"ஹலோ தலைவரே, தேர்தல் நேரத்தில் அதிரடி முடிவுகளுக்கும் எதிர்வினைகளுக் கும் பஞ்சமே இல்லை''”
"ஆமாம்பா, அ.தி.மு.க. வோடு ரகசியமாக டீலிங் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகளை, ராகுல் கூட கண்டித்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் எடப்பாடியுடன் ரகசிய டீலிங் கில் ஈடுபட்டது குறித்து கடந்த முறை நாம் பேசிக்கொண்ட செய்தி, இங்கு மட்டுமல்ல; டெல்லிவரை பரபரப்பை ஏற் படுத்தியிருக்கு. அ.தி.மு.க.வுடன் நடந்த அந்த ரகசிய பேச்சுவார்த் தைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர், காங்கிரஸின் அரசியல் வியூக அமைப்பாளராக இருக்கும் சுனில்தானாம். ஏற்கனவே எடப்பாடியின் அரசியல் ஆலோசகராக இருந்தவர்தான் இந்த சுனில். அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளி யேறினால்தான் உங்களுக்கு எதிர்காலம்னு அவர்தான் எடப்பாடிக்கு முதன்முதலில் அறிவுரை வழங்கினாராம். அப்போதே. அவர், காங்கிரஸில் இருப்பவர்களை உங்களுக்குச் சாதகமாகப் பேச வைக்கிறேன் என்றும் எடப்பாடியிடம் உறுதி கொடுத்திருந்தாராம். அதன் படிதான் இரு கட்சிகளுக்கும் இடையில் ஒரு இணைப்புப் பாலத்தை அமைக்க அவர் முயற்சி எடுத்தாராம்.''”
"ம்...''”
"இதைத் தொடர்ந்துதான், காங்கிரஸைச் சேர்ந்த சிலர் சில மாதங்களுக்கு முன்பு, அ.தி.மு.க. தரப்போடு, ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்துப் பேசினார்கள். அதில் ஜூம் மூலம் சுனிலும் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். இந்தத் தகவலையும் நாம் ஏற்கனவே பகிரங்கப்படுத்தி இருக்கிறோம். இந்த நிலையில், கூட்டணி குறித்து அவர்களிடையே பேச்சுவார்த்தை நடப்பது குறித்து கடந்தமுறை நாம் பேசிக்கொண்டது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தகவல், டெல்லியில் உள்ள காங்கிரஸ் சீனியரான கே.சி.வேணுகோபால் மூலம் ராகுல் காதுக்கும் போக, அதிர்ந்துபோன ராகுல், வியூக அமைப்பாளர் சுனிலையும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும் அழைத்து, தமிழக காங்கிரஸ் தனி டிராக்கில் போவது சரியல்ல. தமிழக முதல்வர் ஸ்டாலின் எனக்கு, மூத்த சகோதரரைப் போன்றவர். அவர் மனம் கோணும்படி எந்தவகை யான நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்று கண்டிப்புடன் கூறியதோடு, தி.மு.க.வுடன் சுமுகமாக தொகுதிப்பங்கீட்டை முடித்துக்கொள்ளுங்கள் என் றும் கறார் குரலில் அறிவுறுத்தியிருக்கிறாராம். அத னால் தமிழக காங்கிரஸின் மன நிலையில் பெரும்மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.''”
"சரிப்பா, அடுத்த பா.ஜ.க.வின் வேட்பாளர் பட்டியலில் நடிகை குஷ்புவின் பெயரும் இடம்பிடிக்கப்போகிறது என்கிறார்களே?''”
"ஏற்கனவே பா.ஜ.க. வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த 195 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த எவரின் பெயரும் இடம்பெறவில்லை. இந்த நிலை யில், தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெற்றிருக்கிறது தமிழக பா.ஜ.க. இதை யொட்டி வேட்பாளர்கள் பரிசீலனையும் நடந்திருக் கிறது. எனவே பா.ஜ.க.வின் தலைமை வெளியிடும் அடுத்த பட்டியலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும் என்கிறது கமலாலயத் தரப்பு. அதிலும் இந்தமுறை பெண்களுக்கு அதிக வாய்ப்
"ஹலோ தலைவரே, தேர்தல் நேரத்தில் அதிரடி முடிவுகளுக்கும் எதிர்வினைகளுக் கும் பஞ்சமே இல்லை''”
"ஆமாம்பா, அ.தி.மு.க. வோடு ரகசியமாக டீலிங் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகளை, ராகுல் கூட கண்டித்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் எடப்பாடியுடன் ரகசிய டீலிங் கில் ஈடுபட்டது குறித்து கடந்த முறை நாம் பேசிக்கொண்ட செய்தி, இங்கு மட்டுமல்ல; டெல்லிவரை பரபரப்பை ஏற் படுத்தியிருக்கு. அ.தி.மு.க.வுடன் நடந்த அந்த ரகசிய பேச்சுவார்த் தைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர், காங்கிரஸின் அரசியல் வியூக அமைப்பாளராக இருக்கும் சுனில்தானாம். ஏற்கனவே எடப்பாடியின் அரசியல் ஆலோசகராக இருந்தவர்தான் இந்த சுனில். அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளி யேறினால்தான் உங்களுக்கு எதிர்காலம்னு அவர்தான் எடப்பாடிக்கு முதன்முதலில் அறிவுரை வழங்கினாராம். அப்போதே. அவர், காங்கிரஸில் இருப்பவர்களை உங்களுக்குச் சாதகமாகப் பேச வைக்கிறேன் என்றும் எடப்பாடியிடம் உறுதி கொடுத்திருந்தாராம். அதன் படிதான் இரு கட்சிகளுக்கும் இடையில் ஒரு இணைப்புப் பாலத்தை அமைக்க அவர் முயற்சி எடுத்தாராம்.''”
"ம்...''”
"இதைத் தொடர்ந்துதான், காங்கிரஸைச் சேர்ந்த சிலர் சில மாதங்களுக்கு முன்பு, அ.தி.மு.க. தரப்போடு, ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்துப் பேசினார்கள். அதில் ஜூம் மூலம் சுனிலும் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். இந்தத் தகவலையும் நாம் ஏற்கனவே பகிரங்கப்படுத்தி இருக்கிறோம். இந்த நிலையில், கூட்டணி குறித்து அவர்களிடையே பேச்சுவார்த்தை நடப்பது குறித்து கடந்தமுறை நாம் பேசிக்கொண்டது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தகவல், டெல்லியில் உள்ள காங்கிரஸ் சீனியரான கே.சி.வேணுகோபால் மூலம் ராகுல் காதுக்கும் போக, அதிர்ந்துபோன ராகுல், வியூக அமைப்பாளர் சுனிலையும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும் அழைத்து, தமிழக காங்கிரஸ் தனி டிராக்கில் போவது சரியல்ல. தமிழக முதல்வர் ஸ்டாலின் எனக்கு, மூத்த சகோதரரைப் போன்றவர். அவர் மனம் கோணும்படி எந்தவகை யான நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்று கண்டிப்புடன் கூறியதோடு, தி.மு.க.வுடன் சுமுகமாக தொகுதிப்பங்கீட்டை முடித்துக்கொள்ளுங்கள் என் றும் கறார் குரலில் அறிவுறுத்தியிருக்கிறாராம். அத னால் தமிழக காங்கிரஸின் மன நிலையில் பெரும்மாற்றம் ஏற்பட்டிருக்கிறதாம்.''”
"சரிப்பா, அடுத்த பா.ஜ.க.வின் வேட்பாளர் பட்டியலில் நடிகை குஷ்புவின் பெயரும் இடம்பிடிக்கப்போகிறது என்கிறார்களே?''”
"ஏற்கனவே பா.ஜ.க. வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த 195 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த எவரின் பெயரும் இடம்பெறவில்லை. இந்த நிலை யில், தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெற்றிருக்கிறது தமிழக பா.ஜ.க. இதை யொட்டி வேட்பாளர்கள் பரிசீலனையும் நடந்திருக் கிறது. எனவே பா.ஜ.க.வின் தலைமை வெளியிடும் அடுத்த பட்டியலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும் என்கிறது கமலாலயத் தரப்பு. அதிலும் இந்தமுறை பெண்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தரத் திட்ட மிட்டிருக்கிறதாம் பா.ஜ.க. அந்த வகையில் மத்திய சென்னையில் நடிகை குஷ்பு களமிறக்கப்படலாம் என்கிறார்கள். அதேபோல, பிரபல கல்வியாளரும் தொழிலதிபருமான ஐசரி கணேஷை தென்சென் னையில் களமிறக்கவும் முடிவாகியிருக்கிறதாம்.''”
"அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேசிக் கொண்டிருந்த நடிகர் சரத்குமார், திடீரென பா.ஜ.க. அணியில் சேர்ந்துவிட்டாரே?''”
"அ.தி.மு.க.வுடன் சுமுகமாக டீலிங் பேசிக் கொண்டிருந்த ஜனநாயக மக்கள் கட்சித் தலைவரான நடிகர் சரத்குமார், இப்போது திடீரென பா.ஜ.க. அணியில் ஐக்கியமாகிவிட்டார். இதன் பின்னணியில் நடிகை குஷ்புதான் இருக் கிறாராம். சரத் மனைவியான நடிகை ராதிகாவிடம் குஷ்பு, நான் பா.ஜ.க.வுக்குப் போனதால் தூர்தர்ஷன் மூலம் எனக்கு நிறைய வாய்ப்புகள் தருகிறார்கள். நிறைய ஒன்றிய அரசின் சலுகைகளும் கிடைக்கின் றன. இதையெல்லாம் யோசித்துப் பார்த்து கூட்டணி பற்றி ஒரு நல்ல முடிவை எடுங்கள் என்று வேப்பிலை அடித்தாராம். இதனால்தான், எடப்பாடியிடமிருந்து ஜகா வாங்கினாராம் சரத். தற்போது பா.ஜ.க.விடம் டீலிங் பேசிய சரத்குமார், விருதுநகர் தொகுதியில் ராதிகாவைக் களமிறக்க விரும்புகிறேன் என்றாராம். அதற்கும் ஓகே சொல்லியிருக்கிறதாம் பா.ஜ.க., மேலும் நிறைய ஆஃபர்களும் சரத் -ராதிகா ஜோடிக்குத் தருவதாகச் சொல்லப் பட்டிருக்கிறதாம்.''”
"இந்தமுறை தமிழகம் வந்த பிரதமர் மோடியின் பெயரில் பெரும் பண மோசடி நடந்ததாக பா.ஜ.க.வுக்குள் சர்ச்சைகள் சுழன்றடிக்குதே?''”
"கடந்தவாரம் கல்பாக்கத்திலும் சென்னையிலும் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு டெல்லி திரும்பியிருக்கிறார் மோடி. அவர் கலந்துகொண்ட நந்தனம் பொதுக்கூட்டத்திற்கு 5 லட்சம் பேரைத் திரட்டுவோம் என்று டெல்லிக்கு உத்தரவாதம் கொடுத்த தமிழக நிர்வாகிகளால், வெறும் 25 ஆயி ரம் பேரைத்தான் திரட்ட முடிந்த தாம். இந்தத் தகவல் உளவுத்துறை மூலம் பா.ஜ.க. வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்குப் போக, அதைப் பார்த்த நட்டா, தமிழக பா.ஜ.க. தலைவர் களைத் தொடர்புகொண்டு, ’ஒவ்வொரு முறையும் இப்படித்தான் பொய்யான தகவல்களை தருகிறீர் கள்’ என ஏகத்துக்கும் கொந்தளித்தாராம். இதற் கிடையே, நந்தனம் கூட்ட ஏற்பாடுகளுக்காக 2 கோடி ரூபாயும், ஆட்களை திரட்டி வருவது, வாகன வாடகை உள்ளிட்ட செலவுகளுக்காக 2 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டதாம். ஆனால், இதில் 40 சதவீதத்தை செலவு செய்யாமல், பணமோசடி நடந் திருப்பதாக சில முக்கிய நிர்வாகிகள் டெல்லிக்குப் புகார்களை அனுப்பியிருக்கிறார்களாம். டெல்லியோ இதனைத் தீவிரமாக ஆராய்ந்து வரு கிறதாம். இதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் சிலருக்கு சரியான தண்டனை காத்திருக்கிறது என்கிறார்கள் கமலாலயத் தரப்பினர்.''”
"கூட்டணிக்கு நிர்பந்தம் கொடுத்துவந்த பா.ஜ.க. தலைமையை, தனது அதிரடியான நிபந்தனைகளின் மூலம் எடப்பாடி திகைக்க வைத்திருக்கிறார்னு சொல்லப்படுதே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வை எப்படியும் பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டுவந்து விடவேண்டும் என்று வரிந்துகட்டிய டெல்லி, பல்வேறு வகையிலும் அதற்கு நெருக்கடி கொடுத் தது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், எடப்பாடியைத் துரத்தினார். அவருக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த எடப்பாடியை, ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், அண் மையில் தொலைபேசியில் பிடித்தாராம். அப்போது வழக்கம்போல் அவரும் கூட்டணிக்கு வர்றேன்னு சொல்லுங்க என்றபடி எடப்பாடிக்கு வலை வீச, எடப்பாடியோ "சரி, உங்க விருப்பப்படியே இறங்கி வர்றேன். அதுக்கு உங்க மாநிலத் தலைவரா ஒருவரை புதுசா நியமிக்கணும். 2026 தேர்தலில் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான்னு இப்பவே பிரதம ரும் உள்துறை அமைச்சரும் அறிவிக்கணும். அதேபோல் கடந்த 2019 தேர்தலின்போது கொடுக்கப்பட்ட 4 சீட்டுகளைத்தான் இப்போதும் எங்களால் பா.ஜ.க.வுக்கு கொடுக்க முடியும். இந்த 3 நிபந்தனைகளுக்கும் ஓ.கே. என்றால் சொல்லுங் கள். மற்றதைப் பேசலாம்'’என்றாராம். இதைக் கேட்ட நிர்மலா சீதாராமன் அதிர்ந்துபோய், எந்த பதிலையும் சொல்லாமல் ரிசீவரை வைத்து விட்டாராம்.''”
"எடப்பாடிக்குத் தவமிருக்கும் பா.ஜ.க., ஓ.பி.எஸ்.ஸையும், தினகரனையும் மட்டும் தவிக்கவிட்டு வருகிறதே?''”
"பா.ஜ.க. கூட்டணியில் சேர்வதற்காக இலவுகாத்த கிளி போல ஓ.பி.எஸ்.ஸும், தினகரனும் காத்துக்கொண்டேயிருக்கிறார்கள். அடிக்கடி, அவர்களாகவே பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துக்கொண்டுதான் போட்டியிடுவோம் என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். அதே சமயம், த.மா.கா., ச.ம.க., ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பா.ஜ.க.வோ, இவர்களை மட்டும் இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அதனால் இருவரும் குழம்பிப்போயிருக்கிறார்கள். இந்த நிலையில், 5ஆம் தேதி இது குறித்து பா.ஜ.க. தலைமையைத் தொடர்புகொண்டு, கூட்டணி பற்றி ஓ.பி.எஸ். பேச முயன்றிருக்கிறார். அதற்கு பா.ஜ.க. தரப்போ, "நீங்களும் தினகரனும் தாமரை சின் னத்தில் போட்டியிட தயார் எனில் மேற்கொண்டு பேசலாம்' என்று சொல்லியிருக்கிறது. இதைக் கேட்டு ஆடிப்போய்விட்டாராம் ஓ.பி.எஸ். பா.ஜ.க. வின் இந்த போக்கிற்கு காரணம், ஒருவேளை அ.தி.மு.க, தங்கள் பக்கம் வந்தால், ஓ.பி.எஸ்.ஸையும், தினகரனையும் தங்களோடு வைத்துக்கொள்ள எடப்பாடி சம்மதிக்கமாட்டார் என்ப தாலாம்.''”
"பா.ம.க. -தே.மு.தி.க.வின் நிலை என்னவாம்?''”
"அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி உறுதியாகி விட்டதாம். அவர் களுக்காக ஸ்வீட் பாக்ஸ்களும் பத் திரமாகக் கொடுக் கப்பட்டு விட்ட தாம். விரைவில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள். அதேபோல், அ.தி.மு.க.வோடும் பா.ம.க.வின் பேச்சுவார்த்தை ஏறத்தாழ முடிவு பெற்றிருக்கிறதாம். இருந்தபோதும் பா.ம.க. அன்பு மணி, "நான் டெல்லிக்கு அவசரமாகப் போக வேண்டி இருக்கிறது. இரண்டு நாளில் நான் திரும்பி வந்ததும் கூட்டணியை ஃபைனல் செய்துவிடலாம்' என்றபடி, டெல்லிக்கு கிளம்பிவிட்டாராம். இந்த விவகாரத்தை அறிந்தவர்களோ, தன் மீதான சி.பி.ஐ. வழக்கின் தற்போதைய நிலையை பல்ஸ் பார்ப்பதோடு, ஒரு சின்ன கேப் விட்டால், ஸ்வீட் பாக்ஸ்களின் எண்ணிக்கை கூடலாம் என்கிற அன்புமணியின் வியூகம்தான் இது என்கிறார்கள்.''”
"கடந்தமுறை காங்கிரஸ் நின்ற சில தொகுதிகளில் தி.மு.க. நிற்க விரும்புகிறது என்கிறார்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, காங்கிரஸ் நின்று வெற்றிபெற்ற சில தொகுதிகளில் இந்தமுறை தி.மு.க. நிற்க விரும்புகிறதாம். அதனால் அப்படிப்பட்ட தொகுதிகளை காங்கிரஸுக்கு மாற்றிக் கொடுக்க அது தீர்மானித்துள்ளதாம். குறிப்பாக திருவள்ளூர் தொகுதியை எடுத்துக்கொண்டு அதற்கு பதில் காஞ்சிபுரம் அல்லது கடலூர் தொகுதியைக் கொடுக்க தி.மு.க. விரும்புகிறதாம். அதேபோல், கரூர் தொகுதிக்கு பதில் திண்டுக்கல்லையும், திருச்சிக்கு பதில் தேனியையும் காங்கிரஸுக்கு மாற்றித் தரவும் தி.மு.க. ஆலோசித்திருக்கிறதாம். இதை அறிந்துகொண்ட கரூர் காங்கிரஸ் எம்.பி. யான ஜோதிமணி, இந்தமுறை கரூர் தொகுதி மாற்றப்பட்டு திண்டுக்கல் தொகுதி காங்கிரஸுக் குத் தரப்பட்டால், அங்கே நான் நிற்க விரும்புகிறேன் என்று சொல்கிறாராம். திண்டுக்கல் தொகுதியில் சிட்டிங் எம்.பி.யாக தி.மு.க. வேலுச்சாமி இருக்கிறார். இவருக்கும் தி.மு.க.வின் மூத்த அமைச்சர் ஐ.பெரிய சாமிக்கும் ஒத்துப்போகவில்லை. அதனால், திண்டுக்கல் தொகுதி காங் கிரஸ் கட்சிக்குச் செல்வதை அமைச்சர் பெரியசாமி எதிர்க்கமாட்டார் என்றே தி.மு.க.வில் சொல்லப்படுகிறது.''”
"தேர்தலையொட்டி காவல்துறை அதிகாரிகள் பலருக்கும் பதவி உயர்வு தரப்பட்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தற்போது காவல் துறையில் பணியாற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு, அவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்க இருக்கிறார் கள். குறிப்பாக 68 ஆய்வாளர்கள் டி.எஸ்.பி.க்களாகவும், 96 டி.எஸ்.பி.க்கள் ஏ.எஸ்.பி.க்களாகவும், 6 ஏ.எஸ்.பி.க்கள் எஸ்.பி.க் களாகவும் பதவி உயர்வைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்ற 5 பேருக்கு மட்டும் அதற்கான ஆணை இன்னும் வெளியிடப்படவில்லை. அவர்களில் ஒருவரான ரகுபதி என்பவருக்கு மட்டும் இன்னும் கிளியரன்ஸ் கிடைக்கவில்லையாம். இவர்கள் அனைவரும் இந்த வார இறுதிக்குள் பதவி உயர்வோடு புதிய பொறுப்புகளில் அமர இருக்கிறார்கள்.''”
"போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் விவகாரம் பற்றி பல்வேறு தகவல்கள் வருகிறதே?''”
"அண்மையில் ஏறத்தாழ 2 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பிடிபட்டன. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ஜாபர்சாதிக் தலைமறைவாகிவிட்டார். தி.மு.க.வின் அயலக அணியின் பொறுப்பில் இருந்த இவரை, அறிவாலயம் உடனடியாகக் கட்டம் கட்டிவிட் டது. எனினும், இவரால் போதைப் பொருள் விவ காரத்தில் தமிழக அரசு, கடும் சூறாவளியை எதிர் கொண்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க. தரப்பு வெளியிட்டிருக்கும் கண்டன அறிக் கையில், 2019ஆம் ஆண்டே ஜாபர்சாதிக், இப்படிப் பட்ட போதைப்பொருள் குற்ற வழக்கில் சிக்கி யிருப்பதற்கான ஆவணங்களைச் சுட்டிக்காட்டி இருக்கிறது. இந்த ஆவணங்களை பா.ஜ.க. தரப்பிற் குக் கொடுத்ததே, மாநில போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மண்டலத் தலைவர் அரவிந்தன் ஐ.பி.எஸ்.தான் என்கிற டாக் டிபார்ட்மெண்டி லேயே அடிபடுகிறது. இந்த அதிகாரி மாநில உளவுத்துறையில் இருந்த போது, முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டாராம். அப்படிப்பட்டவர் தற்போது பா.ஜ.க. தரப்போடு நெருக்கமாக இருக்கிறார் என்கிறார்கள்.''”
"புதுவை மாநிலத்திலும் சட்டவிரோத போதைப் பொருட்களால் சட்டம் ஒழுங்கு தள்ளாடுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அங்கே காவல்துறையை வைத்திருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த அமைச்ச ரான நமச்சிவாயம். இவருக்கும் புதுவை மாநில முதல்வரான ரங்கசாமிக்கும் ஒத்துப்போவதில்லை. இந்த நிலையில் அங்கு கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத போதைப் பொருட்கள் தாராளமாய் புழங்குகின்றன. இதனால் சட்டம் ஒழுங்கு அங்கே சீர்குலைந்திருக்கிறது. பா.ஜ.க. நமச்சிவாயம் காவல்துறையை தன் கட்டுப் பாட்டில் வைத்துக்கொள்ளாததால்தான் இப்படி என்கிறார்கள். இந்த நிலையில், அங்கே ஆர்த்தி என்ற ஒன்பது வயது சிறுமி, கஞ்சாப் பேர்வழிகள் 7 பேரால் சிதைக்கப்பட்டதோடு, அவர் கொடூர மாகக் கொல்லப்பட்டு, கால்வாயில் வீசப்பட்டிருக் கிறார். இப்படிப்பட்ட கொடூரங்கள் அங்கே அரங்கேறுவதற்கும் பா.ஜ.க. நமச்சிவாயத்தின் அலட்சியப் போக்குதான் காரணம் என்று, அம்மாநில மக்கள் மண்ணை அள்ளித் தூற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.''”
"மோடியின் தமிழக விசிட்டின் போது பிரதமர் மோடியை, பி.டி.ஆர். தியாகராஜன் சந்தித்துப் பேசியதும், அவரது தோளில் பிரதமர் தட்டிக் கொடுத்துப் பேசியதும் அவர் அணி மாறப்போவதாக சமூக வலைத் தளங்களில் பரபரப்பைப் பற்றவைத்துள்ளதே?''”
"ஆமாங்க தலைவரே, அதனால் தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனே தன் தரப்பை விளக்கி ஊடகங்களுக்குப் பதிலளித்துள்ளார். "பிரதமரை வரவேற்பதற்காக தமிழக அரசே எனக்கு இரண்டுமுறை புரோட்டகால் கொடுத்தது. நான் நான்குமுறை பிரதமரைச் சந்தித்தேன். பிப்ரவரி 27 இரவு பிரதமர் அலுவலகம் சிறப்பு அழைப்பு விடுத்ததால் அவரைச் சென்று சந்தித்தேன். அப்போது மாநில அரசின் வழிகாட்டுதலையே பின்பற்றினேன். இந்த விவரத்தை தமிழக அரசுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதில்லை. அதன் நகல் நேராக பிரதமர் அலுவலகத்திலிருந்து தமிழக தலைமைச் செயலாளருக்குச் சென்றுவிடும். பிரதமரின் செகரட்டரி ஒருவரும் பிரதமர் அலுவலக அழைப்பு குறித்துத் தெரிவித்தார். மரியாதை நிமித்தம் அவரை வரவேற்றேன். அவரும் என்னை "தேங்க்யூ பாய், தேங்க்யூ பாய்' என தட்டிக்கொடுத்தார். பா.ஜ.க.வின் சமூக வலைத்தள குழுவினர் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு விவகாரத்தைக் கிளப்பியுள்ளனர். பாரம்பரியமாக திராவிட சித்தாந்தத்தில் வந்தவன் நான். ஒருபோதும் இந்துத்துவ கொள்கைகளோடு என் ரத்தம் ஒத்துப்போகாது'’என்று சொல்லி மதுரை பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக நிற்கப்போவதாக புரளிகளைக் கிளப்புபவர்களின் வாயை அடைத்துள்ளார்.”
"நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண்மையில் ராஜினாமா செய்த எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர் அனீஷ்சேகர் பற்றிய செய்திக்கட்டுரையை நம் நக்கீரன் வெளியிட்டிருந்தது. அது கோட்டை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நம்மைத் தொடர்புகொண்ட அனீஷ்சேகர் ’"என் தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் ராஜினாமா செய்திருக்கிறேன், வேறு எந்த பின்னணியும் இல்லை'’ என்று தெரிவித் தார். இந்த நிலையிலும், எல்காட்டில் அரங்கேறும் கான்ட்ராக்ட் ஊழல்கள் குறித்து, பல்வேறு தகவல் கள் நமக்குக் கிடைத்த படியே இருக்கின்றன.''”