தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பாராட்டு தெரிவிப்பதற்காக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற வாழ்த்தரங்கக் கூட்டத்தில், ஆசிரியர் நக்கீரன் கோபால், உதயநிதி ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போதுள்ள ஒன்றிய அரசால், தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து மிகவும் அழுத்தமான தொரு உரையை நிகழ்த்தினார். அவரது உரையிலிருந்து முக்கியமான சில பகுதிகள்...

cc

Advertisment

"தமிழகத்துக்கு முதலமைச்சராக வந்தால் ஆட்சி நடத்துவது மட்டும் சவால் அல்ல. நம்மை அடியோடு வீழ்த்திவிட வேண்டுமென்ற எண்ணத் தில் எதிரணி செய்கின்ற சதிதான் மிகப்பெரிய சவால். நம்முடைய மரத்தினுடைய வேரையே கிள்ளி எறிவதற்கு ஒரு சவால், ஒரு சதி இந்த நாட்டிலே நடைபெறுகிறது. நாம் யாரென்பதை முதலிலே புரிந்துகொள்ள வேண்டும். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவன், நான் காங்கிரஸைச் சார்ந்தவன், நான் சென்னை மாவட்டத்தைச் சார்ந்தவன், நான் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்தவன், நான் விவசாயி, தொழிலாளி, ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர்... இவையெல்லாம் அடையாளங்கள். எனக்கு வேறு அடையாளம். உங்களுக்கு வேறு அடையாளம். கவிஞருக்கு ஒரு அடையாளம். நக்கீரன் கோபால் அவர்களுக்கு ஒரு அடையாளம். ஒரு மனிதனுக்கு ஒரு அடையாளமல்ல, பல அடையாளங்கள் இருக் கின்றன. ஆனால் நாம் யாரென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நம்முடைய இனம் என்ன, நம்முடைய மொழி என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாகரிகத்தை தீர்மானிப்பது இனமும், மொழியும் தான்.

இன்றைக்கு கீழடியிலும் மற்ற ஊர்களிலும் அகழாய்வு நடைபெறுகிறது. அந்த அகழாய்வு என்ன சொல்கிறது? இன்று தமிழர்களாக இருப்பவர்கள், தமிழ் இனம், தமிழ் மொழி என்பது இன்று நேற்று தோன்றியதல்ல, 3500 ஆண்டு களுக்கு முன்னர் இந்த இனம் இருந்தது, இந்த மொழி இருந்தது என்று ஆராய்ச்சி சொல்கிறது. ஆக, நம்முடைய உண்மையான அடையாளம் நம்முடைய இனம், நம்முடைய மொழி. மொழி அழிந்தால் இனம் அழிந்துவிடும். இனம் அழிந்தால் மொழி அழிந்துவிடும். தமிழ் மொழியும், தமிழ் இனமும் இன்று மிகப்பெரிய சவாலைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மொழி, தமிழ் இனத்துக்கு ஜாதிப்பாகுபாடு கிடையாது. தமிழ் மொழி, இனம் என்று வந்துவிட்டால் ஜாதிப் பாகுபாடு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. மதம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. ஆனால் இன்று மொழி, இனத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு வேறு அடையாளத்தை உருவாக்குகிறார்கள். என்ன அடையாளம்? "நீ இந்து. இந்திதான் இந்த நாட்டி னுடைய தேசிய மொழி. இந்த அடையாளங்களை உருவாக்கி, இந்த அடையாளத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் முயற்சி செய்கிறார்கள்.

Advertisment

cc

நம்மை இணைக்கின்ற அடையாளங்கள் தமிழ் மொழி, தமிழ் இனம். நம்மை வேறுபடுத்தி, பிளவுபடுத்தும் அடையாளங்கள் 'நீ இந்து, இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி, ஆட்சி மொழி' எனக்கூறுவது. இந்து என்று சொல்லும்போது, ஏறத்தாழ 20% இந்திய மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 80% இந்துக்கள். இந்து என்று சொல்வதில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஒன்றும் தப்பில்ல. ஆனால், இந்தியனாக இருக்க வேண்டுமென்றால் இந்துதான் உன்னுடைய அடை யாளம் என்றால், 20% மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. 14.2% இஸ்லாமி யர்கள், 7.3% கிறிஸ்தவர்கள், 1.7% சீக்கியர்கள் மற்ற மதத்தைச் சார்ந்த 2 சதவிகிதத்தினர் ஒதுக்கப்படு கிறார்கள். தமிழ் மொழி, தமிழ் இனம், முஸ்லிமை, கிறிஸ்துவர்களை, இந்துவை இணைக்கிறது. ஆனால் இந்து தான் உனது அடையாளம் என்று சொல்லும்போது முஸ்லிம்களை, கிறிஸ்தவர்களை விலக்குகிறது, பிளக்கிறது, தனிமைப்படுத்துகிறது.

இதைத்தான் இந்த மத்திய அரசு செய்துவரு கிறது. ஒரு அரசு, ஒரு மதத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது. ஒரு அரசு, ஒரு பிரதமர், ஒரு முதலமைச்சர், அரசு பொறுப்பில் இருக்கக்கூடிய அதிகாரிகள், நீதிபதி கள் எல்லோரும் ஒரு மதத்தோடு அடையாளப் படுத்திக்கொள்ளக் கூடாது. அதுதான் மதச்சார் பின்மை. நான் அரசுப் பொறுப்பில் இருக்கின்ற வரை ஒரு மதத்தோடு என்னை அடையாளப் படுத்திக்கொள்ளக் கூடாது. என்னைப் பொறுத்த வரை நான் நடுவராக இருப்பேன். எல்லா மதமும் என்னுடைய மதம் என்று சொல்லணும். தனிப்பட்ட வாழ்க்கையில் அடையாளப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அரசு என்று வந்துவிட்டால் ஒரு மதத்தோடு அரசுப் பொறுப்பில் இருக்கறவங்க, அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது.

ஆனால் இங்கே என்ன நடக்கின்றது? இந்திய பிரதமர் உஜ்ஜெயினிக்குச் சொன்றாலும் சரி... காசி, வாரணாசிக்குச் சென்றாலும் சரி, முழுக்க முழுக்க, நான் இந்து... நான் இந்து... நான் இந்து மதத்தை மட்டுமே பேசுவேன், இந்துக் கோவில்களுக்கு மட்டுமே செல்லு வேன், இந்து விழாக்களில் மட்டுமே கலந்து கொள்வேன் என்றால், நீங்கள் அந்த 20% மக்களில் ஒருவராக இருந்தால், நீங்கள் இஸ்லாமியராக இருந்தால், நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், நீங்கள் சீக்கியராக இருந்தால் எந்த அளவுக்கு ஒதுக்கப் படுகிறீர்கள் என்பது உங்களுக்கு அப்போதுதான் புரியும். உதாரணத்துக்கு, இன்று அமெரிக்க ஜனாதிபதி, வெள்ளை நிறத்தவர்தான். "நான் வெள்ளை நிறத்து மக்களின் நிகழ்ச்சிகளில்தான் கலந்துகொள்வேன், வெள்ளை நிறத்து மக்களின் விழாக்களில்தான் கலந்துகொள்வேன், வெள்ளை நிறத்து மக்கள் கூடுகின்ற இடத்தில்தான் நான் இருப்பேன் என்று சொன்னால் அந்த கறுப்பின மக்கள் எந்த அளவுக்கு துன்பப்படுவார்கள் என்பதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இன்று அந்த வகையிலே இந்து மதத்தோடு தன்னை முழுக்க முழுக்க அடையாளப்படுத்திக்கொண்டு ஒரு மத்திய அரசு இருக்கிறதென்றால், 20 சத விகித மக்களை ஒதுக்குகிறது, விலக்குகிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அது அரசியலில் வெளிப்படுகிறது.

cc

உத்தரபிரதேச சட்டசபையிலே 403 பேர் இருக்கிறார்கள். 20% இஸ்லாமியர்கள் வசிக்கும் இங்கே ஒரு இஸ்லாமியரைக்கூட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போடவில்லை. இந்தியாவில் 14 சதவீதம்பேர் இஸ்லாமியர்கள், உத்தரப் பிரதேசத்திலோ 20 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். அதேபோல் குஜராத்தில் 182 இடங்கள். ஒரு தேர்தலில் அல்ல... 2012, 2017 ஆகிய இரண்டு தேர்தல்களிலுமே பாரதிய ஜனதா கட்சி ஒரு இஸ் லாமியரைக்கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. ஆக, இந்தியாவில் மத அடிப்படையிலே பிளக்க முற்படக்கூடிய சவாலை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த கூட்டம் தான் தமிழ்நாட்டிலே எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, ஊர்வலம் நடத்துகிறேன், போராட்டம் நடத்துகிறேன் என்று புகுந்திருக்கிறது. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப் படாதுன்னு பழமொழி இருக்கு. இந்த நச்சு எண் ணங்கள் புகுந்த தமிழ்நாடு, நாம் நினைத்த தமிழ் நாடாக, நாம் நேசிக்கிற தமிழ்நாடாக இருக்காது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை எச்சரித்துச் சொல்ல விரும்புகிறேன்.

அதைவிடப் பெரிய சவால், சதி என்ன வென்றால், இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி, இந்திதான் ஆட்சி மொழி என்று பல ஆண்டுகளாக நாம் நம்புகிறோம். இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன, அரசியல் சாசனத்தில் 17, 18 மொழிகளுக்கு இடம் தந்திருக்கின்றது. அதில் ஆங்கிலமும், தமிழும், இந்தியும், மற்ற மொழிகளும் இருக்கின்றன. அனைத்து மொழிகளும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்று நாம் நம்புகிறோம். பல நாடுகளில் இரண்டு, மூன்று மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கின்றன. பெல்ஜியத்தில் இரண்டு மொழிகள் ஆட்சி மொழிகள், இலங்கையில் மூன்று மொழிகள் ஆட்சி மொழிகள். சிங்கப்பூரில் நான்கு மொழிகள் ஆட்சி மொழிகள்.. ஆக, இந்தியாவில் ஒரு மொழிதான் இருக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. இதை உணர்ந்துதான் ஜவஹர்லால் நேரு, "இந்தி பேசாத மொழிகள் விரும்பும்வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும்' என்று உறுதிமொழி தந்தார். அதை மீண்டும் இந்திராகாந்தி சொன்னார். "என் தந்தை சொன்னதையே நானும் சொல்கிறேன். இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்கும்' என்றார். ஆனால் தற்போது இந்தி மொழியைத் திணிக்கும் வேலையை மத்திய அரசு செய்துவருகிறது. இந்த சவாலையும் முறியடிக்க வேண்டியுள்ளது. இன்று என்ன சொல்கிறார்கள்? மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மொழிக்கான நிலைக்குழு, அனைத்து கேந்திரிய வித்யாலாக்களில், அனைத்து ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களில் இந்திதான் பயிற்சி மொழியாக கட்டாயமாக இருக்குமென்று பரிந்துரை செய்கிறது. அப்படியானால், இந்தி மொழி பேசாத மாநிலங்களுடைய மாணவர்கள் அந்த கல்வி நிலையங்களில் சேரவே முடியாதா என நான் கேட்டதற்கு இன்றுவரை பதிலில்லை. அதேபோல, அரசு வேலை தொடர்பான தேர்வு களுக்கு இந்திதான் தேர்வு மொழியாக இருக்கு மென்று பரிந்துரைக்கிறார்கள். அப்படியானால் இந்தி தெரியாதவர்கள் ரயில்வே தேர்வு, யு.பி.எஸ்.சி. தேர்வு, பாதுகாப்புத்துறை தேர்வு ஆகியவற்றை எழுதவே முடியாதா என்று நான் கேட்டதற்கும் பதிலில்லை. மூன்றாவது பரிந்துரையாக, அரசு வேலைகளில் இருப்பவர்கள் இந்தியிலே தங்கள் அலுவல்களைச் செய்ய முடியவில்லையென்றால் ஏனென்று விளக்கம் கேட்போம் என்று கூறு கிறார்கள். அப்படியானால் தமிழன் ஒருவன் வேலை பார்க்கும்போது இந்தியில் குறிப்பு எழுத முடியாது என்றால் விளக்கம் கேட்பீர்களா? நான்காவதாக, பல்கலைக்கழகங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை பயிற்சி மொழியாக நுழைப்போம் என்கிறார்கள். இந்தி மட்டும்தான் போகப்போக பயிற்சி மொழி யாக வருமென்றால் இனி எதிர்காலத்தில் அந்த பள்ளிகள், கல்லூரிகளில் இந்தி மொழி பேசாத மாணவர்கள் சேர முடியாதா? இது மொழிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால். நம்முடைய இன ஒற்றுமைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால்.

நாம் தென்னாட்டில், தமிழ்நாட்டில் இருப்ப தால் நம்முடைய மொழிக்கு, அடையாளத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவாலை எப்படிச் சந்திப்பது என்று யோசித்து மிகவும் சாதுர்யமாக "திராவிட மாடல்' என்ற விதையை விதைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்று நம்புகிறேன். எப்படி தந்தை பெரியார் அவர்கள், அவர் காலத்தில் அவர் விதைத்த விதை இருக்கே, இவ்வளவு பெரிய விருட்சமாக வளருமென்று யாரும் நினைக்க வில்லை. எல்லாம் அழிந்துபோய்விடும் என்று நினைத்தார்கள். பகுத்தறிவு, தன்மானம், சுயமரி யாதை என்ற விதைகளை விதைத்தவர் தந்தை பெரியார். நீங்கள் கொண்டாடுவது மாதிரிதான் நாங்களும் அவரை கொண்டாடுகிறோம். பல பேருக்குத் தெரியாது, தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராக இருந்தவர். ஆகவே நாங்களும் அவரை பாட்டனாகத்தான் நினைக் கிறோம். நீங்களும் அவரை பாட்டனாகத்தான் நினைக்கிறீர்கள்'' என்றார்.