யுனிவர்சல் பீஸ் பெடரேஷனின், "அமைதிக்கான தூதர் விருது' பத்திரிகைத் துறையில் நமது ஆசிரியர் செய்த சாதனைகளுக்காக, மார்ச் 23 அன்று லண்டனில் வைத்து வழங்கப்பட்டது. இந்த கோலாகல நிகழ்வில் இவ்வமைப்பைச் சேர்ந்தவர்களும் வேறு பல முக்கிய ஆளுமைகளும் நினைவில் நிற்கும் உரைகளை நிகழ்த்தினர்.

பி.பி.சி. ஆசியாவின் முன்னாள் ஆசிரியரும் காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான ரீதா பெய்ன், “"நக்கீரன் கோபாலுக்கு விருது வழங்க அழைக்கப் பட்டதன் மூலம் பெரிதும் கௌரவப்படுத்தப் பட்டதாக உணர்கிறேன். இதுபோன்ற செய்தி களுடன் எனக்கு அறிமுகம் உண்டு. உண்மை யைப் பேச முயன்றதற்காக, சிறைகள், சிரமங்களை பலர் எதிர்கொண்டதை நான் வாசித்திருக்கிறேன். சமூகத்தின் மிகவும் மதிப்புமிக்க உறுப்பினர். உலகெங்கும் உள்ள பத்திரிகையாளர்களுக்கும் இளம் பத்திரிகையாளர்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழக்கூடியவர். உங்களைச் சந்தித்ததிலும் விருது வழங்கியதிலும் பெருமகிழ்ச்சி யடைகிறேன்''’என்று குறிப்பிட்டார்.

award

Advertisment

யுனிவர்சல் பீஸ் பெடரேஷனின் பொதுச்செயலாளரான ராபின் மார்ஷ், "நாங்கள் ஒரு தலைமையின்கீழ் எட்டு அமைப்புகள் செயல்பட்டு வருகிறோம். அமைதிக்கான சர்வதேச ஊடக கூட்டமைப்பு, ஊடக சுதந் திரம், நேர்மை, பொறுப்புடைமை, செய்தியில் துல்லியம் இவற்றை ஊக்குவிக்கிறோம். நீங்கள் உண்மை, நேர்மை, நீதியை முன்னிறுத்திச் செயல்படுவதோடு, ஊடகச் செயல்பாடு மூலமாக ஊழலை எதிர்த்துப் போராடுகிறீர்கள். உங்களுக்கு விருது வழங்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சியடைகிறோம்''’என்றார்.

இவ்வமைப்பின் தலைவரான மைக்கேல் பால்காம்ப், அமைப்பின் நிறுவனரையும், அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட பின்னணியையும் விவரித்துப் பேசினார். “"வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையின் நிறுவனரான சன் ம்யூங் மூன், வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டு முன்னுக்கு வந்தவர். அவர் லண்டன் வந்து தனது சிந்தனையில் துளிர்த்த யுனிவர்சல் பீஸ் பெடரேஷ னைத் தோற்றுவித்தார். ஒருசமயம் அவர் தனது உரையில் சொன்னார்: "நீங்கள் மதம், தேசியம், இனம் முதலிய தடைகளால் பிரிந்து கிடக்கலாம் அல்லது என்னுடன் இணைந்து மதம், தேசியம் போன்ற தடைகளைக் கடந்து ஒன்றாகச் செயல்பட்டு அமைதிக்காகப் பாடுபடலாம். அமைதி வெகுதொலைவில் இருப்பதாக உணரலாம். ஆனால் உண்மையில் நாம் இணைந்து செயல்படும்போது, வெவ்வெறு மதம், மரபுகளை, மொழிகளை மதித்துச் செயல்படும்போது மகத்தான ஒன்றை நோக்கிச் செயல்படுகிறோம்' -இன்று நான் உண்மையை நோக்கி ஓரடி எடுத்துவைத்ததாக உணர்கிறேன்''’என்றார்.

யுனிவர்சல் பீஸ் ஃபெடரேஷனின் அறங்காவலரான டாக்டர் அப்துல் பாசித் சையத், “"அமைதி, அன்பு மற்றும் நம்பிக்கைக் கான கூட்டமைப்புக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இவ்வமைப்பு ஏன் பீஸ், லவ் அண்ட் ஹோப் பெடரேஷன் என அழைக்கப் படுகிறதென்றால், நாம் அனைவரும் இந்த உலகத்தில் அமைதி வேண்டுமென விரும்புகிறோம். அத்தோடு அன்பும் வேண்டுமென விரும்புகிறோம். அன்பு இருக்கும்போதே நம்பிக்கை பிறக்கும்.

இன்றைக்கு முக்கியமான நாள். ஒரு முக்கியமான சாதனையாளரை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்கு அமைந்ததில் பெருமைப்படுகிறேன். ஊடக சுதந்திரத்தில் இந்தியா 140-வது இடத்தில் இருக்கிறது. சமூக நீதியை உருவாக்குவதில் ஊடகம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்திய அரசியல் அமைப்பு நான்கு தூண்களின் மீது அமைந்திருக்கிறது. முதலாவது நீதித் துறை. இரண்டாவது நிர்வாகத் துறை. மூன்றாவது அரசியல் பிரிவுத் துறை. இந்த மூன்று தூண்களும் கடமை தவறுமானால், இந்த மூன்றையும் நெறிப்படுத்துவது ஊடகத் துறை. ஊடகத் துறையின் முக்கியத்துவத்துக்கு இதுவே காரணம். அதனால்தான் நான்கு தூண்களில் ஒன்றாக இந்தியாவில் ஊடகத்துறை சேர்க்கப்பட்டிருக்கிறது.

award

Advertisment

இன்று ஊடகத் துறையில் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் நிகழ்கின்றன. இந்தியா வில் மட்டுமல்ல… குறிப்பாக தென்னாசிய நாடு களில் நிகழ்கின்றன. துருக்கியில் நடந்த ஜமால் கஷோகி விவகாரம் முக்கியமானது. நான் விரிவா கப் பேசப்போவதில்லை. இந்தியாவில் கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற பல சம்பவங்கள் நடக் கின்றன. ஊடகத்துறையைக் காப்பதும் அதுக்கு சேவை செய்வதும் நமது கடமையாகும்.

மானுட சமூகத்துக்குச் செய்துவரும் சேவைக்காக திரு. நக்கீரன் கோபாலுக்கு என் மரியாதையைத் தெரிவித்துக்கொள்கிறேன். சரியை சரியெனவும் தவறைத் தவறெனவும் சொல்லும்போதுதான் மானுட சமூகத்துக்கு சேவை செய்யமுடியும். சரி, தவறைச் சுட்டிக் காட்டுவது ஊடகத்தின் பணி. புலனாய்வுப் பத்திரிகைப் பணியில் அவர் அடைந்த வெற்றி மிகவும் அதிகம். அவர் போதைப் பொருட் கள் விவகாரம், தமிழக முன்னாள் முதலமைச்ச ருடன் கடுமையான மோதல், பிரபல சந்தனக் கடத்தல் வீரப்பனுடனான சந்திப்புகள், யார் பக்கமும் சாராமல் நடுநிலை வகிப்பது இவற்றின் மூலம் முக்கியமான இடத்தைப் பிடித்து குறிப்பிடத்தகுந்த வெற்றிபெற்றிருக்கிறார். ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவரது வெற்றி பிரமிக்க வைக்கிறது. இன்றைய உலகில் நாளைய எதிர்காலத்துக்காக சமூக நீதியை அவர் தூக்கிப் பிடிக்க வேண்டுமென விரும்புகிறேன். குரலற்றவர் களுக்கு குரல் தரவேண்டு மென விரும்புகிறேன்.

எனது நண்பர், மைக் சொன்னதுபோல, இது வெறும் தொடக்கமல்ல, அநீதியின் முடிவுக்கான தொடக்கம். ஒரு அமைப் பாக நாங்கள் அமைதி யைக் கட்டியெழுப்ப விரும்புகிறோம். அமைதி யைக் கட்டியெழுப்ப விரும்பும்போது என்ன எழுதுகிறோம், என்ன சிந்திக்கிறோம், என்பதைப் பொறுத்தே அதை உரு வாக்கமுடியும். நாம் அதை வாசித்து, புரிந்துகொண்டு, பிரதிபலித்தே சாதிக்க முடியும்''’என்றார்.

இறுதியாக நன்றியுரை ஆற்றிய சுசிதா, "“எங்க ளுக்கு வீரப்பன் எப்படி இருப்பார் என்றே தெரியாது. நாங்கள் அவருக்குப் பதில் உங்க ளைப் பார்க்கிறோம். நீங்கள் செய்த மகத்தான சாதனைகளுக்கு நான் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் சொந்த வாழ்வில் ஊடகத்தின் சக்தி யைப் பார்த்தேன். உண்மை ஒருநாள் வெளி வந்தே தீரும். ஒரு செல்வாக்குள்ள அதிகாரி தவறு செய்தார். நான் போலீசாரிடம், நீங்கள் இதைக் கையிலெடுக்காவிட்டால் ஊடகங்களி டம் செல்லப் போகிறேன் என்றேன். ஊடகத் திடம் செல்லப்போகிறேன் என்று சொன்னதன் விளைவை அவரிடம் பார்த்தேன். ஊடகங் களுக்கு உண்மையை வெளிக்கொண்டு வரும் ஆற்றல் இருக்கிறது. அது உங்களிடம் பெரும் சக்தியைக் கொண்டுவரும். பத்திரிகையாளர்கள் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவரக் கூடியவர்கள். உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து இளையவர்களை ஈர்த்து, உண்மையின் பக்கம் நிற்கச் செய்வதற்கு பத்திரிகையாளர்கள் துணைபோகிறார்கள்.

அமைதியைப் பற்றி சொல்லப்போனால், நான் கொழும்பு குண்டுவெடிப் பில் என் தந்தையை இழந்தவள். உங்கள் சொந்த வாழ்வில் அமைதியாக வாழ்ந்தால்தான், உலகம் அமைதியாக இருப்பதற்கு உங்களின் பங்களிப்பைச் செய்யமுடியும். தென்கொரி யாவின் இன்டர்நேஷனல் பீஸ் யூத் குரூப்பின் உறுப்பினர் நான். இளையவர்கள் வன்முறையின் பக்கம் போகாமல், அவர்களைத் தவறானவர்கள் பயன் படுத்திக்கொள்ளவிடாமல் மனதில் அமைதியைக் கொண்டுவருவது எவ்வளவு முக்கியம் என நான் கருத் தரங்குகள் நடத்துகிறேன். அதைச் சாதித்தால் தான் உலகில் அமைதியைக் கொண்டுவர முடி யும்''’என தனது கருத்துகளைப் பதிவுசெய்தார்.

பத்திரிகைத் துறையில் சாதனை யாளர்களைக் கௌரவிப்பதன்வழி, ஊடகத் துறையை ஊக்குவித்து அமைதி, அன்பு, நம்பிக்கையை ஏற்படுத்த முயலும் யுனிவர்சல் பீஸ் பெடரேஷன் தனது காத்திரமான செயல்பாட்டைத் தொடரட்டும்!