"சசிகலா குடும்பத்தினருக்கிடையே நடக்கும் அரசியல் சண்டையின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது' எனப்படும் நிலையில்... "பா.ஜ.க.வுக்கு செக் வைப்பதற்காகவே தினகரனுக்கு எதிராக திவாகரனை மோதவிடும் ரகசிய அரசியலை கையாண்டுவருகிறார் எடப்பாடி பழனிச்சாமி'’என்கிறார்கள் உளவுத்துறை அதிகாரிகள்.

swamy""கடந்த 4 மாதங்களாக எடப்பாடி அரசுடனான நெருக்கத்தைக் குறைத்துக்கொண்டதுடன் அரசின் மீது அதிருப்தியும் அடைந்திருந்தார் பிரதமர் மோடி. எடப்பாடி தொடங்கி தமிழக அமைச்சர்கள் அனைவரின் ஊழல்களையும் அவர்கள் சேர்த்திருக்கும் சொத்து விவரங்களையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மூலம் ரிப்போர்ட்டுகளை சேகரித்து வந்தது டெல்லி. இதற்குக் காரணம் சுப்பிரமணியசாமிதான்.

அரசியலில் தனது எதிரியான மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆதரிக்கும் எடப்பாடியின் ஆட்சியை ஒழித்துக்கட்டவே சசிகலா குரூப்பை ஆதரிக்கும் முடிவை எடுத்தார் சுப்பிரமணியசாமி. அவருடனான நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டார் தினகரன்.

இந்த நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு வலிமையான கூட்டணி அமைகிறதோ இல்லையோ, காங்கிரசுக்கு அமைந்துவிடக் கூடாது என திட்டமிட்டார் மோடி. இதற்கான ஆலோசனை நடந்து முடிந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் மோடியிடம் விவாதித்த சாமி, "தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேத்திட்டா காங்கிரஸ் தனிமைப்பட்டுவிடும்னு நினைக்கிறீங்க. அது தப்பு. தி.மு.க. கூட்டணி இல்லைன்னா, சசிகலா-தினகரனுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயாரா இருக்கு. அதற்கானதையெல்லாம் மறைமுகமாக பேசி முடித்துள்ளனர். இதை உடைக்கணும்னா சசிகலா-தினகரனுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கணும்' என அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்.

Advertisment

epsஇதனையடுத்து, தினகரன் மீது பா.ஜ.க. கொஞ்சம் கரிசனம் காட்டும் வகையில் ரூட் போட்டுக் கொடுத்தார் சாமி. பா.ஜ.க.வுக்கு எதிரான குரலை தினகரன் சமீபகாலமாக மட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில்தான், தினகரனுக்கு எதிரான ஃபெரா வழக்குகளிலும் கொஞ்சம் ரிலாக்சேஷன் கிடைத்துள்ளது. அமித்ஷாவுக்கு நெருக்கமான ஒரு முக்கிய நபரின் நட்பும் தினகரனுக்கு கிடைத்துள்ளது. இதையெல்லாம் அறிந்து அப்-செட்டாகியிருந்தார் எடப்பாடி.

இந்த நிலையில்தான், கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த நிர்மலாதேவி விவகாரத்தில், கவர்னருக்கு எதிரானவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு, தனது அரசின் உயரதிகாரிகள் மூலமாகவே அதனை டெல்லிக்கு அனுப்பி மிரளவைத்திருக்கிறார். மேலும், ஆட்சியில் ஊழல்கள் இல்லை என கவர்னரே பேட்டி கொடுக்கவும் வைக்கப்பட்டது. கவர்னரை வைத்து தனது அரசுக்கு நெருக்கடி கொடுத்துவந்த டெல்லிக்கு, அதே கவர்னரை வைத்தே செக் வைத்தபடி கேம் ஆடி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி'' என சமீபத்திய ரகசிய அரசியலை விவரித்தனர் உளவுத்துறை அதிகாரிகள்.

சுப்பிரமணியசாமியின் நெருங்கிய நண்பர்களிடம் நாம் விசாரித்தபோது, ""சசிகலா க்ரூப்புக்கு எதிரான தமிழக ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் சாமியின் முயற்சியை தடுப்பதில் கவனம் செலுத்துவதால் பழம் கனியவில்லை. ஆனாலும், சாமி சாதித்துவிடுவார்''‘என்கிறார்கள். ஆனால், தமிழக ஆளுந்தரப்பு ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது.

Advertisment

ஓ.பி.எஸ். ஆதரவு சீனியர்களிடம் நாம் விசாரித்தபோது, ""கவர்னர் மூலம் அரசுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகளை தற்போது ravinderanduraisamyஉடைத்தெறிந்துள்ளோம். அதேபோல, சாமி மூலம் எங்களுக்கு கொடுக்க திட்டமிடப்படும் அரசியல் நெருக்கடிகளை உடைத்தெறியப் பயன்பட்டிருப்பவர்தான் திவாகரன். எங்களிடம் ஆட்சி அதிகாரமில்லையெனில், சசிகலாவை ஆதரிக்க அ.தி.மு.க.வினர் ஓடோடிவிடுவார்கள்ங்கிறது எங்களுக்கும் தெரியும். ஐ.பி.அதிகாரிகளும், "இது உண்மைதான்' என ரிப்போர்ட் தந்திருக்கிறார்கள். அ.தி.மு.க .தொண்டர்களிடம் தினகரனுக்கு ஆதரவு இருப்பதை டெல்லி நம்புவதால் அந்த நம்பிக்கையை உடைக்க இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் ஆலோசித்தனர். தினகரனிடமிருந்து தொண்டர்களைப் பிரித்தால் அவர்களை யார் பாதுகாப்பது என பிரச்சனை வந்தது. நமது அணியில் (எடப்பாடி-பன்னீர்) இணைத்துக்கொள்ளலாம் என சீனியர்கள் சொன்னார்கள். ஆனால், நம்மளை ஏற்காதவர்கள்தான் தினகரனிடம் இருக்கிறார்கள்; அவர்கள் எப்படி நம் பக்கம் வரமுடியும்? என கேள்வி எழுந்தது.

modi=amitsha.jpg

அதனால், தினகரன் குடும்பத்திலிருந்து வலிமையான ஒருவரை கொண்டு வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என யோசித்தனர். அப்போதுதான், தினகரனோடு முரண்பட்டிருக்கும் திவாகரனை வைத்துத்தான் சாதிக்கமுடியும் என முடிவெடுக்கப்பட்டது. அதன்படிதான் எல்லாமுமே நடக்கிறது. சுப்பிரமணியசாமி சொல்வதைக் கேட்டு தினகரனை ஆதரிக்க நினைக்கும் பா.ஜ.க.வுக்கு அரசியல்ரீதியாகவும் செக் வைத்திருக்கிறார்கள் எடப்பாடியும் பன்னீரும்''’என சுட்டிக் காட்டினார்கள்.

இதுகுறித்து அரசியல் பகுப்பாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, ‘’""தமிழகத்தில் மத அரசியல் எடுபடாது என நினைக்கும் பா.ஜ.க., ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து மன்னார்குடி குடும்பத்தினருக்கு எதிரான அரசியலை கட்டமைத்து வருகிறது. அதற்காகவே முக்குலத்தோர்களுக்கு எதிரான சமூக வாக்குகளை பா.ஜ.க. பக்கம் ஒருங்கிணைக்க பல்வேறு ரகசிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பா.ஜ.க. தலைமை. இந்த நிலையில், தினகரனோடு பா.ஜ.க. சமரசமானால் அது தினகரனுக்கு லாபம்; பா.ஜ.க.வுக்கு நட்டம்'' என்கிறார் அழுத்தமாக.