பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கும் ஜி.20 மாநாட்டில், மண்ணால் செய்யப்படும் ஹாட்பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது பெருமைப்படத்தக்க செய்தியாகும்.
தென்மாவட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நிகழும் அகழ்வாய்வின்போது கிடைத்த 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதித் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் உயிரோட்டமான தொடர்ச்சியாக இன்றளவும் இந்த மண்பாண்டக் கலை இருந்துவருகிறது.
நெல்லை மேலப்பாளையம் குறிச்சிப் பகுதியின் மண்பாண்டத் தயாரிப்புக் கலைஞர்கள், ஜி-20 மாநாட்டுக்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்களின் தொழிற்கூடத்தை சுற்றிப் பார்த்த நாம், அங்கு பணி யாற்றும் கலைஞர்களையும், அந்த தொழிற்கூடத்தை நடத்திவரும் முருகனையும் சந்தித்துப் பேசியபோது, நிறைய தகவல்களைச் சொன்னார்கள்.
முருகன் குடும்பத்தினரின் குலத்தொழிலே செங்கல் மற்றும் மண்பானைத் தயாரிப்புகள் தான
பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கும் ஜி.20 மாநாட்டில், மண்ணால் செய்யப்படும் ஹாட்பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பது பெருமைப்படத்தக்க செய்தியாகும்.
தென்மாவட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகையில் நிகழும் அகழ்வாய்வின்போது கிடைத்த 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஆதித் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்களின் உயிரோட்டமான தொடர்ச்சியாக இன்றளவும் இந்த மண்பாண்டக் கலை இருந்துவருகிறது.
நெல்லை மேலப்பாளையம் குறிச்சிப் பகுதியின் மண்பாண்டத் தயாரிப்புக் கலைஞர்கள், ஜி-20 மாநாட்டுக்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்களின் தொழிற்கூடத்தை சுற்றிப் பார்த்த நாம், அங்கு பணி யாற்றும் கலைஞர்களையும், அந்த தொழிற்கூடத்தை நடத்திவரும் முருகனையும் சந்தித்துப் பேசியபோது, நிறைய தகவல்களைச் சொன்னார்கள்.
முருகன் குடும்பத்தினரின் குலத்தொழிலே செங்கல் மற்றும் மண்பானைத் தயாரிப்புகள் தானாம். இன்றைய சூழலில் செங்கற் சூளையால் மாசுப் பிரச்சினை ஏற்பட, தொழிலை மாற்றியவர்கள், ஆற்றிலும் குளத்திலும் கிடைக்கும் வண்டல் மண், சிகப்பு மணலைக் கொண்டு, சின் னஞ்சிறிய சட்டிகளைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு இப்போது உலக அளவில் ஆஃபர் அதிகரித்து வருகிறதாம்..
2000-ல் ஜெர் மனைச் சேர்ந்த மூன்று பேர், பூஞ்ஜாடி, பூத்தொட்டி, போன்றவை களை வாங்க நினைத்த போது, மண்பாண்டக் கலைஞர் முருகனைச் சந்தித்திருக்கிறார்கள். முருகனும் அவர்கள் கேட்டதைத் தயார் செய்து கொடுக்க, அதன்பின் ரூபாய் ஒன்றரை லட்சத்திற்கான ஆர்டர் கொடுத்து திகைக்க வைத்திருக்கிறார்கள். இதன் பின்னரும் விதவிதமான மண்பாண்டப் பொருட்களுக்கு ஆர்டர்கள் தொடர்ந்து கிடைத்திருக்கிறது.
அரபு நாடுகள் வரை இவர்களின் சட்டி, கிண்ணம் மற்றும் பிரியாணி தம் போடுவதற்கான உருளைச்சட்டிகளை சப்ளை செய்வதற்காக ஆஃபர் கிடைத்திருக்கிறது. யூஸ் அண்டு த்ரோ பொருட் களையும் இவர்கள் தயாரித்துத் தந்ததால் சுற்றுச் சூழலுக்கு கேடில்லை என்று அதிகமாய் வரவேற் றிருக்கிறார்கள். குவாலிட்டியாகத் தயாரிக்கப்படும் உருளைச்சட்டி நாற்பது ரூபாய் விலையில் இருப்ப தால், அவை மலேசியா, துபாய், கத்தார், ஜோர் டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும் பிரபல மாகி இருக்கிறது. பிலிப் பைன்ஸ், நேபாளம், துருக்கி, சீனா போன்ற நாடுகளிலும் வியாபாரப் போட்டிகளை எல்லாம் முறியடித்து, இவர்களின் தயாரிப்புகள் விற்பனை யில் முன்னணியில் நின்றிருக்கிறது.
இந்த நிலையில் தான் கோவை ட்ரீம் இண்டியா பவுண் டேஷன் முருகனைத் தொடர்பு கொண்டு, அண்மையில் கோவையில் நடந்த சுதந்திரதினக் கண்காட்சிக்காக, உணவு வகைகள் எளிதில் கெடாத 75 ஆயிரம் மண் ஹாட் பாக்ஸ்களைத் தயாரிப்பதற்கான ஆர்டரைக் கொடுத்திருக்கிறார்கள். இவை மாடர்ன் ஹாட்பாக்கிற்குச் சமமானதாக இருக்குமாம். கோவை நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாக்சின் மூடியில் ழஊதஞ ஐமசஏஊத ஈஐஆககஆசஏஊ என்கிற வாசகத்தையும் பொறித்துக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த 75 ஆயிரம் மண் ஹாட்பாக்ஸ் சப்ளை கின்னஸிலும் பதிவாகி இருக்கிறது. இந்த சுதந்திர தினவிழாவில் கலந்துகொள்ள கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், கைவினைத் தயாரிப்பான இந்த மண் ஹாட் பாக்ஸ்களைப் பார்வையிட்டு வியந்ததோடு, முருகனைப் பாராட்டியிருக்கிறார். அவரே, கின்னஸ் அளித்த சான்றினை வழங்கி கௌரவித்திருக்கிறார்.
இதனிடையே, விரைவில் நடக்க இருக்கும் ஜி-20 மாநாட்டுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் திருச்சி சிவா எம்.பி. தலைமையிலான 30 எம்.பி.க்கள் அடங்கிய குழு, இந்த மண்பாண்ட ஹாட்பாக்ஸ்களைப் பார்வையிட்டதோடு, இரண்டு லட்சம் மண் ஹாட்பாக்ஸ் தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறதாம். அதற்கான தயாரிப்புப் பணிகளில் தீவிரமாகியிருக்கின்றனர் மண்பாண்ட கைவினைக் கலைஞரான முருகன் குழுவினர்.
இது குறித்து முருகனிடம் கேட்டபோது, "நெல்லை பகுதியில் தாமிரபரணியாற்றின் வண்டல் மண்ணிற்கு கீழே அடர் சிகப்பு மண் கிடைக்கிறது. அந்த மண்ணை தாமிரபரணிதான் கொண்டு வந்து சேர்க்கிறது. அந்த மண்ணில் தயார் செய்கிற மண்பாண்டங்கள் ரத்தச் சிகப்பு நிறத்திலிருப்பதால், அது அனைவரையும் கவர்கிறது. இதன் தரத்திற்கும் விற்பனைக்கும் முழு முதற்காரணமே தாமிரபரணி தான். மண்பாண்டத் தயாரிப்பிற்கு மண் எடுக்க அரசு அனுமதித்தாலும், அந்த மண்ணின் ஆய்வுச் சான்றும் தேவை என்கிறார்கள். தர ஆய்வுச் சான்றுக்கு நாற்பதாயிரம் ரூபாய்வரை செலுத்த வேண்டியுள்ளது. இது கொஞ்சம் பாரம்தான்'' என்கிறார்.
இந்திய வரலாறும் நாகரிகமும் பொருநை ஆற்றங்கரையிலிருந்து எழுதப்பட வேண்டியது என்ற குரல்கள் ஆவண ஆதாரத்துடன் நெல்லை இலக்கியத் திருவிழாவில் விண்ணை முட்டி எழுந்தன. இதை மேலும் உறுதிப்படுத்துகின்றன தாமிரபரணி மண் பாண்டப் பொருட்கள்.
-செய்தி மற்றும் படங்கள் : ப.இராம்குமார்