவிகள் கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 31-ஆம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியை மேரி லாரா புகாரளித்தார்.

Advertisment

yy

இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் 6 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்களின் அடிப்படையில் ஆபாசமாக திட்டுதல், பாலியல் சீண்டல் செய்தல் போன்ற குற்றங்களுக்காக போக்சோ சட்டத்தின்கீழ் மருதை மீது வழக்குப் பதிவு செய்து செப்டம்பர் 1-ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர்.

"மருதை மீது பொய் வழக்கு போடப் பட்டிருப்பதாகவும், தலைமை ஆசிரியருக்கும், அறிவியல் ஆசிரியருக்கும் இடையே சில கருத்து முரண்பாடுகள் இருந்ததாகவும், எனவே அவரைப் பழிவாங்க தலைமை ஆசிரியர் இதைச் செய்தார்' என்றொரு குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவிகள், பெற்றோர்களில் ஒரு தரப்பு, "அவர் மீது எந்த குற்றமும் இல்லை' என்று கூறி, அவரை விடுவிக்கக்கோரி வகுப்புகளைப் புறக்கணித்து பள்ளிமுன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளிடம் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, குளித்தலை டி.எஸ்.பி. ஸ்ரீதர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவ, -மாணவிகள் போராட்டத்தைக் கைவிட மறுக்க... மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வகுப்புகளுக்கு அனுப்பிவைத்தனர்.

பெற்றோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர், "ஆசிரியர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு உறுதிப் படுத்தப்பட்டுதான் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடமிருந்து புகார்கள் பெறப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுள்ளது' என்பதை விளக்கினர்.

"சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும்' என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸானது.

Advertisment