"ஹலோ தலைவரே, தி.மு.க. தலைவராக மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிக் கொண்டாட, இப்பவே ஆளுங்கட்சித் தொண்டர்கள் தயாராகறாங்க.''”
"முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறாரே, அதனால் தொண்டர்களிடம் அதிக உற்சாகம் இருக்கும்.''”
"ஆமாங்க தலைவரே, கலைஞரின் உடல்நிலையால், கட்சியின் செயல்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின், அவரது மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைவராக முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கலைஞர் மறைந்த நேரம் என்பதால், தொண்டர்களால் அதை அப்போது பெரிதாகக் கொண்டாட முடியலை. இப்ப 9ஆம் தேதி கூட இருக்கும் கட்சியின் பொதுக்குழுவில், ஸ்டாலின் இரண்டாம் முறையாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட இருப்பதால், இப்பவே தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரளுது. அதேபோல் அந்தப் பொதுக்குழுவில் கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் மறுபடியும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட இருக்காங்க.''”
"அதேநேரம் இந்தப் பொதுக்குழுவில் ஸ்டாலினின் பேச்சு கறாராக இருக்கும்னு, அவர் மனநிலையை அறிந்தவர்கள் சொல்றாங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, காரணம், சமீபகாலமாக பொது வெளியில் சில அமைச்சர்கள் பேசும் பேச்சும், அவர்களின் செயல்பாடுகளும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பா, வாக்களித்த பொதுமக்களை இழிவுசெய்வது போன்று பேசுவதும், தங்களைத் தேடிவரும் மக்களை, அடிமைகள் மாதிரி நடத்தி, அவங்க கொடுக்கும் மனுவை அலட்சியப்படுத்துற போக்கும் சிலரிடம் இருக்கு. இது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்குது. அவர்களின் இந்த தெனாவெட்டுப் போக்கால், ஆட்சியின் நலத்திட்டங்களும் அறிவிப்புகளும் கூட மக்களிடம் எடுபட மாட் டேங்குதுன்னு ஸ்டாலின் கருதறார். அதனால் இப்படிப்பட்ட அமைச்சர்களையும், கட்சி நிர்வாகிகளையும் எச்சரிக்கும் விதமா அவரது பேச்சு இருக்கும்னு அறிவாலயத் தரப்பிலேயே டாக் அடிபடுது.''”
"தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க, அக்கட்சியின் அகில இந்தியத் தலைமை தயாராகுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, இப்ப இருக்கும் அண்ணாமலை, வெறும் வாய்ச்சொல் வீரர் என்று கருதும் பா.ஜ.க.வின் டெல்லி தலைமை, அவரை விரைவில் மாற்றும் முடிவுக்கு வந்திருக்கிறதாம். அதனால், இந்தப் பதவியைக் குறிவைத்து பேராசிரியர் மதுரை சீனிவாசனும், வானதி சீனிவாசனும், இன்னும் சிலரும் விறுவிறுப்பாகக் காய் நகர்த்தறாங்க. இங்குள்ள கட்சியின் சீனியர்களோ, இவர்களில் மதுரை சீனிவாசனைத் தலைவராக்கினால், அவர் தன் நட்புணர்வால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தையும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸையும் பா.ஜ.க. கூட்டணிக்கு இலகுவாகக் கொண்டுவருவார் என்றும், அதேபோல் வானதி சீனிவாசனை நியமித்தால், அவர் அ.தி.மு.க.வில் இருக்கும் எடப்பாடி மற்றும் மாஜி மந்திரி வேலுமணி ஆகியோருடன் இருக்கும் நட்புணர்வால், அ.தி.மு.க.வை, பா.ஜ.க.வுக்குக் கீழேயே இருக்கும்படி பார்த்துக்கொள்வார் என்றும் மேலிடத்திடம் கருத்து தெரிவித்து வருகிறார்களாம். இதனால் அண்ணாமலை தரப்பு ஆடிப்போய் இருக்குதாம்.''”
"அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடித் தரப்பு நடத்தக் கூடாதென்று உச்சநீதிமன்றம் அதிரடி காட்டி இருக்கே?''”
"எடப்பாடி பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாதுன்னு ஓ.பி.எஸ். தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டி ருந்தது. இந்த வழக்கின் விசாரணை, 30-ஆம் தேதி நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்சின் முன் விசாரணைக்கு வந்தப்ப, கட்சியின் பொறுப்பாளராக இருக்கும் எடப்பாடி, எதற்காக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த அவசரம் காட்ட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியதோடு, உயர்நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், நவம்பர் மூன்றாம் வாரம் வரை, அவர் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாதுன்னு உத்தரவைப் பிறப்பித்து விட்டது. இது ஓ.பி.எஸ். தரப்புக்குக் கிடைத்த வெற்றி என்றபோதும், அவர் தரப்பு நவம்பர் இறுதிவரை அடக்கி வாசிக்க நினைக்கிறதாம். எடப்பாடித் தரப்போ, டெல்லியின் பார்வை தங்களுக்கு எதிராக இருப்பதைப் புரிந்துகொண்டு அப்செட்டில் இருக்கிறது.''”
"அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுதே?''”
"அகில இந்திய காங்கிரசின் தலைவர் தேர்தல் 17-ந் தேதி நடக்க இருக்குது. சோனியாவோ, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டைத் தலைவர் பதவிக்கு நிறுத்த நினைத்தார். ஆனால் கெலாட்டோ, நான் தலைவர் பொறுப்புக்கு நிற்கத் தயார். அதே சமயம், ஒருவருக்கு ஒரு பதவின்னு சொல்லி, என் முதல்வர் பதவியைப் பறிக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்கார். இதை சோனியா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால், நான் பதவி விலகக் கூடத் தயார். ஆனால் நான் சொல்கிற ஒருவரைத்தான் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியில் உட்கார வைக்கணும்னு அடுத்த நிபந்தனையை அவர் விதிச்சார். இதையும் சோனியா ஏற்கவில்லை. அதையே ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், தங்கள் கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். இதனால் அசோக் கெலாட்டைத் தன் விருப்பப் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டார் சோனியா.''”
"பிறகு?''”
"இந்த நிலையில், பல்வேறு ஆலோ சனைகளுக்குப் பிறகு, ராஜ்யசபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அழைத்து, அவரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நிற்கும் படி சொன்னார் சோனியா. அவரும் உங்கள் விருப்பம் என்று ஒப்புக்கொண்டு, அதற்கான விண்ணப்பத்தையும் கட்சியில் தாக்கல் செய்தார். இதைப்பார்த்த கேரள காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், கார்கேவுக்கு எதிராக போட்டியிட மனுத் தாக்கல் செய்திருக்கிறார். தங்கள் விண்ணப்பங்களைத் திரும்பப் பெற 8-ஆம் தேதி கடைசி நாள் என்பதால், அதற்குள் சசிதரூர் வாபஸ் பெறாவிட்டால், தேர்தல் 17-ந் தேதி உறுதியாக நடக்கும். கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால், ராஜ்யசபா காங்கிரஸ் தலைவர் பதவியை மல்லிகார்ஜுன கார்கே ராஜினாமா செய்திருக்கிறார். இதற்கிடையே, ராஜ்ய சபா காங்கிரஸ் தலைவர் பதவியைக் கைப்பற்ற மூத்த தலைவர்கள் திக்விஜய்சிங், ப.சிதம்பரம் ஆகியோரிடையே இப்போது போட்டி அதிகரிச்சிருக்கு.''”
"ம்''”
"’தற்போதைய நிலவரப்படி, சோனியா, ராகுலின் ஆதரவுபெற்ற வேட்பாளராக கார்கேவும், கட்சித் தலைமைக்கு எதிராக உள்ள அதிருப்தியாளர்களின் வேட்பாளராக சசிதரூரும் போட்டியிடுவதால் தலைவர் தேர்தல் சூடு பிடிச்சிருக்கு. ப.சி.யின் மகன் கார்த்திக் சிதம்பரம், இந்தச் சூழலில் தலைமையின் சாய்ஸுக்கு எதிராக சசிதரூரை ஆதரித்து, அவர் மனுவை முன்மொழிந்திருப்பதை, கட்சியின் சீனியர்கள் அதிர்ச்சியுடன் உற்றுப் பார்க்கிறார்கள். இது குறித்து விசாரித்த போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆகணும்னு ப.சிதம்பரம் விரும்பினார். அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவராகத் தன் மகன் கார்த்திக் சிதம்பரத்தை நியமிக்கணும்னு ப.சி. விரும்பினார். இந்த இரண்டையும் ராகுல்காந்தி ஏற்காததால்தான், கார்த்திக் சிதம்பரம், சோனியா குடும்பத்துக்கு இப்படி ஷாக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். இந்த நிலையில், ராஜ்யசபா காங்கிரஸ் தலைவர் பதவியைக் குறிவைத்திருக்கும் ப.சி.க்குப் போட்டியாக, கட்சியின் சீனியரான திக் விஜய்சிங்கை ராகுல் தூண்டி விட்டிருக்கிறார்னு ப.சி. தரப்பு எரிச்சலில் இருக்கிறதாம்.''”
"சரிப்பா, ராகுல் நடத்திவரும் பாதயாத்திரை எந்த அளவில் இருக்கு?''”
"மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில், ராகுல்காந்தி தமிழகத்தில் இருந்து பாதயாத்திரை யைத் தொடங்கினார். காஷ்மீர் வரையிலான இந்த நடை பயணம், கேரள மாநிலத்தைக் கடந்து, மீண்டும் தமிழக எல்லையான நீலகிரி மாவட்டத் தில் நுழைந்து, முதுமலை, பந்திப்பூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்குள் நுழைந்து விட்டது. ராகுலின் மொத்த நடை பயண தூரம் 3,750 கிலோ மீட்டர். இப்போது வரை 600 கிலோ மீட்டர் தூரம் நடந்திருக்கிறார். ஒரு நாளைக்கு 30 முதல் 50 கிலோ மீட்டர் வரை நடப்பதாகத் திட்டமிட்டிருந்தாலும், 25 கிலோ மீட்டர் தூரம் வரைதான் அவரால் சராசரியாக நடக்க முடிகிறது. நீலகிரி மாவட்டத்தில் நுழைந்தபோதே, அவரது கால்கள் வீங்கி விட்டன. ரொம் பவும் பலகீனமாகவும் இருக்கிறார்.''”
"கலைஞர் இப்படிதானே கால்களில் ரத்தம் கசியக் கசிய மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை 82-ல் நீதிகேட்டு நெடும்பயணம் சென்றார்!''”
"ஆமாங்க தலைவரே, இப்ப ராகுல் நடைபயணம் போகும் பாதையில், மலைப்பிரதேசங்களும் வருவதால், அவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேர்கிறது. எனவே பந்திப்பூர், டூ மைசூர் வரை அவரை நடக்க விடாமல் காரில் அழைத்துச் சென்றனர். அதேபோல் அவர் கால்களில் வீக்கம் அதிகரிக்கும் போதும் காரில் அவரை அமர வைக்கிறார்கள். இது குறித்துக் கேட்டால், முதுமலை-பந்திப்பூர் ரூட்டில் வன விலங்குகள் அபாயம் இருப்பதால் அங்கு நடை பயணத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ரூட்டை வகுக்கும் போதே அவர்கள் இது குறித்தெல்லாம் யோசிக்காததால், பாதயாத்திரை, கார் யாத்திரையாகவும் சில இடங்களில் நடக்கிறது. அதேபோல் அவர் நடந்துவரும் போது கட்சிப் பிரமுகர்களே அவரைச் சுற்றி முற்றுகை இடுவதால், அவரைக் காண வழியில் காத்திருக்கும் பொதுமக்கள் கூட, அடையாளம் காணமுடியாமல் இருக்கிறார்களாம்.''”
"திரையரங்கப் பெரும்புள்ளி ஒருவர், கோட்டை வரை பிலிம் காட்டுகிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னையின் பிரபல மால்களில் தியேட்டர்களை வைத்திருக்கும் பி.வி.ஆர். சினிமாஸ்’ நிறுவனத்தின் அதிபரான ஜோஸ்வா, இப்போது அதிகாரப் புள்ளிகளுடன் நட்பு வைத்துக்கொண்டு, மேலே வரை சென்று காரியங்களை முடித்துக் கொடுக்கிறாராம். எப்போதும் சினிமா நட்சத்திரங்கள் சகிதம் காட்சி தரும் அவர், கோட்டை அதிகாரிகள் நான் கிழிச்ச கோட்டைத் தாண்டமாட்டார்கள்’ என்றெல்லாம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறாராம். இவர் பிலிம் காட்டுவதைப் பார்த்து, கோட்டை வட்டாரமே எரிச்சலோடு புகைகிறதாம்.''”
"செய்தித்துறையில் சலசலப்பு அதிகமாத் தெரியுதே?''”
"நானும் ஒரு முக்கியமான செய்தியை உன் முலம் பகிர்ந்துக்கறேன். அண்மையில், திருவள்ளூர் மாவட்ட நீர்வள ஆதார அமைப்பின் பொறியாளர்கள் கூட்டம், அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்ட துறை அமைச்சரான துரைமுருகன், "இனி நீங்கள், டிரான்ஸ்பர் கேட்டு, எம்.எல்.ஏ., மாவட்டம்னு அலையவேண்டாம். நேரடியாகவே என்னிடம் வாருங்கள். தரச்சொல்கிறேன். அதேபோல, காண்ட்ராக்டர்களிடமும் சொல்லுங்கள். ஆள் பிடித்துக் கொண்டு என்னிடம் வராமல், நேரடியாக என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள்'னு அதிரடியாகச் சொல்லியிருக்கிறார். இதைக்கேட்டு அதிகாரிகள் அனைவரும் திகைத்திருக்கிறார்கள்.''’