திண்ணைக் கச்சேரி!

tuty

நாச்சியாரையும் பவானியையும் ஊர்களுக்கு அனுப்பிவிட்டு ஏலகிரியில் இருந்து புறப்பட்ட காமுவும், மெரினாவும், காவேரியும் மதுரை மாட்டுத்தாவணியில் இறங்கினார்கள். ரிசர்வேஷன் கவுன்ட்டருக்கு அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் இவர்களுக்காக மல்லிகை காத்திருந்தார்.

காவேரி: எங்களுக்கு முன்னாடியே பரணி வந்திருப்பாள்னு நெனைச்சோம்... வரலியோ?

மல்லிகை: முத்து நகரமே ரத்தக்காடாக கிடக்காமே... செல்போனும் எடுக்கமாட்டேங்குது. அவளுக்காக கொஞ்சம் வெயிட் பண்ணலாம். உட்காருங்க. காவேரி திருச்சி மாவட்டத்துல சத்துணவுல 147 போஸ்ட் காலியாயிருக்கு. வெல்லமண்டியிடம் சொல்லி, ஒரு போஸ்டிங் வாங்கித் தரேன்னு சொன்னியே ஞாபகம் இருக்கில்ல... பாவம்டி... விதவை... ரெண்டு பசங்களோட ரொம்ப கஷ்டப்படுறா... ஹெல்ப் பண்ணுப்பா...

tuty

காவேரி: நீ சொன்ன அந்த விதவைக்காக வெல்லமண்டியும், சிபாரிசு பண்றதா சொல்லியிருந்தாரு. அமைச்சர் வளர்மதி இடையில் புகுந்து பலபேர் வாழ்க்கையில மண்ணள்ளிப் போட்டிருச்சே...

மெரினா: வெல்லமண்டியைவிட வளர்மதி மினிஸ்ட்ரில வெயிட்டானவங்களா?

காவேரி : நடந்ததைக் கேளுங்கடி. சத்துணவு போஸ்டிங்குக்

நாச்சியாரையும் பவானியையும் ஊர்களுக்கு அனுப்பிவிட்டு ஏலகிரியில் இருந்து புறப்பட்ட காமுவும், மெரினாவும், காவேரியும் மதுரை மாட்டுத்தாவணியில் இறங்கினார்கள். ரிசர்வேஷன் கவுன்ட்டருக்கு அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் இவர்களுக்காக மல்லிகை காத்திருந்தார்.

காவேரி: எங்களுக்கு முன்னாடியே பரணி வந்திருப்பாள்னு நெனைச்சோம்... வரலியோ?

மல்லிகை: முத்து நகரமே ரத்தக்காடாக கிடக்காமே... செல்போனும் எடுக்கமாட்டேங்குது. அவளுக்காக கொஞ்சம் வெயிட் பண்ணலாம். உட்காருங்க. காவேரி திருச்சி மாவட்டத்துல சத்துணவுல 147 போஸ்ட் காலியாயிருக்கு. வெல்லமண்டியிடம் சொல்லி, ஒரு போஸ்டிங் வாங்கித் தரேன்னு சொன்னியே ஞாபகம் இருக்கில்ல... பாவம்டி... விதவை... ரெண்டு பசங்களோட ரொம்ப கஷ்டப்படுறா... ஹெல்ப் பண்ணுப்பா...

tuty

காவேரி: நீ சொன்ன அந்த விதவைக்காக வெல்லமண்டியும், சிபாரிசு பண்றதா சொல்லியிருந்தாரு. அமைச்சர் வளர்மதி இடையில் புகுந்து பலபேர் வாழ்க்கையில மண்ணள்ளிப் போட்டிருச்சே...

மெரினா: வெல்லமண்டியைவிட வளர்மதி மினிஸ்ட்ரில வெயிட்டானவங்களா?

காவேரி : நடந்ததைக் கேளுங்கடி. சத்துணவு போஸ்டிங்குக்காக கலெக்டர் தலைமையில ஆய்வுக்கூட்டம் நடந்துச்சு. அமைச்சர் வெல்லமண்டி நடராசனுக்கு 6 இடம், மா.செ. குமாருக்கு 5, மா.செ. ரத்தினவேலுவுக்கு 5, அமைச்சர் வளர்மதிக்கு 5 ஒதுக்கலாம். மீதியை இண்டர்வியூ நடத்தி முறைப்படி எடுக்கலாம்னு கலெக்டர் சொல்லியிருக்கிறார். ஆவேசத்தோட எந்திரிச்ச வளர்மதி, ""எனக்கு 26 போஸ்டிங் வேணும். இல்லைனா நான் இந்த இடத்திலயே தற்கொலை பண்ணிக்குவேன்னு கத்திட்டாங்க. அத்தனைபேரும் வாயடைச்சுப் போயிட்டாங்க. வேற வழி? சரினு ஒப்புக்கிட்டாங்களாம். அந்தம்மா என்ன ரேட் பிக்ஸ் பண்ணுதோ?

காமு : எங்க மாவட்ட மந்திரி நிலோபர் கபில், அமைச்சர் வளர்மதி மாதிரி அடம்பிடிக்க மாட்டாங்க.

மல்லிகை: அவங்க எந்த வேலையும் செய்யமாட்டாங்க. வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் வீரமணி வச்சதுதான் சட்டம். வீரமணி கிழிச்ச கோட்டை நிலோபர் தாண்டமாட்டாகனு கேள்விப்பட்டிருந்தேன்.

காமு: அதெல்லாம் மூணு நாலு மாதம் முன்னாடி. இப்ப பம்பரமா வேலை செய்யுது நிலோபர். மே 20-ஆம் தேதி பாப்பநேரியில ஒரு நியாய விலைக்கடையை திறந்து வச்சாங்க. தெரிஞ்சவுங்க, தெரியாதவங்க எல்லார்ட்டயும் வேணும்னு வலியப் போய் என்ன உதவி வேணும்னு வழிஞ்சாங்க. தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் எல்லாரும் பாராட்டுறாங்கனா பாரேன்.

காவேரி: நம்ப முடியலியே? இயற்கைக் குணம் எப்படி மாறும்?

காமு : அமைச்சர் வீரமணி இந்த அம்மாவிடம் இன்னும் ஒரு வருஷத்தில எம்.பி. எலெக்ஷன் வருது. அதோட சேர்ந்து எம்.எல்.ஏ. எலெக்ஷனும் வருதுனு சொன்னாராம். மறுபடியும் வாணியம்பாடித் தொகுதியில சீட் வாங்கணும்ல... அதனால தொழிலாளர் நலத்துறை, நிலோபர் அளவுக்கு மீறி அக்கறையா நடக்கிறார்.

மல்லிகை: அக்கறை அளவுக்கு மீறினாலே ஆபத்துதான். ஒரு விதவை காட்டிய அக்கறையால எங்க மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வியாபாரம் செய்யும் ஏழெட்டுப் பத்து முதலாளிகள் அம்பது, அறுபது லட்சங்களை பறிகொடுத்திட்டாங்க.

மெரினா: அது யாரும்மே வாய்ச்சவடால்?

மல்லிகை: பேரு லதா. நாகமலை புதுக்கோட்டை ராஜம்பாடிக்காரி. முப்பத்தைஞ்சு வயசிருக்கும். விவாகரத்து ஆனவங்க. ரெண்டு குழந்தைகள். கஸ்டமர் மாதிரி பெரிய கடைகளுக்கு போக வேண்டியது. முதலாளிகளிடம் குழையக் குழைய பேச வேண்டியது மறுநாள் ஏதாச்சும் பிரசாதம் இல்லைன்னா ஸ்வீட்டோட போக வேண்டியது. வருமான வரித்துறைல வேலை செய்றேன். அங்கே 120 போஸ்டிங் காலியாருக்குனு கதையளந்து, பத்து லட்சம், இருபது லட்சம்னு வாங்கிட்டு, அல்வா குடுக்க வேண்டியது.

காமு : எத்தனை பேருகிட்ட ஆட்டையப் போட்டாராம்.

மல்லிகை: இதுவரை ஏழு பேரு புகார் கொடுத்திருக்காங்க. மீனாட்சி அம்மன் கோயில்ல ஜவுளிக்கடை வச்சிருக்கிற தங்கவேலு அந்த ஏழு பேர்ல ஒருத்தரு. இவர் 12 லட்சத்தை கொடுத்திருக்கிறார்.

மெரினா: இன்னா ராஜம்பாடிக்காரி போலீசிக்கே தண்ணி காட்றாளா?

மல்லிகை: ஆமா நான் பொய் சொல்லித்தான் பணம் வாங்கினேன். செலவாப் போச்சு. அரெஸ்ட் பண்ணணுமா பண்ணுங்க சார்னு சொன்னாளாம். ராவோட ராவா அரெஸ்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க. இருங்க... இருங்க... அதோ மேற்கே பாருங்க... பஸ்ஸை விட்டு வர்றது நம்ம பரணிதானே...

(பரணி தள்ளாடியபடி வருகிறார். ஆடையெல்லாம் ரத்தக்கறை. அழுதழுது வீங்கிச் சிவந்த கண்கள்... வந்து தோழிகள் அருகில் அமர்ந்து தேம்பியபடி...)

பரணி: முத்து நகரமே அழிஞ்ச கண்மாய் மாதிரி சிதைஞ்சு கிடக்கு. ஒண்ணு ரெண்டில்லடி... பன்னெண்டு பேரை கொக்குக் குருவியைச் சுடுற மாதிரி சுட்டுக் கொன்னுட்டாங்கடி... திரேஸ்புரம் வினிதாவை என் கண்ணு முன்னாடி சுட்டாருடி அந்த ஏ.சி. செல்வன் நாகரத்தினம். வனிதாவோட தலை சிதறிடுச்சுடி அய்யோ...

காவேரி: அழுகாதே... அழுகாதே...

பரணி: வினிதாவும் அவங்க வீட்டுக்காரர் சேவியரும் போன வாரம்தான் வேளாங்கண்ணி போய் மாதாவை கும்பிட்டு வந்தாங்க. எஸ்.பி. வீட்டை முற்றுகையிடப் போனமா... வினிதாவால நடக்க முடியலை. பனிமய மாதா கோயில் பக்கத்தில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்தாங்க. பாவி... பாவி... தலையைக் குறிவச்சுச் சுட்டாருடி... அய்யோ...

மெரினா: நியூஸ்ல 17 வயசுப் பொண்ணுனு சொன்னாங்களே...

பரணி: அது ஸ்நோலின்... எஸ்.எஸ்.எல்.சி. பரிட்சை எழுதியிருக்கிற பொண்ணு. நம்ம மினி சகாயபுரத்தில் தண்ணீர் லாரி ஓட்டுறார்ல ஜாக்ஸன் அவரோட பொண்ணு... ரெண்டு அண்ணன்மாருங்க... எல்லாருக்கும் செல்லப்பொண்ணு, துறுதுறுனு கலகலனு இருக்கிற பொண்ணு. கலெக்டர் ஆபீஸ் முற்றுகைக்கு எல்லா லேடீஸோட அதுவும் போச்சு... உலகத்து அழுகையெல்லாம் சுமந்து நின்ன மீனவப் பெண்ணை அநியாயமா சுட்டுக் கொன்னுட்டாங்க...

காமு : சரி... சரி... அப்புறம் பேசலாம் எழுந்திருங்க... முதல்ல பரணியை சமாதானப்படுத்தலாம்...

-து.ராஜா, ஜெ.டி.ஆர்., அண்ணல், நாகேந்திரன்

Sterlite Tuticorin
இதையும் படியுங்கள்
Subscribe