சமூகத்தில் ஏதேனும் குற்றச்செயல்கள் நடந்தால் அதனைத் தடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை. ஆனால், காவல் துறையிலேயே பணியிட மாறுதல் களுக்காக பல லட்சங்களில் பணம் பெற்றுக்கொண்டு கேட்ட ஊர்களுக்கு டிக் அடிப்பது, காவல் துறையையே கரப்ட் ஆக்கிவிடும்!
"மூன்று வருஷத்துக்கு மேலாச்சு, எந்தக் குற்றச் சாட்டும் என் மீது இல்லை. வீசிங் இருக்கு... மாறுதல் கேட்டால் ஸ்வீட் பாக்ஸ் கேட்குறாங்க. எனக்கு அந்தள விற்கு வசதியில்லை. இப்ப மாறுதல் செய்யப்பட்டிருக்கும் 58 நபர்களில் 90 சதவிகிதம் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து வந்திருக்கின்றார்கள்'' என பல இன்ஸ்பெக்டர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜுவாலிடம் ஸ்வீட் பாக்ஸ் மாறுதல் அரசியல் குறித்து பலவிதமாகக் கொட்டித் தீர்த்திருக்கின்றனர் கோவையில்!
சமீபத்தில் கோவை சரகத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 58 இன்ஸ்பெக்டர்களை டி.ஜ.ஜி. சரவணசுந்தர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அந்த இடமாறு தல்கள்தான் தமிழகக் காவல்துறை மட்டத்தில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது. காவல்துறையைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஓரிடத்தில் பணியாற்றுபவர்கள், வழக்கமாக பணி யிட மாற்றம் செய்யப்படுவார்கள். இவற்றில் 70 சதவீத இடங்கள் போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க, சரியான காரணங்களின் அடிப்படையில், அவர்கள் ஏற்கெனவே கொடுத்த கோரிக்கைக் கடிதத்தில் கேட்டிருந்தபடி, அந்த இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். மீதமுள்ள 30 சதவீத இடங்களுக்கு அதிகாரிகள் வழக்கம்போல் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து தங்களுக்கு வேண்டப்பட்ட இடங்களுக்கு பணியிட மாறுதல் பெறுவார்கள்.
இந்த நிலையில், மேற்கு மண்டலத்திலுள்ள சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 58 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் அனைத்து பணியிடங் களுக்கும் ஸ்வீட் பாக்ஸ்கள் வாங்கிக்கொண்டு தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் சாதாரணமான காவல் நிலையங்களுக்கு ரூ.5 லட்சம் வரையும், மாநில எல்லையோரமாக அமைந்துள்ள மற்றும் வருமானம் கூடுதலாக வரக்கூடிய காவல் நிலையங் களுக்கு ரூ.20 லட்சம் வரையும் கொடுத்ததாக காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபோல் ஸ்வீட் பாக்ஸ்கள் வாங்கிக் கொண்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், உண்மையிலேயே மருத்துவம், குழந்தைகள் படிப்பு உள்ளிட்ட சரியான காரணங்களுக்காக இட மாறு தல் வேண்டி காத்திருந்தவர்களுக்கு, அதிகப்படி யான ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
"இந்த பணி மாறுதல் விவகாரத்தில், மாறுதல் கேட்கும் இன்ஸ்பெக்டர்களிடம் ஸ்வீட் பாக்ஸ் களை வாங்கி உயரதிகாரிகளுக்கு கொடுத்தல், தனக்குரிய பங்கை எடுத்துக் கொள்ளுதல் என அனைத்து வேலைகளையும் செய்வது கோவை ரூரல் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகுராஜாவே மூன்று வருடங்களாக ஒரே பதவியிலிருக்கும் அவரை, ஸ்வீட்ஸ் பாக்ஸ் இருந்தால் மட்டும் தான் பார்க்க முடியும். இல்லையெனில் மாதந்தோறும் அவருக்கு வசூலித்துக் கொடுக்க வேண்டும். இந்த இட மாறுதலில் தன்னுடைய பேட்ஜ்மெட்களான மதுக்கரை நவநீதகிருஷ்ணன், கிணத்துக்கடவு முத்துப்பாண்டி (ஈஷாவிடம் இரட்டை சம்பளம் கேட்டவர்), காரமடை ஞானசேகர், பொள்ளாச்சி ரத்னகுமார் மற்றும் ஆனைமலை தாமோதரன் ஆகி யோர் தேர்தலின் போது ஈரோட்டிற்கு மாறுதல் செய்யப்பட்டனர். இப்பொழுது வளம் கொழிக்கும் ஸ்டேஷனிற்குள் அவர்களைக் கொண்டு வந்துள் ளார் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகுராஜா. அதுபோக, தனக்கு கட்டுப்படாத டி.எஸ்.பி.க்களை, அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்து இடமாற்றம் செய்வதில் வல்லவர். குறிப்பாக, குற்றப்பிரிவு முரளி, மதுவிலக்கு ஸ்ரீராமச்சந்திரன், ராஜபாண்டி மற்றும் பொள் ளாச்சி ஜெயசந்திரன் ஆகிய டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்ததில் இவரின் பங்குண்டு. திருப்பூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் தம்பி ஒருவர், கோவையில் கொப்பரை தேங் காய் வழக்கில் சிக்கிக்கொள்ள, அவரைக் காப்பாற்ற படாத பாடுபட்டார் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகுராஜா. அதேவேளை, குற்றப்பிரிவு முரளி இவ்விவகாரத் தில் ஒத்துழைக்காததால் பணியிட மாற்றம் செய் யப்பட்டார் என டிபார்ட்மெண்டில் பேச்சு உண்டு.
கோவையைப் பொறுத்தவரை ஜாதி லாபி கிடையாது. ஆனால் தன்னுடைய ஜாதி அதிகாரி களை இணைத்து லாபி செய்வதில் அழகுராஜா விற்கு இணை யாரும் கிடையாது. இதே வேளை யில், சூலூரில் மூன்றரை வருடங்களாக இன்ஸ் பெக்டராக இருக்கும் மாதையனிடம், "நீ தனிப் பிரிவிற்கு வந்துவிடு! நான் அங்கே போகின்றேன்' என மியூச்சுவலாக மாறுதலுக்கு முயற்சி செய்த கதையும் குறிப்பிடத்தக்கது. எப்படியும் வழக்கில் சிக்கிவிடுவார். இங்கேயே இருந்தால் நானும் அவரைப் போல் வழக்கில் சிக்க வாய்ப்புண்டு'' என்கின்றார் தற்பொழுது சட்டம் ஒழுங்கிற்கு சென்றிருக்கும் உளவு அதிகாரி ஒருவர்.
கோவை மாவட்ட காவல்துறையைப் பொறுத்தவரையில் பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், பேரூர் மற்றும் கருமத்தம்பட்டி ஆகிய 6 துணைச் சரகங்கள் உள்ளன. இதன் கட்டுப்பாட்டின் கீழ் 38 காவல் நிலையங்கள் வருகின்றன. தனிப்பிரி வினைப் பொறுத்தவரை அனைத்து ஸ்டேஷன் களிலும் தலா ஒரு தனிப்பிரிவு காவலராவது இருப்பார். சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் நடக்கும் அனைத்து செயல்களையும் கண் காணித்து, மாவட்ட அலுவலகத்திலுள்ள தனிப் பிரிவு டீமிற்கு தகவல் கூறுவது அவரின் வாடிக் கையாகும். ஆனால், அவர்களே குற்றச்செயல் களுக்கு உடந்தையாக வசூலித்துக் கொடுப்பதில் சிறந்த சேவகர்களாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, சாலையோர தாபா ஓட்டல்களில் நடக்கும் சட்ட விரோத மது சப்ளைக்கு மாதந் தோறும் லட்சக்கணக்கில் வசூலிப்பது வாடிக்கையான ஒன்று. அது போக, 3 நம்பர் லாட்டரி, குட்கா உள் ளிட்டவைகளுக்கு தனியாக வருமான சார்ட் உண்டு.
மேலும் திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றி யவர்களை கோவைக்குள் வரவிடாதபடி செய்துள்ளனர். அப்படியே கோவைக்குள் ஒரு சிலர் பணியிட மாற்றம் செய்யப் பட்டிருந்தாலும் சட்டம் ஒழுங்கு பிரிவைத் தவிர்த்து மற்ற பிரிவுகளில் மட்டும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பல பெண் இன்ஸ்பெக்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பணியிட மாறுதல்களுக்காக பல ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்து பணிக்கு வந்துள்ள இன்ஸ்பெக்டர்கள், அதை ஒரு வருடத்திற்குள் வசூலித்து விடுவார்கள். அடுத்த வருடம் முழுவதும் அவர்களுக்கு கூடுதலாக கவனிப்பு இருக்கும் என்பதால், இன்ஸ்பெக்டர்கள் தயங்காமல் ஸ்வீட் பாக்ஸ்களை அள்ளி வீசியுள்ளனர். இப்படி பல ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்து பணிக்கு வரும் இன்ஸ்பெக்டர்கள், பொது மக்களுக்கு சேவை செய்வார்களா? இல்லை தாங்கள் கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்களை பல மடங்கு திருப்பி எடுக்கும் பணியில் மட்டும் கவனம் செலுத்துவார்களா?. சம்பந்தப்பட்ட தனிப்பிரிவு அதிகாரி மீது விசாரணை நடத்தி, அவர் வசூலித்துக் கொடுத்த ஸ்வீட்ஸ் பாக்ஸ்களை வாங்கிய உயரதிகாரி மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பது அனைவரின் எண்ணம்'' என்கின்றனர் ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுக்காத நேர்மையான போலீஸார் சிலர்.
குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்தறிய தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகுராஜாவை தொடர்பு கொண்டோம். பதில் இல்லை. வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி காத்துக் கொண்டிருக்கின்றோம். இது இப்படியிருக்க, ஆகஸ்ட் 31 அன்று கோவை எஸ்.பி. அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நிகழ்ச்சியில், இடமாறுதல், குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில், "வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக உங்களது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்துள்ளார் தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர்ஜுவால்.
காவல்துறை அதிகாரிகள் பணி மாறுதல் தொடர்பான நடவடிக்கைகளில் டி.ஜி.பி. கவனம் செலுத்தி, ஸ்வீட் பாக்ஸ்கள் மூலம் நடைபெறும் பணி மாறுதல்களைக் கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். அதைச் செய்யத் தவறினால், ஸ்வீட் பாக்ஸ்களைப் பெற்றுக்கொண்டு, சமூக விரோத நடவடிக்கைகளுக்கு காவல்துறையே அடிபணிந்தாலும் ஆச்சரியமில்லை!
படங்கள்: விவேக்