புற்று நோய், தோல் நோய், நுரையீரல் மற்றும் கர்ப்பப்பை பாதிப்பு, சுவாசக்கோளாறு என தங்களின் உடல் நலத்துக்கு கேடு உண்டாக்கிவரும் ஸ்டெர்லைட்டிடமிருந்து வருங்கால சந்ததியினரையாவது காத்திட வேண்டுமென்று தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்த மக்கள், போராட்டத்தின் 100-வது நாளில் தூத்துக்குடி அலுவலக முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்து, 22-ஆம் தேதி பனிமய மாதா கோவிலில் இருந்து பேரணியாகப் புறப்பட்டனர். தங்களின் உயிர்ப் பிரச்சனை என்பதால், 144 தடை உத்தரவு என்பதை ஒரு பொருட்டாகவே கருதாத மக்கள், பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்ட காக்கிகளை மீறி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தமிழக காவல்துறையோ துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைப் பச்சைப் படுகொலை செய்தது. அடுத்த நாளும் துப்பாக்கிச் சூடு பலிகள் உயர்ந்ததால், கலவர பூமியானது தூத்துக்குடி.
கொதிநிலையில் பேசிய தூத்துக்குடி மாவட்ட இருதய அரசர் சங்கு குளி தொழிலாளர் சங்கத்தலைவர் ரோஜாராஜ், ""தமிழ்நாட்டுல ஆட்சி நடத்துறவங்க.. அப்புறம் கலெக்டரு.. போலீஸு.. இவங்களெல்லாம் மக்கள் செத்தால் எங்களுக்கென்ன? தங்களுக்கு என்ன கிடைக்குதுன்னுதான் பார்க்கிறாங்க. இவங்க பண்ணுன அக்கிரமத்துக்கு எங்க மக்கள் பலியாகிட்டாங்க''’என்று தலையில் அடித்துக்கொண்டார்.
தீவிரப் போராட்டத்தின் அரசியல் பின்னணி!
அன்றைய ஆட்சியாளர்களின் ரூ.100 கோடி டீலை முடித்துவிட்டுத்தான், 1996-ல் இயங்க ஆரம்பித்தது ஸ்டெர்லைட். இது ஒரு நச்சு ஆலை என்பதை காலதாமதமாக உணர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த நிலையில், ஆலையின் இரண்டு மடங்கு விரிவாக்கத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணைபோகிறார் என்பதைக் கேள்விப்பட்டவுடன், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். போராடிய மக்களோடு இணைந்து, நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், மக்கள் அதிகாரம், ஸ்டூடண்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் போன்ற அமைப்புகளெல்லாம் ஆதரவுக் குரல் எழுப்பின. இதுகுறித்து மாநில உளவுத்துறை, அன்னிய அமைப்புகள் ஊடுருவியதால், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வலுவாகிவிட்டது’ என்று தமிழக அரசுக்கு ‘நோட்’ போட, போராடும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினர். போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்வதில் முனைப்பு காட்டினார்கள். அதனால், பேராசிரியர் பாத்திமா பாபு போன்றவர்களின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறின.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்போ, ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் உறுதியாக இருந்தது. கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்று மீனவ அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. இதனை ‘ஸ்மெல்’ செய்த மத்திய உளவுத்துறையான ஐ.பி. ‘போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும்’ என்று மத்திய அரசுக்கு முன்கூட்டியே அறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து, ‘ரெட் அலர்ட்’ தரப்பட்டது. ஆனாலும், கோட்டை விட்டது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.
மோசமான ஆட்சி! மட்டமான அமைச்சர்கள்!
அந்தக் கலவரச் சூழலில் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து முக்கிய அதிகாரி ஒருவர் “"தூத்துக்குடியில் நிலைமை மோசமாக இருக்கிறது. நீங்களாவது மக்க
புற்று நோய், தோல் நோய், நுரையீரல் மற்றும் கர்ப்பப்பை பாதிப்பு, சுவாசக்கோளாறு என தங்களின் உடல் நலத்துக்கு கேடு உண்டாக்கிவரும் ஸ்டெர்லைட்டிடமிருந்து வருங்கால சந்ததியினரையாவது காத்திட வேண்டுமென்று தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்த மக்கள், போராட்டத்தின் 100-வது நாளில் தூத்துக்குடி அலுவலக முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்து, 22-ஆம் தேதி பனிமய மாதா கோவிலில் இருந்து பேரணியாகப் புறப்பட்டனர். தங்களின் உயிர்ப் பிரச்சனை என்பதால், 144 தடை உத்தரவு என்பதை ஒரு பொருட்டாகவே கருதாத மக்கள், பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்ட காக்கிகளை மீறி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தமிழக காவல்துறையோ துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைப் பச்சைப் படுகொலை செய்தது. அடுத்த நாளும் துப்பாக்கிச் சூடு பலிகள் உயர்ந்ததால், கலவர பூமியானது தூத்துக்குடி.
கொதிநிலையில் பேசிய தூத்துக்குடி மாவட்ட இருதய அரசர் சங்கு குளி தொழிலாளர் சங்கத்தலைவர் ரோஜாராஜ், ""தமிழ்நாட்டுல ஆட்சி நடத்துறவங்க.. அப்புறம் கலெக்டரு.. போலீஸு.. இவங்களெல்லாம் மக்கள் செத்தால் எங்களுக்கென்ன? தங்களுக்கு என்ன கிடைக்குதுன்னுதான் பார்க்கிறாங்க. இவங்க பண்ணுன அக்கிரமத்துக்கு எங்க மக்கள் பலியாகிட்டாங்க''’என்று தலையில் அடித்துக்கொண்டார்.
தீவிரப் போராட்டத்தின் அரசியல் பின்னணி!
அன்றைய ஆட்சியாளர்களின் ரூ.100 கோடி டீலை முடித்துவிட்டுத்தான், 1996-ல் இயங்க ஆரம்பித்தது ஸ்டெர்லைட். இது ஒரு நச்சு ஆலை என்பதை காலதாமதமாக உணர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த நிலையில், ஆலையின் இரண்டு மடங்கு விரிவாக்கத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துணைபோகிறார் என்பதைக் கேள்விப்பட்டவுடன், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். போராடிய மக்களோடு இணைந்து, நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம், மக்கள் அதிகாரம், ஸ்டூடண்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் போன்ற அமைப்புகளெல்லாம் ஆதரவுக் குரல் எழுப்பின. இதுகுறித்து மாநில உளவுத்துறை, அன்னிய அமைப்புகள் ஊடுருவியதால், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வலுவாகிவிட்டது’ என்று தமிழக அரசுக்கு ‘நோட்’ போட, போராடும் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினர். போராட்டத்தை பிசுபிசுக்கச் செய்வதில் முனைப்பு காட்டினார்கள். அதனால், பேராசிரியர் பாத்திமா பாபு போன்றவர்களின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறின.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்போ, ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் உறுதியாக இருந்தது. கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்று மீனவ அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. இதனை ‘ஸ்மெல்’ செய்த மத்திய உளவுத்துறையான ஐ.பி. ‘போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும்’ என்று மத்திய அரசுக்கு முன்கூட்டியே அறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து, ‘ரெட் அலர்ட்’ தரப்பட்டது. ஆனாலும், கோட்டை விட்டது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.
மோசமான ஆட்சி! மட்டமான அமைச்சர்கள்!
அந்தக் கலவரச் சூழலில் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து முக்கிய அதிகாரி ஒருவர் “"தூத்துக்குடியில் நிலைமை மோசமாக இருக்கிறது. நீங்களாவது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாமே? முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லலாமே?'’என்று மாவட்ட அமைச்சரான கடம்பூர் ராஜுவைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அமைச்சரோ “"இன்னும் சுடலைலே.. சுட்டதும் சொல்லு'’என்று வேண்டா வெறுப்பாகப் பேசியிருக்கிறார். இதனால் எரிச்சல் அடைந்த அந்த அதிகாரி சக ஊழியர்களிடம், "நான் பார்த்த ஆட்சிகளிலேயே மிகமிக மோசமான ஆட்சி இதுதான்! அமைச்சர்களும் மட்டமானவர்கள்தான்'’என்று புலம்பியிருக்கிறார். அன்றிரவு அமைச்சர் கடம்பூர் ராஜு தரப்பிலிருந்து, “"துப்பாக்கிச் சூடு சம்பந்தமான வீடியோ காட்சிகளை வாங்கி வையுங்கள். அமைச்சர் பார்க்கவேண்டும்'’என்று கூற... வீடியோ பதிவுகளை பலரிடமிருந்தும் சேகரித்திருக்கிறது ஆட்சியர் அலுவலகம்.
அமைச்சர் ஜெயக்குமாரோ, தங்களின் அன்றைய தலைமையும், இன்றைய தலைமையும் ஸ்டெர்லைட் விஷயத்தில் பலனடைந்ததை வசதியாக மறந்துவிட்டு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மருமகன், தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாஜீவன் போன்றோர் ஸ்டெர்லைட்டில் ஒப்பந்தப் பணிகளைச் செய்துவருகிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்.
கலெக்டர் அணுகுமுறையும் காவல்துறை கணக்கும்!
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ். மாவட்ட பிரச்சனைகளில் எப்போதும் இவரது அணுகுமுறை சரியாக இருந்தது இல்லை. போராட்டக் களம் கண்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அமைதிப்படுத்த தவறிவிட்டார். கலவரம் வெடித்த 22-ஆம் தேதி, கோவில்பட்டி சென்று ஜமாபந்தியில் கலந்துகொண்டு மனு வாங்கியிருக்கிறார்.
மிஞ்சிப்போனால் 1500 பேர்தான் முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்’ என, தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் முத்து, எண்ணிக்கையை டி.ஐ.ஜியிடம் குறைத்துச் சொன்னார். துப்பாக்கிச் சூடு கொடூரமான அளவுக்குப் போனதற்கு, தூத்துக்குடி மக்களின் போர்க்குணத்தை சரியாக கணிக்கத் தெரியாத உளவுத்துறையே காரணம்’ என்கிறார்கள், தாக்குதலுக்கு ஆளான காக்கிகள்.
தனிப்பிரிவு எஸ்.ஐ. அளித்த தகவலின் அடிப்படையில் ‘1500 போராட்டக்காரர்களுக்கு 2000 போலீசார் போதும்’ என்று முடிவெடுத்த தமிழக காவல்துறை, பழைய பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியினை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மகேந்திரனிடமும், ஆட்சியர் அலுவலக வளாக பாதுகாப்பு பொறுப்பினை நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமாரிடமும், வி.வி.டி. சிக்னல் தொடங்கி, மூன்றாவது மைல் வரை உள்ள பாதுகாப்பினை நெல்லை இணை ஆணையர் சுகுணா சிங்கிடமும், பனிமய மாதா கோவில் ஏரியா, லயன்ஸ் ஸ்டோன் மற்றும் மீனவ குடியிருப்பு பகுதிகளை குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்திடமும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவின் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு வகுத்த திட்டத்தின்படி ஏரியாக்களை ஒதுக்கியது. ஐ.பி.எஸ். அந்தஸ்திலான இந்த அதிகாரிகள் அவரவர் பகுதிகளுக்குச் சென்று பார்த்துக்கொண்டனர். ஆனால், இத்தனை அதிகாரிகளையும் தெறிக்கவிட்டு, பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் புகுந்தனர்.
மான்களைச் சுடுபவர் மனிதர்களை சுட்டார்!
சி.பி.எம். பேரணியில் தடியடி நடத்திய ஏ.எஸ்.பி. செல்வன் நாகரத்தினம், ஸ்டெர்லைட் முற்றுகைப் போராட்டத்தின்போது சுட்டதில், வேளாங்கண்ணி மாதா கோவிலுக்குச் சென்று வந்த திரேஸ்புரம் சேவியரின் மனைவி வினிதா, மண்டையோடு உடைந்து, மூளை சிதறி இறந்தார். அமைதியாக தெருமுனையில் உட்கார்ந்திருந்த இவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, "எஸ்.பி. மகேந்திரனின் பங்களாவை முற்றுகையிட வந்ததால்தான் சுட நேர்ந்தது' என்று விளக்கம் தந்திருக்கிறது காவல்துறை.
"நான் சுடுவதற்கு அனுமதி தரவில்லை. என்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை'’ என்று தன்னிலை விளக்கம் தந்திருக்கிறார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மகேந்திரன். ஆனால், போலீஸ்காரரான ராஜா திலீபனின் டீம் சுட்டபடியே, மக்களை விரட்டியது. அதுவும் வரம்பை மீறி, மார்பு, தோள்பட்டை, தலை மற்றும் வயிற்றுப் பகுதியைக் குறிவைத்தே சுட்டனர்.
தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் ட்ரெயினர் ஆக பணிபுரியும் ராஜா திலீபனுக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம்-பொட்டக்குடி. மான்களைச் சுட்டுக் கொன்று விருந்து வைத்தே, காவல்துறை அதிகாரிகளின் மனதில் இடம் பிடித்திருப்பவர். அந்தத் துணிச்சலில்தான் தூத்துக்குடியில் இவருடைய துப்பாக்கி வெடித்திருக்கிறது என்கிறார்கள், காவல்துறை வட்டாரத்தில்.
இன்னொரு ஜாலியன்வாலாபாக்!
வீரம் செறிந்த தூத்துக்குடி மாவட்டம்தான், விடுதலைக்காகப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன், செக்கிழுத்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பாரதியார் போன்றவர்களை தாய்நாட்டுக்கு அளித்தது. இதேமண்ணில்தான், பொதுநலனுக்காகப் போராடி, துப்பாக்கிச் சூட்டில் உயிரை விட்டிருக்கிறார்கள் 12 பேர்.
"அம்மா.. நான் கலெக்டர் ஆபீஸ்கிட்ட பாதுகாப்பா இருக்கேன். வெளிலதான் சண்டை நடக்கு'’என்று செல்போனில் பேசிய பாலையாவின் மகன் சண்முகம் அடுத்த சில வினாடிகளிலேயே துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். மணிராஜுக்கு திருமணம் நடந்து 3 மாதங்கள்தான் ஆகிறது. கர்ப்பமான மனைவியை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு கிளம்பிய மணிராஜ்... சுட்டு வீழ்த்தப்பட்டு, சாலையில் பிணமாகக் கிடந்தார். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து, ரிசல்ட்டுக்காகக் காத்திருந்த ஸ்னோலின் வெனிஸ்டா, வாயில் சுடப்பட்டு, துப்பாக்கி குண்டுக்கு இரையானார். ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய தோழர் தமிழரசனும் பலியானார். மேலும் ரஞ்சித்குமார், கிளாஸ்டன், கந்தையா, கார்த்திக், அந்தோணி செல்வராஜ், காளியப்பன் என இறந்தவர்களின் பட்டியல் நீள்கிறது.
""99 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பிடித்தது. இந்தத் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவமும், உயிரிழந்தவர்களின் தியாகமும் வரலாற்றில் என்றும் பேசப்படும். அன்று குறுகிய இடத்தில் அடைத்துவைத்துச் சுட்டான் ரெஜினால்ட் டயர். இன்றோ வெட்டவெளியில் ஓடவிட்டு சுட்டுக் கொன்றுவிட்டது தமிழ்நாடு போலீஸ்''’என்று கண்ணீர்விட்டார் ரோஜாராஜ்.
ஸ்டெர்லைட்டிடம் காசு வாங்கிய ஐ.ஜி!
"போராட்டம் நடத்தியவர்களைத் திட்டமிட்டே படுகொலை செய்திருக்கிறார்கள்'’என்று குமுறிய வழக்கறிஞர் கனகராஜ், ""போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களைக் குறி வைத்து, சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள். மாவட்ட எஸ்.பி., "எனக்கும் இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கும் சம்பந்தம் இல்லை' என்று ஒதுங்கிக்கொண்டார் என்றால், சுடுவதற்கு உத்தரவிட்ட அதிகாரி யார்? இனிமேல், ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடும் எண்ணம் யாருக்குமே வரக்கூடாது’என்று ஸ்டெர்லைட் நிர்வாகம், ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவிடம் "5 சி' கொடுத்திருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. திட்டமிட்டே, கலெக்டர் அலுவலக வளாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்தி குமாரை அங்கிருந்து போகச்சொல்லிவிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள்.
அப்போது, அந்த இடத்தில் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவைத் தவிர, வேறு அதிகாரிகள் இல்லை. துப்பாக்கிச் சூட்டை நடத்தச் சொல்லிவிட்டு, அங்கிருந்து அவசர அவசரமாக அவர் கிளம்பியதற்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. பரமக்குடியில் என்ன நடந்தது? அங்கு ஸ்பாட்டில் இருந்த எஸ்.பி.யை ஓரம் கட்டிவிட்டு, பாதுகாப்புக்காக வந்திருந்த செந்தில்வேலன் எஸ்.பி.யை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார் ஐ.ஜி. பரமக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது நடந்தது போலவே தூத்துக்குடியிலும் நடந்திருக்கிறது''’என்றார் வேதனையுடன்.
அரசாங்க வன்முறையால் போராட்டம் ஓயாது!
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மெரினா பிரபு நம்மிடம், “""அரசாங்கமானது கார்ப்பரேட் நிறுவனங்களைப் பாதுகாக்கத் துடிக்கிறது. மக்களைச் சாகடிக்கிறது. உயிர் பயத்தை ஏற்படுத்தி, போராடுபவர்களை ஒடுக்கிவிட முடியாது. இனி, உலகம் முழுவதும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் இன்னும் வேகமாகப் பரவும்''’’ என்றார் கொதிப்புடன்.
காவல்துறையின் அத்துமீறல் தொடர்ந்தபடியே இருக்கிறது. அண்ணாநகர் 9-வது தெருவில் உள்ள காருண்யாவின் வீட்டில் பூட்டை உடைத்து, அவருடைய மகன்கள் பார்த்திபன், தினேஷை அள்ளிக்கொண்டு போயிருக்கிறார்கள். புதுக்கோட்டை காவல் நிலையத்தில் இளைஞர்கள் 150 பேரை கடுமையாக டார்ச்சர் செய்து வருகிறார்கள். பெட்ரோல் குண்டு வீச்சு, டாஸ்மாக் கடைக்குத் தீ வைப்பு என, பாதிக்கப்பட்ட மக்களின் ஆவேசமும் அதிகரித்தபடியே உள்ளது.
ஸ்டெர்லைட்டிடம் காசு வாங்கி, மக்களை நரவேட்டை ஆடுகிறது கொலைகார எடப்பாடி அரசு.
-சி.என்.இராமகிருஷ்ணன், நாகேந்திரன், பரமசிவன்
படங்கள்: ராம்குமார், ராஜா
-----------------------------
"போலீஸ் வர்றான் ஓடிரு'… -அலறும் தூத்துக்குடி!
அரசாங்கத்தின் அராஜக கொலை நடந்து முடிந்து மூன்று நாட்களாகியும் மயான பீதியிலிருந்தும் உயிர் பயத்திலிருந்தும் மீளவே இல்லை தூத்துக்குடி மாநகரம். 144 தடையுத்தரவால் எங்காவது ஒரு மூலையில் ஒரே ஒரு பால்கடை மட்டும் திறந்து, ஒருமணி நேரத்திலேயே மூடிவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு பால் வேண்டுமே என்ற பரிதவிப்பில், அந்த ஒருமணி நேரத்தில் தாய்மார்கள் அல்லாடுவதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.
ஒருவித திகிலுடன்தான் தூத்துக்குடி நகரை நாம் வலம் வந்தோம். துப்பாக்கிக் குண்டுக்கு பலியான சங்கய்யா குடும்பம் வசிக்கும் மில்லர்புரம் சிலோன் காலனிக்குச் சென்றோம். சங்கய்யாவின் அக்கா பாப்பாத்தி, மிரட்சியுடன் நம்மிடம் பேசினார். “""இலங்கை பூமியிலிருந்து இங்க பொழைக்க வந்தோம்யா. என் தம்பி சென்ட்ரிங் வேலை பார்க்குறவன். அன்னைக்கு வேலை இல்லாததால, பேரணி பக்கம் போயிருக்கான். போலீஸ்காரன் சுட்டு செத்துட்டான். சிங்களக்காரனாச்சும் வானத்துல இருந்து ஷெல் போட்டு எங்களைக் கொன்னான். அப்படிச் செத்தாக்கூட கௌரவம். ஆனா தமிழ்நாட்டு போலீசு, நேருக்கு நேரா சுட்டுக் கொன்ன கேவலத்தத்தான் தாங்க முடியல''’என கதறினார்.
தோழி ஸ்னோலினை பறி கொடுத்த இன்ஃபெண்டாவோ, “""திருநங்கைகளுடன் கோஷம் போட்டபடி போனபோது, "எல்லாரும் உட்காருங்க' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் ஃபிரண்ட் வாய்ல சுட்டிருக்கு போலீஸ்''’என வெடித்து அழுதார். “கருப்புக் கலர் சுடிதார் போட்டுப் போனதுக்கு "என்னடி கருப்புக் கலர்?'னு கேட்டுக்கிட்டே துப்பட்டாவை உருவி மானபங்கப்படுத்தினான் ஒரு போலீஸ். என் கையில மட்டும் துப்பாக்கி இருந்துச்சு...''’என ஆவேசமானார் மாரியம்மாள்.
""என்னோட புருஷன், ரெண்டு பிள்ளைகளுடன் போராட்டத்துக்குப் போனேன். போலீஸ் விரட்டியதும் தெறிச்சு ஓடி சின்ன பாலத்துக்குக் கீழே பதுங்குனேன். என்னை வெளியே இழுத்துப் போட்டு, துப்பாக்கிக் கட்டையால வயித்துலேயே குத்துனான் படுபாவி. இன்னமும் ரத்தப் போக்கு நிக்கல, தண்ணி குடிச்சாக்கூட வாந்தி வருதுங்க''’எனச் சொன்னவாறே தேம்பித் தேம்பி அழுதார் மரியஜூடி சேனா. போலீஸைப் பார்த்தாலே அலறுகிறது தூத்துக்குடி.
துப்பாக்கிச் சூட்டால் காயம்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் 20-க்கும் மேற்பட்ட உடல்கள் இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக அரசு சொல்லிவரும் நிலையில், உள்ளேயே மின்உற்பத்தி சாதனங்களை வைத்துள்ளது ஸ்டெர்லைட்.
---------------------------
எடப்பாடியை பேச வைத்த ஸ்டாலின்!
வியாழனன்று தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிலிருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் தன் கட்சி எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் அறை முன்பு தர்ணா செய்தார். குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட நிலையில், தலைமைச் செயலகம் முன்பாக தி.மு.க.வினர் ஏராளமாக திரண்டு முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்தனர். ஸ்டாலினையும் எம்.எல்.ஏக்களையும் போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்ற, அதனை நகர விடாமல் தி.மு.க.வினர் தடுக்க பதற்றம் அதிகரித்து, ஒரு வழியாக கைது நடவடிக்கை நடந்தேறியது. அதன்பின், தலைமைச் செயலக வளாகத்தில் மந்திரிகள் புடைசூழ மீடியாக்களை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி. துப்பாக்கிச் சூட்டில் மக்கள் உயிர்ப்பலியான மூன்றாவது நாளில் வாய் திறந்த எடப்பாடி, "நாடகம் நடத்துகிறார் ஸ்டாலின்' எனச் சொல்லிவிட்டு, துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் வகையில் பேசியவர், 144 தடையுத்தரவு போடப்பட்டிருப்பதால் அதனை மதித்து, தூத்துக்குடிக்கு செல்லவில்லை என அதிரவைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்ப, டக்கென நழுவினார்.
-சி.ஜீவாபாரதி