"ஹலோ தலைவரே, வரும் புதிய ஆண்டில் ஜி-20 இந்தியாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருக்கு.''”

"ஆமாம்பா, உலகின் பலம் வாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்புக்குப் பெயர்தானே ஜி-20. அப்ப அத்தனை நாட்டுப் பிரதமர்களும் அதிபர்களும் இதில் கலந்துக்குவாங்களே''”

"உண்மைதாங்க தலைவரே, இந்தியா, அமெரிக்கா, அர்ஜெண்டினா, கனடா, பிரேசில், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், மெக்சிகோ, இத்தாலி, ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, சீனா, துருக்கி உள்பட முக்கியமான 20 நாடுகளின் கூட்டமைப்புக்குப் பெயர்தான் ஜி-20. வருடத்துக்கு ஒருமுறை ஜி-20 நாடுகளின் தலைவர்கள் ஏதாவது ஒரு நாட்டில் ஒன்று கூடி, உலகம் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள். அந்த வகையில் அடுத்த மாநாட்டை, 2023-ல் இந்தியா தலைமை ஏற்று நடத்த இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 2023-ல் இந்த மாநாட்டை நடத்தலாம்னு முடிவெடுக்கப் பட்டிருக்கு.''”

"அப்ப ஏற்பாடுகள் பிரமாண்டமாக இருக்கும்னு சொல்லு?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, இந்த மாநாட்டை மிக பிரம்மாண்டமாகவும், மிகவும் சிறப்பு வாய்ந்த தாகவும் நடத்திக்காட்டணும்னு பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு இப்போதே தொடங்கி விட் டது. அதன் ஒரு கட்டமாக, மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறார் மோடி. இதில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். இவர்களைப் போலவே அனைத்து மாநில கவர்னர்களும், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் கூட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங் கேற்க இருக்காங்க.''”

"அப்ப தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் இந்த கூட்டத்திற்கான அழைப்பு வந்திருக்குமே? அவர் பங்கேற்கிறாரா?''”

Advertisment

rr

"தமிழக முதல்வர் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு, பிரதமர் மோடியே இந்தக் கூட்டத்திற் கான அழைப்பை விடுத்திருக்கிறாராம். அப்போது, இதில் பங்கேற்க ஸ்டாலின் இசைவளித்திருக்கிறார். இதற்காக அடுத்த வாரம் 2 நாள் பயணமாக அவர் டெல்லிக்குச் செல்ல இருக்கிறார். அவருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட சில உயர் அதிகாரிகளும் செல்ல இருக்கிறார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் என்னவிதமான கருத்துக்களை முன் வைப்பதுன்னு அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த மாநாடு, உலக அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாகப் பார்க்கப்படுகிறது.''”

"அ.தி.மு.க.வின் மாஜி மந்திரி விஜயபாஸ்கர் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களை சந்திச்சிருக்காரே?''”

ra

"மாஜி விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா வழக்கு இப்ப சூடு பிடிச்சிருக்கு. இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., அண்மை யில் தனது கூடுதல் குற்றப்பத்திரிகை யைத் தாக்கல் செய்திருக்கிறது. இதில் மாஜிக்களான விஜயபாஸ் கர், ரமணா மற்றும் குற்றத்தில் தொடர்புடைய அதிகாரிகள் சிலருடைய பெயர்களையும் சி.பி.ஐ. அதிரடியாக இணைத்திருக் கிறது. இதன் விசாரணை தீவிர மாகக் கையாளப்படுவதால் இந்த வழக்கில் சிக்கியுள்ளவர்களுக்கு, இனி ஏகப்பட்ட சிக்கல்களும் நெருக்கடிகளும் வரப்போகுதுன்னு, காவல்துறையிலேயே டாக் அடி படுது. இதனால் மிரண்டுபோன விஜயபாஸ்கர், தன்னைக் காப்பாற் றிக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் டெல்லி சென்று, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவையும், ஒன்றிய அமைச்சர் முருகனையும் சந்தித்தாராம்.''

"விஜயபாஸ்கர் எதிர்பார்த்தது அங்கே நடந்ததா?''”

"டெல்லிக்கு மிகுந்த ஆர்வத்தோடும் பதட்டத்தோடும் சென்ற விஜயபாஸ்கருக்கு, முகத்தில் அடித்தாற்போல் ஏமாற்றமான பதில்தான் கிடைத்ததாம். குறிப்பாக ஜே.பி.நட்டா, இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் உதவி கேட்டு இங்கே வராதீங்க. சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் ஒன்றிய அரசு தலையிடாது. உங்க கோரிக்கையை பிரதமரிடம் ஒரு தகவலாகச் சொன்னால்கூட அவர் ரசிக்கமாட்டார். அதனால் வழக்கை எதிர்கொள்ளும் வழியைப் பாருங்கள்னு அழுத்தம்திருத்தமாகச் சொல்லிவிட்டாராம். அதேபோல் ஒன்றிய அமைச்சரான முருகனும், ஐயா ஆளை விடுங்கன்னு நழுவிவிட்டாராம்.''”

"அப்ப விஜயபாஸ்கரின் நிலை?''”

rr

"அப்செட் மூடில், அடிபட்ட பந்தாக சென்னைக்குத் திரும்பிய விஜயபாஸ்கரிடம், என்ன நடந்ததுன்னு ஆர்வமாக விசாரிச்சிருக் கார் எடப்பாடி. அதுக்கு விஜயபாஸ்கர், இங்கே நாம் ஆட்சியில் இருந்தபோது, நமக்கு ஓரளவு மதிப்பைக் கொடுத்தது டெல்லி. இப்ப அந்த மரியாதை கொஞ்சம்கூட இல்லை. நாம் எதைச் சொன்னாலும், அவர்கள் மிக நேர்மையானவர்கள் போலப் பேசுகிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க பல நெருக்கடிகளை நாம் பா.ஜ.க.வால் சந்திக்கப்போகிறோம். அ.தி.மு.க.வால் என்ன ஆதாயம்னு கணக்குப் போடும் அவர்கள், நமக்காக ஒரு துரும்பைக்கூட நகர்த்த விரும்பலை. உதவின்னு கேட்டுப்போனால், அவர்கள் கதவை அடைக்கிறார்கள் என்று சொல்ல, எடப்பாடியின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டதாம்.''”

"நீ இப்படிச் சொல்றே? ஆனால், எம்.ஜி.ஆர். பிறந்த நாளான வரும் ஜனவரி 17-ல் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. உருவாகும்னு பா.ஜ.க. தரப்பில் இருந்து செய்தி கசியுதே?''”

"ஒன்றுபட்ட அ.தி.மு.க.வாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் தி.மு.க.வை வீழ்த்த முடியும்னு நினைக்கும் பா.ஜ.க. மேலிடம், அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான இணைப்பு விழாவை ஜனவரி 17-ல் வைத்துக்கொள்ளலாம் என்றும், தொடர்ந்து எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. எடப்பாடியோ, இதற்கெல் லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டா ராம். இந்த நிலையில், அவரை பலவீனப்படுத்தும் வகையில், அவருடைய தளபதிகளாக இருக்கும் மாஜி மந்திரிகளான தங்கமணியையும் வேலுமணி யையும், எடப்பாடிக்கு எதிராகத் திருப்பும் முயற்சியில் இறங்கி இருக்கிறதாம் டெல்லி. இதனால் ஷாக்கான எடப்பாடி, என்னிடமிருந்து யாரைப் பிரித்தாலும் சரி, என்மீது எத்தனை வழக்கைப் போட்டாலும் சரி, என்னை சிறையிலேயே கொண்டுபோய்த் தள்ளினாலும் சரி, அவர்களில் ஒருவரைக் கூட நான் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று இப்போது உறும ஆரம்பித்து விட்டாராம்.''”

"மாவீரர் நாள் இன்னும் வீரியம் இழக்காமல் உலகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, விடுதலைக்கான யுத்தத்தில் உயிர்த்தியாகம் செய்த விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக நவம்பர் 27, கடைப்பிடிக்கப்படுது. ஒவ்வொரு வருசமும் இந்த மாவீரர் நாளில், மக்கள் முன் தோன்றி உரை நிகழ்த்துவார், தமிழீழ புலித்தலைவர் பிரபாகரன். அதை உலகமே உற்றுக்கேட்கும். இலங்கை உள் நாட்டு யுத்தம் 2009-ல் முடிவுக்கு வந்த பிறகு மாவீரர் நாளின் போது அவர் தோன்றுவதில்லை. ஆனாலும் கடந்த 13 ஆண்டுகளாக இந்த நாளினை ஈழத்தமிழர்களோடு, புலம் பெயர் தமிழர்களும், தமிழ்த்தேசிய விடுதலையை உயர்த்திப் பிடிப்பவர்களும் உருக்கத்தோடு கடைப்பிடித்தனர். கலக் கத்தோடு வீர வணக்கம் செலுத்தினர்.''

"தமிழகத்திலும் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டிருக்கே?''”

"இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் அங்கங்கே, மாவீரர் நாளைக் கடைப் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒழுங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனின் மாவீரர் நாள் உரை போல, ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், ஈழ இனப்படுகொலை விசாரணை குறித்து தமிழர்கள் எழுப்பும் எந்த ஒரு குரலுக்கும் உலக சமூகம் மௌனத் தையே பதிலாகத் தருவது மிகப்பெரிய வலியாக இருக் கிறது. மாவீரர்கள் கண்ட கனவை என்ன விலை கொடுத்தேனும் நிறைவேற் றிட தாயகத் தமிழகத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு வருகிறார்கள்’ என் றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அறிக்கையை ஒன்றிய -மாநில உளவுத்துறை அதிகாரிகள் எழுத் தெழுத்தாய் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.''”

rr

"இனி தமிழீழம் சாத்தியமில்லை என்கிற குரலைச் சிலர் எழுப்புகிறார்களே?''”

"தமிழுணர்வுக்கு எதிராக எப்போதும் கொடி பிடிக்கும் சிலர்தான், இப்படிப்பட்ட குரலையும் சலிக்காமல் எழுப்பி வருகிறார்கள். மூத்த வழக்கறிஞரும் ஈழ ஆதரவு செயற்பாட்டாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய ஈழத் தமிழர் களுக்கான வெளிச்சம் குறித்து, கனமான குறிப்புகள் அடங்கிய சில ஆவணங்கள் அண்மையில் ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து பிரதமரின் உத்தரவின் பேரில், வெளியுறவுத்துறை அதிகாரிகளுடனும் அஜீத் தோவல் விவாதித்துள் ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இதனை மையமாக வைத்து அஜீத் தோவல் விரைவில் இலங்கைக்கு செல்ல இருக்கிறாராம். அப்போது ஈழத் தமிழர் பிரச்னை, அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி நகரும் வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதை வைத்து, நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டில் ஓட்டுவாங்க நினைக்கிறாராம் மோடி.''”

"கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை விவகாரத்தில் உயர்நீதி மன்ற மதுரைக்கிளை அதிரடி கிளப்பியிருக்கிறதே?''”

rr"கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற யுவராஜ் தரப்பின் மேல்முறையீட்டு வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்துவருகிறது. இதன் விசாரணை 25-ஆம் தேதி, நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேசன் அமர்வு முன்பாக வந்தபோது, சாட்சியம் அளித்த சுவாதி, கோகுல்ராஜை காதலிக்கவில்லை என்றும், யுவராஜை யார் என்றே தெரியாது என் றும் பிறழ்சாட்சியம் அளித்துத் திகைப்பூட்டி னார். வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் பிறழ் சாட்சியங்கள் தரப்பட்டால், அதை அப்படியே நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள் வதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த அமர்வோ, வாழ்க்கையில் சத்தியமும் நியாயமும் தர்மமும்தான் முக்கியம். சாதி முக்கியமில்லை. உண்மையை மறைக்கும் பட்சத்தில் உங்கள் மீது கிரிமினல் நட வடிக்கை எடுக்கப்படும் என்று சுவாதிக்கு கடுமையாகவே எச்சரிக்கை விடுத்தது. நீதி பதிகளின் இந்த அதிரடிப் போக்கு, பலருக் கும் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது.''

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக் கறேன். போனமுறை, தாம்பரம் டி.சி. மூர்த்தி பற்றி நமக்கு வந்த சில தகவல்களைப் பற்றி நாம் பேசிக்கிட்டோம். ஆனால் நம்மைத் தொடர்பு கொண்ட அவர் தரப்பு, "தாம்பரம் வந்த பிறகு நான் 18 டிரைவர்களை மாற்றியதாக சொல்லப்பட்ட தகவல் தவறானது. தூரம் உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி, அவர்களாக மாறுதல் கேட்டதால் 6 ஓட்டுநர்கள் மட்டுமே மாற்றப்பட்டார்கள். நடுவழியில் காரை நிறுத்திவிட்டு ஒரு ஓட்டுநர் சென்றதாகச் சொல்லப்பட்டதிலும், உண்மை வேறு. அந்த ஓட்டுநர் திடீரென டயேரியாவுக்கு ஆளானதால், ஜெமினி பாலத்தருகே வாகனத்தை நிறுத்தி அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அண்ணாசாலை காவல் நிலையத்தில் இருந்து ஒரு ஓட்டுநரை நான் அழைத்துக் கொண்டேன். அதேபோல் மெமோ பற்றியும், இப்போதைய அமைச்சருடன் கடந்த ஆட்சிக்காலத்தில் நான் முரண்பட்டிருந்ததாகச் சொல்லப் பட்டதிலும் உண்மை இல்லை" என்று தெரிவிக்க, அதை இங்கே பதிவு செய்கிறேன்.''

இறுதிச்சுற்று!

முதல்வர் தொடங்கிவைத்த நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள்!

திருச்சி மாவட்டம், காட்டூர் -பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் "வானவில் மன்றம்' மற்றும் நடமாடும் அறிவியல் ஆய்வகங்களை, நவம்பர் 28, திங்களன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டா-ன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த வானவில் மன்றம் மூலம், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான கல்வி அறிவை செயல்முறை விளக்கங் கள் மூலம் கற்றுக்கொடுப்பது இலக்காக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கென முதற்கட்டமாக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தைத் தொடங்கிவைத்த முதல்வர், அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட செயல்முறை விளக்க அறிவியலை நேரில் பார்வை யிட்டார். இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருநாவுக்கரசர் எம்.பி., திருச்சி சிவா எம்.பி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

-துரை.மகேஷ்