டந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில், திருச்சி மாவட்டம் மாதவப்பெருமாள் கோயில், தாளக்குடி, நொச்சியம் உள்ளிட்ட பகுதிகளிலிருக்கும் மணல் குவாரிகளில் நடத்திய ஆய்வில், மணல் குவாரியில் உள்ள ஸ்டாக் பாயிண்ட்டில் எவ்வளவு மணல் உள்ளது? அனுமதிக்கப்பட்ட அளவில் மணல் விற்கப்படுகிறதா? அதற்கு முறையான ரசீதுகள் போடப்பட்டு பராமரிக்கப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை ஆய்வுசெய்தனர். மணல் குவாரி ஒப்பந்ததாரர்களிடமும் பலகட்ட விசா ரணைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடந்து மீண்டும் இம்மாதம் 4ஆம் தேதி, ஐ.ஐ.டி. மாணவர்கள் உதவியுடன், ரிவர் சர்வேயர், ஹைட்ரோ சர்வேயர் உடன் அதே பகுதிகளில் மீண்டும் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

aa

அதில், ஒரு நாளைக்கு எத்தனை லாரிகள் வருகிறது? எத்தனை யூனிட் அனுமதி பெற்று வருகிறது? அதற்கான தொகை எவ்வளவு? மணல் குவாரிகளில் அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படு கிறதா? என்பதையெல்லாம் ஆய்வு செய்தனர். அதில், நாள் ஒன்றுக்கு 50 லாரிகளுக்கு மட்டுமே மணல் எடுப்பதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு, 500 லாரிகளுக்கு அள்ளப்படுவது உறுதிப்படுத்தப்பட் டது. மேலும், ஐ.ஐ.டி. மாணவர்களின் உதவியுடன் கொள்ளிடம் ஆற்றில் எவ்வளவு ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பதை அளவீடு செய்தனர். கடந்த இரண்டு மாதங்களில் மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதும், விதிமுறைகள் மீறப்பட்டதும் உறுதிசெய்யப்பட்டது. எனவே மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும், நீர்வளத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியதில், பெரும்பாலான இடங்களில் மணல் அள்ளுவதை உயர் அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்காதது வெட்டவெளிச்ச மானது. இதையடுத்து, தமிழ்நாட்டிலுள்ள 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அதிகாரிகள் விரைவில் அமலாக்கத்துறை முன்பாக ஆஜர் ஆவார்களென்று கூறப்படுகிறது.

இந்த மணல் விவகாரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பெரிய அளவில் கவனம் செலுத்தாமல், கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில்தான் அதிக விதிமீறல்கள் நடைபெற்றதாகவும், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே திருச்சி மாவட்ட ஆட்சியருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், அமலாக்கத்துறையினர் முன்னிலை யில் ஆஜராகலாம் அல்லது திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அமலாக்கத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தலாம். திருச்சி மாவட்ட ஆட்சிய ருக்கே சம்மன் அனுப்பப்பட்டிருப்பது, அப்பகுதி மணல் குவாரி உரிமையாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

Advertisment