தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., நாம் தமிழர்கட்சி, விவசாயிகள் சங்கம், முத்தரையர் சங்கம் எனப் பலரும் தேர்தல் களத்தில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. வேட்பாளர் முரசொலி, களத்திற்கு புதிதென்றாலும் பல தேர்தல்களில் பணியாற்றியவர். பழனிமாணிக்கம் எம்.பி.யின் உறவினரும்கூட. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் பழனிமாணிக்கம் என்ன செய்வாரோ என்ற பயம் இருந்தாலும் கூட மு.க.ஸ்டாலின் வருகைக்குப் பிறகு பழனிமாணிக்கத்தை விடாமல் பிரச்சாரத்திற்கு அழைத்துச்செல்கின்றனர். தொடக்கத் தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதியில் மா.செ. அண்ணாத்துரைக்கு எதிராக அலைவீசினாலும், அடுத்தடுத்த பிரச்சாரப் பயணங்களில் அது காணாமல்போனது. அதனால் வழக்கமான உற்சாகத்துடன் முதல் சுற்று பிரச்சாரப் பயணத்தை முடித்திருக்கிறார் முரசொலி. பா.ஜ.க. வேட்பாளர் கருப்பு முருகானந்தமும் தங்கள் கூட்டணிக் கட்சியினரின் துணையோடு ஒருமுறை தொகுதியை சுற்றிவந்திருக்கிறார். சுற்றுப்பயணத்திற்கு பணம் வேணும் என்று கேட்கும் தொண்டர்களிடம் “"அண்ணன்கிட்ட பணம் இல்லை, மேலேயிருந்து இன்னும் வரல. வந்ததும் தந்துடுவோம், வேலையைப் பாருங்க''’என்று வழக்கம்போலவே பணத்தை இறுக்கிப் பிடித்திருக்கிறார்.
இந்தத் தொகுதியின் பொறுப்பு, மாஜி வைத்திலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. "கருப்பு ஜெயிக்கிறது உங்க கைலதான் இருக்கு. சரியா வேலைசெய்யலன்னா ரெய்டுக்கும் வாய்ப்பிருக்கு' என்று மிரட்டியே வேலைவாங்குகிறது பா.ஜ.க. தலைமை. மற் றொரு பக்கம் "தி.மு.க. வேட்பாளர் தரப்பு எவ்வளவு பணம் கொடுக்கிறார்களோ அதைவிட 2 மடங்கு அதிகமா பணம் கொடுக் கணும், அதற்கான ஆட்களை தயாரா வைச்சிருங்க. ஒரே நாளில் தொகுதி முழுவதும் பட்டுவாடா செய்யணும்' என்ற உத்தரவும் வந்துள்ளதாம். தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசன் வேட்புமனு தாக்கலுக்கே வேட்பு மனுவை மறந்துட்டு வந்தவர், இப்ப ஆங்காங்கே கறி வெட்டறது, டீ போடுறது, பூ கட்டுறது என்று போட்டோசூட் நடத்திக்கொண்டிருக்கிறார். இதனால அ.தி.மு.க.வினர் கடுப்பாகிக்கொண்டிருக்கின்றனர். இவரை நம்பி எப்படி நாங்க தொகுதிக்குள் போறது என்று வெளிப்படை யாகவே பேசத் தொடங்கிவிட்டனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன், நமக்கான வாக்கு களை வேறுயாராலும் தட்டிப்பறிக்க முடியாது என்று தம்பி களுடன் களமாடிவருகிறார். சிறுபான்மையினர் வாக்குகளையும், இளைஞர்களின் வாக்குகளையும் கவரும் பேச்சுகளை அதிகப் படுத்தியிருக்கிறார். விவசாயிகள் சங்கம் சார்பில் பி.ஆர்.பாண்டி யன் ஆதரவுடன் செந்தில்குமார், "விவசாய கிராமங்களில் ஒரு விவ சாயி டெல்லி போனால்தான் காவிரி உள்ளிட்ட நமக்கான உரி மைகளை கேட்க முடியும்'' என்று விவசாயிகளிடம் பேசிவருகிறார். முதல்கட்ட பிரச்சாரம் முடிந்திருக் கும் நிலையில் முரசொலியின் சத்தம் ஓங்கிக்கேட்கிறது.