"ஹலோ தலைவரே, தமிழகத்தில் எப்படியும் தங்கள் செல்வாக்கை நிலை நாட்டவேண்டும் என்று பா.ஜ.க.வின் டெல்லித் தலைமை பரபரக்குது.''”’
"ஆமாம்பா, அதற்காகத்தான் எதிர்க்கட்சி யினரைக் குறிவைத்து தன் விசாரணை அமைப்பு களை டெல்லி ஏவி விட்டுக்கிட்டு இருக்குதே?''”’
"உண்மைக்தாங்க தலைவரே, தி.மு.க. தரப்பை எடுத்துக்கிட்டா, தங்கள் கூட்டணியில் நிற்கும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டவர் களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கள். இவர்களின் பிரச்சாரத்தை முழுமையாக மத்திய உளவுத்துறை மூலம் டெல்லி வாட்ச் பண்ணுகிறது. பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை மிகத்துல்லியமாகக் குறிப்பெடுத்து, உளவுத்துறையினர் உடனுக்குடன் டெல்லிக்கு அனுப்புகிறார்களாம். அதிலும் உதயநிதி மீது தீவிர கவனம் வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிற தாம் டெல்லி. கார ணம், அவர் பேச்சு மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிற தாம். அதனால் இவரது பேச்சை அப்படியே வீடியோப் பதிவாகவும் அது கேட் கிறதாம். ஏனெனில், ஏதாவது அதிரடிக் கைதுக்கு வாய்ப்பு அமை யாதா? என்கிற எதிர்பார்ப்பு தானாம். போதைப்பொருள் கடத்தல் விவகாரத் தில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் நண்பரும், திரைப்பட இயக்குநருமான அமீர் உட்பட 3 பேரை செவ்வாய்க்கிழமை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அமீரின் விசாரணையை அடுத்து உதயநிதிக்கு குறிவைக்கப்படும் என டெல்லி பா.ஜ.க. வட்டாரம் முணுமுணுக்கிறது. ''”’
"அடக்கொடுமையே, இதற்கிடையில் தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் எக்காரணம் கொண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்றும் மோடி கருதுகிறாராமே?''”’
"தமிழகத்திலிருந்து பா.ஜ.க.வின் மாநிலப் பொறுப்பை ஏற்றிருக்கும் நபர் உட்பட ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்திரராஜன் ஆகியோர் வெற்றி பெற்று டெல்லிக்கு வரவேண்டும் என்று ஆர்வம் காட்டுகிற பிரதமர் மோடி, தேர்த லில் தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் எந்த நிலையிலும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று ஒரு டார்கெட் பட்டியலை தமிழக பா.ஜ.க. நிர்வாகி களிடம் கொடுத்திருக் கிறாராம். அந்தப் பட்டியலில் கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் தி.மு.க. வின் கூட்டணி யில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் திருமாவள வன் ஆகிய ஐவரின் பெயர் இடம் பெற்றிருக்கிற தாம். காரணம், தமது ஆட்சி அமைந்தால் இவர் கள்தான் அதிகம் குடைச்சல் கொடுப்பார்கள் என்பதுதானாம். இதற்காக அமலாக்கத்துறை, தேர்தல் அதிகாரிகள் ஆகியோருக்கு சில சீக்ரெட் அசைன்மெண்டுகளும் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். அதேபோல், மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் கைவைக்கவும் சில வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கிறதாம்.''”’
"பிரச்சாரப் பயணத்தின்போதே முதல்வரை, நடிகர் கமல் சந்தித்திருக்கிறாரே?''”’
"சேலம் சுற்றுப்பயணத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார் கமல்ஹாசன். பிரச்சாரத் துக்காக ஈரோடு செல்லும் வழியில் சேலத்தை அடைந்த அவர், அங்கே முதல்வர் வந்திருப் பதை அறிந்து சந்தித்தார். இவர்களின் சந்திப்பின் போது 30 நிமிடங்களுக் கும் மேலாக அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது, எடப்பாடி ஆட்சியில் நடந்த நிதி சீர்கேடுகளையும், ஊழல்களையும் சொல்வதோடு, தி.மு.க. ஆட்சியின் முக்கியமான சாதனைகள் குறித்தும் உங்கள் பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டுங்கள் என்று கமலிடம் கேட்டுக்கொண்டாராம் ஸ்டாலின். அதோடு இவை தொடர்பான குறிப்புகளையும் அவர் கொடுத்தாராம். மேலும் பேரிடரின்போது தமிழகத்துக்கு போதிய நிதி வழங்காமல் அடம் பிடித்த மோடி அரசு குறித்தும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றும் கேட்டுக் கொண்டாராம். கமலும் இவற்றின் அடிப் படையிலேயே தனது பிரச்சார உரையை அமைத்துக்கொள்கிறாராம்.''”’
"இன்னும்கூட சில இடங்களில் நடக்கும் பிரச்சினைகளை ஸ்டாலின் மேனேஜ் செய்து வருகிறாரே?''”’
"ஆமாங்க தலைவரே, ராகுலுக்கு நெருக்க மான திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலின் நெருங்கிய உறவினர் ஒருவர், தி.மு.க. வைக் கடுமையாக தாக்கிவருகிறார். இதை யறிந்த தி.மு.க. தரப்பு, சசிகாந்த்தைப் புறக்கணிக்கத் தொடங்கியது. உடனே இதை சசிகாந்த், கவலை யுடன் முதல்வர் ஸ்டா லின் கவனத்துக்கு எடுத்துச்செல்ல, உதய நிதியே களமிறங்கி, சசிகாந்த்துக்கு ஆறுதல் சொன்னதோடு, தி.மு.க. தரப்பையும் உற்சாகமாகக் களமிறங்க வைத்திருக்கிறாராம். இதேபோல், தி.மு.க. சார்பில் வேலூரில் களமிறங்கியுள்ள, அமைச்சர் துரைமுருகனின் மகனான கதிர்ஆனந்த், பெண் வாக்காளர்கள் மத்தியில் பேசும்போது, ’"நாங்கள் கொடுத்த மகளிர் உரிமைத் தொகையில் ஃபேர் அண்ட் லவ்லி எல்லாம் வாங்கிப் போட்டதால், நீங்கள் எல்லோரும் அழகாக இருக்கிறீர் கள்’என்று ஏடாகூடமாக உளறினாராம். அது ஏகத்துக்கும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதுவும் ஸ்டாலின் கவனத்துக்குப் போக... அவரைக் கடுமையாகக் கண்டித்து, அவர் வாய்க்குக் கடிவாளம் போட்டிருக்கிறாராம்.''”’
"கோவை பா.ஜ.க. வேட்பாளரின் பலவீனமான வேட்பு மனுவை தி.மு.க. எதிர்க்கவில்லையே?''”’
"கோவையில் போட்டியிடும் அந்த பா.ஜ.க. நபர் தப்புத் தப்பாக அபிடவிட்டுகளைத் தாக்கல் செய்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் அ.தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சியும், அவரது வேட்பு மனு செல்லாது என்று தேர்தல் ஆணையம் வரை புகார் கொடுத்திருக்கின்றன. ஆனால், தி.மு.க.வோ அந்த பா.ஜ.க. நபர் விவ காரத்தைக் கொஞ்சமும் கண்டுகொள்ள வில்லை. இதுகுறித்து அறிவாலயத் தரப்பில் விசாரித்தபோது, ’"தேர்தலில் நின்றால் தோற்றுவிடுவோம் என்று தெரிந்ததால், தேர்தல் ஆணையமே தன்னை ரிஜக்ட் செய்யவேண்டும் என்று திட்டமிட்டு, வேண்டுமென்றே அந்த நபர், இப்படி தவறாக அபிடவிட்டு களைத் தாக்கல் செய்திருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை அவர் தப்பி ஓடுவதில் விருப்பமில்லை. அவர் தேர்தலில் நின்று மண்ணைக் கவ்வும் காட்சியைப் பார்க்க விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் அந்த விவ காரத்தை எதிர்க்கவில்லை'’என்றார்கள் புன்னகையோடு.''”’
"தேர்தல் முடியும்வரை கலைஞர் நினைவிடத்துக்கு சீல் வைக்கவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. தரப்பு மனு கொடுத்திருக்கிறதே?''”’
"அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவின் இணைச்செயலாளரான பாபுமுருகவேல், தமிழக தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் முடியும்வரை கலைஞர் நினைவிடத்துக்கு சீல் வைக்கவேண்டும் என்று மனு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர் எந்த ஒரு அரசியல் கட்சியின் சின்னம், கொடி, சிலை, புகைப்பட கண்காட்சிகள் ஆகியவை பொது இடத்தில் இருந்தால் அவற்றை துணி போட்டு மறைக்க வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும் என்கிற தேர்தல் விதியை, இதற்கு அனுசரணையாக அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரை மீண்டும் அழைத்த எடப்பாடி, கலைஞர் நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகத்துக்கும் சீல் வைக்குமாறு மற்றொரு மனுவை கொடுக்கும்படி சொல்ல, அதேபோல் மற்றொரு மனுவையும் கொடுத்திருக்கிறார். தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவோ, இந்த மனுக்களை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்து, என்ன செய்யலாம் என்று கேட்டிருக்கிறாராம். இது தி.மு.க. தரப்பை கடும் எரிச்சலில் ஆழ்த்தியிருக்கிறது.''”’
"தங்களுக்குக் கட்சித் தலைமை கொடுத்த போனஸிலேயே அ.தி.மு.க. நிர்வாகிகள் கை வச்சதா அ.தி.மு.க. பேச்சாளர்கள் மருகுறாங்களே?''”’
"ஆமாங்க தலைவரே, கடந்த 30ஆம் தேதி அ.தி.மு.க. தலைமை, கட்சிப் பேச்சாளர்கள் அனைவரை யும் அழைத்திருந்தது. ஏறத்தாழ 450 பேர் வந்திருந்தாங் களாம். தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கவிருக்கும் அவர்களுக்கு கட்சித் தலைமையின் சார்பில் போனஸ் வழங்கப்பட்டிருக்கு. அதாவது 141 ஏ கிரேடு பேச்சாளர் களுக்கு தலா ஒரு லட்சமும், பி கிரேடு பேச்சாளர்கள் 200 பேருக்கு தலா 50 ஆயிரமும், சி கிரேடு பேச்சாளர்கள் 150 பேருக்கு தலா 25 ஆயிரமும் கவர்ல போட்டுக் கொடுத்திருக் காங்க. ஆனால் ஆபீசை விட்டு வெளியே வந்து கவரைப் பிரிச்சிப் பார்த்த பேச்சாளர்களுக்கு அதிர்ச்சியா இருந்ததாம். காரணம், ஒவ்வொரு கவரிலிருந்தும் பத்தாயிரம் முதல் ரெண்டாயிரம் ரூபாய் வரை இஷ்டத் துக்கும் உருவப்பட்டி ருந்ததாம். ’"எங்க பொழப்பே போராட்டப் பொழப்பா இருக்கு. அப்படியிருக்கும்போது எங்க போனஸ்ல போயி கை வைக்கணுமா?'ன்னு அவங்க அழாத குறையா ஆதங்கப்பட்டிருக்காங்க. இந்த உருவல் வேலை யைப் பார்த்தது அ.தி.மு.க. மாஜி மந்திரி வைகைச் செல்வன் டீம்தான்னு பேசிக்கிறாங்க.''”
"தமிழக பா.ஜ.க. மீது ஆர்.எஸ்.எஸ். கடும் அதிருப்தியில் இருக்கிறது என்கிறார்களே?''’
"பா.ஜ.க.வைச் சேர்ந்த தடா பெரியசாமி, சிதம்பரம் தொகுதியைக் கேட்டுக்கொண்டிருந்தார். சிறுத்தைகள் கட்சியில் இருந்து சங்கராச்சாரியார் சிபாரிசில் பா.ஜ.க.வில் சேர்ந்தவரான இந்த தடா, ஆர்.எஸ்.எஸ்.ஸோடும் மிக நெருக்கமானவர். எனவே அவருக்கு ஆர்.எஸ்.எஸ்.சும் சிபாரிசு செய்தது. ஆனால் தடாவுக்கே தெரியாமல் அங்கே வேலூரில் இருந்து, முன்னாள் மேயரான கார்த்திகாயினியை நிற்க வைத்துவிட்டது கமலாலயம். இது குறித்துத் தடா கேட்க, இதற்குக் காரணம், பா.ஜ.க.வின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் அந்த நபரும், சீனியரான கேசவவிநாயகமும்தான் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் மனம் வெறுத்துப்போன தடா, அ.தி.மு.க. பக்கம் தாவிவிட்டார். இதேபோல் தென்காசி தொகுதிக்கு ஆனந்தன் ஐயாசாமியை வேட்பாளராக்கும்படி ஆர்.எஸ்.எஸ். கேட்டுக் கொண்டதாம். இவருக்கும் சீட் கொடுக்கப்படாததில் ஆர்.எஸ்.எஸ். தரப்பு தமிழக பா.ஜ.க. மீது கடும் அதிருப்தியும் கோபமும் அடைந்திருக்கிறதாம்.''”’
"பா.ஜ.க. குறிவைத்த தொகுதிகளிலும் நிலைமை சரியில்லையாமே''”’
"கன்னியாகுமரியையும், வேலூரையும் குறிவைத்திருந்த பா.ஜ.க., இவ்விரு தொகுதிகளின் வெற்றியைப் பெரிதும் எதிர்பார்க்கிறதாம். ஆனால் கன்னியாகுமரியில் களமிறக்கப்பட்டிருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், தான் அமைச்சராக இருந்தபோது தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்கிற அதிருப்தி அங்கு பெரும்பான்மையாக உள்ள இந்து நாடார் சமூகத்தினர் மத்தியில் அதிகமாக இருக்கிறதாம். அதேபோல் வேலூரில் இவர்கள் தரப்பில் களமிறக்கப்பட்டிருக்கும் ’புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம், கரன்சியை தண்ணீராய் இறைத்து வருவதைக் கண்ட தி.மு.க. தலைமை,. அங்குள்ள தி.மு.க. மா.செ. நந்தகுமாரை அழைத்து,. ஏ.சி.சண்முகத்தை எப்படியாவது தோற்கடித்து, தங்கள் வேட்பாளரான கதிர்ஆனந்த்தை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று, சில டெக்னிக்குகளையும் சொல்லியிருக்கிறதாம். அதனால் அங்கும் பா.ஜ.க. தரப்பு மெல்ல மெல்ல வலுவிழந்து வருகிறதாம். இது இப்போதே கமலாலயத் தரப்பைக் கவலையடையச் செய்திருக்கிறது என்கிறார்கள்,”
"அ.தி.மு.க.வும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறதே?”
"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வைப் போலவே அ.தி.மு.க. எடப்பாடியும் தங்களுக்கு கொஞ்சம் வெளிச்சமான தொகுதிகள் என்று திருப்பூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கோவை, பொள்ளாச்சி, திருச்சி, நாமக்கல்,. சேலம் , காஞ்சிபுரம். ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, விருந்துநகர் ஆகிய 13 தொகுதிகளைப் பட்டியலிட்டிருக்கிறாராம். இங்கெல்லாம் வெற்றிக்கனியைப் பறிக்காவிட்டாலும், தொகுதிக்கு 10 கோடி வீதம் செலவிட்டாலே கணிசமான வாக்குகளை கௌரவமாக சொல்லிக்கொள்ளும் படி வாங்கிவிடலாம் என்பது அவர் கணக்காம். அதேபோல் திருப்பூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளைத் தங்கள் கட்சி கைப்பற்றும் என்றும் அழுத்தமாகக் கருதும் அவர், இவற்றில் மட்டும் கூடுதல் கரன்சிப் பாசனத்தைப் பாயச்செய்திருக்கிறாராம்.''””
"புதுவையில் பா.ஜ.க. வேட்பாளர் நமச்சிவாயம், விருப்பமில்லாமல்தான் நிற்கிறாராமே?''”
"ஆமாங்க தலைவரே, புதுவை முதல்வர் ரெங்கசாமியின் மருமகனான நமச்சிவாயத்துக்கு டெல்லி அரசியலில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லையாம். அதனால் நான் தேர்தலில் நிற்கவிரும்பவில்லை என்று சொல்லியபடியே இருந்தாராம். பா.ஜ.க. மேலிடமும் புதுவையில் அங்கே ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழிசை, ஐ.எஃப்.எஸ். அதிகாரி சத்யமூர்த்தி ஆகியோரின் பெயர்களே பரிசீலித்துக்கொண்டிருந்தது. நிர்மலா சீதாராமன், தேர்தலிலேயே நிற்கவில்லை என்று சொல்ல, தமிழிசையோ எனக்கு சென்னையில் சீட் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டார். இந்த நிலையில் புதுவை முதல்வர் ரெங்கசாமி, இங்கே நமச்சிவாயம்தான் பொருத்தமான வேட்பாளர். அவருக்கு பதில் சத்தியமூர்த்தியை நிறுத்தினால் எங்கள் கட்சியினர் அவருக்கு வேலை செய்யமாட்டார்கள். என்னாலும் ஈடுபாடு காட்ட இயலாது என்று சொல்லிவிட்டாராம். அதனால் வேறு வழியில்லாமல் நமச்சிவாயத்தை நிறுத்தியிருக்கிறதாம் பா.ஜ.க.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செக்மெட் பாரில், அண்மையில் இரண்டு வசதியான இளைஞர்கள் மோதிக்கொண்ட பிரச்சினை பெரிய அளவில் வெடித்தது. போலீஸோ, அந்த விவகாரத்தை பெரும்பாடுபட்டு பூசி மெழுகிவிட்டது. இது பெரிய இடத்து வாரிசுகள் உட்பட மேல்மட்ட நபர்கள் புழங்கும் பாராம். தற்போது, இந்த பாரின் இரண்டாவது தளம் திடீரென இடிந்து விழுந்ததில், அங்கே பணியாற்றிய மூன்றுபேர் அநியாயமாக உடல் நசுங்கி இறந்து போயிருக்கிறார்கள். பாரின் ஓய்வு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால், உயிர்ப்பலியின் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கிறது. பார் செயல்படும் நேரத்தில் விபத்து நடந்திருந்தால் உயிரிழப்பின் எண்ணிக்கை நூறைத் தாண்டியிருக்கும் என்று அங்கிருப்பவர்களே பகீரூட்டுகிறார்கள். இந்த பாரில் அடிக்கடி பிரச்சினைகள் வெடித்தும் காவல்துறை, கண்டுகொள்வதே இல்லையாம். காரணம், அதற்கு இதன்மூலம் கிடைக்கும் மாத மாமூலே ஒரு கோடி ரூபாயை நெருங்கும் என்கிறார்கள். சட்டவிரோத மணல் பிஸினசில் கொடிகட்டிப் பறக்கும் கரிகாலனுக்குச் சொந்தமானதாம் இந்த பார். இந்த விபத்துக்குப் பிறகு முதல்வர் அலுவலகமே, இந்த பார் குறித்து தீவிரமாக விசாரித் திருக்கிறதாம்.''”
______________
இறுதிச் சுற்று!
செந்தில்பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனு ஏப்ரல் 1-ந் தேதி (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என தி.மு.க.வின் சீனியர் வழக்கறிஞர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். செந்தில்பாலாஜியிடம் நம்பிக்கையும் கொடுத்திருந்தனர். இதனால் கடந்த 1 வாரமாகவே செந்தில்பாலாஜி தரப்பிலும், தி.மு.க. மேலிடத்திலும் பாசிட்டிவ் வைப் இருந்து வந்தது. ஆனால், செந்தில்பாலாஜியின் மனுவை விசாரித்த நீதிபதி ஓஹா, ஜாமீன் தர மறுத்ததுடன், இதற்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், தனக்கு எதிரான வழக்கை 3 மாதத்தில் முடிக்கவேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவையும் விசாரித்த நீதிபதி ஓஹா, "உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. அது தேவையற்றது' என்று கூறி, விசாரணையை 29-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். மீண்டும் ஜாமீன் கிடைக்காததும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சாதகமான உத்தரவு வராததும் செந்தில் பாலாஜியின் வழக்கறி ஞர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
-இளையர்
____________
மோடியின் மேட்ச் பிக்ஸிங்! -ராகுல் காட்டம்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கெதிராக வங்கிக்கணக்கு களை முடக்குவது, வருமான வரித்துறை மூலம் பல்லாயிரம் கோடி அபராதம் விதிப்பது என்று தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, 31ஆம் தேதி ஞாயிறன்று, டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, திருச்சி சிவா, திருமாவளவன், லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ், சரத் பவார், அகிலேஷ் யாதவ், சீதாராம் யச்சூரி, டி.ராஜா, பரூக் அப்துல்லா, கேஜ்ரிவா லின் மனைவி சுனிதா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். “"டெல்லி, ஜார்கண்ட் முதல்வர்களை சிறையில் தள்ளி, நான்கு கோடீஸ்வர தொழிலதி பர்களுடன் இணைந்து மேட்ச் பிக்ஸிங் சதி மூலம் மக்களவைத் தேர்தலில் மோடி ஜெயிக்கக் பார்க்கிறார்'' என்று காட்டமாக விமர்சித்தார் ராகுல்காந்தி.
தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட திருச்சி சிவா எம்.பி., தமிழக முதல்வர் அனுப்பிய கடிதத் தை வாசித்தார். "மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதில் மலிவான யுத்திகளை பா.ஜ.க. கையாள்வதாக' மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
-கீரன்