மிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தல் 5 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும். இந்தத் தேர்தல் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் பதிவாளர் மூலமாகவே நடத்தப்படும். அப்படி நடத்தப்படும் தேர்தலில் 10 உறுப்பினர்களைத் தேர்வுசெய்வார்கள்.

அதில் 3 உறுப் பினர்கள் அரசாங்கத்தின் மூலமாக நியமனம் செய் யப்படுவர். மீதமுள்ள 7 உறுப்பினர்கள் தேர்தல் மூலமாக நியமனம் செய்யப்படுவர். இந்த தேர்தலுக்கான தேதியை பதிவாளரே அறிவிப்பார். அதன்படி, பதிவுசெய் யப்பட்ட மருத்துவர்கள் அனைவருமே வாக்கு செலுத்தவும், தேர்த லில் போட்டியிடவும் தகுதியானவர்கள். ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி தேர்தலில் போட்டியிடும் மருத்துவர்கள் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று அதனை பூர்த்திசெய்து மெடிக்கல் கவுன்சிலுக்கு அனுப்பிவைப்பர்.

dd

அனுப்பப்பட்ட படிவத்தை மருத்துவ கவுன்சில் உறுப்பினர் தேர்வுசெய்து, ஒவ்வொரு மருத்துவருக்கும் தபால் மூலமாக தேர்தல் அதிகாரி அனுப்புவார். அப்படி அனுப்பப்பட்ட படிவத்தில் மொத்தமுள்ள லிஸ்டில் 7 நபருக்கு மட்டுமே வாக்கு செலுத்தமுடியும். வாக்கு செலுத்தப்பட்ட படிவத்தை மீண்டும் மருத்துவ கவுன் சிலுக்கு தபால் மூலமாக அனுப்பிவைக்கவேண்டும். அதில் அதிக வாக்குகள் பெற்று முதல் 7 இடங்களில் வருபவர்களே உறுப் பினர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் சென்ற தேர்தல் நீதிமன்றத்தால் நடத்தப்பட்டது. 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்த காரணத்தால், ஓய்வுபெற்ற நீதிபதியான வெங்கட்ராமன் மேற்பார்வையில் 2017 தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அணிகளாகவும், சிலர் தனிப்பட்ட முறையிலும் போட்டியிட்டனர். முக்கியமாக, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஒரு அணியாகவும், இந்திய மருத்துவ சங்கம் ஒரு அணியாகவும், மற்ற மருத் துவர்கள் சில குழுக்களை உருவாக்கியும் அதில் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் பெருமளவில் வெற்றிபெற்று, மெடிக்கல் கவுன்சில் தலைவர் பதவிக்கு செந்திலை தேர்வு செய்திருந்தனர். இந்திய மருத்துவ சங்கம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தன்னுடைய வெற்றியை இழந்திருந்தது. இவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் சிறு குழுக்களாக நின்ற மருத்துவர்களே. தற்போது இந்த சிறு குழுக்களை தன்வசம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது இந்திய மருத்துவர் சங்கம்.tt

மெடிக்கல் கவுன்சில் போர்டு தொடர்ச்சியாக பத்தாண்டுகளாக அ.தி.மு.க. வசமாகவே இருந்து வந்துள்ளது. அமைச்சராக மட்டும் இல்லாமல், தன்வசம் எதை யெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் வைத்துக்கொண்டு கச்சிதமாக காரியம் சாதித்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். செந்தில், தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் தலைவராக இருந்தாலும், அவர் அ.தி.மு.க. விஜயபாஸ்கரின் விசுவாசி யும்தான்.

இதனால் தனது கட்சியைச் சார்ந்துள்ள சட்டமன்ற உறுப் பினர்களான மருத்துவர்களை உள்ளடக்கிய ஒரு லாபியைக் கட்டமைத்து, டாக்டர் அகிலன் மூலமாக ஒரு புதிய அணியை உருவாக்கத் திட்டமிருக்கிறதாம் தி.மு.க. முன்பு தேர்தலில் சிறு குழுக்களாக நின்ற மருத்துவர்களை, இந்தப் புதிய அணியினர் ஒன்று திரட்டி செயல்பட உள்ளார்களாம்.

கடந்த தேர்தலில் அரசு டாக்டர்கள் சங்கம் வெற்றியடைய, கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்துள்ள ரெக்ஸ் தலைமையிலான அணி, ஒரு குறிப்பிட்ட வாக்குகளைப் பெற்றுத் தந்ததும் காரணமாக இருந்தது. இதனால் இந்தமுறை இவர் களையும் இணைத்து களம் காண ஆளும்தரப்பு அணி திட்ட மிட்டுள்ளது. இந்தச் சூழ்ச்சியை அறிந்த தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமும், இந்திய மருத்துவர் சங்கமும் ஒரே அணியில் இணைந்து நிற்கத் திட்ட மிட்டுள்ளனர்.

தற்போது நடந்துமுடிந்த மருத்துவர் சங்கத் தேர்தலில் இரு அணியிலும் செந்தில் ஆதரவாளர்களே இருப்பதால், இரு சங்கமும் இணைய எந்த இடையூறும் இருக்காது என்கிறார்கள் இரு சங்கங்களைச் சார்ந்த மருத்துவர்கள்.

இந்த தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏனென்றால், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் என்பது தமிழகத் திலுள்ள ஒட்டுமொத்த மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், வெளிநாட்டில் படித்துவரும் மருத்துவ மாணவர்கள் என அரசு, தனியார் அனைத்தையும் தாண்டி, அரசு பதிவுபெற்ற மருத்துவர்கள் என்பதற்கு அங்கீகாரச் சான்று, பதிவு எண் கொடுப்பது, நன்னடத்தை சான்றிதழ் கொடுப்பது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என ஒட்டுமொத்த செயல்பாட்டையும் இயக்கும் ஒரு இடமாக இந்த தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலே செயல்பட்டு வருகிறது.

தேர்தல் குறித்து தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலக அதிகாரியிடம் கேட்டபோது, “"தற்போது இருப்பவர்களின் பதவிக்காலம் முடி வடையும் நிலையில், தேர்தலுக்கான தேதியை நிச்சயம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடுவோம்''’ என்றார்.

டிசம்பரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஜனவரிக்குள் முடிக்கப்படும். பிறகு பிப்ரவரியில் புதிய கவுன்சில் உறுப்பினர்கள் நியமிக்கப் படுவார்கள். இந்த தேர்தல் சென்ற தேர்தலைப் போலவே நீதிபதி மூலம் நடத்தப்படுமா, இல்லை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் ரிஜிஸ்ட்ரார் மூலமாக நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisment