"சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்! சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம்!' எனும் கருப்பொருளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு, வி.சி.க. தலைவர் தொல்.திருமா வளவனின் 60வது பிறந்தநாள் விழா, ஒரு நாள் முன்னதாகக் கொண்டாடப்பட்டது.
டெல்லி செல்லும் பரபரப்பில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் பங்கேற்றது கவனத்தை ஈர்த்தது. "திருமாவை அன்று என் அப்பா வாழத்தினார், இன்று பிள்ளை வாழ்த்துகிறேன். பெரியா ரைப் போல, கலைஞரைப் போல சகோதரர் திருமா இந்த தமிழ்ச் சமூகத்திற்கு தேவை. அதனால் நீண்டநாள் வாழவேண்டும். "ஆரி யத்துக்கு எதிரான அனைத்தும் திராவிடம்தான்' என்று. ஒற்றை வார்த்தையில் திருமா விளக்கி விட்டார். இது ஏதோ அரசியல் ஆ
"சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம்! சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம்!' எனும் கருப்பொருளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு, வி.சி.க. தலைவர் தொல்.திருமா வளவனின் 60வது பிறந்தநாள் விழா, ஒரு நாள் முன்னதாகக் கொண்டாடப்பட்டது.
டெல்லி செல்லும் பரபரப்பில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் பங்கேற்றது கவனத்தை ஈர்த்தது. "திருமாவை அன்று என் அப்பா வாழத்தினார், இன்று பிள்ளை வாழ்த்துகிறேன். பெரியா ரைப் போல, கலைஞரைப் போல சகோதரர் திருமா இந்த தமிழ்ச் சமூகத்திற்கு தேவை. அதனால் நீண்டநாள் வாழவேண்டும். "ஆரி யத்துக்கு எதிரான அனைத்தும் திராவிடம்தான்' என்று. ஒற்றை வார்த்தையில் திருமா விளக்கி விட்டார். இது ஏதோ அரசியல் ஆதாயத்திற்கான கூட்டணி இல்லை, அதைத் தாண்டி தி.மு.க., வி.சி.க. நட்பு என்பது கொள்கை உறவு. ஆகையால்தான் எக்காலத் திலும் இணைந்தே இருப்போம். இதை யாராலும் பிரிக்கமுடியாது.
தமிழர்கள் நாகர்கள், நாகர்கள்தான் திராவிடர்கள். இந்நாட்டின் பூர்வகுடிகள் என புரட்சியாளர் அம்பேத்கர் எடுத்துரைத்துள்ளார். தி.மு.க.வின் கொள்கை எப்போதும் மாறாது. ஒன்றிய அரசிடம் நான் காவடியா தூக்கப் போகிறேன்? கை கட்டி, வாய் பொத்தியா உத்தரவைக் கேட்டு வருகிறேன்? நான் கலைஞ ரின் பிள்ளை என்று மு.க.ஸ்டா லின் சொன்னபோது, அரங்கத்தில் இருந்த வி.சி.க.வினரும் தோழ மைக் கட்சியினரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ்.ஸுடன் தி.மு.க. வுக்கு உறவு இல்லை என்பதை தன் பேச்சில் வலியுறுத்திய முதல்வர், சனாதன சக்திகளைத் தனிமைப்படுத்துவோம் என்ற முழக்கத்தை நானும் உங்களோடு சேர்ந்து வழிமொழிகிறேன்'' என்றார். அதன்பிறகு, வி.சி.க. நான்கு சட்டமன்ற உறுப்பினர் களின் சார்பில் 60 கிராம் செயினை திருமாவளவனுக்கு முதலமைச்சர் அணிவித்தார்.
விழாவில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, "அடக்கு முறை, சாதித் துவேசத்தை ஒழிக்கப் பாடுபட்டவர் திருமா. இதில் ஆர்வமுள்ளோரை இணைத்துக்கொண்டவர். இந்த 40 ஆண்டுகளில் பல்வேறு துன்பங்களைச் சந்தித்தார். அவர், அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடி, இன்னும் பல்லாண்டு காலம் வாழவேண்டும்'' என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "எங்களுடையது, பதவிக் கூட்டணி அல்ல, கொள் கைக் கூட்டணி என கேரள மாநாட்டில் கலந்துகொண்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். நமது கொள்கைக் கூட்டணிக்கு பின்னடைவு வந்ததே கிடையாது. நண்பன் யார், எதிரி யார் என்பதை நாம் மட்டும் தெரிந்துகொள்ளாமல் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். திருமாவளவன், "சனாதன எதிர்ப்பு மாநாடு' நடத்தி, அதனைச் சரியாகத் தெரியப் படுத்தி வருகிறார். இங்கு ஏதேதோ வித்தைகளைச் செய்து தமிழகத்தில் காலூன்ற பார்க் கிறார்கள் சனாதன சக்திகள். அது ஒரு போதும் நடக்காது. அதைத் தடுக்க திருமா எனும் ஒரு ஆயுதம்போதும்'' என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில். "இன்று இந்தியாவே முதல்வரை உற்றுப் பார்க்கிறது. உங்களைக் குறைத்து மதிப்பிட்ட வர்கள், இன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் குரைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அண்ணா, பெரியாரின் இயக்கத்தை முன்னெடுத்தபோது அவரது மறைவிற்குப்பிறகு பெரியாருக்கு யாரும் இல்லை என்றனர். அதன்பின்னர் பெரி யாரை வலிமைப்படுத்த கலைஞர் வந்தார். பெரியாரை அண்ணா செழுமைப்படுத்தினார், அதனை கலைஞர் வலிமைப்படுத்தினார், அதனை நீங்கள் (ஸ்டாலின்) முழுமைப்படுத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றத் துடிக்கிறார்கள்.
இந்தியாவின் தலைநகர் வாரணாசி ஆக்கப்படும். வர்ணா சிரம தர்மம் தான் அரசியலமைப் புச் சட்டம் என்றால், இந்தியா தாங்காது. அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றால் ஒரே நம்பிக்கை நீங்கள்தான். நாங்கள் உங்களோடு உள்ளோம்'' என்றார்.