தேர்தல் ஆணையத்தின் அதிரடி! குஷியில் இ.பி.எஸ்.! குழப்பத்தில் ஓ.பி.எஸ்.!

ee

டைத்தேர்தல் பரபரப்பில் இருக்கும் நிலை யிலும் தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவால் எடப்பாடியும் அவரது தரப் பினரும் குஷியாக இருக் கிறார்கள். அ.தி.மு.க. நம் பக்கம் வந்துவிடும் என்கிற உற்சாகம் அவரது முகாம் வட்டாரங்களில் ஓங்கி ஒலிக்கிறது.

எடப்பாடி மற்றும் பன்னீருக்கிடையே அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகாரப் போட்டியில் ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு ஏக ரகளையை அக்கட்சியில் ஏற்படுத்தியது. பொதுக்குழு தொடர்பான பஞ்சாயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவருக்கும் தலா ஒருமுறை சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றம்வரை போனது.

esops

இந்த மேல் முறையீட்டு வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பினை ஒத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றம், ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கும் என்கிற எதிர்பார்ப்பு இரு தரப்பிடமும் இருக்கிறது.

இந்த நிலையில்தான், சிவசேனா கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு, எடப்பாடி தரப்புக்கு சாதகமாக இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி இருந்து வந்தது. சிவசேனா கட்சிக்குள் கலகத்தை உருவாக்க திட்டமிட்ட பா.ஜ.க., சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டேவை கைய

டைத்தேர்தல் பரபரப்பில் இருக்கும் நிலை யிலும் தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவால் எடப்பாடியும் அவரது தரப் பினரும் குஷியாக இருக் கிறார்கள். அ.தி.மு.க. நம் பக்கம் வந்துவிடும் என்கிற உற்சாகம் அவரது முகாம் வட்டாரங்களில் ஓங்கி ஒலிக்கிறது.

எடப்பாடி மற்றும் பன்னீருக்கிடையே அ.தி.மு.க.வில் நடக்கும் அதிகாரப் போட்டியில் ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு ஏக ரகளையை அக்கட்சியில் ஏற்படுத்தியது. பொதுக்குழு தொடர்பான பஞ்சாயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவருக்கும் தலா ஒருமுறை சாதகமான தீர்ப்பு கிடைத்த நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றம்வரை போனது.

esops

இந்த மேல் முறையீட்டு வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பினை ஒத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றம், ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கும் என்கிற எதிர்பார்ப்பு இரு தரப்பிடமும் இருக்கிறது.

இந்த நிலையில்தான், சிவசேனா கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு, எடப்பாடி தரப்புக்கு சாதகமாக இருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி இருந்து வந்தது. சிவசேனா கட்சிக்குள் கலகத்தை உருவாக்க திட்டமிட்ட பா.ஜ.க., சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டேவை கையிலெடுத்தது.

ee

பா.ஜ.க.வின் செயல்திட்டத்தின்படி, உத்தவ்தாக்கரேவுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார் ஷிண்டே. சிவசேனா பிளவுபட்டது. சிவசேனாவில் மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே பக்கம் இருந்ததால், அதை வைத்து உத்தவ்தாக்கரேவின் ஆட்சியை கவிழ்த்த ஏக்நாத்ஷிண்டே, பா.ஜ.க. உதவியுடன் ஆட்சியை கைப்பற்றினார். பா.ஜ.க. உதவியுடன் மகாராஷ்டிரா முதலமைச்சராக இருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே.

இந்த நிலையில், "சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் தங்களுக்கே சொந்தம்; நாங்கள்தான் உண்மையான சிவசேனா' என உத்தவ் தாக்கரேவும், ஏக்நாத் ஷிண்டேவும் தனித்தனியாக தலைமை தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த 17-ந்தேதி, சிவசேனா விவகாரத்தை ஆராய்ந்த தலைமைத் தேர்தல் ஆணையம், "ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாதான் உண்மையான சிவசேனா. அக்கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஷிண்டே தலைமையிலான அணிக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது' என்று சொல்லி அங்கீகரித்திருக்கிறது.

சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் பெரும்பான்மை ஆதரவு ஷிண்டே தரப்பிடமே இருப்பதால் அதனடிப்படையில் இந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடியிடம், சிவசேனா வழக்கில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள இந்த முடிவை தெரிவித்தனர் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள். அதிலிருந்தே ஏக குஷியில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இது குறித்து கடந்த 18-ந் தேதி இரவு கே.பி.முனுசாமி, செங்கோட்டை யன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அ.தி. மு.க.வின் முன் னாள் அமைச் சர்கள் மற்றும் மாவட்ட செய லாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த ஆலோசனையில் எடப்பாடியும் மாஜிக்களும் மிக உற்சாகமாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு ஜனநாயக ரீதியாக எடுக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய விவகாரத்திலும் நமக்கு சாதகமாக அப்படிப்பட்ட முடிவுகளே வரும்' என வழக்கறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதை மாஜிக்களிடம் பகிர்ந்துகொண்டி ருக்கிறார் எடப்பாடி.

அப்போது பேசிய மாஜிக்களும் மா.செ.க்களும், "சிவசேனா கட்சி விவகாரத்தில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் பெரும்பான்மை பலத்தை வைத்தே முடிவு செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெ., ஜா. அணிகளாக அ.தி.மு.க. பிளவுபட்ட போதும் இந்த அணுகுமுறையில்தான் தீர்ப்பு கிடைத்தது. அதன்பிறகு அரசியல் கட்சிகள் யாருக்கு சொந்தம் என்கிற பிரச்சனையில் ஜனநாயக முறைப்படி இப்போதுதான் அணுகியுள்ளது தேர்தல் ஆணையம்.

அந்த வகையில், அ.தி.மு.க.விலுள்ள 66 எம்.எல்.ஏ.க்களில் 65 பேரும், 5 எம்.பி.க்களில் 3 பேரும், 75 மா.செ.க்களில் 71 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 99 சதவீதத்தினரும் நம்முடைய பக்கமே இருக்கிறார்கள். அதனால், உங்கள் தலைமையிலான அ.தி.மு.க.தான் உண்மை யான அ.தி.மு.க. என்ற முடிவு வரும். அதே போல, உச்சநீதிமன் றத்திலும் தீர்ப்பு கிடைக்கும் என விவரித் துள்ளனர். ஆக, இடைத் தேர்தல் டென்சனுக்கு மத்தியில், தேர்தல் ஆணையத்தின் முடிவு எடப்பாடியை உற்சாகப்படுத்தியுள்ளது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள்.

இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஓ.பி.எஸ். தரப்பிலும் உற்றுக் கவனிக்கப்பட்டிருக்கிறது. மேலோட்ட மாக அணுகினால் எடப்பாடி தரப்புக்கு சாதகமாகவே தேர்தல் ஆணையத்தின் முடிவு இருப்பது போல தெரியும். ஆனால், உண்மை வேறு வடிவத்தில் இருக்கிறது என்கிற தகவல்கள் ஓ.பி.எஸ். தரப்பில் எதிரொலிக்கவே செய்கின்றன.

இதுகுறித்து ஓ.பி.எஸ். அணியிலுள்ள சீனியர் வழக்கறிஞர்களிடம் நாம் விசாரித்த போது, ‘’"ஈரோடு இடைத்தேர்தலுக்கு ஒரு இடைக்கால ஏற்பாடாகவே இரட்டை சிலை சின்னம் எடப்பாடி தரப்புக்கு வழங்கப்பட் டுள்ளது. அதேபோலத்தான், மகாராஷ்ட்ரா விலும் இடைத்தேர்தல் நடப்பதால் ஒரு தற்காலிகத் தீர்வாக, ஷிண்டே தரப்புக்கு சின்னத்தை ஒதுக்கியிருக்கிறார்கள். இது இறுதியான முடிவு கிடையாது. அதுமட்டுமல்ல; சிவசேனா கட்சி இரண்டாக உடைந்துள்ளது. அ.தி.மு.க.வில் அப்படிப்பட்ட பிளவு எதுவு மில்லை. கட்சியின் சட்டவிதிகளுக்கு எதிராக பொதுக்குழுவில் எடப்பாடியால் எடுக்கப்பட்ட முடிவுகளை எதிர்த்துதான் தேர்தல் ஆணையத் துக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் பிரச்சனை போயிருக்கிறது. சிவசேனா விவகாரமும் அ.தி. மு.க. விவகாரமும் வெவ்வேறானவை. அதனால், சிவசேனா கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது. எடப்பாடி தரப்பினர் உற்சாகம் கொள்ளவோ, ஓ.பி.எஸ்.ஸுக்கு பின்னடைவோ எதுவும் கிடையாது''’என்கிறார்கள் உறுதியாக.

____________

இறுதிச் சுற்று!

ee

அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு எதிராக தன்னால் நியமிக்கப்பட்ட மா.செ.க்கள், நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் 20-ந் தேதி திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் ஓ.பி.எஸ். சென்னை அசோகா ஹோட்டலில் பண்ருட்டி ராமச் சந்திரன் தலைமையில் நடந்த ஆலோ சனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். ஆதர வாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி. மு.க.வை ஆதரித்து வாக்கு சேகரிக்க ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அழைக்காத சூழலில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எடப்பாடி தங்களைப் புறக்கணிப்பது, அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் தங்களுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டால் அதனை எந்த கோணத்தில் அணுகுவது, ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண் டாடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்துள்ள னர். மேலும், சிவசேனா கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு, அ.தி.மு.க. விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்தும் விவாதித்துள்ளனர்.

-இளையர்

nkn220223
இதையும் படியுங்கள்
Subscribe