"ஹலோ தலைவரே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் இலங்கையில் சிங்களர்களே பங்கேற்குறாங்க. ஆனா, தமிழ்நாட்டில் அனுமதி யில்லைன்னு தமிழ் அமைப்புகள் கோபப்படுறாங்க.''

"என்ன நடந்ததாம்?''”

"முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை 22-ஆம் தேதி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்தப்போவதாக மே 17 இயக்கம் அறிவித்திருந்தது. இதற்காக போலீசின் அனுமதியையும் வாங்கியிருந்தார் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்துக்கிட்டிருந்த நிலையில், அதற்கு முதல்நாள் இரவு திடீர்னு அந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது. இது தொடர் பாக விசாரித்தபோது, ஒன்றிய அரசு, இங்குள்ள தி.மு.க. அரசுக்கு எதிரான துருப்பை எதிர்பார்த் துக்கிட்டு இருக்குது. இந்த நெருக் கடியான நேரத்தில், வேறுவிதமான விளைவை இந்த நிகழ்ச்சி உருவாக்கலாம்னு உளவுத்துறை சொன்னதால், அனுமதி மறுக்கப்பட்டதுன்னு அதிகாரிகள் தரப்பு சொல்லுது. தடையைமீறி நினைவஞ்சலி நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டிருக்காங்க.''v "தி.மு.க. மீது அதன் கூட்டணிக் கட்சி யான காங்கிரஸும் அதிருப்தியில் இருக்குதே?''”

"அதுக்கு காரணம், பேரறிவாளன் விடுதலை விவகாரம்தான். அது பற்றி தனி ஸ்டோரி வெளியாகியிருக்கு. ராஜீவ் நினைவு நாளான மே 21ந் தேதி, டெல்லியில் அஞ்சலி செலுத்திய ராகுல், என் தந்தை மன்னிக்கும் தன்மையைக் கற்றுத் தந்திருக்கிறார்னு சொன்னார். அதே நேரத்தில், பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டிப் பிடிக்காமல் தவிர்த்திருக்கலாம்னு ராகுல் நினைக்கிறாராம். ராஜீவ் நினைவுநாளில் மற்ற 6 பேரின் விடுதலை பற்றி வீடியோ கான்பரன்ஸில் ஸ்டாலின் ஆலோசித் ததும் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கு.''”

Advertisment

rr

"முதல்வரின் செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ். வருவார்ங்கிற டாக் போன வாரமும் எழுந்ததே?''”

"ஆமாங்க தலைவரே, சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரி யான அமுதா, கலைஞர் மறைந்த போது, மெரினாவில் அரசு சார்பிலான அவரது நல்லடக்க நிகழ்வுகளை சிறப் பாக நடத்தி, ஒட்டுமொத்த தமிழக மக்களின் நன்மதிப்பை யும் பெற்றவர். ஒன்றிய அரசுப் பணிக்குச் சென்று, பிரதமர் அலுவலகச் செயலராக இருந்த அவரை, தி.மு.க. ஆட்சி அமைந்ததும், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்துக்கு அழைத்துக் கொண்டார். அப் போதே தனது செயலாளராக ஆக்கிக்கொள்ளத்தான் அமுதா ஐ.ஏ.எஸ்.ஸை முதல் வர் தமிழகத்துக்கு அழைச் சிருக்கார்னு சொல்லப்பட்டது. எனினும் அவரை இப்போது வரை, ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளராகவே அமர்த்தி வைத்திருக்கிறது தமி ழக அரசு. சீனியர் அதிகாரி யான இவரை முதல்வர் அலுவலகத்தில் அமர்த்தினால் நல்லா இருக்கும் என்பது பரவலான எதிர்பார்ப்பு. ஆனால், அதிகாரி கள் மட்டத்தி லேயே பதட்டமும் இருக்குது.''”

Advertisment

rr

"ம்...''”

"ஐ.ஏ.எஸ்.ஸை அடுத்து ஒரு ஐ.பி.எஸ். பற்றிய தகவலைச் சொல்றேன். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த "நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் விறுவிறுப்பாக அண்மையில் திரைக்கு வந்து ரசிகர்களின் பேராதரவோடு ஓடிக்கிட்டு இருக்குது. சாதி வன்மங்களுக்கு எதிரான கதையம்சத்தை வைத்து, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும், புலனாய்வின் நுணுக்கங்கள் குறித்தும், துல்லியமான காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். இது குறித்து, இந்தப் படக்குழுவிற்கு நிறைய செய்திகளைச் சொல்லி, அவர்களை சரியாக கெய்டு செய்திருப்பவர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யான டாக்டர் வருண்குமார் எஸ்.பி.தான். அதற்காக படத்தின் டைட்டில் கார்டிலேயே இவருக்கு நன்றி சொல்லி இருக்கிறார்கள். இது ஒரு தரப்பை காண்டாக்கியிருக்காம்.''”

rr

"சரிப்பா, தி.மு.க. உட்கட்சித் தேர்தல் விவகாரமும் வெடிச்சிக்கிட்டு இருக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, இது பற்றி நம்ம நக்கீரன்ல நிறைய செய்திகள் வந்திருக்கு. இருந்தாலும் இன்னும் சில செய்திகளைப் பகிர்ந்துக்கறேன். தி.மு.க.வின் உள்கட்சி தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கு. கட்சி சார்பிலான 65 மாவட் டங்களில் நடந்த கிளைக்கழகம் மற்றும் பேரூர், ஒன்றியம், நகரம் ஆகியவற்றில் அடங்கிய வார்டு செயலாளர் உள்ளிட்ட அமைப்புகளில் பெரும்பாலும் சமரசங்களுடன் மா.செ.க் களுக்கு தோதான ஆட்களையே அனைத்து பதவிகளிலும் நியமனம் செஞ்சிருக்காங்க. இதுக்கு தேர்தல் பொறுப்பாளர் களா இருந்தவங்களும் உடந்தையா இருந்திருக்காங்க. இந்த நிலையில்... ஒன்றிய, நகர செயலாளர் தொடங்கி, மா.செ.க்கள் பதவிகள் வரை தேர்தல் நடக்கப் போகுது. இந்தப் பதவிகளுக்கும், ஏற்கனவே அந்தப் பதவியில் நீண்ட காலமாக இருந்து வர்றவங்களே மறுபடியும் பதவியை ஆக்ரமிக்க காய்களை நகர்த்தியிருக்காங்க.''”

rr

"ஆமாம்பா, வயதானவங்க கூட இளைஞர்களுக்கு வழிவிட மறுக்கறாங்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, இது தொடர்பான புகார்கள் அறிவாலயத்தில் குவிந்த படி இருக்கிறது. நம்மிடம் மனம் திறந்த அறிவாலய உடன்பிறப்பு ஒருவர், ’கட்சியில் உள் கட்சி ஜனநாயகம் அதிகமிருப்பது தி.மு.க.தான். ஆனால் உள்கட்சி தேர்தலில் அந்த ஜனநாயகம் இல்லை. ஏனெனில், இந்த முறை தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் விண்ணப்பம் தரப்படவே இல்லை. இந்த லட்சணத்தில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருக்கும் திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளராக இருக்கும் தமிழ்மணி, 2001-ல் இருந்து ஒ.செ.வா இருக்கார். இப்ப 77 வயசாகும் அவரால், மற்றவர் கள் துணையோடதான் நடக்க முடியும். அமைச்சர் தா.மோ. அன்பரசனின் ஆதரவாளரான அவர், இப்பவும் பதவியை கேட்ச் பண்ணத்துடிக்கிறார். இப்படிப்பட்டவர்கள் பதவியைக் கைவிட மறுத்து, கட்சியின் எதிர்காலத்துக்கு முட்டுக்கட்டை போடறாங்கன்னு கட்சியினரே சலிச்சிக்கிறாங்க.''”

"ராமஜெயம் படுகொலையில் சரியான ரூட்டை விசாரணை டீம் பிடிச்சிருக்கே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, ராமஜெயம் படுகொலை பற்றி விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. தரப்பிலேயே நாம் கேட்ட போது, அன் றைய முதல்வர் ஜெ.,’ ஸ்ரீரங்கத்தில் தேர்தலில் நின்றபோது, அவருக்கு எதிராக அதிகம் குடைச்சல் கொடுத்தவர், கே.என்.நேருவின் தம்பியான ராமஜெயம். அதோடு அவருக்கும், சசிகலாவின் உறவினரான டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனுக்கும், சாமிரவி என்கிற ரவுடிக்கும் இடையே ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடர்பான பகை இருந்திருக்கு. அதனால் சசிகலாவின் சம்மதத்தோடு, அந்த டி.எஸ்.பி.யின் விருப்பப்படி சாமிரவி டீம், இந்தப் படுகொலையைச் செய்தது. அந்த சமயத்தில் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த சசிகலா, ராமஜெயத்தின் கணக்கு முடிக்கப்பட்டதைச் சொல்லி, ஜெ.’ மனதைக் குளிரவைத்து, அந்த சாக்கில் மீண்டும் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார் என்றது அவர்கள் தரப்பு. ஆனால், சாமி ரவி தரப்போ தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு அடிச்சி சொல்லுது.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். இரண்டு நாளைக்கு முன்பு, கேரள மாநிலம் கொச்சியில், மீன்பிடிப் படகின் மூலம் கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட ரூபாய் 1500 கோடி மதிப்பிலான 220 கிலோ ஹெராயின் பிடிபட்டிருக்கு. இந்த போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து தமிழகம் வந்து, கடல்மார்க்கமாகவே இலங்கை வரை சென்று வந்ததாகக் கண்டறியப்பட்டிருக்கு. இதேபோல் தமிழகத் தில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல் தொடங்கி ரேசன் அரிசி, மளிகை வரை அனைத்துப் பொருட் களும் கடத்தப்படுதாம். இதற்கெல்லாம் உடந்தையாக இருப்பது இங்கே கடலோர பாதுகாப்புப் படை யின் ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் சந்தீப் மிட்டல் போன்ற வர்கள்தான் என் கிறார்கள். தீவிர இந்துத்துவா மனப் பான்மை கொண்ட சந்தீப், அது தொடர் பான கருத்துக்களை பகிரங்கமாக சமூக ஊடகங்களில் பதிவு செய்திலும் ஆர்வம் காட்டுகிறவர்.''”