எம்.பி. குடும்பம் வசூல்!
நக்கீரன் மகளிரணி மெரினாவும் பவானியும் காமாட்சியும் காவேரியும் நாச்சியாரும் வைகாசிப் பவுர்ணமி நாள் காலையில் திருவண்ணாமலைக்கு வந்தனர். ஏறு வெயிலில் கிரிவலம் தொடங்கினர்.
நாச்சியார்: கோயிலுக்குள்ள அடியளந்து நடந்தாலோ, கும்பிடுதனம் போட்டாலோ சாமி பெயரை நெனைச்சிகினே... இல்லைனா நேர்த்திக் கடனை நெனைச்சிக்கினே செய்யலாம். இங்கே கிரிவலப் பாதை பத்து மைல் தொலைவு. ஏதாச்சும் தாக்கமோக்கலோட நடந்தா களைப்பில்லாம போகலாம்ல.
பவானி: ஆமாமுங்க... காமாட்சி திருவண்ணாமலை சேதி ஏதாச்சும் இருந்தா சொல்லுங்கங்க.
காமாட்சி: உங்களுக்கெல்லாம் திருவண்ணாமலை எம்.பி. வனரோஜாவைத் தெரியும்ல... எம்.பி. மட்டுமில்லை... கட்சியில 20 வருஷமா அவுங்கதான் மாவட்ட மகளிரணிச் செயலாளர். நல்ல அறுவடைதான். ஆனால் கை கருணைக்கிழங்கு. வெட்டுப்பட்ட விரலுக்கு சுண்ணாம்பு குடுக்க மாட்டாக. சாதிப் பாசத்தில அக்ரி கிருஷ்ணமூர்த்தி சீட் வாங்கிக் கு
எம்.பி. குடும்பம் வசூல்!
நக்கீரன் மகளிரணி மெரினாவும் பவானியும் காமாட்சியும் காவேரியும் நாச்சியாரும் வைகாசிப் பவுர்ணமி நாள் காலையில் திருவண்ணாமலைக்கு வந்தனர். ஏறு வெயிலில் கிரிவலம் தொடங்கினர்.
நாச்சியார்: கோயிலுக்குள்ள அடியளந்து நடந்தாலோ, கும்பிடுதனம் போட்டாலோ சாமி பெயரை நெனைச்சிகினே... இல்லைனா நேர்த்திக் கடனை நெனைச்சிக்கினே செய்யலாம். இங்கே கிரிவலப் பாதை பத்து மைல் தொலைவு. ஏதாச்சும் தாக்கமோக்கலோட நடந்தா களைப்பில்லாம போகலாம்ல.
பவானி: ஆமாமுங்க... காமாட்சி திருவண்ணாமலை சேதி ஏதாச்சும் இருந்தா சொல்லுங்கங்க.
காமாட்சி: உங்களுக்கெல்லாம் திருவண்ணாமலை எம்.பி. வனரோஜாவைத் தெரியும்ல... எம்.பி. மட்டுமில்லை... கட்சியில 20 வருஷமா அவுங்கதான் மாவட்ட மகளிரணிச் செயலாளர். நல்ல அறுவடைதான். ஆனால் கை கருணைக்கிழங்கு. வெட்டுப்பட்ட விரலுக்கு சுண்ணாம்பு குடுக்க மாட்டாக. சாதிப் பாசத்தில அக்ரி கிருஷ்ணமூர்த்தி சீட் வாங்கிக் குடுத்தாரு. இந்தம்மா ஜெயிச்சு எம்.பி.யானாங்க.
நாச்சியார்: ஆத்தா... பழம் பஞ்சாங்கம் வேணாம். எம்.பி. வனரோஜாவைப் பத்தி புதுசா என்ன இருக்கு.
காமாட்சி: ஜெ. இறந்ததும் கட்சி உடைந்ததும் தர்மயுத்தம் ஓ.பி.எஸ். பின்னால் நின்னார். ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இணைஞ்சதும் எம்.பி.யை யாரும் கண்டுக்கலை. கடந்த 6 மாதமா ஒண்ணோ ரெண்டோ நிகழ்ச்சிதான். அதுவும் அழையா விருந்தாளிதான். போன வாரம் அ.தி.மு.க. நிர்வாகிகள் போயி கட்சி நிகழ்ச்சிக்கு டொனேஷன் கேட்டாங்களாம். அதுக்கு அந்தம்மா... "நான் என்ன பணம் காய்க்கிற மரமா வச்சிருக்கேன்'னு கேட்டு திருப்பியனுப்பிடுச்சாம். வெளிய வந்த நிர்வாகிகள், "காண்ட்ராக்ட்ல வேலை தாங்கனு கட்சிக்காரன் கேட்டா, முப்பது பெர்சன்ட் தர்றியா?'னு கேட்குறாங்க. கமிஷன் வாங்குற வேலையை அந்தம்மா புருஷன் சண்முகமும், மருமகன் பழனியும் செய்றாக. கட்சிக்கோ தொகுதிக்கோ செய்யோணும்கிற அக்கறை சுத்தமா கெடையாது.
பவானி: சரி விடுங்கங்க... மறுபடியும் சீட் கிடைக்காது, கிடைச்சாலும் ஜெயிக்க முடியாது. காத்து இருக்கும்போது தூத்திக்கொள்ளோணுமுங்க.
மெரினா: இந்தா... எல்லாரும் மோரு குடிக்கிறாங்க. வாங்க ஆளுக்கு ரெண்டு கிளாஸ் குடிச்சிட்டு நடப்போம்.
நாச்சியார்: கிரிவலப்பாதையில தண்ணிப்பந்தல், மோர்ப்பந்தல், பானகப்பந்தல் வச்சு இலவசமாத்தானே கொடுத்தாங்க. இப்ப போலீஸை பக்கத்துல வச்சுக்கிட்டே வியாபாரம் பார்க்குறாங்களே...
பவானி: ஏனுங்க இங்க போலீஸ் வேடிக்கை பாக்குதுங்க. எங்க சேலத்தில துணை கமிஷனரா ஒரு லேடி இருக்காங்க. சூப்பர் லேடிங்க. பேரு சுப்புலட்சுமிங்க. ரவுடிகள் லிஸ்டை கையில வச்சுக்கிட்டு தெருத்தெருவா, வீடு வீடா போனாங்க. ரவுடிகள்ட்ட குரலை ஒசத்துனாங்கங்க. ""ஒழுங்கா வாலைச் சுருட்டிக்கிட்டு இருக்கணும். இல்லை ஊரை விட்டுக் கிளம்பிடணும். இல்லைனா?'' வார்னிங் குடுத்தாங்க. அஸ்தம்பட்டி முழுக்க இப்ப இதான்ங்க பேச்சு.
காவேரி: அஸ்தம்பட்டியில ரவுடிகள் ரொம்பவோ?
பவானி: ஆமாமுங்க. இங்கே மட்டும் 36 முக்கிய குற்றவாளிங்க. அதில 23 பேர் இப்ப ஜெயில்ல... பாக்கிப் பேரைத்தான் இந்த மேடம் வார்ன் பண்ணாங்க.
மெரினா: சேலத்தை ரவுடிகள் நகரம்னு சொல்லலாம்தானே?
பவானி: துணை கமிஷனர் சுப்புலட்சுமியே சொன்னாங்கங்க. சேலம் மாநகர்ல கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள்ல தொடர்புடைய 54 குற்றவாளிகளை "ஏ' பட்டியல்ல வச்சிருக்காங்களாம். அதில 18 பேர் மேலதான் ஆக்ஷன் எடுத்திருக்காங்களாம்.
நாச்சியார்: பாவம்டி சேலம் மக்கள். அவுகளுக்காக ஒரு "ஐயோ' போடுங்கடி.
காவேரி: எங்க திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல்நிலையத்தில ஒரு லேடி இன்ஸ் இருந்தாங்க. பேரு ஜெயந்தி. மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. நடராஜனோட மனைவி.
பவானி: இவங்க எத்தனை ரவுடியை வார்ன் பண்ணாங்க?
காவேரி: இவங்க டைப்பே தனி. ஸ்டெர்லைட்டுக்கு எதிரா 25-ஆம் தேதி தி.மு.க. போராட்டம் நடத்திச்சே. அன்னைக்கு வடுவூர்ல போராட்டம் நடத்தின தி.மு.க.காரங்களை கைது பண்ணி ஸ்டேஷனுக்கு கூட்டி வந்தாங்க. கைதானவர்களில் மாணவரணி சிவச்சந்திரனும் ஒருத்தர். அவருக்கு அன்னிக்கு பிறந்தநாள். உடனே ஒரு கேக் வாங்கி வந்து வெட்டச் சொல்லி இன்ஸ். ஜெயந்தியே "ஹாப்பி பர்த்டே' பாட்டுப் பாடி கேக்கையும் ஆசையாசையா ஊட்டி விட்டாங்களாம்.
நாச்சியார்: காவல்நிலையத்தில் அன்போட நடக்கணும்கிறதுக்கு எடுத்துக்காட்டா இருந்திருக்காங்க.
காவேரி: ஜெ. பிறந்தநாள்ல வடுவூர் பக்கத்தில இருக்கிற கருவாக்குறிச்சியில் அ.தி.மு.க. கொடிக் கம்பத்தில தினகரன் அணிக்காரங்க கொடி ஏத்திப்பிட்டாங்க. பெரிய பிரச்சினை ஆயிருச்சு. அப்புறம் இந்த இன்ஸ். ஜெயந்திதான் டி.டி.வி. கொடியை எறக்கிட்டு ரெட்டை இலைக் கொடியை ஏத்தினாங்க. இப்படி தேவையில்லாத விஷயங்களை செஞ்சதால வடுவூர்ல இருந்து மாவட்ட ஆயுதப்படைக்கு மாத்திப்பிட்டாங்க.
பவானி: ஏனுங்க ரொம்ப டயர்டா இருக்குங்க. அந்தா மோர் குடுக்குறாங்க வாங்கிக் குடிக்கலாங்க...
-து.ராஜா, இரா.பகத்சிங், இளையராஜா