ன்லைன் வகுப்பை ஒரே செல் போனில் கவனிக்க வேண்டிய சூழலால் சகோதரியுடன் பிரச்சினை ஏற்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நன்னாவரம் கிராமத்து நர்சிங் மாணவி நித்யஸ்ரீ எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி தமிழகத்தை உலுக்கியது. இறந்த நித்யஸ்ரீயின் உடல் எரிந்து கொண்டிருந்த போது ஒரு வாலிபர் அந்தத் தீயில் பாய்ந்து விழுந்து, தானும் எரிந்ததாக வெளியான செய்தி அதிர வைத்தது.

mm

மேட்டத்தூரை சேர்ந்த முருகன், திருநாவலூர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், தனது மகன் 20 வயது ராமு ஐ.டி.ஐ. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்ததாகவும், கடந்த 31ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற வர் வீட்டுக்கு வரவில்லை என்றும், நண்பர்களிடம் விசாரித்ததில், நித்யஸ்ரீ உடல் எரிந்த சுடுகாட்டுப் பகுதியில் ராமு சுற்றிக் கொண்டிருந்தாகச் சொல்கிறார்கள் என்றும் தெரிவித்திருந் தார். நித்யஸ்ரீயின் சடலத்துடத் சேர்ந்து தீயில் கருகியது தனது மகன்தானா என்றும் முருகன் சந்தேகம் கிளப்பியிருந்ததால், உளுந்தூர் பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், மாவட்ட தடய அறிவியல் நிபுணர் ராஜி திருநாவலூர், காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் சுடுகாட்டுப் பகுதிக்கு சென்று அங்கிருந்த சாம்பலை பார்த்தனர்.

ff

Advertisment

அதில் கருகிய நிலையில் ஒரு வாட்ச் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் கிடந்துள்ளன. உடல் எரியூட்டப்பட்ட இடத்திலிருந்த எலும்புகளை, தடய அறிவியல் நிபுணர் ராஜி ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளார். போலீசின் முதல் கட்ட விசாரணையில், நித்யஸ்ரீ உடல் எரிக்கப்பட்டபோது, ஒரு வாலிபர் அதன்மீது விழுந்ததைப் பார்த்து, எரியூட்டும் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடி விட்டதாக தெரியவந்தது. அந்த வாலிபர் ராமு என்பதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். தடயவியல் சோதனை முடிவுகளுக்குப் பிறகே உறுதியான முடிவு தெரியவரும் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.

நித்யஸ்ரீ நன்னாவரம் கிராமத்தில் படித்து வந்துள்ளார். ராமு களமருதூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு வாய்ப்பும் இல்லை. அவர்களுக்குள் காதல் ஏற்படவும் வாய்ப்பில்லை. ஆனால் நித்யஸ்ரீ இறந்தது தொடர்பாக அவரது படம் போட்டு ஒட்டப்பட்ட போஸ்டரை ராமு பார்த்து விட்டு, ""இவ்வளவு அழகான பெண் தற்கொலை செய்துகொண்டாளே'' என தனது நண்பர்களிடம் கூறி அழுது கொண்டிருந்ததாக ராமுவின் நண்பர்கள் கூறியுள்ளனர். சுடுகாட்டில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வாட்ச் செல்போன் உதிரிப் பாகங்கள் என் மகனுடையதுதான் என்கிறார் ராமுவின் அப்பா முருகன்.

dd

நேரடியாக சந்தித்திராத ஒருவருக்காக அவருடைய சிதையில் விழுந்து ஒரு வாலிபன் உயிர்விடுவானா என போலீசும் ஆச்சரியத்துடன் விசாரிக்கிறது. அந்த சுடுகாட்டை கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் நேரில் பார்வையிட்டு விசாரணை செய்துள்ளார்.

Advertisment

நித்யஸ்ரீயின் குடும்பத்தினர் மற்றும் அவரது தோழிகள், ""ராமுவுக்கு நித்யஸ்ரீ காதல் என்பது எல்லாம் கிடையாது. அப்படி இருந்தால் நித்யஸ்ரீ எங்களிடம் உண்மையை கூறியிருப்பாள். அவள் தற்கொலை செய்து கொண்டது செல்போன் பிரச்சனையில்தான்'' என்பதை அழுத்தமாகக் கூறுகிறார்கள். ராமு நித்யஸ்ரீயை ஒரு தலையாக காதலித்து இருக்கலாம். அதனால் அவரும் அந்த தீயில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணமும் அலசப்படுகிறது.

மயானத்தில் நித்யஸ்ரீயின் உடல் பாதிக்கும் மேல் எரிந்த நிலையில் அதில் அந்த வாலிபர் வந்து விழுந்ததாக அங்கிருந்த தொழிலாளர்களும் கூறுகின்றனர். விழுந்த வேகத்தில், வாலிபரின் உடல் எரிந்து விடுமா, அவர் கதறவில்லையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. நித்யஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயசூரியன் 50,000 நிதி உதவி அளித்ததோடு அதே குடும்பத்தில் படித்துக்கொண்டிருக்கும் நித்யஸ்ரீயின் இரு சகோதரிகளின் முழு படிப்பு செலவையும் உதயசூரியன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்புக்கான செல்போன் பிரச்சினையில் நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் சில அதிமுக ஆதரவாளர்கள் நித்யஸ்ரீயின் மரணத் துடன், காதல் விவகாரத்தை இணைத்துக் கொச்சைப் படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார் நம்மிடம், ""நித்யஸ்ரீயின் உடல் எரிந்து கொண்டிருக்கும்போது ராமு அந்தத் தீயில் விழுந்து எரிந்து போனது 100% உண்மை. அதற்கு முன்பு ராமு அந்த பகுதியில் சுற்றிக் கொண்டு இருந்ததையும் அங்கிருந்த பலர் பார்த்துள்ளனர் இதற்கு காரணம் காதல் தோல்வி என்று எங்கள் விசாரணையின் மூலம் தெரியவருகிறது. இருந்தும் தடய அறிவியல் துறையினரின் ஆய்வு முடிவுக்குப் பிறகு இறந்தது ஒருவரா இருவரா என்பது உறுதி செய்யப்படும்'' என்கிறார் டிஎஸ்பி.

-எஸ்.பி.சேகர்