"ஹலோ தலைவரே, தமிழக சட்டமன்றத் தேர்தல் வர ஒன்றரை வருடங்களே இருப்பதால், அதைக் குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் பரபரக்கத் தொடங்கிடிச்சி.''”
"ஆமாம்பா, முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதியும் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யக் கிளம்பிட்டாங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே.. சட்டமன்றத் தேர்தல் வருவதற்குள், அரசின் நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்குன்னு தெரிஞ்சிக்க முதல்வர் ஸ்டாலின் விரும்பறார். அதனால் அது தொடர்பான ஆய்வுகளை எல்லா மாவட்டத்திலும் நடத்தும் முடிவை எடுத்த அவர், சில மாவட்டங்களுக்குத் தானே நேராகச் செல்வதோடு, மற்ற மாவட்டங்களுக்கு துணை முதல்வரான உதயநிதியை போகச்சொல்லியிருக்கார். அதன் அடிப்படையில் பயணத் திட்டங்கள் விறுவிறுப்பாக வகுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் 5, 6 தேதிகளில் கோவைக்கு ஸ்டாலின் செல்ல, உதயநிதியோ கடந்த இரண்டு நாளாக விழுப்புரம் மாவட்டத் தில் தனது ஆய்வுகளை பரபரப்பாக நடத்திக்கிட்டிருக்கார். உதயநிதியின் ஆய்வுப் பயணம் குறித்து மாவட்ட கலெக்டர்களுக்குக் கடிதம் எழுதிய, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறையின் செயலாளர் தாரேஷ் அகமது, உதயநிதிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கவேண் டும் என்றும், அந்த ஆய்வுக் கூட்டங்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் வகையில் அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக் கிறார்.''”
"தங்கள் கட்சியின் ஆலோ சனைக் கூட்டத்தில் தி.மு.க.வுக்கு எதிராக நடிகர் விஜய் குரல் எழுப்பி யிருக்கிறாரே?''”
"தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை நடத்திமுடித்த நடிகர் விஜய், அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை 3ஆம் தேதி பனையூரில் நடத்தி னார். இதில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கு. தி.மு.க.தான் தங்கள் அரசியல் எதிரி என்பதையும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதை எதிர்த்தே தங்கள் கட்சி களமாடும் என்பதையும் அந்தத் தீர்மானங்கள் மூலம் அழுத்த மாகவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். மேலும், இந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது, பொய்யாக நம்மை விமர்சிப்பவர்களுக்கு அரசியல் ரீதியாக நாகரிகமாகப் பதில் சொல்லுங்கள். நம்மைச் சீண்டிப் பார்த்தும் உரசிப் பார்த்தும் நமது நேரத்தை வீணாக்க தி.மு.க. முயற்சிக்கும். அதற்கெல்லாம் பதில் சொல்லி உங்கள் சக்தியை வீணாக்காதீர் கள். நமக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. இங்கே நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, மாவட்ட அளவில் பொதுக் கூட்டங்கள் நடத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்லுங் கள் என்று நிர்வாகி களுக்கு அறிவுறுத்தி யிருக்கிறார். மேலும், ஜனவரியில் இருந்து தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக விஜய், சுற்றுப் பயணம் செல்லவும் பயணத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.''”
"நடிகர் விஜய்யை, தங்கள் நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அர்ஜுன் ரெட்டி அழைத்திருக்கிறாரே?''”
"விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் அர்ஜுன் ரெட்டியின் ’"வாய்ஸ் ஆஃப் காமன்'’ எனும் அமைப்பும் விகடன் பப்ளிகேஷனும் இணைந்து, அம்பேத்கர் குறித்து பல்வேறு வி.ஐ.பி.க்கள் எழுதிய 21 கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை வருகிற டிசம்பர் 6ஆம் தேதி வெளியிடுகின்றன. முத லில் இந்த புத்தகத்தை வெளியிடும்படி ராகுல்காந்தியிடம் கேட்டிருக்கிறார்கள். அவர் பிஸியாக இருப்பதாகச் சொல்லி ஜகா வாங்க, அடுத்து முதல்வர் ஸ்டாலினிடம் தேதி கேட்டிருக்கிறார்கள். அது அர்ஜுன் ரெட்டி விவகாரம் என்பதால் அவர் எந்த பதிலையும் சொல்லவில்லையாம். இதைத் தொடர்ந்துதான், த.வெ.க. தலைவரான நடிகர் விஜய்யை அழைக்கலாம் என்று அர்ஜுன் ரெட்டி சொல்லியிருக்கிறார். இதுபற்றி திருமாவளவனிடம் கேட்டபோது, நூல் வெளியீடுதானே? அதில் யார் கலந்துகொண்டாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டாராம். இதனையடுத்து, கலந்து கொள்ளும்படி நடிகர் விஜய்யிடம் கேட்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசித்திருக்கிறார் விஜய். அப்போது, நீங்களும் திருமாவும் ஒரே மேடையில் இருப்பது தி.மு.க.வுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். அதோடு, தலித் இளைஞர்களையும் சிறுத்தை கள் கட்சியிலுள்ள உங்கள் ரசிகர்களையும் நம்மால் ஈர்க்கவும் முடியும். தேர்தல் காலத்தில் சிறுத்தைகளுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு அமையலாம் என்று சொல்லியிருக்கிறார் கள். இதைத் தொடர்ந்து விஜய், அந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க இசைவு தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி தமிழக அரசியலில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் விஜய் தரப்பினர்.''”
"இந்த வெளியீட்டு விழா மூலம் தி.மு.க.வுக்கு எதிரான ஒரு அரசியலை அர்ஜுன் ரெட்டி எடுப்பதுபோல் தெரிகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, அதேபோல் அர்ஜுன் ரெட்டியின் அரசியல் மூவ்களையும் ஒரு அமைப்புதான் தீர்மானித்து வருகிறதாம். "பௌன்சிங் பேட்ச்' என்கிற அந்த அமைப்பு சத்தமில்லாமல் இங்கே செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புதான் சிறுத்தைகள் கட்சிக்குள் இருந்தபடியே சர்ச்சைகளை எழுப்பிவரும் அதன் துணைச்செயலாள ரான அர்ஜுன் ரெட்டியை, இயக்குகிறது என்கிறார்கள். ஆதவ் இந்த அமைப்பின் துணையோடு பல வருட மாக செயல்பட்டு வரு கிறாராம். இந்த அமைப்பு, அரசியலில் சில மூவ்களை தொடர்ந்து நடத்திவரு கிறது. குறிப்பாக, தமிழக பத்திரிகையாளர்கள் பலரை யும் பிரதமர் மோடியிடம் அழைத்துச் சென்று, அவர்களை மோடி பக்கம் சாய்த்ததில் இந்த அமைப்புக்குப் பெரும்பங்கு உண்டு என்கிறார்கள்.''”
"ஓஹோ''”
"அதேபோல் வெறும் தொழிலதிபராக மட்டுமே இருந்த மாஃபா பாண்டிய ராஜனை இந்த அமைப்பு தான் அரசியலுக்குக் கொண்டுவந்ததாம். மேலும் பாண்டியராஜனுக்காக, இது பா.ஜ.க. சீனியரான வெங்கையா நாயுடுவிடமே முரண்பட்டது என்பார்கள். அப்படிப்பட்ட இந்த அமைப்புதான் அம்பேத்கர் பற்றிய அந்த புத்தகத்தை வெளியிடும் ஐடியாவை அர்ஜுன் ரெட்டிக்கு கொடுத்ததாம். அர்ஜுன் ரெட்டியே தன் பொறுப்பில் 2 கோடி ரூபாய்க்கு அந்த புத்தகத்தை வாங்கிக்கொள்கிறார் என்றும் சொல்கிறார்கள். தமிழக அரசியல் கூட்டணிகளைக் கலைத்து விளையாட நினைக்கும் அந்த அமைப்பு, இப்போது அர்ஜுன் ரெட்டி மூலம் சில ரகசிய மூவ்களை கையில் எடுக்கிறதாம். இதன் விறுவிறுப்பான விளையாட்டுகளை இனி தமிழக அரசியலில் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.'' ”
"நாம் தமிழர் சீமான், திடீரென நடிகர் விஜய்யை கடுமையாக அட்டாக் செய்கிறாரே?''”
"நடிகர் விஜய்யின் வாக்கு சதவீதம், விஜயகாந்துக்கு முன்பு கிடைத்ததுபோல் 8 சதவீதம் கிடைக்கும் என பலரும் கணிப்பது சீமானை உறுத்துகிறதாம். அதேபோல், சீமான் கட்சியினர் பலரும், முன்பு அவர் விஜய்யுடன் காட்டிய இணக்கத்தால், அவர் பக்கம் சாய்ந்து வருவதைக் கண்டு திகைத்துப் போய்விட்டாராம். அதனால், இனி விஜய்யுடன் இணக்கம் காட்டினால் சரிப்படாது என்கிற முடிவுக்கு வந்த சீமான், இப்போது கடுமையாக விஜய்க்கு எதிராக அட்டாக் அரசியலைக் கையிலெடுத்திருக்கிறார் என்கிறார்கள்.''”
"தமிழக பா.ஜ.க. தலைவரின் பதவி நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது என்கிறார்களே?''”
"நவம்பர் 20-ல் நடக்க இருக்கும் மஹாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான முடிவுகள் வரும் என்றே, இப்போது கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கி யுள்ளன. இதனால், அதிர்ந்துபோயிருக்கும் பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, ஏதாவது சில அதிரடி அத்துமீறல்களை நடத்தியாவது அங்கே ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று தவிக்கிறது. அப்படியும் ஒருவேளை அங்கே பா.ஜ.க. தோல்வியைச் சந்திக்கு மானால், அங்கு துணை முதல்வராக இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.கார ரான தேவேந்திர பட்னவிஸ்சை பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக நியமிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இப்படி பட்னவிஸ் பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக மாறும்போது, அனைத்து மாநிலங்களின் பா.ஜ.க. தலைவர்களையும் மாற்றியமைக்க அதன் தலைமை தீர்மானித்திருக்கிறது. அப்படியொரு நிலை ஏற்படும் போது, தமிழக பா.ஜ.க. தலைவராக உள்ளவரும் மாற்றப்படுவார் என் கிறார்கள். காரணம், உறுப்பினர் சேர்க்கையில் தமிழக பா.ஜ.க. மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறதாம். எனவே லண்டனில் இருக்கும் அந்த பா.ஜ.க. நிர்வாகி, தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளும் தவிப்பில் இருக்கிறாராம். அ.தி.மு.க.வை அவர் தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவந்தால் மட்டுமே அவரது பதவி தப்பலாம் என்கிறது கமலாலயத் தரப்பு. ஆனால், எடப்பாடி, அந்த நிர்வாகி இருக்கும்வரை பா.ஜ.க.வுடன் உறவுக்கு வாய்ப்பே இல்லை என்பதில் உறுதியாக இருக் கிறார். எனவே, பா.ஜ.க. நிர்வாகியின் பதவி திரி சங்கு நிலையில் ஊசலாடுகிறது என்கிறார்கள்.''”
"தமிழக காங்கிரஸில் செல்வப்பெருந் தகைக்கு எதிராக பல்வேறு மூவ்கள் நடக்குதே?''
"தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை தலைவர் பதவியிலிருந்து அகற்ற, காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் தொடர்ந்து டெல்லிக்குக் காவடி தூக்கினர். ஆனால், அது நடக்கவில்லை. இதனால் வெறுத்துப்போய் விட்டனர். இந்த நிலையில், தமிழக காங்கிரசில் காலியாக உள்ள பதவிகளுக்கு தங்களின் ஆதரவாளர்களைக் கொண்டுவரும் முயற்சி களை அவர்கள் எடுத்து வருகிறார்கள். இதற்காக ராகுல்காந்தியிடமும், மல்லிகார்ஜுன கார்கேவிடமும் உள்ள தங்களின் சோர்ஸ்கள் மூலம் லாபி செய்து வருகின்றனர். கட்சிப் பதவி களில் தங்கள் ஆதரவாளர்களை அமர்த்துவதன் மூலம், தொடர்ந்து செல்வப்பெருந்தகைக்கு குடைச்சல் கொடுக்கவேண்டும் என்பதே அவர்களின் திட்டமாம். இதையறிந்த செல்வப்பெருந்தகை, அவர்களின் மூவ்களைத் தடுக்கும் முயற்சியிலிருக்கிறாராம்.''”
"ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், இரண்டாவது குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழகத்தையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர் பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டி ருக்கும் இரண்டாவது குற்றப்பத்திரிகை, ஒரு விசயத்தை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித் திருக்கிறது. அதாவது, சென்னையின் நிழலுலகைக் கைப்பற்றுவது தொடர்பான போட்டியில், ரவுடிகளான நாகேந்திரன், சம்பவ செந்தில், மற்றும் ஆற்காடு சுரேசின் தம்பி பாலு ஆகியோர் இணைந்து, அந்த சதித் திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்று அதில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்த நேரத்தில் சாதி ரீதியிலான வன்மமே அதற்குக் காரணம் என்றும், இல்லை அரசியல் பகைதான் காரணம் என்றும் ஆளாளுக்குச் சொன்னார்கள். அதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு, ’தொழில் போட்டி’ என்கிற கோணத்தில் அந்தப் படு கொலை நடந்திருப்பதையே போலீஸின் புலனாய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது. இதையே நமது நக்கீரன் ஆரம்பத்திலிருந்தே தெரிவித்து வந்திருக்கிறது என்பதால், விசாரணை டீமைச் சேர்ந்தவர்களே சபாஷ் போடுகிறார்கள்.''’
"அ.தி.மு.க. கவுன்சிலருக்கு ஆதரவா தி.மு.க. நிர்வாகியே களமிறங்கி மக்களின் எதிர்ப்பை சம்பாதிச்சிருக்காராமே?''
"ஆமாங்க தலைவரே.. செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் ஒய்யாலிக்குப்பத்தில் சிமெண்ட் சாலை போடும் டெண்டரை அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் எடுத்திருக்கிறார். இந்த சாலை, கிராம மக்களுக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் வருவதால் அ.தி.மு.க. கவுன்சிலருக்கு எதி ராக மக்கள் திரண்டனர். மக்க ளின் போராட்டத்தில் நியாய மிருப்பதால் அவர்களின் போராட்டத்துக்கு திருக்கழுக் குன்றம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சரவணன் ஆதர வாகக் களமிறங்கினார். ஆனால், அ.தி.மு.க. கவுன்சிலரோ, திருக் கழுக்குன்றத்தின் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தமிழ்மணி யை சந்தித்துப் பேர அரசியல் பேச... அ.தி.மு.க. கவுன்சிலருக் காக வரிந்துகட்டுகிறார் தமிழ் மணி. இதையடுத்து ஒய்யாலிக் குப்பத்தில் மக்களின் கொந் தளிப்பு அதிகரித்திருக்கிறது. இந் நிலையில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் நடத்தும் மக்கள் குறை கேட்பு நிகழ்வில், அ.தி. மு.க. கவுன்சிலரை மனு கொடுக்க வைத்து, அமைச்சரிடம் உண் மையை மறைத்து, சாலை போட அனுமதியையும் அ.தி.மு.க.வுக்காக பெற் றுத்தந்தார் தமிழ்மணி. இதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க.வினரின் கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றித் தருவதும், தி.மு.க.வினரின் கோரிக் கைகளைப் புறக்கணிப்பதுமான தமிழ்மணியின் போக்கு, அப்பகுதி தி.மு.க.வினரையும் கொந்தளிக்க வைத்துள்ளதாம்!"’
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலை இங்கே பகிர்ந்துக்கறேன். தமிழகத்திலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களின் பேறு காலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க ஹெல்த் மிக்ஸ் என்னும் திட்டத்தை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கான கொள்முதல் டெண்டர், அனிதா டெக்ஸ்காட் எனும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த நிறு வனம் வழங்கிய ஹெல்த் மிக்ஸ் தரமற்றதாக இருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துள் ளன. இதுகுறித்த புகார் ஒன்றிய அரசுக்கு ஆதாரப் பூர்வமாகச் சென்றுள்ள நிலையில், இது தொடர் பான வில்லங்க விவகாரம் விரைவில் வெடிக் கப் போகிறது என் கிறார்கள்.''
________________
இறுதிச்சுற்று!
சிதம்பரம் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி பகுதியிலுள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில் மழையால் பழுதடைந்து பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனை அகற்றிவிட்டு புதிய கொடிமரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோயில் பட்டாச்சாரியர்கள் இந்து அறநிலையத்துறைக்கு மனு அளித்தனர். இதையடுத்து நவம்பர் 3-ஆம் தேதி புதிய கொடிமரம் அமைக்க, பழைய கொடிமரத்தை அகற்றுவதற்கான பூர்வாங்க பூஜைகள் செய்ய தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன், கோவில் பட்டாச்சாரியார்கள் வந்தனர்.
அப்போது அங்கிருந்த நடராஜர் கோவில் தீட்சிதர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு "கோவில் கொடிமரத்தை மாற்றக்கூடாது' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறுநாள் நவம்பர் 4-ஆம் தேதி திங்களன்று காலையில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தை மாற்றுவதற்காக வந்தனர். அப்போதும் தீட்சிதர்கள் அவர்களைச் சூழ்ந்து எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகப் பகுதி முழுவதும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
-அ.காளிதாஸ்