"குடிபோதையில் டீக்கடையில் நடந்த பிரச்சனை அது. அதுவும் இரண்டு நபர் பிரச்சனை. குறிப்பிட்ட வீடியோவில் தமிழர்களை வட மாநிலத்தவர்கள் விரட்டு வதாக வந்த செய்தி தவறானது. கடந்த 14ஆம் தேதியன்று நடந்து முடிந்த சம்பவத்தை, 26ஆம் தேதி நடந்தது போல் செய்தி பரப்பப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என திருப்பூர் மாநகர காவல்துறை அவசரம், அவசரமாக அறிக்கை விட்ட நிலையில், வட மாநிலத்தவர்களுக்கு எதிராகப் போராட்டத்தை துவக்கியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரு பிரிவினரிடையான மோதலை சாதுர்யமாக தடுத்திருக்கின்றார் திருப்பூர் மாநகர மேயர்.

"இந்த சம்பவம் தொடங்கியது தைப் பொங்கலுக்கு முந்தைய நாள். வேலம்பாளையம் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட திலகர் நகர் ரியா பேஷன். அதிகளவிலான வட மாநிலத் தொழிலாளர்களைக் கொண்ட இக்கம்பெனியின் முன்புறம் தள்ளு வண்டியிலான டீக்கடை உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் அங்கே அமர்ந்து போதையில் சிகரெட் ஊதித்தள்ளிய நிலையில்... அங்கு பார்சல் டீ வாங்குவதற்காக வந்த பீகாரி இளைஞனை வம்பிழுத்து செல்போனை பறித்து, முகத்தில் சிகரெட் புகையை ஊதித்தள்ளியிருக்கின்றார்கள் போதையி லிருந்தவர்கள்.

tt

Advertisment

பிரச்சனை பெரிதாவதை கண்ட பீகாரி இளைஞன், கம்பெனிக்குள் சென்று தன்னுடைய நண்பர்களைக் கூட்டிவந்து போதை இளைஞர் களை அடித்து செல்போனை மீட்டுச் சென்றி ருக்கின்றான். அடிவாங்கிய போதை இளைஞர் களும், அது தங்கள் ஏரியா என்பதால் தங்களுடைய நண்பர்களை கூட்டிக்கொண்டு கம்பெனிக்கு சென்று பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில்... அங்கு பணியி லிருந்த அனைத்து இளைஞர்களும் போதை ஆசாமிகளை கட்டை, கம்பு, பெல்ட் கொண்டு அடித்து விரட்டியிருக்கின்றார்கள். போதை இளைஞர்களை விரட்டியதில் வடக்கர் களோடு கை கோர்த்தது அங்குள்ள தமிழ் தொழிலாளிகளே.

இது குறித்து இருதரப்பிலும் புகார் கொடுக்காததால், காவல்துறையும் அமைதி காத்தது. இவ்வேளையில், தமிழர்களை, வடக்கர்கள் ஓட ஓட விரட்டி அடித்தார்களென எதிர்க்கட்சி தொலைக்காட்சியும், சில விஷமிகளும் தவறாக செய்தியை பரப்ப, விஷயம் காட்டுத்தீயாய் பரவி இரு பிரிவினரிடையேயான கலவரமாக மாற முயற்சித்தது. அதனாலேயே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த அறிக்கையை வெளியிட்டோம்'' என்கிறார் மாநகர காவல்துறை அதிகாரி ஒருவர்.

ஆயிரக்கணக்கான பின்னலாடை தயாரிப்பு நிறுவனங்களை உள்ளடக்கிய திருப்பூர் மாவட்டத்தில் 75 ஆயிரத்திற்கும் அதிகமான ஒடிசா, பீகார், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைசெய்வதாக புள்ளிவிபரம் கூறுகின்றது.

tt

Advertisment

அதிக நேரம், குறைந்த கூலி என்பதால் பின்னலாடை நிறுவனங்களும் வட மாநிலத் தொழிலாளிகளுக்கு வேலைகளில் முன்னுரிமை அளிப்பதாக அவ்வப்போது வட மாநிலத் தொழிலாளர்களுக்கும், தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் சிறு, சிறு மோதல்கள் நடைபெறுவதுண்டு. எனினும், ஒருசிலர் தவிர அங்குள்ள வடமாநிலத் தொழிலாளர்களோடு இணக்கம்காட்டி வருகின்றனர் இங்குள்ள பூர்வீகத் தொழிலாளர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழர்களை வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்குவது போல் உள்ள வீடியோக்கள் சில குறிப்பிட்ட அமைப்புக்களாலும், கட்சிகளாலும் பகிரப்பட்டு சட்டம் ஒழுங்கினை அச்சுறுத்திய நிலையில், வெள்ளிக்கிழமையன்று சம்பவத்தின் உண்மைக் ttகாரணம் என்னவென்றே தெரியாத சிலர், வீடியோ காட்சிகளால் உணர்ச்சிவயப்பட்டு "தமிழகத் தொழிலாளரைத் தாக்கிய வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி' அவிநாசி சாலையில் ஆர்ப்பட்டம் நடத்தியும், ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிடச் சென்றனர். அங்குள்ள போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதே வேளையில், அனுப்பர்பாளையம் முன் குவிந்த சிலரிடம், "இது தனிப்பட்ட நபர்களின் பிரச்சினை. பிரச்சினையின் உண்மைத் தன்மையை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க காவல்துறையை, மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவோம். அத்துடன் உங்களுடைய கோரிக்கையையும் கூறுங்கள். சனிக்கிழமையன்று மாநகராட்சி வாருங்கள். அங்கு பேசிக்கொள்ளலாம்'' என அனுப்பிவைத்தார் மாநகர மேயர் தினேஷ்குமார்.

த.பெ.தி.க.வின் முத்துக்குமாரோ, "ஜனவரி 14 அன்றே விசாரணை நடத்தினோம் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அப்போதே சமரசம் செய்து வைக்காமல் கைது நடவடிக்கை எடுத்திருந்தால் தேவையில்லாமல் இப்போது பதட்டமான சூழ்நிலை உருவாகி இருக்காது. இது மிக உணர்வுபூர்வமாக அணுகவேண்டிய பிரச்சனை. தேவையில்லாமல் யாரோ முகநூலில் வேகமாகப் பரப்பி ஒரு பதட்டத்தை உருவாக்கிவருகிறார்கள். இதற்குப் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்யவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை'' என்கிறார்.

சனிக்கிழமையன்று காலையில் 9 மணிக்கு துவங் கிய கூட்டத்தில், குழுவிற்கு 2 நபர் என போராட்டக் குழுவினர் சுமார் 15 நபர்கள், காவல்துறையின் டி.சி, ஏ.சி.க்கள் மற்றும் மேயர் தினேஷ்குமார் கலந்துகொண்டனர்.

tt

கூட்டத்தில், "வட மாநிலத்தவர்கள் இப்பொழுது லட்சக்கணக்கில் இருக்கின் றார்கள். வாரத்திற்கு 2 ஆயிரம் பேர் திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர். அத்தனை பேருக்கும் வேலை கொடுக்கின்றன இங்குள்ள கம்பெனிகள். இந்த ஊரே அவர்களுடைய ஊர்போல் இருக்கின்றது. அதனுடைய வெளிப்பாடுதான் இப்பொழுது தமிழர்களை அவர்கள் அடித்திருப்பது. இதற்கு கம்பெனி முத லாளிகளும் ஒத்துழைக்கின்றனர்'' என போராட்டக் குழுவினர் ஆவேசமாக குரலெழுப்ப, "அக்கா! நீங்களும் அவர்களும் இங்கு தாயாய் பிள்ளையாய் பழகியவர் கள்தானே? இரண்டு பேரின் தனிப்பட்ட பிரச்சினைக்கு நாம் ஒத்துப்போகணுமா? டிரெயினில் இறங்குபவனுக்கு எல்லாம் எப்படி வேலை கொடுப்பார்கள். நீங்கள் சொல்வதை வைத்துக்கொண்டால் எடுத்த எடுப்பிலேயே அவர்களால் உங்கள் வேலையை பார்க்க முடியுமா? உங்களிட மிருந்துதான் அவன் கற்றுக்கொள்கிறான். டீ காசு என ரூ.300 கொடுக்கிறார்கள். என்றாவது உங்களுடைய வீட்டுக்காரர் அதனைக் கொண்டுவந்து கொடுத்திருக் கிறாரா? நாம் கொடுத்த இடைவெளியைத் தான் அவன் பயன்படுத்திக்கொண்டான். யாருக்கு வேலையில்லை என கொடுங்கள். கம்பெனிகளிடம் பேசி உங்களுக்கு வேலை வாங்கித் தருகின்றேன்'' என கூட்டத்திலிருந்த பெண்மணியிடம் மேயர் தினேஷ் குமார் கேள்வியெழுப்ப, குழுமியிருந்த போராட்டக்காரர்கள் வேலை நேரம், கூலி, வேலை ஆகியவற்றிற்கான கோரிக்கை மனுவை மேயரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சந்தோஷமாக புறப்பட்ட னர்.

இது குறித்து கருத்தறிய மேயர் தினேஷ்குமாரை தொடர்புகொண்டோம்.

"தனிப்பட்ட நபர்களின் பிரச்சினையை பெரிதாக்கி, இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்ட சிலர் முயற்சித்தனர். அப்படி நடந்தால் திருப்பூரின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும். இது மக்களுக்கான அரசு. தமிழர் நலனுக்கான அரசு என்பதால் பிரச்சினையை கவனமாக கையாண்டு, பேசி முடிவுறச் செய்தோம். வேலையில்லை என்பதனை முடிவுக்கு கொண்டுவர, மாநக ராட்சியிலேயே வேலை வாய்ப்புக்கென முகமையை உருவாக்கி அதன்மூலம் தனியார் கம்பெனி களிடம் பேசி அனைவருக்குமான வேலை வாய்ப்பைக் கொடுக்க வேண்டுமென்பதே எனது எண்ணம்'' என்றார் அவர்.

தமிழகமெங்கும் பற்றியெரியக்கூடிய பிரச்சினையை சாமாத்தியமாகப் பேசி அமைதிப் படுத்தியுள்ளார் மேயர். சபாஷ்!