கேரளாவில் ஊரடங்கு நேரத்தில் மது கிடைக்காத விரக்தியில் குடிப்பழக்கத்தை கைவிட முடியாத சிலர் தற்கொலை செய்து கொண்டதாலும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாலும், மது கிடைக்காத விரக்தி மனநிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு பாஸ் தருவதற்கான உத்தரவை அந்த அரசாங்கம் பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துவிட்டது. அதுபோல டாஸ்மாக் மூடல், தமிழகத்திலும் மரணங்களை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷை குடித்து பலியாகியுள்ளனர்.
பாட்டில் பதுக்கல்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், மதுக்கடைகளை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்ததால், சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்களை எடுத்துச் சென்று, தனியாருக்குச் சொந்தமான மிளகாய் வத்தல் வியாபாரிகள் மன்றத்தில் வைத்து பாதுகாக்கின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையினர், அவசர அவசரமாக கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் இருப்புகளைக் கணக்கிட்டு, அதனை மாவட்ட அலுவலகத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தனர். ஆனாலும், 144 தடையுத்தரவு அறிவித்ததுமே, ஆளும்கட்சியினரின் ஆசியோடு பார் நடத்துபவர்கள், பெட்டி பெட்டியாக அரசு விலைக்கே பாட்டில்களை வாங்கி பதுக்கிவிட்டனர்.
மாமூலான கைது நடவடிக்கை!
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை எம்.ஜி.ஆர். நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மது பாட்டில்கள் பிடிபட்டு, குமார், சந்திரன், செல்லத்துரை ஆகிய மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர். சங்கரன்கோவிலில் மூன்று இடங்களில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டி.எஸ்.பி. பாலசுந்தரம் நம்மிடம் ""கொரோனா தடுப்பு பணியில் முனைப்பாக இருந்தாலும், கள்ளத் தனமான மது விற்பனையை முடிந்த அளவுக்கு முடக்கியிருக்கிறோம்'' என்றார்.
குமரி மாவட்டம் கருங்கல்லில், நெருக்கடி யான நேரங்களில் நடமாடும் டாஸ்மாக் ஆக வலம் வருபவன், குமார். ரூ.105-க்கு விற்கப்படும் குவார்ட் டரை, போலீசுக்கு மாமூல் தந்து ரூ.350-க்கு விற்றான். கொள்ளை விலை என்பதால் கொதித் துப்போன ஒரு குடிமகன், குளச்சல் ஏ.
கேரளாவில் ஊரடங்கு நேரத்தில் மது கிடைக்காத விரக்தியில் குடிப்பழக்கத்தை கைவிட முடியாத சிலர் தற்கொலை செய்து கொண்டதாலும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாலும், மது கிடைக்காத விரக்தி மனநிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு பாஸ் தருவதற்கான உத்தரவை அந்த அரசாங்கம் பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துவிட்டது. அதுபோல டாஸ்மாக் மூடல், தமிழகத்திலும் மரணங்களை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷை குடித்து பலியாகியுள்ளனர்.
பாட்டில் பதுக்கல்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், மதுக்கடைகளை உடைத்து திருடும் சம்பவங்கள் தொடர்ந்ததால், சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்களை எடுத்துச் சென்று, தனியாருக்குச் சொந்தமான மிளகாய் வத்தல் வியாபாரிகள் மன்றத்தில் வைத்து பாதுகாக்கின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையினர், அவசர அவசரமாக கிராமப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் இருப்புகளைக் கணக்கிட்டு, அதனை மாவட்ட அலுவலகத்துக்கு கொண்டுபோய்ச் சேர்த்தனர். ஆனாலும், 144 தடையுத்தரவு அறிவித்ததுமே, ஆளும்கட்சியினரின் ஆசியோடு பார் நடத்துபவர்கள், பெட்டி பெட்டியாக அரசு விலைக்கே பாட்டில்களை வாங்கி பதுக்கிவிட்டனர்.
மாமூலான கைது நடவடிக்கை!
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை எம்.ஜி.ஆர். நகரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 மது பாட்டில்கள் பிடிபட்டு, குமார், சந்திரன், செல்லத்துரை ஆகிய மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர். சங்கரன்கோவிலில் மூன்று இடங்களில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டி.எஸ்.பி. பாலசுந்தரம் நம்மிடம் ""கொரோனா தடுப்பு பணியில் முனைப்பாக இருந்தாலும், கள்ளத் தனமான மது விற்பனையை முடிந்த அளவுக்கு முடக்கியிருக்கிறோம்'' என்றார்.
குமரி மாவட்டம் கருங்கல்லில், நெருக்கடி யான நேரங்களில் நடமாடும் டாஸ்மாக் ஆக வலம் வருபவன், குமார். ரூ.105-க்கு விற்கப்படும் குவார்ட் டரை, போலீசுக்கு மாமூல் தந்து ரூ.350-க்கு விற்றான். கொள்ளை விலை என்பதால் கொதித் துப்போன ஒரு குடிமகன், குளச்சல் ஏ.எஸ்.பி.யிடம் புகார் கூற, 300 பாட்டில் களோடு குமார் கைது செய்யப்பட்டான். தெருக்கடை கிருஷ்ணன் என்ற படை யப்பன், அரிசிப்பைக்குள் வைத்திருந்த 75 பாட்டில்களோடு பிடிபட்டான். காவல் துறையால் இவர்களைக் கைது செய்ய மட்டுமே முடிந்தது. கொரோனோ சூழ்நிலையால் இவர்கள் ரிமாண்ட் ஆகாமல், பெயிலில் வெளிவந்துவிட்டனர்.
ராஜபாளையம் தென்றல் நகரில் ஐயனார் என்பவன் சாராய ஊறலே போட்டிருந்தான். ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்திலுள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், சுந்தரநாச்சியார்புரம் போன்ற மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரங்களில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீட்டிலேயே காய்ச்சிய 2000 லிட்டர் கள்ளச்சாராயத்துடன் சமூக விரோதிகள் இங்கு பிடிபட்டுள்ளனர். மூணார் ஆறாம் மைல் பகுதியிலுள்ள எல்லப்பட்டி என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுவுக்கு மாற்றாக சகலமும்...
எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர், தக்கலை போலீஸ் லிமிட்டில் ரூ.300-க்கு நாளொன்றுக்கு 100 குவார்ட்டர் பாட்டில் சப்ளை செய்துவருகிறார். ஆளும்கட்சி பிரமுகர்களோ, நாகர்கோவில், கருங்கல், குலசேகரம், ஆரல் வாய்மொழி, துவரங்காடு, தடிக்காரன்கோணம், கொல்லங்கோடு, நித்திரவிளை போன்ற இடங்களில் உள்ள மனமகிழ் மன்றங்களில், போலீசார் உடந்தையுடன் அதிகாலையிலேயே ‘பாட்டில்’ விற்கின்றனர். எந்த பிராண்ட் சரக்கு வேண்டு மென்றாலும் கிடைக்கும். ஆனால், அதே பாட்டிலில் கிடைக்காது. ஏனென்றால், சரிபாதி தண்ணீர் கலந்துதான் விற் கிறார்களாம்.
பார்டரில் உள்ள காவல் நிலையங்களான களியக்காவிளை, கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை, பளு கல், அருமனை காவல் நிலை யங்களில், குமரி மாவட்டத்திலிருந்து கேரளா வுக்கும், கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கும் கடத்தி வரும்போது பறிமுதல் செய் யப்பட்ட இரு மாநில சரக்கு களும், பல நூறு லிட்டர்கள் ஸ்பிரிட்டும் காவலர்கள் கைகளில் சிக்க, அவர்களும் வியாபாரம் பார்க் கின்றனர். சீதப்பால், தெள்ளாந்தி பகுதியிலுள்ள பனைமரங் களில் இருந்து இறக்கப்படும் கள்ளில் மாத்திரை கலந்து அதிக போதையுடன் விற் பதும் நடக்கிறது. வாசுதேவ நல்லூர் பக்கமுள்ள உள்ளார் பகுதியில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவ ôரத்தில் விற்கப்படும் கஞ்சா, சோதனைச்சாலைகளில் பரிசோதனைக்காகப் பயன் படுத்தப்படும் ஸ்பிரிட்டில் பெப்சி, செவன்-அப் கலந்து குடிப்பது போன்றவற்றை, மதுவுக்கு மாற்றாக குடி மகன்கள் பயன்படுத்துவது, உயிருக்கே ஆபத்து விளை வித்துவிடும்.
வேலூரில் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் நடந்த மோதலில், 7 பேர் கொண்ட சாராய கும்பல் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில், படு காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர். இந்நிலையில்தான் புதுக்கோட் டை மாவட்டம் - கோட்டைப்பட்டி னத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா, அசன்மைதீன், அருண்பாண்டி ஆகிய மூவரும் ஷேவிங் லோஷனை குளிர் பானத்தில் கலந்து குடித்துவிட்டு, அவரவர் வீட்டுக்குச் சென்றனர். அங்கு தொடர்ந்து வாந்தி எடுத்ததால், மூவரும் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் அசன்மைதீனும் அருண்பாண்டியும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட, மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அன்வர்ராஜா அனுமதிக்கப்பட்டார்.
"செத்துடலாம்னு தோணுது..."
- உடல் நடுக்கத்தில் குடிமகன்கள்!
சாக்கடை அடைப்பு, பாத்ரூம் க்ளீனிங் செய்து வாழ்க்கையை நகர்த்திவரும் சேவுகப் பெருமாள், கடந்த 30 ஆண்டுகளாக மது அருந்தி வருபவர். ""பொண்டாட்டி புள்ளைங்க என்னை விட்டுட்டுப் போயி வருஷக் கணக்கா ஆச்சு... அன் னன்னைக்கு வேலை பார்க்கிறத வச்சு சரக்கு அடிச்சுட்டு இருந்தேன். இப்ப 105 ரூபாய் சரக்கை பிளாக்கில் 300 ரூபாய்க்கு விக்கிறான். ஒரு நாளைக்கு மூணு குவாட்டர் அடிச் சவனுக்கு, ஒண்ணு கிடைக் கிறதே இப்ப பெரிய விஷயம். கடையைத் திறந் தாகணும். இல்லைன்னா.. என்னுடைய சாவுக்கு எடப்பாடிதான் கார ணம்னு எழுதி வச்சிட்டு தூக்குல தொங்கிருவேன்."" என்று திகிலூட்டினார்.
சிங்கம்புணரியைச் சேர்ந்த சக்கரை, ""டாஸ்மாக் பார்ல வேலை பார்க்கிறேன். மொதல்ல.. சைடிஸ்ஸூக்காக கஸ் டமர்கிட்ட வாங்குற நூறு ரூபாய்க்கு எனக்கு 6 ரூபாய் கமிஷன். அப்புறம், கஸ்டமர் கொடுக்கிற டிப்ஸ், கமிசன் இதை வச்சே ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை தேறும். நாள் முழுக்க குடிப்பேன். இப்ப எனக்கு கட்டிங் கூட கிடைக்கல. செத்துட லாம்னு தோணுது."" என்று புலம்பினார். திண்டுக்கல்காரரான பெருமாள் ""ஆப்பு இல்லைன்னா குவாட்டர் அடிச்சிட்டுத் தான் கூலி வேலைக்கே போவேன். இப்ப, மறைச்சு மறைச்சு குவாட்டர் 300 ரூபாய்க்கு வித்தாங்க. அதையும் வாங்கி குடிச்சேன். இப்ப அந்தச் சரக்கும் கிடைக்கல. தண்ணியடிக்க வழியில்லாம போனதும், இப்ப கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிருச்சு. எப்பத்தான்யா இந்த கொரானா போய்த் தொலையும்? டாஸ்மாக்க திறப்பாங்க?''’ என்று பரிதாபமாகக் கேட்டார்.
மதுரையில் ஆட்டோ ஓட்டும் சிவா “105 ரூபா சரக்கு 350, 115 ரூபா சரக்கு 400-ன்னு கள்ள மார்க்கெட்ல விற்குது. போக்குவரத்த நிறுத்தி ஆட்டோ ஓட்டக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. பொழப்பும் போச்சு. குடிக்கிறதுக்கும் வழியில்ல. இப்படியே போய்க்கிட்டிருந்தா, குரோனா சாவைக் காட்டிலும் குடி நோயாளிங்க சாவு அதிகமாயிரும்''’ என்றார். போட்டோவுக்கு முகம் காட்ட மறுத்த அந்த மதுரைவாசி ""மூணு மடங்கு விலை கட்டுபடியாகாதுன்னு எல்லாரும் காந்தமலைக்கு படை யெடுக்கிறாங்க. அமைச்சர் ஏரியாவான செல்லூர்லயே ஊறல் போடறதா சொல்லுறாங்க. மதுரையை பொறுத்தவரைக்கும் நாகமலை, செக்கானூரணி போன்ற இடங்கள்ல கள்ளச்சாராயம் களை கட்டுது. சில வீடுகள்ல கள்ளச்சாராயம் கிடைக்குது. இதுவும் டிஜிடலுக்கு மாறிருச்சு. ஆமாங்க. கள்ளச் சாராயத்துக்கு வாட்ஸ்-ஆப் குருப்பே இருக்கு. அதுல எங்கெங்கே கள்ளச்சாராயம் கிடைக்கும்னு தகவல் பறிமாறிக்கிறாங்க''’ என்று அதிரவைத்தார்.
சுரண்டலோ சுரண்டல்!
மதுவகைகளை உற்பத்தி செய்யும் பாண்டிச் சேரி நிறுவனங்களில், குவார்ட்டர் விலை ரூ.12 தான். அதற்காக செலுத்தப்படும் கலால் வரி ரூ.38-ஐ சேர்த்து, டாஸ்மாக்கிற்கு ரூ.50-க்கு சப்ளை ஆகிறது. இதைத்தான், ரூ.110-க்கு டாஸ்மாக் விற் கிறது. ஊரடங்கால் டாஸ்மாக் மூடப்பட்டுள்ள தால், மது அடிமைகளின் தேவையை அறிந்து, பாண்டிச்சேரி நிறுவனங்களே, பாட்டில் மீது பதிக்கும் கலால் சீல் லேபிளை அகற்றிவிட்டு, குவார்ட்டர் பாட்டிலை ரூ.100 விலைக்கு கிரேடு கிரேடாக புரோக்கர்களிடம் தள்ளிவிடுகின்றன. இந்த வகையில், பாட்டில் ஒன்றுக்கு ரூ.80 லாபமாக கம்பெனிகளுக்கு கிடைக்கிறது. இந்தச் சரக்குகள்தான், ஆன்லைன் ஆர்டர் சரக்குகளைக் கொண்டுவரும் வாகனங்களில் பதுக்கப்பட்டு, ஏரியா ஏஜண்டுகளுக்கு வந்துவிடுகின்றன. இப்படித்தான் புளியங்குடிக்கு வரும் லோடு, அந்த ஏரியா புரோக்கர் மூலம் தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு போய்ச் சேர்கிறது. அதுபோல், கயத்தார் புரோக்கர் மூலம் தூத்துக்குடி மாவட்ட விற்பனையாளர்களுக்கும் போகிறது. ரூ.400 வரைக் கும் விற்கப்படுகிறது. கண்ணுக்குத் தெரிந்தே நடக்கின்ற மிகப்பெரிய சுரண்டல் இது.
சிகிச்சை பெற்றால் மீளலாம்!
‘மதுப்பழக்கம் உள்ள வர்கள் திடீரென்று நிறுத்தினால் என்னவாகும்?’ அரசு மருத்துவர் மதிவாணனிடம் கேட்டோம்.
""தினமும் மது குடித்து அதற்கு அடிமையாக இருப்பவர்கள், திடீரென நிறுத்தினால் ஏற்படும் விளைவுக்கு ஆல்கஹால் வித்டிராயல் சிண்ட்ரோம் என்று பெயர். யாரெல்லாம் அதிக அளவில் குடிக் கிறார்களோ, அவர்களுக்கு குடியை நிறுத்திய வுடன், கை, கால் நடுக்கம், வாந்தி வரும் உணர்வு, பதட்டம், தலைவலி, படபடப்பு, வியர்த்துக் கொட்டுதல். குழப்பமான மனநிலை. தூக்கமின்மை. அதிக இரத்த அழுத்தம். துர் கனவுகள், சில சமயங் களில் காய்ச்சல், வலிப்பு, நினைவுக் கோளாறு, உடம்பில் எறும்பு ஊர்வது மாதிரி, பின் குத்துவது மாதிரியான உணர்வுகள் ஏற்படுதல், காதில் யாரோ பேசிக் கொண்டிருப்பது மாதிரியான உணர்வு, கண் களுக்கு முன் விதவிதமான உருவங்கள் நெளிவது போன்ற உணர்வு தென்படும். இந்த மாற்றங்கள், மனதின் சம நிலையைப் பாதித்து நாளடைவில் ள்ங்ஸ்ங்ழ்ங் க்ங்ல்ழ்ங்ள்ள்ண்ர்ய் ஆகி, தற்கொலை செய்யும் எண்ணங்களை உருவாக்கும் வலிமை உடையவை. சீக்கிரம் வைத்தியம் செய்துகொண்டால், இதிலிருந்து எளிதாக மீண்டு வரமுடியும். இதை அறிந்துதான், குடிமக்களுக்கு சிறப்பு பாஸ் திட்டத்தை கேரள அரசு கொண்டுவர முயற்சித்திருக்கும் என்று நினைக்கிறேன்'' என்றார்.
‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என்பதை அறியாத வர் உண்டோ?
-அதிதேஜா, பரமசிவன், சக்தி, அண்ணல், மணிகண்டன், நாகேந்திரன், ராம்குமார்