யிலாடுதுறை நகரத்தில் செயல்பட்டு வருகிறது சில்வர்ஜூப்ளி பள்ளி. பூம்புகார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜின் தம்பி, பைனான் சியர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர், பொறியாளர் என பத்து பெரும் பணக்காரர்களால் நடத்தப்பட்டுவரும் இந்தப் பள்ளியின் சேர்மன் மோகன்ராஜ்.

இங்கே இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன். மிகவும் திறமையான ஆசிரியர் என்பதாலும், பள்ளியின் சேர்மனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலும் மாணவர் விடுதியைக் கண்காணிக்கும் வார்டன் பொறுப்பையும் அவரிடமே கொடுத்திருந்தனர். சீனிவாசனுக்கு திருமணம் ஆகாததால் மாணவர்களுடனேயே தங்கியிருந்தார். திறமையான ஆசிரியர் என பெயரெடுத்த சீனிவாசனின் மற்றொரு முகமோ வக்கிரமானதாக இருந்திருக்கிறது. தனது கண்காணிப்பில் வெளியூரிலிருந்து வந்து விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்களை மிரட்டியும், ஆசை வார்த்தைகளைக்கூறியும் பல மாணவர்களிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

st

Advertisment

ஒன்பதாம்வகுப்பு படித்துவரும் மாணவன் ஒருவனிடம் தகாதமுறையில் நடந்துகொள்ள, பயந்துபோன அந்தச் சிறுவன், அதே பள்ளியில் வீட்டிலிருந்து வந்துபடிக்கும் தனது தம்பியிடம்கூறி அழுதிருக்கிறான். அவனது தம்பி வீட்டுக்குச் சென்று தனது அம்மாவிடம் அண்ணனுக்கு நடந்ததைக் கூறி அழுதிருக்கிறான்.

ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் சில்வர் ஜுப்ளி பள்ளிக்கு வந்து முறையிட்டிருக்கின்றனர். பள்ளி நிர்வாகமோ முதலில் இதை மூடிமறைக்க வும், பெற்றோர்களைச் சரி செய்யவும், அதிகாரங் களைப் பயன்படுத்தி பல்வேறு கட்ட முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். பெற்றோர் பிடிவாதமாக இருந்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்த தால், பள்ளி நிர்வாகமும் அவசர அவசரமாக அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்துவிட்டு வேறு வழியின்றி ஆசிரியர்மீது புகாரளித்துள்ளனர்.

விவகாரம் பெரிதாவதைக் கண்ட ஆசிரியர், எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தவரை மயிலாடுதுறை அனைத்தும் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

stt

பள்ளி விடுதி, அந்த பள்ளியை விட்டு இரண்டு கிலோமீட்டர் தள்ளி பொதுமக்கள் குடியிருக்கும் குடியிருப்புப் பகுதியில் டார்கெட் டியூசன் சென்டர் என்கிற பெயரில் இயங்கிவரு கிறது. விடுதிக்கான அனுமதியே இல்லை'' என்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஆசிரியரை விசாரணை செய்த போலீசா ரிடம் பேசினோம், "இந்த சிறுவன் மட்டுமல்ல, பல மாணவர்களை மிரட்டி அத்துமீறியிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண் டிருக்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள், மிடில்கிளாஸ் வீட்டு பிள்ளைகள். பெற்றோர்களி டம் "உங்க பிள்ளை ஒழுங்கா படிக்கல, ஹாஸ்டல்ல தங்கச் சொல்லுங்க ஒரு மாதத்தில் டாப்புக்கு வந்துடுவான்'னு ஆசைவார்த்தை கூறி அதிக பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, இப்படி நாசம் செய்கிறார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில்கொண்டு பெற்றோர்களும் விடுதியில் சேர்த்துவிடுறாங்க. இதை இந்த ஆசிரியர் சாதகமாக்கிக்கிட்டார்''’என்கிறார்கள்.

stமகளிர் காவல்நிலைய அதிகாரி ஒருவர் இந்த விவகாரத்தை சாதகமாக்கிக்கொண்டு பள்ளி நிர் வாகத்திடம் முதற்கட்டமாக ஐம்பதாயிரம் பணம் வாங்கியிருக்கிறார். விசாரணைக்கு பிறகு மாண வர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அமௌண்டை கூட்டிக் கேட்கிறா ராம். அந்தப் பள்ளி யின் ஆசிரியர்கள் சிலர் நம்மிடம். “"இந்தப் பள்ளி கந்துவட்டி கல்விக் கூடம் என்றுதான் சொல்லவேண்டும். நிர்வாகிகள் அனை வருமே மிகப்பெரிய செல்வந்தர்கள். எதையும் சாதிக்கக்கூடிய வல்லமை கொண்டவர் கள். சேர்மன் மோகன்ராஜ், ஆசிரியர்கள் வேலைக்கு வரும்போதே அவர்களின் கஷ்டத்தைக் கணித்து ஒரு லட்சமோ, இரண்டு லட்சமோ கொடுத்துவிடுவார். சம்பள தேதியில் வட்டியோட அசலையும் கட்டணும். இப்படி வட்டி கொடுக்க முடியாம முடங்கி அடிமையானவங்க ஏராளம்.

மயிலாடுதுறையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கிற பள்ளியும் இதுதான். பசங்களை அடிச் சுப் பயமுறுத்தியே படிக்கவைப்பாங்க. ஒவ்வொரு வகுப்பிலும் ஏழ்மையான வீட்டுப் பிள்ளைகளை யோ, எதிர்த்து கேள்வி கேட்கமுடியாத விளிம்பு நிலையில் இருக்கும் பிள்ளைகளையோ இரண்டு அல்லது மூன்று பேரை வச்சிருப்பாங்க. அவங் களை அடிக்கிற அடியில் மற்ற பசங்க அரண்டு நடுங்கி படிப்பாங்க. சேர்மன் மோகன்ராஜ், தான் சார்ந்த சமூக இளைஞர்களின் பட்டாளத்தையே உருவாக்கி வச்சிருக்கார். யாராவது பள்ளியை எதுத்து கேள்விகேட்டா அந்த கும்பல் வந்திடும்''’என்றார்கள்.

மாவட்ட ஆட்சியர் லலிதா, "விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன்''’என்கிறார். மாவட்டக் கல்வி அலுவலரோ, "தேர்வு நடக்கிறதால மாணவர்களி டம் விசாரணை செய்வதில் தாமதமாகுது. விடுதி அனுமதி குறித்து தனியா விசாரணை போகுது'' என்கிறார். பள்ளி சேர்மன் மோகன்ராஜிடம் விளக் கம் கேட்க, அவரது செல்போனில் தொடர்பு கொண்டோம், பலமுறை அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை.

பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தொடர்புகொண்டோம். "நாங்க தரமான கல்வியைக் கொடுக்கிறோம், அதனால் பெற்றோர்களின் அனுமதியோட கட்டுப்பாடா இருக்கிறோம். இந்த சம்பவம் ரொம்பவே வருத்தமளிக்கிறது''’என்று துண்டித்துவிட்டார்.