பொன்பரப்பி தமிழரசன்.

1980-களின் இறுதியில் தமிழ் உணர்வுள்ள இளைஞர்களின் உதடுகள் உச்சரித்து, உள்ளத்தில் பதிய வைத்த பெயர்.

அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் கடலூர், திருமுட்டம் அருகே உள்ள மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தில் துரைசாமி-பதூசு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார் தமிழரசன். இவருக்கு அன்பழகி என்ற மூத்த சகோதரி உள்ளார். நன்றாக விவரம் தெரியும் பருவத்தி லிருந்தே தமிழ், தமிழ் இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு இவற்றின் மீது அதீதி பற்றுடன் வளர்ந்து வந்தார்.

"தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற அமைப் பைத் தொடங்கினார். கோவை அரசு பொறியியல் கல்லூரியில் படித்த போது மேற்கு வங்கம், ஆந்திரா மாநிலங்களில் வலுவாக இருந்த நக்சல் பாரி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டதால், தனது அமைப்பை மேலும் வலுவாக்கினார் தமிழரசன்.

Advertisment

dde

தமிழரசனின் தமிழர் விடுதலைப் படை அமைப்பின் தீவிர செயல்பாடுகளைப் பார்த்தும் கேள்விப்பட்டும், அப்போதைய எம்.ஜி.ஆர். அரசு ரொம்பவே திணறியது. தீவிர செயல்பாடுகள் என்றால், பொதுமக்களின் உயிருக்கு உலைவைக்கும் விதமாக பஸ்ஸ்டாண்டில் குண்டு வைப்பது, மார்க்கெட்டில் குண்டு வைப்பது போன்ற செயல்கள் அல்ல. தமிழரசனின் செயல்பாடுகள் எல்லாமே மக்கள் நலன் சார்ந்தது, தமிழக நலன் சார்ந்ததாக மட்டும் தான் இருந்தது. அப்பகுதி மக்களின் பேரன்பிற்குள்ளானார் தமிழரசன்.

தனித்தமிழ்நாடு, தமிழ் தேசிய அரசியல், தமீழீழ விடுதலையை அங்கீகரிக்க வேண்டும் இது தான் தமிழரசனின் உயிர் நாதம். இதை வலியுறுத்தி, தனது முதல் அதிரடியை 1986-ல் காட்டினார் தமிழரசன். தஞ்சை மாவட்டம் திருவையாறு தியாகைய்யர் இசை விழாவிற்கு வருகை தந்த ராஜீவ்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து குடமுருட்டி பாலத்திற்கு வெடிகுண்டு வைத்து போலீசை திகிலடைய வைத்தார். தமிழீழ விடுதலையை அங்கீகரிக்க வலியுறுத்தி 1987-ல் அரியலூர் மருதையாற்றுப் பாலத்திற்கு வெடி வைத்து தமிழக போலீசையும் மத்திய அரசையும் அலற வைத்தார் தமிழரசன். இதற்கடுத்ததாக, காலம் காலமாக தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரித் தண்ணீரைக் கொடுக்காமல் அடாவடி பண்ணும் கர்நாடக அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முடிவு செய்தார் தமிழரசன். காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை வெடிகுண்டு வைத்து தகர்ப்பதுதான் அந்த அதிர்ச்சி வைத்தியம். இதற்காக பெருமளவில் பணம் தேவைப்பட்டதால், வேறு வழியின்றி பொன்பரப்பி கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முடிவு செய்தார்.

Advertisment

death

01-09-1987-ல் வங்கியைக் கொள்ளையடித்து விட்டு, தமிழரசனும் அவரது தோழர்களும் வெளியே வந்தபோது, மக்கள் கூட்டம் திரண்டிருந் தது. எந்த மக்களின் பாதுகாவலனாக தமிழரசன் இருந்தாரோ, அந்த மக்களையே கேடயமாக்கி, மக்களினூடே கலந்திருந்த மஃப்டி போலீசார், தமிழரசனையும் அவரது சகாக்களையும் கல்லெறிந்தே கொன்றனர். தனது மக்கள் யாரும் பலியாகிவிடக்கூடாது என்பதற்காக, deathகைகளில் ஆயுதம் இருந்தும் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் வீரமரணம் அடைந்தனர் தமிழரசனும் அவரது தோழர்களும்.

தமிழரசனின் மறைவுக்குப் பின் தமிழர் விடு தலைப் படை பல்வேறு குழுக்களாக சிதறியதால், அதனை முழுமையாக சிதைப்பதில் போலீஸ் படை வெற்றி பெற்றது. எனினும், தமிழரசன் ஊட்டிய தமிழர் உரிமை உணர்வு இன்றளவும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாததாக உள்ளது.

தமிழரசனின் தாயார் பதூசு அம்மாள், தனது 110-ஆவது வயதில் மகள் அன்பழகியின் ஊரான பொன்பரப்பி-சிறுகளத்தூரில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி காலமானார். தமிழரசனை இன்றள வும் மதிக்கும் பலரும் அவரது அம்மாவின் மரணத் திற்கு அஞ்சலி செலுத்தினர். பதூசு அம்மாளின் மறைவு சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது.

நவ.01-ல் சிறுகளத்தூரிலிருந்து மதகளிர் மாணிக்கத்திற்கு அந்த அம்மாவின் உடல் கொண்டு வரப்பட்ட போது சாரை சாரையாக மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் தம்பி திருமால் வளவன், தமிழ்ப்பேரரசு கட்சித்தலைவர் கவுதமன், மே.17 இயக்க திருமுருகன் காந்தி, தி.மு.க. மா.செ.சிவசங்கர் என அரசியல் கட்சித் தலைவர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நவ.18-ஆம் தேதி சுபா.இளவரசன் தலை மையில் பதூசு அம்மாளின் படத்திறப்பு நிகழ்வு நடை பெற்றது. அதில் பேசிய பெ.மணியரசன், “""காந்தி யைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை இருக்கும் போது தமி ழரசனுக்கு ஏன் சிலை இருக்கக்கூடாது''’என்றார்.

பழ.நெடுமாறன் பேசும்போது, “""தமிழ் தேசியஇனம் தனது தன்னுரிமையை பெற வேண்டும் என்றால் தியா கங்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும்''’ என்றார். நிகழ்ச்சியில் வேல்முருகன், வக்கீல் சங்கரசுப்பு, முத்துலட்சுமி வீரப்பன், கோ.சுகுமாறன், காடு வெட்டி குருவின் மகள் விருத்தாம் பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

110 வயது அம்மாவின் இறப்பில், பெருந் திரளானவர்களின் பங்கேற்புடன் தமிழ்த்தேசியக் குரல் வலுவாக ஒலித்ததை உளவுப்பிரிவு குறிப்பெடுத்து அனுப்ப, ஆள்வோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

-சுந்தரபாண்டியன்