இரு குடும்பங்களுக்கு இடையிலான குடும்பப் பகை அடுத்தடுத்து கொலை நடக்க காரணமாக இருப்பது திருச்சி போலீசாரைக் கவலையடையச் செய்துள்ளது.
திருச்சி அரியமங்கலம் பகுதி, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஊரின் ஒதுக்குப்புறமான பகுதியாக இருந்தது. அதனால் அந்த இடத்தை திருச்சி நகரின் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடமாக மாற்றினார்கள். அந்த பகுதியில் பன்றி வளர்ப்பு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் பன்னி பெரியசாமி ஆரம்ப காலத்தில் பெரிய ரவுடியாகவும் பன்னி வளர்ப்பவராகவும் இருந்தார். இவரிடம் வேலைக்கு வந்தவர்தான் அவருடைய தம்பி பன்னி சேகர். அதில் பன்னி சேகருக்கு கயல்விழி என்ற மனைவியும், முத்துக்குமார், இளவரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அதேபோல் பெரியசாமிக்கு தங்கமணி, சிலம்பரசன். லோகநாதன் என்ற 3 மகன்கள் உள்ளனர்.
பெரியசாமி இறந்ததும் தொழிலை சேகர் மற்றும் அவரது 2 மகன்கள் செய்துவந்துள்ளனர். இந்நிலையில் சேகரிடம், பெரியசாமி மகன்களான தங்கமணி, சிலம்பரசன், லோகநாதன் ஆகியோர் தங்களுக்கு உரிய சொத் தைப் பிரித்துக்கொடுக்கும்படி பலமுறை கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் தங்கமணி, சிலம்பரசன் ஆகி யோர் தங்களது நண்பருடன் சேர்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டு சேகரை வெட்டிப் படுகொலை செய்தனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டு பெரிய சாமியின் மகனும், ரவுடியுமான சிலம் பரசனை சேகர் தரப்பினர், அவனது வீட்டிற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதி யில், வெட்டிப் படுகொலை செய்தனர். இந்நிலையில் ஏப்ரல் 30-ஆம் தேதி முத்துக்குமார், தனது வீட்டு மின்மோட்டாரை ரிப்பேர் பார்த்து வாங்கிக் கொண்டு பைக்கில் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப் போது தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் குப்பைக் கிடங்கு செல்லும் சாலையருகே வந்தபோது, லோகநாதன் தரப்பினர் வழிமறித் துள்ளனர். இதனால் முத்துக்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்து தப்பியோடினார். அவரை லோகநாத னும் அவருடன் வந்த கூட்டாளிகளும் ஓட ஓட விரட்டி சரமரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் படுகாயமடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் முத்துக்குமாரின் உட லைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக் குப்பதிவு செய்து லோகநாதன், இளஞ்செழியன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இந்த கொலையில் இரண்டு குடும்பத்தினருக்கும் நண்பராக இருந்த குட்டை பாலு என்பவர்தான் இதற்கு முன்பு சிலம்பரசனைக் கொலைசெய்வதற்கு உடந்தையாக இருந்துள்ளார். சிலம்பரசனின் நடவடிக்கைகளை அவருடன் பழகிக்கொண்டே முத்துக்குமாருக்கு அவ்வப்போது தகவல் கூறி வந்துள்ளார். சிலம்பரசனை குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துவந்து சிக்கவைத்ததும் பாலுதானாம். இதற்காக குறிப்பிட்ட தொகை தருவதாகவும் முத்துக்குமார் கூறியிருந்தாராம்.
திட்டமிட்டபடி கொலைமுடிந்ததும் கூறியபடி தொகையை அவர் குட்டை பாலுவுக்குத் தரவில்லையாம். இதைக் கேட்டபோது, அவரையும் முத்துக்குமார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பாலு அவரிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு முத்துக்குமார் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்திலும் குட்டை பாலுதான் பெரியசாமி குடும்பத்தினருக்கு உதவியாக இருந்ததாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த கூலிப் படை ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகமெழுந்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு லோகநாதன் தரப்பினருடன் மதுரையைச் சேர்ந்த சிலர் சேர்ந்து சுற்றியதாக போலீசாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, அவர்களும் இந்த கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். கொலை நடந்த இடத்தி லுள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை யும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண் டனர். அதில் கிடைத்த தகவலின்படி லோகநாதனின் கூட்டாளிகளான அரியமங்கலம் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த குமரேசன், கூல் தினேஷ், பொன்மலைப் பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்கிற டேஞ்சர் மணி உள்ளிட்ட 3 பேரை காவல்துறை யினர் கைதுசெய்தனர். இந்த கொலை வழக்கில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
கைதான லோகநாதன் போலீசில் அளித் துள்ள வாக்குமூலத்தில், "எனது தந்தை பெரியசாமி பன்றி வளர்த்து அதன் மூலம் வருமானம் ஈட்டிவந்தார். பின்னர் தொழில் முழுவதும் எனது சித்தப்பா கேபிள் சேகர் கைக்குச் சென்றது. அவர் அந்த வருமானத்தை தனது மனைவி குழந்தை களுக்கு செலவழித்து வசதியாக வாழ வைத்தார். நாங்கள் ஏழ்மையில் தடுமாறினோம். எங்கள் அண்ணனுடன் சென்று சொத்தை பிரித்துத்தரு மாறு கேட்டோம். அதற்கு கேபிள் சேகர் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் அவரை கொலை செய்தோம். இந்த முன்விரோதத்தில் எனது அண்ணன் சிலம்பரசனை முத்துக்குமார் கொலை செய்தார். இதனால் முத்துக்குமாரை தீர்த்துக் கட்ட தக்க தருணம் பார்த்து வந்தோம். திட்டமிட்டபடி நேற்று நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து அவரை தீர்த்து கட்டினோம்''’என்று தெரிவித்துள்ளார்.
தொடர் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?